Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Monday, January 31, 2011

தமிழக மீனவர்களுக்காக

மற்றவர்களுக்கு எப்படியோ நாகையை சேர்ந்த எனக்கு நாகை மாவட்டத்து மீனவன் சுடப்படுவதும் அதை தொடர்ந்து மீனவர்களின் சில நாள் போராட்டம், அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் மீண்டும் தாக்குதல் மீண்டும் போராட்டம் என்பது பாத்து பாத்து சலித்து போன விசயம். உருப்படியாக ஏதுவும் நடந்ததும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்று வெறுத்து போன மனநிலை தான்.

கடந்த வாரம் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் மீண்டுமா என்ற கேள்வியும் வழக்கம் போல் நாகை மாவட்டத்து மீனவர்களின் காலவரையெற்ற போராட்டம், மறியல், மற்ற சில மீனவ கிராமங்களின் மறியல், ஆளும் கட்சியின் திரைமறைவு நிவாரணம், மற்ற கட்சிகளின் கடமைக்கான எதிர்ப்பு குரல் அம்புட்டு தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக இணையத்தில் வலுவாக குரல்கள் தொடர்ந்து எழுப்பட்ட போது எனக்கே இது உண்மை தானா என்ற ஐயம் வந்தது. ஆனால் என் ஐயத்தை துடைக்கும் வண்ணம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு நிறுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டிவிட்டரில் அவர்களுடன் நாமும் கைகோர்ப்போம்.

அதை பற்றிய விபரங்களுக்கு




#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :

http://www.savetnfisherman.org/

http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html

http://www.petitiononline.com/TNfisher/petition.html

JOIN THE CAUSE : Act Now, Voice your Dissent – Tweet with the tag #tnfisherman

Wednesday, June 09, 2010

பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்

கிரிக்கெட் உலகின் தன்நிகர் இல்லா தாதாவாக நினைத்துக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தன்னுடைய திமிர் தனத்தை இந்த வருடம் முதல் ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் மூலம் காட்டி உள்ளது. அதற்கு காரணமாக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நியுசிலாந்து அணியுடனான தொடரை காரணம் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கலந்துக் கொள்ளாது. 

நிரம்பிய கிரிக்கெட் ரசிகர்களும், நிரம்பிய விளம்பரங்களும், கொட்டும் பணமும் பி.சி.சி.ஐ. யை ஒரு தனி அதிகார மையமாக மாற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அரசுக்கே சில காலங்களுக்கு முன்பு இருந்து போக்கு காட்ட வைக்கும் அளவுக்கு வளர்ந்தது தான் ஆச்சரியம். ஐ.பி.எல் - 2 தொடரின் போது இந்திய அரசை பகைத்துக் கொண்டு தென் ஆப்பரிக்காவில் போட்டியை நடத்திக் காட்டியது. வருமானம் குறைவு தான் என்றாலும் நீ சொல்வதற்கு எல்லாம் ஒத்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை என்பதை காட்டவே இப்போட்டி இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்பட்டது. உலக அரங்கில் நமது விளையாட்டு துறைக்கு இது ஒரு அசிங்கமே. ( தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தவிர்க்க சொன்ன அரசின் நடவடிக்கையும் சரி அல்ல என்பது வேறு விசயம். )

அதே போல் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் க்கு அடுத்து மிக பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஆசிய போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது. ஆசிய கோப்பை என்ற பெயரில் ஒரு தொடரில் விளையாட முடியுமாம் ஆனால் இந்தியாவின் சார்பாக ஆசிய போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாதாம். இதில் எந்த லட்சணத்தில் தேசத்திற்காக ஆடுகிறோம் என்று நம் கிரிக்கெட் வீரர்களால் மார்தட்ட முடிகின்றது என்று தெரியவில்லை.

இந்திய ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் கல்மாடி கூறியதை போல் இது போன்ற போட்டிகளில் விளையாடினால் பணம் கிடைக்காது பதக்கம் மட்டும் தான் கிடைக்கும். பணமே பிரதானமாக கருதப்படும் கிரிக்கெட் அணிகளால் இதில் கலந்துக் கொள்வது சந்தேகமே என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்காக விளையாடி என் நாட்டிற்கு சில பதக்கங்களை வென்றுக் கொடுத்தேன் என்பதை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்காக விளையாடி சில கோடிகளை சம்பாதித்து கொண்டேன் என்பது தான் வீரர்களின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டங்களை சேர்க்க வேண்டி கேட்ட போது 20/20 போட்டிகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று பி.சி.சி.ஐ. மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஐ.பி.எல். ஆட்டங்களை எதில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. 1998 ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே கனடாவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர் ஆட முதல் தர வீரர்களை அனுப்பியது.

இந்திய அணி புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளார் நமது மத்திய அமைச்சர் சரத் பவார். விவசாயத் துறையை இந்தியாவில் சீர்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சக வேலைக்கான நேரத்தை விட கிரிக்கெட் பார்க்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக தான் பவார் அதிக நேரம் செலவழிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால் தனக்கு கை வந்த கலையான சப்பை கட்டு கட்டுவதை மிக சரியாக செய்கிறார் பவார். இது போன்ற அமைச்சர்களை கூட்டணிக்காக வைத்துக் கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். 

இதே போல் NADA அமைப்புக்கும் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அந்த அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. 

இதற்கு எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு துறை என்று ஒன்று இருக்குமே அது தான் எதாச்சும் செய்ய வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் யாரும் எந்த ஒரு விளையாட்டு கழகத்திற்கும் / வாரியத்திற்கும் / சங்கத்திற்கும் பொறுப்பு வகிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். விளையாட்டும் அரசியல் ஆனதினால் வந்த விளைவு இது. 

Monday, February 23, 2009

வக்கீல்களுக்கு கண்டனம் - விளக்கம்

நேற்று வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோவின் கண்டன ஆர்பாட்ட அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு இட்டு இருந்தேன். அடேங்கப்பா அதை படித்து அதில் உள்ள விசயத்தை உள்வாங்கமாலே சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக எழுதி இருக்கேன் ஒரு சாரார் முடிவு பண்ணிட்டாங்க போல. வக்கீல்களுக்கு கண்டனம் என்றால் சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு யாருங்க சொன்னா? சுத்த அறிவிலித்தனமாக இல்லை? இருந்ததும் அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் சிலர் மெயிலில் இது குறித்து கேட்டதால் இந்த விளக்க பதிவு.

சுப்ரமணிய சுவாமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஒரு மண்ணும் கிடையாது. அவர் அவ்வபோது தன் பேட்டிகளின் மூலம் மக்களை சந்தோசப்படுத்தும் ஒரு அரசியல் காமெடியன். இது தான் அவர் மீது எனக்கு இருக்கும் கணிப்பு.

சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகள் ஏதிரானவர் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்ரமணிய சுவாமி அன்று நீதி மன்றத்திற்க்கு சென்றது சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பாக வழக்காட அனுமதி கோரி. அது நியாயமா இல்லையா என்பது வேறு. ஆனால் அதற்கும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கோர்ட் புறக்கணிப்பில் இருக்கும் வக்கீல்களும் என்ன சம்பந்தம். தங்களுடைய வன்மத்தை அவர் மேல் காட்ட முற்பட்டது ஏன்?

அப்படியே அவருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற வளாகத்தில் அவரை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கலாம். கருப்பு கொடி காட்டி இருக்கலாம். ஏன் முட்டையால் கூட அடித்து இருக்கலாம். அதை எல்லாம் அப்பொழுது செய்யவில்லை. ஏன் என்றால் அவருடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். அதான் அடிக்க தைரியம் இல்லை. அதை விடுத்து ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் உள்ளே சென்று, கதவுகளை தாழ் இட்டு கொண்டு அதுவும் நீதிபதிகளின் முன்னே அவர் மீது முட்டை அடித்தும், கன்னத்தில் அறைந்தும் நீதிமன்றத்தையே அவமதித்து உள்ளார்கள் நம் வக்கீல்கள். அதை தான் தவறு என்று சொல்கிறேன்.

சரிங்க, அதை மீறி அவர் மீது முட்டை அடித்ததுக்கு காரணம் ஈழ தமிழர்களுக்கு எதிராக சுவாமி நடக்கிறார் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முட்டை அடித்தோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்பும் வக்கீல்கள் தைரியமாக அடித்ததை ஒத்துக் கொண்டு ஆமாம் அடித்தோம் என்று சொல்லி சட்டப்படி அதை சந்திக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒளிய வேண்டும். சிலரை கைது செய்த பிறகு சுவாமி மீது ஜாதி பெயரை சொல்லி திட்டினார் அவரை கைது செய்த பிறகு எங்களை கைது செய்ய வேண்டும் என்ற ஏன் புகார் கொடுக்க வேண்டும். அப்படியே திட்டி இருந்தால் அன்றே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தானே. இதில் ஏதுவுமே செய்யாமல் பேடித்தனமாக நடந்துக் கொண்டார்கள் நம் வக்கீல்கள் என்பது தான் என் வாதம்.

போலீசார் தடியடி என்பதை விட கொலை தாக்குதல் நடத்தியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களாக நான் பரிந்து பேசவும் இல்லை. சோறு வைத்தால் வாலாட்டி கொண்டு போகும் நாய் போலவே தான் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஆசைப்படி நடந்து கொள்பவர்கள் நம் காவலர்களில் பலர். அதற்கு உதாரணம் மூன்று மணி நேரம் கலாட்டாக்களுக்கு பிறகு தான் கமிஷ்னர் வந்து தலையை காட்டுகிறார். இதை விட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருந்தது என்பது அவருக்கு தான் வெளிச்சம். சட்டக்கல்லூரியில் கை கட்டி வேடிக்கை பாத்தார்கள், இப்பொழுது கண்ணில் பட்டவர்கள் எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். மூளையையும், மனசாட்சியையும் கழட்டி விட்டு யூனிப்பார்ம் போடுவார்கள் போல.

இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
இதை எல்லாம் நடக்க விட்டும் வேடிக்கை பாத்து கொண்டு இருக்கும் தமிழக அரசை கண்டால் கேவலமாக இருக்கிறது. பீகாரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருக்கிறது நம் அரசு. முதல்வர் மருத்துவமனையில் இருந்தால் மற்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள். முதல்வரை அவர் குடும்பத்தாரும், டாக்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் வந்து அவர் அவர் வேலையை பாருங்கள்.

இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆக இப்பொழுது பிரச்சனை திசை திரும்பி விட்டது. இதை எதிர்பார்த்தவர்களுக்கு ரொம்ப சுலபமாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது வக்கீல்களும், போலீசாரும் பொது மக்களும் தான்.

போன பதிவில் பதிந்த என் கண்டனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஈழ பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். அதை தவிர்த்து மற்றவற்றில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். உங்கள் சுயலாபங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை அசிங்கப்படுத்தாரீகள். இதில் உங்கள் சாக்கடை அரசியலை கலக்காதீர்கள்.

வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்தால் பார்ப்பான் என்று சொல்வதும், பார்ப்பான் அல்லாதவனை பார்ப்பான் அடிவருடி என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பது தான் எனக்கு புரியல. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கருத்துகளை எதிர் வைக்கவும். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.

எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி.

Sunday, February 22, 2009

வாழ்க சனநாயகம் - 4 (வைகோ அறிக்கை)

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோ வக்கீல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்து உள்ளார்.

வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.

வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய விசயம் தான் அதே போல் சுப்ரமணியசாமி மீது அழுகிய முட்டை வீசியதற்கும் சேர்த்து வக்கீல்களை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தால் இதை வரவேற்று நாமளும் போய் ஆதரவு குரல் கொடுக்கலாம். ஆனால் வக்கீல்கள் ஏதுவுமே தவறு செய்தாத மாதிரியும் போலீசாரும் மற்றவர்களும் சேர்ந்து வக்கீல்களுக்கு அவபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை எல்லாம் செய்தாக அறிக்கையில் கூறி உள்ளார்.

//சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து பிப்ரவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.//

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வக்கீல்கள் பாதுகாப்பு இயக்காமாக மாறாத வரை சரி. தோளில் கருப்பு துண்டு போட்டு இருப்பதற்காக கருப்பு அங்கி அணிந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை வைகோ அவர்களே.

//வழக்கறிஞர்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.//

யாருனு சொன்னா எல்லாருக்கும் தெரியும்ல. நீங்க சொல்வது போல சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.

// சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது.//

உண்மையாக இருக்கலாம். நீதிமன்றத்தில் அழுகிய முட்டை கிடைக்குதே அது எப்படிங்க!

// காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.//

இது முதல் தடவையாக இருந்தால் வழக்கு போடலாம், ஆனால் இதே வாடிக்கையாக அல்லவா வைத்து இருக்கிறார்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை போட்டு மிதித்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேறா. வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே போகிறது.

//வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். //

வாஸ்தவமான பேச்சு. அதே போல காவல் நிலையத்தை கொளுத்திய வக்கீல்கள் மீதும், பொது சொத்திற்குக்கும், காவலர்களை தாக்கிய வக்கீல்கள் மீதும் மீண்டும் அவர்கள் வழக்காடவே கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து கேளுங்கள்.

//வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 23-ஆம் தேதி திங்கள்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் எங்கும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

ஆனா ஊனா இந்த தமிழ் உணர்வாளர்களை விட மாட்டேங்குறீங்க. ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற அராஜகங்கள் அயோக்கியத்தனங்களும் தொடர்ந்தால் மக்கள் கண்டிப்பாக நீங்க நியாயமாக நடத்தும் போராட்டங்களை கூட புறக்கணிக்க தொடங்குவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு பாருங்களேன், வக்கீல்கள் மீது மக்கள் அபிப்பிராயம் எப்படி உள்ளது என்று. காரித் துப்புவார்கள். சுப்ரீம் கோர்ட் தமிழக வக்கீல்கள் தொடர்ந்து இது போன்று நடந்து கொள்வது நல்லதல்ல என்று கவலை தெரிவித்து உள்ளது. அதை படிச்சீங்களா?

இவர் தான் இப்படி என்றால் திருமாவளவன் அறிக்கை அதை விட மோசம். ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் நீங்க காட்டிய ஆர்வமும் உழைப்பும் அவர் மீது நல்ல மரியாதை வர வைத்தது. அதை அவரே அவரின் சமீபகால அறிக்கைகளின் மூலம் கெடுத்து கொள்கிறார்.

ஒரு இலக்கை வைத்து போராடும் போது அதை பற்றி மட்டும் கவலைப்பட்டு அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முட்டையால் அடிப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது என ஈடுபட்டு எதை நோக்கி தொடங்கினீர்களோ அதை விடுத்து இப்பொழுது கவனம் வேறு பக்கம் சென்று விட்டது. நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் பத்தாது அதை வழி நடத்தி செல்கின்ற ஆட்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி - விகடன்.

ஈழத் தமிழர்கள் ஆதரவாக அமெரிக்காவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி எஸ்.கே.

Friday, November 28, 2008

மும்பை பயங்கரம் - புகைப்படங்கள்























Thanks : Arasi Arul(for Mail) & M.Rishan Shareef (for Photos)
Source : M.RISHAN SHAREEF COLLECTION OF ARTICLES.

Thursday, November 27, 2008

இந்திய பிரதமரே!

இந்திய பிரதமரே!

வணக்கம். இந்திய மக்கள் ஆகிய நாங்கள் நலமாக இல்லை. எங்களின் தலைவராகிய நீங்களாவது நலமாக உள்ளீர்களா? நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு எப்படி நலமாக இருக்க முடியும் என்று கேட்குறீர்களா.. அதுவும் சரி தான். இன்னும் சில நாட்களுக்கு உங்களை நாட்டில் உள்ள பிரதான எதிர்கட்சி முதல் கடைசி குடிமகன் வரை கேள்விகளாலும், விமர்சனங்களாலும் துளைத்து எடுக்க போகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்ற கவலையே உங்களை வாட்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நானும் என் பங்கிற்கு இரண்டு பைசாகளை கொடுத்து விட்டு போகிறேன்.

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு தடவையும் குண்டிவெடிப்பிற்கு பிறகு உரை தயாரிப்பதற்கு பதில் அனைத்திற்கும் பொருந்துகின்ற மாதிரி ஓரு உரையை உங்கள் துறையினரிடம் சொல்லி தயாரித்து வைத்து கொள்ளுங்கள். தேதி, இடம், வெடித்த குண்டுகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, நிவாரண தொகை ஆகிய இடங்களை மட்டும் காலியாக விட்டு அந்தந்த குண்டுவெடிப்புக்கு ஏற்ற மாதிரி நிரப்பி கொள்ளலாம். ஏன்னென்றால் குண்டுவெடிப்புகளும் நிகழாமல் இருக்க போவது இல்லை. உங்கள் அறிக்கையும் வராமல் இருக்க போவது இல்லை.

நீங்களும் எப்பொழுது போல எந்த விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா சகித்து கொள்ளாது, இதற்கு காரணமானவர்களை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். புதிதாக எந்த ஒரு சட்டம் தேவையில்லை. உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம். பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். blah.. blah.... இதை தவிர வேறு என்ன சொல்லி இருக்கீங்க அல்லது செய்து இருக்கீங்க. இந்த தடவையும் அதே பல்லவி தானே?

எதிர்கட்சிகள் உங்கள் அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது அதற்கு பொறுப்பு ஏற்று உங்களை பதவி விலக சொல்லும். நீங்கள் பதவி விலகினாலும் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற நிதர்சனம் அறிந்தே அவர்களும் குரல் எழுப்புகிறார்கள் என்று அறிந்து தான் உள்ளோம். இருந்தாலும் கேள்வி எழுப்ப வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் உங்கள் உள்துறை அமைச்சர் பதில் விதாண்டவாதம் பேசுவார். இந்த வருடத்தில் மட்டும் எத்தனை குண்டுகள் நம் நாட்டில் வெடித்து உள்ளது, எத்தனை இந்திய மக்கள் இறந்து உள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணி பார்த்து அவர் தன் வாயை திறப்பது சால சிறந்தாக இருக்கும்.

உண்மை தான், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவில் மட்டும் இல்லை உலகெங்கும் தான் நடக்கிறது. அமெரிக்காவில் இல்லையா, இங்கிலாந்தில் இல்லையா என கேள்வி எழுப்பவது நியாயம் தான். ஆனால் அங்கு ஒரு முறை நடந்ததுக்கே செய்தவனின் டவுசரை கழுற்றினார்கள். ஆனால் நாமோ ஒவ்வொரு முறையும் நம் டவுசரை அல்லவா கழுற்றி விட்டு காட்டி கொண்டு இருக்கிறோம். அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறோம்.

ஆனாலும் இதில் ஒரு பெருமை பட விசயம் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனுக்கு அடுத்தபடி நம் நாட்டில் தான் அதிக குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது என்ற பெருமைதான் அது. முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது என்பது சதாரணமான விசயமா என்ன? அதற்கு ஒரு பூச்செண்டு உங்கள் அரசாங்கத்துக்கு. அது மலர் வளையமாக தெரிந்தால் அதற்கு நீங்களும் உங்கள் அரசும் தான் முழு பொறுப்பு.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம் பாராளுமன்றம் வரை வந்தும் நமக்கு புத்தி வரவில்லை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் பயங்கரவாதம் எப்படி எல்லையை தாண்டி உள்ளே வருகிறது. சந்திரன் வரைக்கும் சென்ற நம்மால், இதை கண்டு பிடிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்றால் எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

எல்லை தாண்டி வந்தவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாக திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை நான் மட்டும் அல்ல நீங்களும் ஒற்றுக் கொள்வீர்கள். அப்ப இங்கு இருக்கும் சிலரும் அதற்கு துணை போகின்றாகள். குறைந்தபட்சம் அவர்களையாவது கண்டுபிடித்து வேரறுத்தால் என்ன? அது எப்படி முடியும் நாம் தான் ஜனநாயக நாடு ஆச்சே. கூடவே சகிப்புதன்மையின் ஒப்பற்ற பிதாமகன்களாக வேறு திகழ்ந்து கொண்டு இருக்கிறோம். கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் மனிதாபிமானம் என்ற வார்த்தையை பிடித்து தொங்குவோம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது சரி நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொல்ல உதவியே மக்களுக்கே கருணை காட்டிய மக்கள் ஆச்சே நாம். வாழ்க.

பாக்தாத், காபூல், மும்பை என்ற வரிசையில் அடுத்து எந்த இந்திய மாநகரம் சேர போகிறது என்ற வாக்கெடுப்பு நடப்பதாக கேள்வி. வாக்கெடுப்பு முடிவுக்காக காத்து இருக்க போகின்றீர்களா இல்லை வேறு ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதா? சொரணையற்ற தேசமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் என் தேசம் இருக்க போகிறது. நீங்களும் இந்த நாடும் ஏன்றைக்கு சுயமாகவும் தைரியமாகவும் முடிவுகளை எடுக்க போகின்றது.

சரி வெட்டி கதை எதற்கு, இது வரை நடந்தற்கு என்ன பண்ண போகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நாளை இந்திய மண்ணில் வாழ எங்களுக்கு பாதுகாப்பாக வாழ வழி இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்புக்கு பின், இந்திய மக்கள் தங்கள் ஒற்றுமையை பறை சாற்ற வேண்டிய நேரம் இது, பயம் கொள்ள தேவையில்லை அமைதி காக்கவும் என்று சொல்லி சொல்லி உங்களுக்கும் அலுத்து விட்டது எங்களுக்கும் அலுத்து விட்டது. வேற எதாச்சும் செய்யுங்க எஜமான்!

இப்படிக்கு,

இன்னுமாடா இந்த நாடு நம்மள நம்புது என கேட்கும் குரலை அலட்சியப்படுத்தி கொண்டே இந்திய அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டின் எந்த பகுதியிலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு இந்திய குடிமகன்.

ஜெய்ஹிந்த்!

Saturday, December 30, 2006

இது சரியா?

ஈராக் முன்னாள் அதிபர் திரு. சதாம் உசேன் இன்று தூக்கிலிடப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவருக்கு உலக பிரநிதிகள் நீதிமன்றத்தில்(இண்டர்நெஷனல் கோர்டில்) தீர விசாரித்து தக்க தண்டனை தந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் உட்பட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு உள்ளனர். அதே நேரத்தில் கீழே இருக்கும் இரு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் எனக்கு சரியாக படவில்லை. நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

இது சரியா?



Saturday, December 16, 2006

வெற்றித் திருநாள்

இதே நாள் 1971 ஆம் ஆண்டு பங்காளத்தேஷ் சுகந்திரம் அடைந்த நாடாக இந்த உலகத்தில் வெளி வந்தது. 3 மில்லியன் மக்களை இழந்து சுகந்திரம் அடைந்த நாடு அது. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

இந்த வெற்றித் திருநாளை குறித்து சிலர் பலரிடம் சொல்லிய போது, எனக்கு சில குறள்கள் ஞாபகம் வந்தது. அவை

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


உரை:

தான் ஒர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


அந்த குறள்களை நினைத்து பிறகு அந்த சிலரை பார்த்து சிரிக்கும் போது இன்னும் ஒரு குறள் ஞாபகம் வந்தது. அது


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று


உரை:

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.


மறந்து விட்டேன். நல்லா இருங்கடே