Tuesday, September 29, 2009

வாழ்க சனநாயகம் - 7

2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரிவான தகவலுக்கு

2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

11. சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : த்ரிஷா (அபியும் நானும்) - எ. கொ. ச.

19. சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை) - நோ கமெண்ட்ஸ்

வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!



சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா - ஒரு விளம்பரம்...... !

Tuesday, July 07, 2009

சிதறல்கள்

நேற்று முன் தினம் நடந்து விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்து இருந்தது. கிட்டதட்ட 4 1/2 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் மிகவும் போராடி பெடரர் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த போதிலும் ரோடிக் கின் ஆட்டம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ரசித்த போட்டி இது தான். போன வருட விம்பிள்டன் இறுதி போட்டி பார்க்கவில்லை என்பது வேறு விசயம். 2001 ல் இவான்செவிக் மற்றும் ராப்டரின் ஆட்டத்திற்கு பிறகு இது தான் எனக்கு பிடித்த ஆட்டம். இந்த ஆட்டம் விம்பிள்டனின் முதல் ஆறு சிறந்த இறுதியாட்டங்களில் ஒன்றாக தேர்வு பெற்று உள்ளது. பார்க்க கிடைத்தவர்கள் உண்மையிலே பாக்கியசாலிகள். இருவரின் ஆட்டத்தை பார்த்து யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்றே நினைக்க வைத்தார்கள். 50 ஏஸ்கள் போட்டு பெடரர் கோப்பையை தட்டி சென்றார். தருமி, மருத்துவர் அய்யா ராமநாதன் மிகவும் மகிழ்ந்து இருப்பார்கள். நான் ரோடிக் பக்கம். மிகவும் அருமையான ஒரு ஆட்டம் தந்ததுக்காக. It's not winning that's important, it's how you play the game. Good Job Roddick.

நம்ம பயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இறுதியாட்டம் வரை வந்தார்.

இந்த நேரத்தில் வருண பகவானுக்கு என் நன்றியை சொல்லிக்கனும், இல்லையென்றால் கிரிக்கெட் டில் சரணாகதி அடைந்து இருப்போம்.

******

காணவில்லை - 1!

மக்களே! நம்ம ஊரில் குட்டி சாமியார் குட்டி சாமியார் னு ஒருத்தர் இருந்தாரே, அதான்ப்பா பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி. என்னப்பா ஆனார் அவர். ரொம்ப நாளாக அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.

காணவில்லை - 2!

நம்ம தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதி னு ஒருத்தவங்க சினிமாவில் நடிச்சாங்களே, அங்க எங்கப்பா இப்போ? அதான்ப்பா ஆல்பம், ஸ்ரீ, தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடிச்சாங்களே, அவங்களே தான்! ரொம்ப மிஸ் பண்ணுறேனு நினைக்காதீங்க, லைட்டா தான் ;)

******

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா என்று கதற வைக்கும் சக்தி இசை கருவிகளை கற்றுக் கொள்ளும் நம் நண்பர்களால் நமக்கு அடிக்கடி வாய்க்கும். கீ-போர்டு வாசிக்க கற்றுக் கொள்ளும் அனைவரும் பயிலும் அல்லது பயில விரும்பும் ஒரு பாடல் ஏக், தோ, தின் பாட்டு. அதை வாசிக்கா விட்டால் அந்த கருவியில் தேர்ச்சி பெறாத மாதிரி ஒரு எண்ணம் அவர்களுக்கும் ஏற்படுமோ என்னவோ! நான் படும் கஷ்டம் எனக்கே! ஏண்டா காலங்காலமா இதே தானா? மாத்துங்கப்பா, முடியல....ப்ளீஸ்..... இன்னும் சிலர் ஆரம்பத்தில் பல பாடல்களை வாசித்து பிறகு இந்த பாடலை முடிவு தொடுவதாக (அதான்ப்பா finishing touch ஆம்)இசைக்கிறார்கள். ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

கீ-போர்டு பார்ட்டிகள் இப்படி என்றால் கிடார் மக்கள் என் இனிய பொன் நிலவே னு சட்னு பிரதாப் போத்தானா மாறி விடுகிறார்கள். ஏதோ ராஜா தெரியாம அந்த பாட்டுக்கு கிடாரை உபயோகப்படுத்திட்டார். அதுக்குனு இப்படியா? என்னை பார்த்தால் பாவமா இல்லையா?

இது போல் என்னை இம்சை பண்ணும் அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் என் உற்ற நண்பனில் ஒருவன் கிடார் கற்றுக் கொண்டு என் பிறந்தநாள் அன்று புதிதாக கிடார் வாங்கி அவன் நண்பர்களையும் உடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது போல் எதாச்சும் புதுமையாக செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது உபரித்தகவல்.

Monday, July 06, 2009

ரெயில்வே பட்ஜெட்!

சில நாட்கள் முன்பு ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து இருந்தாங்க. சில நல்ல விசயங்கள் இருக்க தான் செய்தது. ஆனால் மகளிர்கான தனி கழிப்பறை வசதி என்ற செய்தி சிறிதே தனித்துப்பட்டது எனக்கு. வைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை எப்படி அமல்படுத்த போகின்றார்கள் என்ற அளவில் தான். இருக்கும் இரண்டை ஆளுக்கு ஒன்றாக மாற்றியா? அது தீர்வாகாது என்பது என் எண்ணம். அதற்கு பதில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது ஒரு வழி, அல்லது கழிப்பறைக்கு என்றே தனியாக சில பெட்டிகள் சேர்க்கலாம். தற்சமயம் வரை கழிப்பறையில் வெறும் ஒட்டை தான் இருக்கும் (தவறு என்றால் சுட்டிக் காட்டவும்) அதற்கு பதில் இது போன்ற தனிப்பட்ட பெட்டிகள் வைப்பது என்றால், அந்த அந்த நிறுத்தங்களில் அந்த கழிப்பறை பெட்டியை மட்டும் கழட்டி வேறு பெட்டி இணைத்து கொள்ளலாம். சுத்தம் செய்வதும் வசதியாக இருக்கும். சுற்றுசூழல் மாசுவை தடுக்கலாம். கூடவே கதவு ஒரத்தில் நின்று பயணம் செய்பவர்களுக்கும் துற்நாற்றத்தில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும்.

*****

கூடவே இந்த அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டிய ஒன்று. அதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூடவே சில மாதங்களுக்கு முன்பு கூட ரெயில்வே துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிரிப்பாய் சிரித்தது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் தேவை.

******

இந்த பட்ஜெட் ல் பாராட்ட பட வேண்டிய விசயங்களில் ஒன்று, ரயில்வே க்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு லீஸ் க்கு விடும் திட்டம். எவ்வளவு இடம் ரயில்வே வசமிடம் எதற்க்கும் உதவாமல் உள்ளது என்பது நம்மில் யாரு ஊரில் எல்லாம் ரயில் நிலையம் உள்ளதோ அவர்கள் அறிவார்கள். வெறும் புதராக மண்டி கிடைக்கும் அந்த இடங்களில் என்ன நடக்கிறது என்பதும் நாம் அறிந்தது தான். அதற்கு முடிவு கட்டும் விதமாக இது ஒரு நல்ல விசயம். வருமானத்துக்கும் வருமானும் ஆச்சு. சமூக விரோதிகளுக்கு கூடாரமாக அமைவதிலும் இருந்தும் ஒரு பெரிய விடுதலை கிடைக்கும்.

******

சென்னை டூ டில்லி பாயிண்ட் டூ பாயிண்ட் ரெயில்- நல்ல முடிவு. விமான சேவை மலிந்து விட்ட இந்த காலத்தில் இது போன்ற திட்டங்கள் தான் நல்ல பயனை தரும். இது போன்ற பல பாயிண்ட் டூ பாயிண்டு ரெயில்கள் வரவேற்கதக்கதே. அதே நேரத்தில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களுக்கு பயன் தரும்.

******

எங்க ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு னு எர்ணாக்குளம் டூ திருச்சி வரை இருந்த எக்ஸ்பிரஸ் வண்டியை நாகூர் வரை நீட்டித்து உள்ளார்கள். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக பயன் தரும். அதே போல் பெங்களூர் ரெயிலையும் நீட்டித்து இருந்தால் இன்னும் பயன் தந்து இருக்கும். வேளாங்கண்ணி திட்டம் என்ன ஆச்சோ. இதை எல்லாம் நம் மக்கள் பிரநிதிகள் கோரிக்கை வைத்து செய்து இருக்கனும். அவங்களை என்னத்த சொல்ல. நல்லா இருங்கடே.

******

என்ன தான் மாஞ்சு மாஞ்சு பட்ஜெட் போட்டாலும் அதை செயல்படுத்துவதில் தான் உள்ளது திறமை. அந்த அந்த கால அளவில் குறித்த திட்டங்களை நிறைவேற்றுவது தான் நம் நாட்டின் தற்போதைய அவசர தேவை,அதிலும் முக்கியமாக கட்டுமான துறையில். அதை விடுத்து நாகூர் டூ திருவாரூர் வரை இருவத்தி சொச்ச கி.மீ போட 2004ல் இருந்து 2009 வரை ரெயிலை நிறுத்தி வைத்து அதற்கு பல போராட்டங்களை நடத்தி வேலை முடிக்க வைத்து ரெயில் கொண்டு வர நாங்கள் பட்ட பாடு மீண்டும் தொடர்ந்தால் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. வாழ்க பாரதமே தான் !

******

Wednesday, June 10, 2009

அது ஏனோ?


எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?

Tuesday, May 12, 2009

தொகுதி அலசல் - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.

இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.

மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.

சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.

இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:

1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)

2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)

3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)

4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 3 சுயேச்சைகள்.

குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.

7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.

இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.

மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.

நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.

வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.

Monday, May 11, 2009

கதம்பம்

தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.

*******

தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.

*******

எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.

*******

தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.

*******

Thursday, April 09, 2009

வாழ்க சனநாயகம் 6 - தந்தி/தமிழர் பேரணி

முன்குறிப்பு!

இந்த பதிவை படிக்க வாய்ஸ் மாடுலேசன் ரொம்ப முக்கியம், பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நபர்களின் குரலில் முயற்சி செய்து படிக்கவும்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை(ஏப்ரல் 9) தமிழர் பேரணி!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும். இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

நன்றி : விகடன்

*******

வடிவேலு : ஏண்டா, இன்னும்மாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?

நன்றி : வின்னர் படக் குழுவினர்
*******

பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி தந்தி!

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், "இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில் இருந்து காப்பாற்றுங்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தை தொடங்குவதை உறுதி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : விகடன்
*******

கவுண்டமணி : யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா

நன்றி : மாமன் மகள் படக் குழுவினர்

*******

Tuesday, April 07, 2009

ருவண்டா இனப்படுகொலை - 1

குறுகிய நாட்களில் மிக அதிகம் மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய நாடு ருவண்டா. 100 நாட்களில் 1 மில்லியன் மக்களை கொன்று குவித்தார்கள். இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. டூசி யினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு கூறும் நாள் இன்று. அதை நினைவு கூறும் வகையில் ருவண்டாவின் இனப்படுகொலை பற்றி எனக்கு தெரிந்த, பார்த்த, கேள்விப்பட்ட விசயங்களை வைத்து இந்த பதிவு. மேலும் விபரங்களுக்கு இங்கே காணவும்.

ருவண்டா மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ருவண்டா வின் தலைநகரம் கிகாலி (Kigali). ருவண்டா, ஆயிரம் மலைகளின் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்படும் (Land of 1000 Hills). அதன் அண்டை நாடுகள் காங்கோ, உகாண்டா, புருண்டி, தன்சானியா. நான்கு நாடுகளுக்கு நடுவில் அமைந்த நாடு. அதனால் இது வியாபாரத்திற்க்கு மைய சந்தையாக விளங்குகிறது. ருவாண்டாவின் மக்கள் தொகை 9 மில்லியன். ஆப்பிரிக்காவிலே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு ருவாண்டா. கிறிஸ்த்துவர்கள் பெரும்பான்மையாக உள்ளன். அதில் கத்தாலிக்க மக்கள் 55% ஆவர். ருவாண்டாவில் கின்யருவாண்டா (Kinyarwanda), ஆங்கிலம், பிரெஞ்ச் என மூன்று ஆட்சி மொழிகள் உள்ளன. 99% மேல் கின்யருவாண்டா பேசுவார்கள். பெரும்பாலும் ருவண்டா மக்கள் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்றவர்கள்.

காலணி ஆதிக்கத்திற்க்கு முன்பு ருவாண்டாவில் மன்னராட்சி நடந்து வந்தது. ஆங்காங்கே அமைச்சர்கள் மூலம் கவுன்சில் அமைத்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். ஆரம்ப காலங்களில் ருவண்டாவில் மூன்று விதமாக மக்கள் வகைப்படுத்தப்பட்டனர், அவர்களின் சமூக - பொருளாதார நிலையை வைத்து வகைப்படுத்தப்பட்டனர், இது அவர்கள் இனத்தை குறிக்காது. ஹுடூ (Hutu), டூ்சி (Tutsi), டுவா (Twa).

கால்நடைகளை வைத்து பராமரித்து வந்தவர்கள் டூசி என்ற வகையிலும், விவசாயிகள் ஹுடூ வகையாகவும், வேட்டை மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் டுவா வகையாகவும் வாழ்ந்து வந்தார்கள். பொருளாதார நிலையை வைத்தே வகைப்படுத்த பட்டதால் அவர்களிடம் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவை வைத்து அவர்கள் வகையும் மாறுப்படும். Its based on the dynamics of the "Haves and the Have not". அந்த காலக்கட்டத்தில் அவர்கள் இடையே மாற்று திருமணங்கள், ஒரே கலாச்சாரம் என அமைதியாகயும் ஒற்றுமையாகவுமே வாழ்ந்து வந்தார்கள். ஹுடூ ஸ் பெரும்பான்மையாக இருந்தனர்.

1894 ஆண்டு ருவண்டா ஜெர்மன் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த காலக்கட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. உள்நாட்டில் நடக்கும் கலவரங்களை அடக்கவே ஜெர்மனியர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. முதலாம் உலக போரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து உலக நாடுகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் படி ருவண்டா பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் நடுவே ஒரே கடவுள் என்று இருந்த ருவாண்டாவில் காலணி ஆதிக்கத்தை தொடர்ந்து கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் ஐரோப்பின் வழியாக உள்ளே நுழைந்தது. பெல்ஜியத்தின் ஆதிக்கத்திற்க்கு முன்பு வரை மன்னருக்கு போதிய அதிகாரம் இல்லாத போதிலும் மரியாதை இருந்தது. பெல்ஜியர்கள் வந்த பிறகு அதுவும் இல்லாமல் போயிற்று.

அதிகாரத்தை கையில் எடுத்த பெல்ஜியர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். பொருளாதார வசதி படைத்த டூசி னரை உயர்ந்தவர்களாகவும், ஹுடூஸ், நடுநிலை டூசி னரை மற்றும் பிற மக்களையும் தாழ்ந்தவர்களாக வகைப்படுத்தினார்கள். எவ்வாறு பிரித்தார்கள் என்றால் 10 கால்நடைகளுக்கு மேல் வைத்தது இருந்தவர்கள் உயர்ந்த டூசினர், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற வகையில். கூடவே அதிகாரத்தில் இருந்த ஹுடூஸ் மக்களை அதிகாரத்தை விட்டு அகற்றினார்கள். இதன் மூலம் ஹுடூஸ் மக்கள் பெரும் கோபம் அடைந்தனர். ஆயுதம் ஏந்தி போராடவும் பார்த்தார்கள். ஆனால் பெல்ஜியர்கள் மேல் இருந்த பயத்தால் அதை பெரும் அளவு போராட்டமாக மாறவில்லை.

உயர் டூசினரை கொண்டு வரிகள் வசூலிப்பதையும், தங்களின் கொள்கைகளை பரப்பவும் செய்தார்கள். 1935 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் எந்த வகையை சார்ந்தவர்கள் என்பது அச்சிடப்பட்டது. இது தான் 1994 ல் நடந்த மிக பெரிய இனப் படுகொலைக்கு ஆரம்ப வேராக அமைந்தது.

இதை தொடர்ந்து கத்தோலிக்க ஆலயங்களிலும், பள்ளிகளிலும் டூசி யினருக்கும் ஹூடு வினருக்கும் இடையான வேற்றுமைகளை விதைக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் தனி தனியாக பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1940 களில் ஆரம்பித்த இதற்கு நல்ல அறுவடை கிடைக்க தொடங்கியது. 40களின் மத்தியில் பலர் கத்தோலிக்காக மாற தொடங்கினார்கள். 1950 களில் அதிகாரத்தில் டூசி யினருக்கு காட்டப்படும் சலுகையும், ஹுடூஸ் மறுக்கப்படும் உரிமையையும் ஐ.நா கண்டிக்க தொடங்கியது. அதே நேரத்தில் 1954ல் டூசி யினர் தங்களுக்கு சுகந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப தொடங்கினார்கள். இதை தொடர்ந்து மறைமுகமாக பெல்ஜியர்களும், மத தலைவர்களும் ஹுடூ யினரை டூசி யினருக்கு ஏதிராக துவேஷத்தை உண்டாக்கினார்கள். அதை தொடந்து 1957ல் ஹுடூ வினர் ஒரு அமைப்பினை(PARMEHUTU) தோற்றுவித்து பின்பு அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். அதே போல் 1959ல் டூசி யினர் ஒரு அமைப்பினை(UNAR) தோற்றுவித்து அவர்களும் அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். இரு தரப்பினருக்கும் மோதல்கள் வலுக்க தொடங்கின.

1959 ல் டூசி படையினர் ஹுடூஸ் அரசியல் தலைவர் ஒருவரை அடித்து விட, அவர் இறந்து விட்டார் என்ற எழுந்த வதந்தியால் பல்லாயிரகணக்கான டூசி யினர் கொல்லப்பட்டனர். ருவண்டாவில் நடந்த முதல் பெரிய படுகொலை இது தான். இது பெல்ஜியர்களின் தூண்டுதலினால் தான் நடந்தது என்று டூசியினர் குற்றம் சாட்டினர். பல்லாயிரகணக்கான டூசியினர் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

1960 ல் பெல்ஜினர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சம்மதித்து தேர்தல் நடத்தினார்கள். பெரும்பான்யான மக்களாக ஹூடூ ஸ் இருந்ததால் அனைத்திலுமே ஹூடூ யினரே வெற்றி பெற்றனர். இது வரை அதிகாரத்தில் இருந்த டூசி யினர் வெளியற நேர்ந்தது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் திட்டமும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தது. ஐ.நா.வின் வலியுறுத்தலை தொடர்ந்து நாடுகளை பிரித்து சுகந்திரம் அளிப்பது என்று முடிவு எடுத்து 1961ல் அதற்கான ஆயுத்தங்கள் செய்யப்பட்டன.

1961 ல் தேர்தல் நடத்தப்பட்டு பெல்ஜியர்கள் ஆதரவுடன் ஹுடூஸ் குடியரசு ஆட்சியை அமைத்தது. பெல்ஜியர்கள் டூசி யினரின் அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும் என்பதுக்காக ஹுடூஸ் க்கு உதவி செய்தது. 1959 ல் டூசி யினரால் தாக்கப்பட்ட அரசியல் தலைவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதுவே சோதனையாக வந்து அமைந்தது டூசி யினருக்கு. பதவியேற்றவுடன் அந்த தாக்குதலை நினைவு கூர்ந்து டூசியினர் என்றுமே ஆபத்தானவர்கள் மற்றும் கொல்லப்பட வேண்டியவர்கள் என சூளுரைத்தார். அதை தொடர்ந்து 1961, 1962ல் டூசி கொரில்லா படையினர் பக்கத்து நாடுகளில் இருந்து போர் புரிந்தனர். ஹுடூ ஸ்ம் பதில் தாக்குதலில் இறங்க அதிலும் பல்லாயிரகணக்கானோர் பலியாகினர்.

1962 ஜூலை 1 ஆம் தேதி ருவண்டா மற்றும் புருண்டி நாடுகளுக்கு சுகந்திரம் கிடைத்தது. ருவண்டாவில் ஹுடூ ஸ் நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியதோடு ஒரே கட்சி நாடாக மாறியது. ஹூடூ யினருக்காக PARMEHUTU வை தோற்றுவித்த Gregoire Kayibanda சுகந்திர நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

- தொடரும்

Monday, March 30, 2009

வாழ்க சனநாயகம் 5 - தமிழ் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....

'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.

ஆன்றோர், சான்றோர், புலவர் னு கேட்க நல்லா வக்கனையாக இருந்துச்சு. மக்களும் ஒத்துக்கிட்டாங்க!

இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது.

உண்மை. கோடிக்கணக்கான தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினார்களே. பதிவுலகமே பரபரத்துச்சே. பதிவு , மின் வாழ்த்து, சச்சரவுனு கலக்கிட்டாங்கள!

ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

அதே பழமைவாதிகள் அப்பவே எதிர்ப்பு குரல் கொடுத்தார்களே!

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது.

பெரும்பான்மையா? ஏற்கனவே கோடிக்கணக்கான தமிழர்கள் தைத் திங்களை புத்தாண்டாக கொண்டாடியதாக நீங்களே சொல்லிட்டீங்க, அப்ப மிச்சம் இருப்பதும் சில கோடிகள் தானே, இந்த சில கோடிகளுக்காக அந்த சில பல கோடிகளை முட்டாள்கள் ஆக்கி விட்டீர்களே!

இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு

ஆங்! அப்படி சொல்லுங்க, பொது தேர்தல் வந்தா எல்லாமே பின்வாங்குவீங்க போல.

வச்சா குடுமி அடிச்சா மொட்டை.

அரசு ஆனது ஒரு முடிவு எடுப்பதுக்கு முன்பு எல்லா சாதக பாதகங்களையும் பார்த்து தான் முடிவு எடுக்கனும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்லவே. இஷ்டXXXXக்கு மாற்ற.

தேவர்மகன் நாசர் வசனம் என் பதிவில் அடிக்கடி குறிப்பிட வேண்டியதா இருக்கு. அந்த வசனம் மீண்டும் ஒரு முறை

"இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க. நல்லா இருங்க. வாழ்க சனநாயகம்!

செய்தி : நன்றி - இட்லிவடை

Wednesday, March 25, 2009

கதம்பம்

இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.

போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.

******

இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.

தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும்.

*******

கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.

உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.

*******

போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.

When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.

*******

ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.

*******

பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்

வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக

*******

Monday, March 23, 2009

சிசெல்ஸ் - புகைப்படங்கள்

இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவுகளின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. (படங்களை பெரிதுபடுத்தி காணவும்) பயணக் கட்டுரை விரைவில்.





















Posted by Picasa

Saturday, March 21, 2009

இயன்றவரை இனிய தமிழில்!

மறந்த போன தமிழ்ச்சொற்களை பதிவாக போட சொல்லி வந்த தொடரில் கவிதா என்னையும் எழுத அழைத்து பல வாரங்கள் ஆச்சு. அதை இன்னிக்கு பதிவாக போடலாம் என்று இந்த பதிவு.

எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் பிற மொழி சொற்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அதை களைய யாரும் பெறும் அளவில் முயற்சி எடுக்கவில்லை. அல்லது அந்த முயற்சிகள் பெரும் அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்று சொல்லாம். ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் இது எல்லாம் தமிழ் சொற்களாக மாறி பல வருடங்கள் ஆச்சு. பதிவுலகிலும், எழுத்துலகிலும் தான் முடிந்த வரை தமிழ் சொற்களாக தேடி எடுத்து உபயோகப்படுத்தி வருகிறோம். அது ஒரு ஆரோக்கியமான விசயம்.

அயல்நாட்டில் வேலைக்கு வந்த பிறகு நண்பர்களுடன் உரையாடும் போது முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாம தமிழ் வார்த்தைகளை கொண்டே உரையாடுவது வழக்கம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை நம் அருகில் இருப்பவர்கள் ஊகிக்க முடியாது. அதிலும் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை உபயோகிக்கும் போது நமக்கே சிரிப்பாக வரும், பிறகு அது பழகி விட்டது. உதாரணமாக அண்டை நாடு, துறைத் தலைவன், பெரும் தலை, விடுப்பு, பயணச் சீட்டு, வாகனம், காலை உணவு, மதிய உணவு, விமானம், வடக்கு இந்திய, தொலைப்பேசி, கைப்பேசி, மடிக் கணினி, இணையம், மின் அஞ்சல் னு நிறைய வார்த்தைகள். இதை கேட்கும் போது நமக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை எழுதும் போது தான் பெரும் அளவில் உபயோகப்படுத்துகிறோம். பேசும் போது நம்மளை அறியாமலே ஆங்கில வார்த்தைகள் வந்து விழுந்து விடுகிறது. அதை களைய முயல்வோம்.

நம் மொழியை நாம் பேசாமல் வேறு யாரு பேசுவது. அதனால் இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம், சில வார்த்தைகள் நம்மளை அறியாமல் வரும் போது அதை மறுமுறை திருத்திக் கொள்ள முயல்வோம். முதல்படியா தொலைபேசியில் யார் அழைத்தாலும் உங்கள் பெயரையோ அல்லது வணக்கம் என்ற வார்த்தையுடனோ பதில் சொல்ல தொடங்குவோம். (நண்பர்களிடத்தில் இருந்து ஆரம்பிப்போம்).


*******

எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை சரியா தப்பா னு தெரிந்தவர்கள் கூறலாம். என்னால் வழக்கொழிந்த சொற்கள் என்று ஏதும் தனித்துக் கூற முடியவில்லை. அதனால் நான் பேசுவதை கேட்டு நண்பர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்ற கேட்ட சில சொற்களை பட்டியலிடுகிறேன்.

பத்தாயம் - நெல் கொட்டி வைக்கும் தொட்டி(பொட்டி)
மராக்கா - அளக்க உதவும் ஒரு பொருள் (படி, கிலோ மாதிரி, எங்க ஊரில் சமையலுக்கு மராக்கா அளவில் தான் அரிசி அளப்பார்கள்)
அப்பாயி- அப்பாவோட அம்மா
அம்மாயி - அம்மாவோட அம்மா
மண்டக் காய்ச்சல் - தலைவலி
மண்டக் கனம் - திமிர், தலைக்கனம்
சவரம் - முகம் மழித்தல்
புறக்கடை - கொல்லை
அட்டி - (அரிசி) மூட்டைகளை அடுக்குவது, ஒன்றின் மீது ஒன்றாக (வரிசை)
வெடைக்குற - கிண்டல் பண்ணற
உசக்க - மாடியில்
அடுப்படி - சமையல் அறை (அடுப்பாங்கரை னு கூட சொல்லுங்க)

பல்லா* - தண்ணீர் எடுக்க உதவும் சிறு குவளை ( பிளாஸ்டிக்)
டவரா* - டீ, காபி தருவார்கள், ஆத்தி குடிக்க வசதியாக இருக்கும்
லோட்டா* - இது தண்ணீர், டீ, காபி குடிக்க உதவும். (ஒரு குடம் சின்ன அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்)

* - இது மூனும் தமிழ் வார்த்தைகளா என்று எனக்கே சந்தேகமாக தான் இருக்கு.

சென்னை வந்த பிறகு இரு வார்த்தைகளை கேட்டால் கோவம் வரும், அது கால் அவர், அரை அவர் என்பதும், அவர் கையில சொல்லிட்டேன் என்பதும். அந்த கோபம் இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கு.

Tuesday, March 17, 2009

கதம்பம்

நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

*******

தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
*******

இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.

நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.

வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.

Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.

Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
*******

போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.

லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!

இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,

பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
*******

Wednesday, March 11, 2009

நன்றி நவில்தல்

வழக்கம் போல் இந்த வருடமும் நம் ப்ளாக் நட்புகள் பாச மழையை பொழிந்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார்கள். அதிலும் போன வருடத்தில் இருந்து அவ்வளவாக எழுதுவது இல்லை. போன வருடம் ஊரில் இருந்ததால் ப்ளாக் மக்கள் ஞாபகம் வச்சு வாழ்த்தினாங்க, இந்த வருடம் அவ்வளவாக கண்டுக்க மாட்டங்க என்று நினைச்சேன். ஆனால் அதை பொய்பித்து காட்டும் விதமாக கலக்கிட்டாங்க.

அதிலும் ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணுங்க - பிறந்தநாள் வாழ்த்து பதிவு (ரொம்பவே ஒவரா தான் எனக்கே படுது) ஒருத்துனுக்கு ஒரு வயசு ஏறுது என்பதில் என்ன ஒரு ஆனந்த சந்தோசம் பாருங்க இந்த மக்களுக்கு.

1, சங்கத்து சிங்கம் ராயல் ராம் - கவுஜை நாயகன் என்பதை நிருபித்து உள்ளார் நம்ம ராயலு.

2. பிரவாகம் காயத்ரி - என்னிடம் கேட்டு இருந்தா கூட இப்படி பதில் சொல்லி இருப்பேனோ என்பது சந்தேகம் தான்.

3. என்னமோ போ Raz - ஒவர் நக்கல் ஆகிடுச்சு. அன்புத் தோழி அதனால் மன்னிச்சாச்சு.

உங்க மூவருக்கும் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. ICC பிரச்சனையால் அன்னிக்கு இணையம் பக்கம் வர முடியல. அதனால் தான் ஒரு போஸ்ட் போட்டு நன்றி நவில்றேன்.

அதிலும் காயத்ரி பதிவுல இருந்த அந்த வீடியோவை பாத்துட்டு உண்மையிலே அசந்துட்டேன். அதை உருவாக்க உதவிய ராம், கானா பிரபா, கே4கே அண்ணாச்சி, காயத்ரி இவங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

அது போக ஆர்குட், பேஸ்புக், கைப்பேசி, மின் அஞ்சல், SMS, பின்னூட்டம், (இ)வாழ்த்து அட்டை என பலவழிகளிலும் வாழ்த்திய அம்புட்டு சனத்துக்கும் மிக்க நன்றி. __/\__

இப்போ தனக்கு தானே சொறிந்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பு (அப்ப மேலே உள்ளது... உச்ச்ச்ச்ச் கண்டுக்கப்பிடாது)

மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.

என்னோட இம்சைக்கு காரணமாக அமைந்த அந்த மூவரை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்து விரும்புகிறேன். அறுசுவை பாபு, ப்த்ரி, ரஜினி ராம்கி.

இதற்கு உங்கள் வாழ்த்துக்களும், வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.

Friday, March 06, 2009

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

சூடானில் டார்பூர் என்ற இடத்தில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரும் அறிந்ததே. 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை நீடித்த இந்த பயங்கரத்தின் மூலம் உயிர் இழந்தோர்கள் சுமார் 3 லட்சம் நபர்கள். உள்நாட்டிலே அகதிகள் ஆனோர் 2 மில்லியன் நபர்கள். இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட புள்ளி விபரம். இந்த எண்ணிக்கையை சூடான் அரசு மறுத்து உள்ளது.

ICC (International Criminal Court) யில் சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூடான் அரசில் அமைச்சர்களாக இருக்கும் இருவருக்கு முன்பே அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்க பட்டும் உள்ளது. அதை பற்றி முன்பே பதிவு இட்டு உள்ளேன். ஆனால் இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக சூடான் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்ட அவர் மேல் எந்த நேரமும் வாரண்ட் பிறப்பிக்கபடலாம் என்ற நிலை இருந்தது. புலி வருது புலி வருது கதையாக கடந்த 8 மாதங்களாக நடந்த ஆடு புலி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக மார்ச் 4 அன்று மாலை 4 மணி அளவில் சூடான் அதிபர் அல் பஷீர் க்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The counts

The warrant of arrest for Omar Al Bashir lists 7 counts on the basis of his individual criminal responsibility (article 25(3)(a)) including:

*
five counts of crimes against humanity: murder – article 7(1)(a); extermination – article 7(1)(b); forcible transfer – article 7(1)(d);
torture – article 7(1)(f); and rape – article 7(1)(g);
*
two counts of war crimes: intentionally directing attacks against a civilian population as such or against individual civilians not taking direct part in hostilities – article 8(2)(e)(i); and pillaging – article 8(2)(e)(v).


போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகிய இரு பிரிவின் கீழ் சூடான் அதிபருக்கு ஏதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இனப்படுகொலை புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என தள்ளுப்படி செய்யப்பட்டு உள்ளது. முதன் முறையாக ஒரு நாட்டின் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தன் மூலம் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்து உள்ளது. மனித உரிமையை மீறுபவர்களுக்கும், போர் மரபுகளை மீறுபவர்களுக்கும் கண்டிப்பாக இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது என் கருத்து.

இந்த அறிவிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்று உள்ளது. அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சூடானிலும் டார்பூர், சவுத் சூடானில் இதற்கு ஆதரவு குரல் அதிகமாகவும், நார்த் சூடானில் எதிர்ப்பு குரல் அதிகமாகவும் உள்ளது. இந்த
அறிவிப்பு வெளி வந்த அன்றே இதை கருத்தில் கொள்ள முடியாது என்று சூடான் அரசு அறிவித்து விட்டது. அன்று மாலை 4 மணி அளவில் சூடான் தலைநகரம் கண்டன ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என நடந்தது. சுமார் 10,000 நபர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த கண்டன ஆர்பாட்டங்கள் நாடு தளுவிய அளவில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக சூடானில் நடந்து வரும் அமைதி மற்றும் மனித உரிமை பணிகளுக்கு மிகுந்த பிரச்சனைகளும் தடங்கல்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் சூடான் அரசு ஐ.நா. பணியாளர்களுக்கு எல்லா வகையிலும் தொடர்ந்து ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கும் என்று உறுதி அளித்து உள்ளது. எந்த அளவில் அமல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

கடந்த இரு நாட்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் எங்கும் நடக்க வில்லை. தலைநகரத்தில் ஆங்காங்கே சில கண்டன ஆர்பாட்டங்கள் மட்டுமே. இன்று ஐ.நா. அலுவலகத்துக்கு எதிரில் சிறிய அளவில் ஆர்பாட்டம் நடந்தது. சாலைகளில் போக்குவரத்து குறைந்த அளவிலே உள்ளது.

இந்த வாரண்ட் மூலம் சூடானில் நடந்து வரும் பணிகளுக்கு பங்கம் வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் டார்பூரில் இருந்து 10 என்.ஜி.ஒ. அமைப்புகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சூடான் அரசு அறிவித்து உள்ளது. அந்த 10 அமைப்புகளும் கிட்டதட்ட எட்டு சகவீத அமைதி மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள்.

சூடான் மக்களின் நிலையை இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மேலும் சிக்கலாக வந்து அமையும். ஐ.நா. இருக்கும் வரை அவர்கள் தப்பிக்கலாம். ஐ.நா.விற்கு எதிராக சூடான் அரசு தன் நிலையை அமைத்து கொள்வதின் மூலம் மேலும் சிக்கலாக தான் முடியும் என்பதை அறிந்தே உள்ளது. இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வந்து விட போவது இல்லை. கூடவே ஆப்பிரிக்கன் யூனியனும் சூடானுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து உள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் மறைமுக ஆதரவும் எண்ணெய் வளங்களுக்காக சூடானுக்கு என்றும் உண்டு.

இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு ஏற்பட்டு இருக்கும் சாதக பாதகங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

Tuesday, February 24, 2009

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?

இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம் கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.

"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."

காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்

1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.

2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.

3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.

4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.

இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.

பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.

Monday, February 23, 2009

வக்கீல்களுக்கு கண்டனம் - விளக்கம்

நேற்று வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோவின் கண்டன ஆர்பாட்ட அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு இட்டு இருந்தேன். அடேங்கப்பா அதை படித்து அதில் உள்ள விசயத்தை உள்வாங்கமாலே சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக எழுதி இருக்கேன் ஒரு சாரார் முடிவு பண்ணிட்டாங்க போல. வக்கீல்களுக்கு கண்டனம் என்றால் சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு யாருங்க சொன்னா? சுத்த அறிவிலித்தனமாக இல்லை? இருந்ததும் அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் சிலர் மெயிலில் இது குறித்து கேட்டதால் இந்த விளக்க பதிவு.

சுப்ரமணிய சுவாமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஒரு மண்ணும் கிடையாது. அவர் அவ்வபோது தன் பேட்டிகளின் மூலம் மக்களை சந்தோசப்படுத்தும் ஒரு அரசியல் காமெடியன். இது தான் அவர் மீது எனக்கு இருக்கும் கணிப்பு.

சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகள் ஏதிரானவர் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்ரமணிய சுவாமி அன்று நீதி மன்றத்திற்க்கு சென்றது சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பாக வழக்காட அனுமதி கோரி. அது நியாயமா இல்லையா என்பது வேறு. ஆனால் அதற்கும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கோர்ட் புறக்கணிப்பில் இருக்கும் வக்கீல்களும் என்ன சம்பந்தம். தங்களுடைய வன்மத்தை அவர் மேல் காட்ட முற்பட்டது ஏன்?

அப்படியே அவருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற வளாகத்தில் அவரை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கலாம். கருப்பு கொடி காட்டி இருக்கலாம். ஏன் முட்டையால் கூட அடித்து இருக்கலாம். அதை எல்லாம் அப்பொழுது செய்யவில்லை. ஏன் என்றால் அவருடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். அதான் அடிக்க தைரியம் இல்லை. அதை விடுத்து ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் உள்ளே சென்று, கதவுகளை தாழ் இட்டு கொண்டு அதுவும் நீதிபதிகளின் முன்னே அவர் மீது முட்டை அடித்தும், கன்னத்தில் அறைந்தும் நீதிமன்றத்தையே அவமதித்து உள்ளார்கள் நம் வக்கீல்கள். அதை தான் தவறு என்று சொல்கிறேன்.

சரிங்க, அதை மீறி அவர் மீது முட்டை அடித்ததுக்கு காரணம் ஈழ தமிழர்களுக்கு எதிராக சுவாமி நடக்கிறார் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முட்டை அடித்தோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்பும் வக்கீல்கள் தைரியமாக அடித்ததை ஒத்துக் கொண்டு ஆமாம் அடித்தோம் என்று சொல்லி சட்டப்படி அதை சந்திக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒளிய வேண்டும். சிலரை கைது செய்த பிறகு சுவாமி மீது ஜாதி பெயரை சொல்லி திட்டினார் அவரை கைது செய்த பிறகு எங்களை கைது செய்ய வேண்டும் என்ற ஏன் புகார் கொடுக்க வேண்டும். அப்படியே திட்டி இருந்தால் அன்றே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தானே. இதில் ஏதுவுமே செய்யாமல் பேடித்தனமாக நடந்துக் கொண்டார்கள் நம் வக்கீல்கள் என்பது தான் என் வாதம்.

போலீசார் தடியடி என்பதை விட கொலை தாக்குதல் நடத்தியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களாக நான் பரிந்து பேசவும் இல்லை. சோறு வைத்தால் வாலாட்டி கொண்டு போகும் நாய் போலவே தான் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஆசைப்படி நடந்து கொள்பவர்கள் நம் காவலர்களில் பலர். அதற்கு உதாரணம் மூன்று மணி நேரம் கலாட்டாக்களுக்கு பிறகு தான் கமிஷ்னர் வந்து தலையை காட்டுகிறார். இதை விட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருந்தது என்பது அவருக்கு தான் வெளிச்சம். சட்டக்கல்லூரியில் கை கட்டி வேடிக்கை பாத்தார்கள், இப்பொழுது கண்ணில் பட்டவர்கள் எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். மூளையையும், மனசாட்சியையும் கழட்டி விட்டு யூனிப்பார்ம் போடுவார்கள் போல.

இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
இதை எல்லாம் நடக்க விட்டும் வேடிக்கை பாத்து கொண்டு இருக்கும் தமிழக அரசை கண்டால் கேவலமாக இருக்கிறது. பீகாரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருக்கிறது நம் அரசு. முதல்வர் மருத்துவமனையில் இருந்தால் மற்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள். முதல்வரை அவர் குடும்பத்தாரும், டாக்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் வந்து அவர் அவர் வேலையை பாருங்கள்.

இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆக இப்பொழுது பிரச்சனை திசை திரும்பி விட்டது. இதை எதிர்பார்த்தவர்களுக்கு ரொம்ப சுலபமாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது வக்கீல்களும், போலீசாரும் பொது மக்களும் தான்.

போன பதிவில் பதிந்த என் கண்டனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஈழ பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். அதை தவிர்த்து மற்றவற்றில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். உங்கள் சுயலாபங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை அசிங்கப்படுத்தாரீகள். இதில் உங்கள் சாக்கடை அரசியலை கலக்காதீர்கள்.

வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்தால் பார்ப்பான் என்று சொல்வதும், பார்ப்பான் அல்லாதவனை பார்ப்பான் அடிவருடி என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பது தான் எனக்கு புரியல. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கருத்துகளை எதிர் வைக்கவும். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.

எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி.

Sunday, February 22, 2009

வாழ்க சனநாயகம் - 4 (வைகோ அறிக்கை)

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோ வக்கீல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்து உள்ளார்.

வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.

வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய விசயம் தான் அதே போல் சுப்ரமணியசாமி மீது அழுகிய முட்டை வீசியதற்கும் சேர்த்து வக்கீல்களை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தால் இதை வரவேற்று நாமளும் போய் ஆதரவு குரல் கொடுக்கலாம். ஆனால் வக்கீல்கள் ஏதுவுமே தவறு செய்தாத மாதிரியும் போலீசாரும் மற்றவர்களும் சேர்ந்து வக்கீல்களுக்கு அவபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை எல்லாம் செய்தாக அறிக்கையில் கூறி உள்ளார்.

//சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து பிப்ரவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.//

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வக்கீல்கள் பாதுகாப்பு இயக்காமாக மாறாத வரை சரி. தோளில் கருப்பு துண்டு போட்டு இருப்பதற்காக கருப்பு அங்கி அணிந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை வைகோ அவர்களே.

//வழக்கறிஞர்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.//

யாருனு சொன்னா எல்லாருக்கும் தெரியும்ல. நீங்க சொல்வது போல சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.

// சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது.//

உண்மையாக இருக்கலாம். நீதிமன்றத்தில் அழுகிய முட்டை கிடைக்குதே அது எப்படிங்க!

// காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.//

இது முதல் தடவையாக இருந்தால் வழக்கு போடலாம், ஆனால் இதே வாடிக்கையாக அல்லவா வைத்து இருக்கிறார்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை போட்டு மிதித்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேறா. வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே போகிறது.

//வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். //

வாஸ்தவமான பேச்சு. அதே போல காவல் நிலையத்தை கொளுத்திய வக்கீல்கள் மீதும், பொது சொத்திற்குக்கும், காவலர்களை தாக்கிய வக்கீல்கள் மீதும் மீண்டும் அவர்கள் வழக்காடவே கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து கேளுங்கள்.

//வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 23-ஆம் தேதி திங்கள்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் எங்கும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

ஆனா ஊனா இந்த தமிழ் உணர்வாளர்களை விட மாட்டேங்குறீங்க. ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற அராஜகங்கள் அயோக்கியத்தனங்களும் தொடர்ந்தால் மக்கள் கண்டிப்பாக நீங்க நியாயமாக நடத்தும் போராட்டங்களை கூட புறக்கணிக்க தொடங்குவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு பாருங்களேன், வக்கீல்கள் மீது மக்கள் அபிப்பிராயம் எப்படி உள்ளது என்று. காரித் துப்புவார்கள். சுப்ரீம் கோர்ட் தமிழக வக்கீல்கள் தொடர்ந்து இது போன்று நடந்து கொள்வது நல்லதல்ல என்று கவலை தெரிவித்து உள்ளது. அதை படிச்சீங்களா?

இவர் தான் இப்படி என்றால் திருமாவளவன் அறிக்கை அதை விட மோசம். ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் நீங்க காட்டிய ஆர்வமும் உழைப்பும் அவர் மீது நல்ல மரியாதை வர வைத்தது. அதை அவரே அவரின் சமீபகால அறிக்கைகளின் மூலம் கெடுத்து கொள்கிறார்.

ஒரு இலக்கை வைத்து போராடும் போது அதை பற்றி மட்டும் கவலைப்பட்டு அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முட்டையால் அடிப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது என ஈடுபட்டு எதை நோக்கி தொடங்கினீர்களோ அதை விடுத்து இப்பொழுது கவனம் வேறு பக்கம் சென்று விட்டது. நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் பத்தாது அதை வழி நடத்தி செல்கின்ற ஆட்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி - விகடன்.

ஈழத் தமிழர்கள் ஆதரவாக அமெரிக்காவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி எஸ்.கே.

Thursday, February 19, 2009

வாழ்க சனநாயகம் - 3

தேவர் மகன் படத்தில் நாசர் கூறுவது போல "இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அதே கூத்தை தான் நீதி துறையில் நம் அரசியல்வாதிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன மயித்துக்கு மேல்முறையீடு பண்ணுனீங்க. இது மாதிரி வழக்கு போட்டுட்டு பல வருடங்கள் கழித்து வாபஸ் வாங்குற ஆளுங்களை பிடிச்சு உள்ள போடனும். (இதில் 7 வருடங்கள்)

விபரம்!

ஜெ. எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த அப்பீல் வழக்கு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் தான் தர்மபுரி பேருந்து எரிப்பு நடைப்பெற்றது என்பது குறிப்படதக்கது.

DMK withdraws appeal against Jayalalithaa in Supreme Court

J. Venkatesan

The party had challenged acquittal of former Chief Minister and Selvaganapathy

NEW DELHI: The DMK on Wednesday withdrew its appeal in the Supreme Court challenging the acquittal of AIADMK general secretary Jayalalithaa in the ‘Pleasant Stay Hotel’ corruption case by the Madras High Court.

A Bench comprising Justice Arijit Pasayat, Justice L.S. Panta and Justice P. Sathasivam permitted DMK leader R.S. Bharathi to withdraw the special leave petition against the December 4, 2001 High Court judgment, acquitting Ms. Jayalalithaa, T.M. Selvaganapathy, former Local Administration Minister, and Rakesh Mittal connected with the hotel.

The trial court in February 2000 sentenced the accused to one-year imprisonment. As a fallout of the judgment two girl students of the Tamil Nadu Agricultural University died in the Dharmapuri bus burning incident.

The High Court on December 4, 2001 acquitted the accused. Since the Tamil Nadu government did not prefer an appeal, Mr. Bharathi filed the appeal, and the apex court admitted it in April 2002 and it was pending disposal. Meanwhile, Mr. Selvaganapathy joined the DMK.

When the matter was taken up on Wednesday, senior counsel R. Shanmugasundaram appearing for Mr. Bharathi submitted that the appellant wanted to withdraw the appeal.

In a brief order, the Bench said, “The petitioner says he has instructions to withdraw the appeal. Dismissed as withdrawn.”

In view of the dismissal, the acquittal by the High Court is confirmed.

The prosecution case was that Ms. Jayalalithaa, the then Chief Minister, and Mr. Selvaganapathy had passed orders by “abusing their positions as public servants” and they allegedly “obtained” for the hotel owner, pecuniary advantage without any public interest and committed offences under the provisions of Sec. 13 (1) (d) (ii) and (iii) of the Prevention of Corruption Act and also committed offences under certain Sections of the Indian Penal Code.

Thanks - The Hindu

வாழ்க சனநாயகம் - 1

வாழ்க சனநாயகம் - 2

Wednesday, February 18, 2009

ஈழம் - அடுத்து என்ன?

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்


பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.

அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.

இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.

ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?

ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.

WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.

விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.

வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.

Monday, January 26, 2009

ப்ளீஸ்! இந்த பதிவை படிக்காதீங்க!

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ 60
பக்கங்கள் : 112

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். அப்படி ஒரு எழுத்து நடை. எழுத்து நடை என்பதை விட நம் அருகில் நின்று நம்முடன் ஒருவர் உரையாடுவது போன்று ஒரு தோணி புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. பேச்சு வழக்கிலே எழுதியதிலே ஆசிரியர் வெற்றி பெற்று விட்டார். அதுவும் அந்த உரையாடல் நமக்கு படிக்கும் போது அவர் குரலிலே நம் மனதுக்குள் ஒலிப்பது தனிச்சிறப்பு. நீயா நானா நிகழ்ச்சி நம் மனக்கண்ணில் வந்து போகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பல பேச்சுகளை இந்த புத்தகத்தில் அச்சு ஏற்றி உள்ளார் என்பது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும்.

பொதுவாக தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களை நான் படிப்பது இல்லை. ஏற்கனவே அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஒரு எண்ணம் தான் அதற்கு காரணம். அதையும் மீறி இந்த புத்தகத்தை வாங்குவதற்கு ஒரே காரணம் தலைப்பும், கோபிநாத்ம் தான். வாங்கி படித்து முடித்த பிறகு இப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு ஏற்பட காரணம் என் எண்ண ஒட்டங்களில் பலவற்றை அப்படியே பிடுங்கி பதிவு செய்தது போல் ஒரு மாயை. கூடவே ஒரு உற்ற நண்பனுடன் பல விசயங்களை கலந்தாலோசித்து பிறகு ஏற்படும் தெளிவு இதில் ஏற்படுகிறது. அந்தளவுக்கு எளிமையாக அன்றாட விசயங்களை தொகுத்து அதற்கு தகுந்த உதாரணங்களை மனவியல் நிபுணர் முதல் ஜனகராஜ் வரைக்கும் எடுத்து கையாண்டு உள்ளார்.

அட!

  • ஒவ்வொரு அத்தியானத்துக்கும் தலைப்பு ஏதும் வைக்காமல் அந்த பகுதியின் மையக்கருத்தை கட்டம் கட்டி போட்டு இருப்பது. அதே போல பல இடங்களில் முக்கிய கருத்தை BOLD பண்ணி இருப்பது.
  • எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான் - கவுண்டமணி. சீரியஸ் ஆகவே நமது வாழ்க்கையை இப்படித் தான் வைத்து இருக்கிறோம் என்று சொல்கின்றன ஆய்வுகள்.
  • நீங்கள் கவனிக்காமலும் கண்டுக் கொள்ளாமலும் விட்ட விஷயம் மெகாசைஸ் "என்னவோ மாதிரி இருக்குது" ஆக மாறி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
  • உங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை. வம்படியாய் எந்தக் சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு எல்லாரும் போய் விடுவார்கள்.
  • உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தரமாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல மனோ வியாதி.
  • இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகத்திற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.
  • இழந்து போனது குறிந்த நினைவுகளையும், கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டு சிரமப்படுகிறோம். அதை விட்டு விட்டால் வெளியே வந்து விடலாம். ஆனால் விடமாட்டோம். குரங்குக்கு தான் அது தெரியாது. நமக்கும் கூடவா தெரியாது.

அட்ரா சக்கை!

  • சிரிப்பு வந்தால் சிரியுங்கள்! நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்
  • உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்... இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள். உங்கள் மனத் தொட்டியில் மேலும் மேலும் குப்பை கொட்டுபவர்.. உங்கள் நண்பராக இருக்க முடியாது.
  • முழு இட்லியை முழுங்க நினைத்தால் விக்கல் தான் வரும். அதை பிட்டு பகுதி பகுதியாக சாப்பிடுங்கள். அது தான் எளிது.
  • என்னமோ போடா... பின்றடா - ஜனகராஜ்
  • உங்களை இயக்க தான் கொள்கைகள் முடக்க அல்ல.
  • Nothing Interesting... Then make it interesting. வாழ்க்கை போரடிச்சா.. அதை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
  • வேலையாளாக இருப்பது . லாபம் வந்தால் நமக்கு. நட்டம் வந்தால் அவனுக்கு. இதிலிருந்து வெளியே வர வேண்டியது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டுக்காவும் தான்.

உறுத்தல்!

  • தலைப்பு - எதிர்மறையான தலைப்பு தான் என்னை புத்தகத்தை புரட்டி பார்த்து வாங்க வைத்தது என்ற போதிலும் இவ்வளவு பாசிட்டிவான தகவல்களை புத்தகம் முழுவதும் கொடுத்து விட்டு தலைப்பை இது போல வைத்தது 13 ரீலில் கண்டதையும் காட்டி விட்டு 14 ரீலில் புத்தி சொல்லுவது போல் எடுக்கப்படும் தமிழ் சினிமாவை தான் ஞாபகப்படுத்துகிறது. புத்தகமும் வியாபாரம் தானே, அதனால் இருக்கலாம்
  • புத்தக்கத்தில் இருக்கும் புகைப்படங்கள். வண்ணத்தில் கொடுத்து இருக்கலாம் அல்லது குறைந்தபட்டம் புகைப்படத்தின் தரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.

மொத்ததில் முன்னுரையில் என்ன சொல்லி இருந்தாரோ அதில் இருந்து சிறிது கூட மாறாமல் புத்தகத்தை முடித்து உள்ளார். புதுசாக ஏதும் அதில் இல்லை. ஆனால் நம்மை புதுபித்து கொள்ள உதவும். நம்பி வாங்கி படிக்கலாம். மற்றவர்களையும் வாங்க சொல்லாம்.

Friday, January 23, 2009

வீரவணக்கம் !

ஒரு நாட்டின் சுகந்திரம் என்பது
போராடி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம்
செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர,
கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல
பேரம் பேசிப் பெறுவதும் அல்ல

- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்



இந்த தேசம் இருக்கும் வரை உனை
நினைத்து சில சுவாசங்கள் இருக்கும்

ஜெய்ஹிந்த்!

Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல் 2009