இத படித்தவுடன், மண்ட காய்ச்சல் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்ததுங்க.
நான் மிகவும் ரசித்து மனம் விட்டு சிரிக்க வைத்தவை - "இந்தியாவின் விடிவெள்ளி" மற்றும் "இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்து".
நல்லா இருங்கடா சாமி, நல்லா இருங்க.
வாழ்க சனநாயகம் - 2
Monday, July 24, 2006
வாழ்க சனநாயகம்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, July 24, 2006
வகைகள் வாழ்க சனநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
82 comments:
அட.... நம்ம 111 பவுன் ஆதிகேசவன்:-)))))
அவரே தான்!
அது என்ன "நம்ம" - எதுவும் பங்கு உண்டா ;)
111 பவுன் - 111 சரி தான்.
How about the words saying
"Ambedkar's Marupiravi"
"Thaazhthapatta Makkalin Elu Ngayirey"
.. i was bloody pissed off when i saw this poster in Mount Road on prev Saturday..
//i was bloody pissed off when i saw this poster in Mount Road on prev Saturday.. //
நாமளும் முதல இப்படி தாங்க, இதை எல்லாம் பார்த்து பார்த்து, இப்ப சிரிப்பு தாங்க வருது. எப்ப தான் திருந்த போறாங்கனு தெரியல. ஔஅடுத்தவனுக்கு வாழ்த்தி போஸ்டர் ஒட்டுவதை முதலில் தடை செய்ய வேண்டும்.
//"Thaazhthapatta Makkalin Elu Ngayirey"//
மக்களிடம் எழு ஞாயிறேனு படித்தேன். அதான் அவர் எழுந்துறிக்க சொல்லுறாங்கனு நான் கண்டுக்கல.
டமாசு, டமாசு. சிரிக்க வைக்க இதுமாதிரி தினமும் போடுங்கப்பா சிரிச்சுபுட்டு போறோம்.
வாழ்க சனநாயகம்...
//அட.... நம்ம 111 பவுன் ஆதிகேசவன்:-))))) //துளசி கோபால்.
இந்த பொண்ணூகளுக்கு எப்படித்தான் கரெக்டா பவுன் மட்டும் நியாபகத்துல இருக்குமோ..
//தங்கத் தலைவா//
ஆதிகேசவன் அண்ணாச்சிக்கு ஏற்ற வாழ்த்துச் செய்திதான்.
//"இந்தியாவின் விடிவெள்ளி" மற்றும் "இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்து".//
எப்படி இவங்களுக்கு மட்டும் இப்படி வசனம் கிடைக்குதோ..?
ஒக்காந்து யோசிப்பாங்களோ...?
அன்புடன்...
சரவணன்.
ஆமாங்க, சென்னையில் சுத்திக்கிட்டு இருந்தப்ப இது மாதிரி தினமும் பார்த்து சிரித்தது உண்டு. இங்கன வந்ததுக்கு அப்புறம் அப்ப தினசரியில் பார்ப்பது தான்.
இது வரைக்கும் நான் தினசரியில் பார்த்ததில் இது தான் "டாப்".
வாப்பா ஹமீது. பாத்தியா நம்ம சனநாயகத்த!
வாழ்க சனநாயகம், வாழ்க சனநாயகம்!
//இந்த பொண்ணூகளுக்கு எப்படித்தான் கரெக்டா பவுன் மட்டும் நியாபகத்துல இருக்குமோ..//
இவர பாத்து பொறாமைப்பட்டவர்களில் நம்ம துளசியக்காவும் ஒருவர்.
//எப்படி இவங்களுக்கு மட்டும் இப்படி வசனம் கிடைக்குதோ..?
ஒக்காந்து யோசிப்பாங்களோ...?//
அதுக்குனு அநியாயத்துக்கு வர்கார்ந்து யோசிப்பானுங்க போல இருக்கு.
//வாப்பா ஹமீது. பாத்தியா நம்ம சனநாயகத்த!//
பாக்குறேன் சிவா ..பாக்குறேன்... ச(ப)னநாயகத்த நல்லா கண்குளிர பாக்குறேன்...
சிவா,
மோ(ச)டி மஸ்தான், தனிநபர், வங்கிகள் என்று இந்த ஜந்து ஏமாற்றியதற்குநம் ஜனநாயகத்தில் தண்டனை கிடையாதா?
அதுசரி. மிச்ச வெவரமான ஆளெல்லாம் "வெவசாயக் கடன்"ன்னு வாங்கி விவசாயியாகிக் கடன் தள்ளுபடித்திட்டத்திலே தப்பிச்சாச்சு.
பாவம் நம் மாதிரி பொதுமக்கள். இவனுங்ககிட்ட இருந்து தப்பவே முடியலே:-((
அண்ணன் ஆதிகேசவன் நீடுழி வாழ்க....:)
அவரின் தானைத் தளபது சிவா வாழ்க வாழ்க :)))
சிவா, நாங்கள் மவுண்ட் ரோடில் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும், எனக்கு, போக வேண்டிய வேலையே மறந்தது.அப்புறம் மனசை ஆற்றிக்கொண்டேன். அப்பப்போ நமக்கு நினைவு படுத்ததான்(ஆசை வைக்காதே அவதிப்படாதேனு ஒரு பாட்டு வரும்) இதூ கண்ணிலே படுது.
வளர்க சமுதாயம்
எல்லாம் இவனுங்களே காசு போட்டு அடிச்சுக்கறது தானே சிவா..
மக்கள் இதைப் பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி!!..
//"இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்து".//
ஆதி கேசவனுக்கு அப்புறம் உங்களுக்கு தான் கோவி.கண்ணன் ஒரு புது பதவி கொடுத்திருக்காறு
//அவரின் தானைத் தளபது சிவா வாழ்க வாழ்க//
என்னனு கேளுங்க :-)
//பாக்குறேன் சிவா ..பாக்குறேன்... ச(ப)னநாயகத்த நல்லா கண்குளிர பாக்குறேன்... //
கண் குளிர பாக்குறியா...
அவன் அவன் வயிறு எரிஞ்சி பாத்துக்கிட்டு இருக்கான், நீ என்னடானா உல்டாவா சொல்லுற.
அவர் என்ன சினிமா கதாநாயகியா கண் குளிர பாக்க.....
உன் கண்ல ஏதோ பிரச்சனை நினைக்கிறேன். அது சரி, எங்க போன பதிவில் ஆள காணாம். ஒட்ட மறக்க போட்டு விடு.
//இலக்கியத்துக்குத் தானே இலக்கணம்?
இவர்களென்ன புதுசாச் சொல்கிறார்கள்?
இதிற்கூட ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ? //
ரொம்ப யோசிக்கிறீங்க போல இருக்கு.
அது எல்லாம் தப்புங்க.
//பாவம் நம் மாதிரி பொதுமக்கள். இவனுங்ககிட்ட இருந்து தப்பவே முடியலே:-(( //
ஆமாங்க, ஒருத்தன் தப்பு பண்ணினவன் என்று தெரிந்துமே அவனுக்கு கூஜா தூக்கம் மக்கள் தான் இங்கு மிக அதிகம்.
நீங்களே பாருங்க, இவனுங்க மாதிரி ஆட்கள் எல்லாத்தை கைது பண்ணும் போது சிரிச்சிக்கிட்டே தான் போறாங்க, திரும்ப சிரிச்சிக்கிட்டே தான் வெளியே வராங்க. என்னத்த சொல்ல.
போஸ்டர், தலைப்பில் பாத்தீங்களா,
"தர்மத்தின் வாழ்வை சூது கவ்வுமாம்"
யாரு யாரு எல்லாம் இதை உபயோகப்படுத்துவது என்ற வரைமுறையே இல்லாம போச்சு, நம் நாட்டில்.
//அண்ணன் ஆதிகேசவன் நீடுழி வாழ்க....:) //
ஆஹா, கண்ணன் உண்மையிலே நீங்க பெரிய மகான் தான். என்ன தான் அவர் ஏகப்பட்ட தவறுகள் செய்து இருந்தாலும், அவரும் தன் தவறை திருந்தி வாழ வேண்டும் என்று நீங்கள் அவருக்கு வாழ்க போடுவதை கண்டு என் மனம் பூரிப்பு அடைக்கின்றது. நம்ம ஊர் உண்மையிலே மிகவும் புண்ணியம் செயத பூமி தான். நாகையால் உங்களுக்கு பெருமையா, இல்லை உங்களால் நாகைக்கு பெருமையா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிர்த்து கொண்டு இருக்கின்றேன்.
//கண்ணனின் தானைத் தளபது சிவா வாழ்க வாழ்க :)))//
என்றுமே உங்களின் போர் படை தளபதியாக இருப்பதில் மிக்க பெருமை அடைகின்றேன்.
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஏமாறுகிரவன் இருக்கற வரைக்கும் இதெல்லாம் தொடரும்!
சிரிப்பதா, அழுவதா என்று குழம்பினே சற்று நேரம்!
சிரிப்பது என முடிவு செய்தேன், நகை. சிவா!
நன்றி.
தங்கள் பெயரை வேண்டுமென்றுதான் மாற்றிச் சொன்னேன், நாகை.சிவா!
நகை = சிரிப்பு, தங்க நகை!~!
இப்பதிவில் இரண்டும் இருந்தது!
தங்கள் பெயரை வேண்டுமென்றுதான் மாற்றிச் சொன்னேன், நாகை.சிவா!
நகை= சிரிப்பு, தங்க நகை!~!
இப்பதிவில் இரண்டும் இருந்தது!
தங்கள் பெயரை வேண்டுமென்றுதான் மாற்றிச் சொன்னேன், நாகை.சிவா!
நகை= சிரிப்பு, தங்க நகை!~!
இப்பதிவில் இரண்டும் இருந்தது!
//சிவா, நாங்கள் மவுண்ட் ரோடில் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும், எனக்கு, போக வேண்டிய வேலையே மறந்தது//
அட என்னங்க இது சின்னப்புள்ளதனமா?
//அப்புறம் மனசை ஆற்றிக்கொண்டேன்.//
வேற என்னத்த பண்ணுறது. இவங்க அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.
//எல்லாம் இவனுங்களே காசு போட்டு அடிச்சுக்கறது தானே சிவா..//
அது தெரிஞ்ச மேட்டரு தான் கப்பி, இவனுங்களுக்கு எல்லாம் வேற எவன் அடிப்பான். இருந்தாலும் அந்த போஸ்டரில் இருக்கும் வாசகங்கள் ரொம்பவே அதிகம்.
//மக்கள் இதைப் பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி!!.. //
எங்குட்டு! மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால் தானே இது போல பலர் தினமும் முளைத்து கொண்டே இருக்கின்றார்கள்.
என்கிட்டயும் எவனாவது ஏமாந்தா...அமெரிக்காவின் ஆயிரம் விளக்கே அப்படினு போஸ்டர் அடிச்சு ஒயிட் ஹவுஸ் முன்னால ஒட்ட சொல்லலாம்.... :-)
இவனுக திருந்தவே மாட்டானுங்க...
////அவரின் தானைத் தளபது சிவா வாழ்க வாழ்க//
என்னனு கேளுங்க :-)//
நானே அண்ணனை கஷ்டப்பட்டு ஒரு மாதிரி சமாளித்து வைத்துக் இருக்கேன். இதுல நீங்க வேறையா நன்மனம்.
எங்க கொஞ்ச நாளாக நம்ம பதிவு பக்கம் ஆளேயே காணாம். போன பதிவை காணாம். பார்த்து செய்ய வேண்டியதை செய்யவும்.
//சிரிப்பதா, அழுவதா என்று குழம்பினே சற்று நேரம்!
சிரிப்பது என முடிவு செய்தேன்,//
இதில் அழுவதற்கு என்ன இருக்கு எஸ்.கே. நாம் நன்றாக சிரித்து நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் இது எல்லாம் என்று நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும்.
ஆகா,
இவருக்கு என்ன குறைச்சல் சிவா என்ன மத்தவங்க மாட்டிகிட்டிகளை இவரு மாட்டிகிட்டாரு அது தான் வித்தியாசம். எனக்கு என்னவோ இவரை உள்ள தூக்கி வெக்க இது எல்லாம் அவரோட எதிரிங்க பண்ற சதின்னு நினைக்கிறேன் கவலைபடாத சிவா அண்ணனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உலகத்தை opposite directionல சுத்தி விட்டு நம்ம பவரை காட்டலாம்.
//தங்கள் பெயரை வேண்டுமென்றுதான் மாற்றிச் சொன்னேன், நாகை.சிவா!/
தாங்கள் எப்படி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் எஸ்.கே.
அது சரி, ஏன் இத்தனை பின்னூட்டம். கடந்த சில பதிவுகளுக்கு வராதால் அனைத்தையும் இங்கே போட்டு வீட்டீர்களா. ஆங்,,, இது செல்லாது. செல்லாது...
//அமெரிக்காவின் ஆயிரம் விளக்கே அப்படினு போஸ்டர் அடிச்சு ஒயிட் ஹவுஸ் முன்னால ஒட்ட சொல்லலாம்.... :-)//
இப்படி ஒரு ஆசை இருப்பதை என்கிட்ட நீ சொல்லவே இல்லயே பங்காளி. ஒயிட் ஹவுஸ் முன்னாடி மட்டும் இல்ல பெண்டன் முன்னாடியும், ஐ.நா.வின் தலைமையகத்துக்கு முன்னாடியும் ஒட்டனும். செஞ்சிடுவோம் கவலைப்படாத மக்கா!
//இவனுக திருந்தவே மாட்டானுங்க.//
சரியா சொல்லிபுட்ட ;)
அம்பேத்காரின் மறுபிறவியே வாழ்க!!!
ஆன்மிக செம்மலே வாழ்க !!!
கொடை வள்ளலே வாழ்க வாழ்க !!!
இவண் அனைத்திந்திய டாக்டர் அபேத்கார் எஸ்.ஸி/எஸ்.ஸி நலவாழ்வு இனையகம்.
யு எ இ கிளை
I'm speechless after looking at this pic :(.
Gounder dialogue thaan nyabagathuku varuthu."Arasiyala ithellam sagajamappa".
//உன் கண்ல ஏதோ பிரச்சனை நினைக்கிறேன். //
என் கண்ணுல ஒரு பிரச்சினையும் இல்ல சிவா....வேதனையிலதான் சொல்லுறேன். நீ வேற அதுக்கும் விளக்கம் கேக்குர :-(
//அது சரி, எங்க போன பதிவில் ஆள காணாம். ஒட்ட மறக்க போட்டு விடு. //
எது?..கோசு அடிச்ச பதிவா... படிச்சேனே.. பின்னூட்டம் போடலயா என்ன?
எல்லாம் சரி...இதுக்கு ஓட்டு வேற போட சொல்றீரா? சரி..சரி...
(உன் பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ப நேரம் எடுக்குது சிவா...கொஞம் பாரு)
//ஆங்,,, இது செல்லாது. செல்லாது... //
எல்லாத்தையும் publish பண்ணி count எத்திட்டு அப்புறம் என்ன செல்லாது. செல்லாது?:-)
இலக்கணம் மாறுமோ?இலக்கியம் ஆகுமோ?
என்ற கண்ணதாசனின் கேள்விக்கு மிக அழகாக பதில் சொல்லியிருக்கிறார் ஆதிகேசவர்.அவரைபோய் கிண்டல் செய்கிறீர்களே?:-)))
ஏதோ இப்படி எழுதியாவது தமிழை மறக்காமல் வளர்க்கிறார்களே என்று சந்தோஷப்படுவோமாக!!
//அனைத்திந்திய டாக்டர் அபேத்கார் எஸ்.ஸி/எஸ்.ஸி நலவாழ்வு இனையகம்.
யு எ இ கிளை //
மின்னல், எனக்கு எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. ஏதோ பண்ணு.....
//Adhi Kesava
Meedhi cash Irruka.//
அதே டவுட்டு தான் எனக்கும். பறிமுதல் செய்த பிறகும் எப்படி இப்படி?
சி.எம். மா......?
தாங்காதுப்பா, தாங்காது....
வாங்க கோபாலன், முதல் வருகை என்று நினைக்கின்றேன். நல்வரவாகட்டும்.
//Gounder dialogue thaan nyabagathuku varuthu."Arasiyala ithellam sagajamappa". //
அரசியலுக்கு வரதுக்கு அடி போடுகின்றார் என்பது போஸ்டரை பார்த்தவுடன் தெரிந்து விட்டது.
//உன் பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ப நேரம் எடுக்குது சிவா...கொஞம் பாரு)//
பாக்குறேன் ஹமீது. எனக்கு என்னவோ இது ப்ளாக்கர் பிரச்சனை என்று நினைக்கின்றேன். பலரின் பதிவு திறக்கவே மாட்டேன் என்கிறது. நீ கூட புது பதிவு போட்டு உள்ளாய் என்று நினைக்கின்றேன். மல்லுக்கட்டி பாக்குறேன், ஹுக்கும் அசர மாட்டேங்குது.
விடாமல் முயற்சி பண்ணுறேன். பாக்கலாம்.
ஆசையா இத்தன கமெண்ட் போட்டு உள்ளார் என்று நினைத்து ப்பளிச் பண்ணி விட்டேன். உன்ன மாதிரி ஒரு மடல் அனுப்பி இருந்தால் ப்பளிச் செய்யாமல் இருந்து இருக்கலாம்....;)
//ஏதோ இப்படி எழுதியாவது தமிழை மறக்காமல் வளர்க்கிறார்களே என்று சந்தோஷப்படுவோமாக!! //
ஆஹா, இதிலும் ஒரு நல்ல விசயத்தை கண்டு பிடித்து மகிழும் உங்களை என்னவென்று சொல்வது. நம்ம ஊருக்காரர்கள், நம்ம ஊர்காரர்கள் தான். நல்ல மனம் படைத்த தங்கங்கள்.
அதுக்குனு அநியாயத்துக்கு பாசிட்டிவ் அப்ரோச்ங்க உங்களுக்கு ;)
//அண்ணனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உலகத்தை opposite directionல சுத்தி விட்டு நம்ம பவரை காட்டலாம்//
காட்டு பங்காளி, காட்டு. ஆனா என்ன ஆள விடு சாமி. எதா இருந்தாலும் நீ பாத்துக்கோ!
//அவரைபோய் கிண்டல் செய்கிறீர்களே?:-))) //
நான் எங்க செல்வன் கிண்டல் செய்தேன். அவரின் பதிலை கண்டு மனம் மகிழ்கின்றேன்.
நம்மாளும் ரிலாக்ஸ் ஆகனமுல.
//நானும் தேடித்தேடி பார்த்தேன் 'வருங்கால முதலமைச்சர் வாழ்க' அப்படீன்னு எதுவும் காணும்//
அது தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று போட்டு உள்ளார்களே, அப்பறம் என்ன அப்படி நூல் பிடிச்சாபல முன்னேறி பிரதமர் வரைக்கும் வந்து விடுவார்கள் பாருங்க.
//பாக்குறேன் ஹமீது. எனக்கு என்னவோ இது ப்ளாக்கர் பிரச்சனை என்று நினைக்கின்றேன். பலரின் பதிவு திறக்கவே மாட்டேன் என்கிறது.//
இல்ல சிவா...எனக்கு எல்லா பதிவும் வருது... உன்னுது நேரம் அதிகம் எடுக்குது.. ரொம்ப நாளாவே அப்படிதான்... டெம்பிலேட் பிரச்சினைன்னு நினைக்கிறேன்...
// நீ கூட புது பதிவு போட்டு உள்ளாய் என்று நினைக்கின்றேன். மல்லுக்கட்டி பாக்குறேன், ஹுக்கும் அசர மாட்டேங்குது.
விடாமல் முயற்சி பண்ணுறேன். பாக்கலாம்//
நெஞ்ச தொட்டுட்டியே சிவா..:-) கண்டிப்பா பாரு.. கிட்டதட்ட இதே மாதிரி பதிவுதான்...வாழ்க சனநாயகம்னு சொல்றதுதான் அதுவும்....
//நெஞ்ச தொட்டுட்டியே சிவா..:-) கண்டிப்பா பாரு.. //
பாத்தாச்சு பாத்தாச்சு
இந்த டெம்பிளேட் பிரச்சனைய என்னனு பாக்குறேன்.
Nalla vishayam thane, ini latest nagai design ellam adikadi paarkalamnu sollunga :-)
//ini latest nagai design ellam adikadi paarkalamnu sollunga :-)//
ஹுக்கும். இனி சொல்வதற்கு என்ன இருக்கு. என்னமோ போங்க. எங்க உங்களுக்கு புது டிசைன் பார்ப்பதற்கு வேற வழியே இல்லையா?
நுனி நாக்கு இங்க்லீஷும், ஹிந்தியும் தலைவிரித்தாடும் பொழுது தமிழை இப்படியாவது வளர்க்கிறாங்கன்னு பெருமதான் படவேண்டியாதாருக்கு.
காசு கொடுத்து படிச்ச பாஸிடிவ் அப்ரோச்சை இப்படித்தான் நடைமுறைப் படுத்தறது.
ஆஹா டாப்
டமாசு!!! டமாசு!!!
//நுனி நாக்கு இங்க்லீஷும், ஹிந்தியும் தலைவிரித்தாடும் பொழுது தமிழை இப்படியாவது வளர்க்கிறாங்கன்னு பெருமதான் படவேண்டியாதாருக்கு.//
அதை விட நாம் இணையத்தில் நன்றாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம். நான் சுட்டிக்காட்ட வந்தது. தவறு செய்தவன் என்று அனைவரும் அறிந்தவன் இது போல ஒரு போஸ்டரில் இன்று நின்று போஸ் கொடுப்பதை குறித்து தான்.
வாப்பா தேவ். நம்ம கச்சேரிய விட இவங்க கச்சேரி பெரிய கச்சேரியா இருக்கு.
மக்கள் எதையுமே எளிதில் மறக்க கூடியவர்கள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீல்லடா இவருக்குதான் போல
என்னமா மின்னல் இந்த தடவை இம்புட்டு லேட்டா வந்து இருக்க.
நாம் பலவற்றை மறப்பதால் தான் இவனுங்க ஆட்டம் அதிகமா இருக்கு. என்னத்த சொல்லுறது....
//
என்னமா மின்னல் இந்த தடவை இம்புட்டு லேட்டா வந்து இருக்க.
//
34 & 58
லேட்டுதான் என்ன பண்ணுறது உங்களுக்கு தேன் கூட்டில் ஓட்டு போட வேனாமா ??
intha koothu ellam vera nadakuthaa?
enakku pudupettai padam thaan ninaivukku varuthu..
enna kodumai siva!
(kosu adichathuku 120 commentsaa?)
ippa theriyuthu y blogs were blocked!nu :D
ooooooooooops ithellam too much!
//34 & 58 //
சாரிம்மா மின்னல். நீ வந்து அந்த ஆளுக்கு வாழ்க கோஷம் போட்டு போயிட்டியா, அதனால் கொஞ்சம் கன்புஸ் ஆயிட்டேன்.
ஒட்டு போட்டுட்டியா. நம்ம ஊருக்காரன் நம்ம ஊருக்காரன் தான். ஹிஹி.
//enna kodumai siva!
(kosu adichathuku 120 commentsaa?)//
யப்பா, அதுக்கு நீ எல்லாம் வரவே இல்ல. சரி கொடுமை சொன்னது ஆதிகேசவனுக்கா, இல்ல எனக்கா.
அது போகட்டும், ஒட்டு போட இன்று தான் கடைசி. சீக்கிரம் ஆகட்டும்.
//oooooooooops ithellam too much//
சுபா, யாருங்க சொல்லுறீங்க. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, என்ன தான் சொல்லுறீங்கனு நம்ம மக்கள் முடிவே கட்டி விடுவாங்க.
எப்போ வந்தீங்க இந்தியாவுக்கு, எனக்குச் சொல்லவே இல்லையே?
அம்பி கேக்கிற மாதிரி கேக்கறேன், இந்தப் பதிவுக்கு இத்தனைப் பின்னூட்டமா? அதெல்லாம் எரியலை. புகை வருதா என்ன? அப்புறம் உங்கள் ப்ளாக் மூணு நாளா ஒரே அடம், இன்னிக்குத் தான் மசிஞ்சது. பரவாயில்லை. பழைய விஷயங்களை எல்லாம் போட்டுப் பின்னூட்டம் வாங்கறீங்க! :D
Roam around Chennai to see these type of posters and wall writings. Apart from the sentence these kind of people's pose looks more funny.
Few examples:
having pen in hand and thinking something, pose with lion/cheeta, pose like speaking in mobile phone and pose like having sword in hand.
Ore comedy-a irukkum paarka. I have a doubt, really don't they feel shy for these?.
Roam around Chennai to see these type of posters and wall writings. Apart from the sentence these kind of people's pose looks more funny.
Few examples:
having pen in hand and thinking something, pose with lion/cheeta, pose like speaking in mobile phone and pose like having sword in hand.
Ore comedy-a irukkum paarka. I have a doubt, really don't they feel shy for these?.
//எப்போ வந்தீங்க இந்தியாவுக்கு//
நெசமாலுமா...பங்கு தாய்மண்லயா இருக்க... :-)
ஐய்யோ ஐய்யோ!என்ன நடகுது இங்க?சென்னையிலும் இது மாதிரி நடக்குதா?என்ன கொடுமை சரவனா இது?
He he - namma makkal intha mathri pugalrathula adichukave mudiyathu :D lol
வாழ்த்துக்கள் !
வ வா சங்க நிர்வாகி !!
மற்றும்
தேன்கூடு முயற்சிக்கு !!!!!
Siva,
I had problems accessing your site for the past 1 week. Only today, I was able to log in here.. Paartha vote podara time mudinju pochu..:-(
Parava illai, adhutha thadavai EEiyai pidikiradhu eppadinu oru kadhai eludunga..
Naan kattayama seekiramae vote pottudurean.seriya:-)
Ramya said... //என்ன கொடுமை சரவனா இது?//
இது என்ன புது கொடுமை..? வேற யாராவது சரவணானு இருக்கிறீங்களாப்பா..?
அன்புடன்...
சரவணன்.
//எப்போ வந்தீங்க இந்தியாவுக்கு, எனக்குச் சொல்லவே இல்லையே? //
இந்தியா வந்தா தானே சொல்வதற்கு
:)
//அதெல்லாம் எரியலை. புகை வருதா என்ன?//
வருது, வருது நல்லாவே வரும்
இது என்ன அவ்வளவு பழய மேட்டரா. தெரியலங்க. இப்ப தான் எனக்கு தெரிந்து உடனே போட்டு விட்டேன்.
//Ore comedy-a irukkum paarka. I have a doubt, really don't they feel shy for these?. //
பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம் போல.
அரசியல இது எல்லாம் சதாரணம்ப்பா.
இவிங்கள பாத்து நம்ம தான் வெட்கப்படனும் போல
//நெசமாலுமா...பங்கு தாய்மண்லயா இருக்க... :-) //
இல்லமா, இன்னும் அன்னிய மண்ணில் தான் இருக்கேன். இன்னும் மூன்று மாதத்துக்கு இங்க தான் பங்கு
//ஐய்யோ ஐய்யோ!என்ன நடகுது இங்க?சென்னையிலும் இது மாதிரி நடக்குதா?//
ஆமாங்க ரம்யா, சென்னையில் தான் இந்த கொடுமை எல்லாம் நடக்கும்.
நீங்கள் இதை எல்லாம் பார்ப்பது இல்லயா.
என்ன கொடுமை சார் இது!
//He he - namma makkal intha mathri pugalrathula adichukave mudiyathu :D lol //
ஆமாம் அர்ஜுன் வர்கார்ந்து யோசிப்பார்கள் போல.
//வாழ்த்துக்கள் !
வ வா சங்க நிர்வாகி !!
மற்றும்
தேன்கூடு முயற்சிக்கு !!!!! //
நன்றி மின்னல்
நீ தான் முதல் ஆளு நம்க்கு வாழ்த்து சொன்னது.
ஊருக்காரன் ஊருக்காரன் தான்
//EEiyai pidikiradhu eppadinu oru kadhai eludunga..//
எலியா, இது நல்ல ஐடியாவா தான் இருக்கு. புலி எலி பிடித்தால் நல்லாவா இருக்கும்?
//Paartha vote podara time mudinju pochu..:-(//
இதற்கு நான் வெற்றி பெற கூடாது என்று உலக நாடுகள் சேர்ந்து செய்த சதி என்று நினைக்கின்றேன். பரவாயில்ல ராஜி, ஒட்டு போட வேண்டும் என்று நினைத்தீர்களே அதுவே போதும்
;)
//இது என்ன புது கொடுமை..? வேற யாராவது சரவணானு இருக்கிறீங்களாப்பா..?//
உங்களை சொல்ல சரவணா, அது வேற சரவணா.
எல்லாம் தமிழ் சினிமா பார்த்து கெட்டு போன கோஷ்டி. நீங்க ஏதும் கண்டுக்காதீங்க
//உங்களை சொல்ல சரவணா, அது வேற சரவணா.
எல்லாம் தமிழ் சினிமா பார்த்து கெட்டு போன கோஷ்டி. நீங்க ஏதும் கண்டுக்காதீங்க//
ஓ.......
சரிங்க நானும் கண்டுக்கலை....
அன்புடன்...
சரவணன்.
Post a Comment