Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Saturday, March 21, 2009

இயன்றவரை இனிய தமிழில்!

மறந்த போன தமிழ்ச்சொற்களை பதிவாக போட சொல்லி வந்த தொடரில் கவிதா என்னையும் எழுத அழைத்து பல வாரங்கள் ஆச்சு. அதை இன்னிக்கு பதிவாக போடலாம் என்று இந்த பதிவு.

எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் பிற மொழி சொற்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அதை களைய யாரும் பெறும் அளவில் முயற்சி எடுக்கவில்லை. அல்லது அந்த முயற்சிகள் பெரும் அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்று சொல்லாம். ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் இது எல்லாம் தமிழ் சொற்களாக மாறி பல வருடங்கள் ஆச்சு. பதிவுலகிலும், எழுத்துலகிலும் தான் முடிந்த வரை தமிழ் சொற்களாக தேடி எடுத்து உபயோகப்படுத்தி வருகிறோம். அது ஒரு ஆரோக்கியமான விசயம்.

அயல்நாட்டில் வேலைக்கு வந்த பிறகு நண்பர்களுடன் உரையாடும் போது முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாம தமிழ் வார்த்தைகளை கொண்டே உரையாடுவது வழக்கம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை நம் அருகில் இருப்பவர்கள் ஊகிக்க முடியாது. அதிலும் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை உபயோகிக்கும் போது நமக்கே சிரிப்பாக வரும், பிறகு அது பழகி விட்டது. உதாரணமாக அண்டை நாடு, துறைத் தலைவன், பெரும் தலை, விடுப்பு, பயணச் சீட்டு, வாகனம், காலை உணவு, மதிய உணவு, விமானம், வடக்கு இந்திய, தொலைப்பேசி, கைப்பேசி, மடிக் கணினி, இணையம், மின் அஞ்சல் னு நிறைய வார்த்தைகள். இதை கேட்கும் போது நமக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை எழுதும் போது தான் பெரும் அளவில் உபயோகப்படுத்துகிறோம். பேசும் போது நம்மளை அறியாமலே ஆங்கில வார்த்தைகள் வந்து விழுந்து விடுகிறது. அதை களைய முயல்வோம்.

நம் மொழியை நாம் பேசாமல் வேறு யாரு பேசுவது. அதனால் இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம், சில வார்த்தைகள் நம்மளை அறியாமல் வரும் போது அதை மறுமுறை திருத்திக் கொள்ள முயல்வோம். முதல்படியா தொலைபேசியில் யார் அழைத்தாலும் உங்கள் பெயரையோ அல்லது வணக்கம் என்ற வார்த்தையுடனோ பதில் சொல்ல தொடங்குவோம். (நண்பர்களிடத்தில் இருந்து ஆரம்பிப்போம்).


*******

எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை சரியா தப்பா னு தெரிந்தவர்கள் கூறலாம். என்னால் வழக்கொழிந்த சொற்கள் என்று ஏதும் தனித்துக் கூற முடியவில்லை. அதனால் நான் பேசுவதை கேட்டு நண்பர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்ற கேட்ட சில சொற்களை பட்டியலிடுகிறேன்.

பத்தாயம் - நெல் கொட்டி வைக்கும் தொட்டி(பொட்டி)
மராக்கா - அளக்க உதவும் ஒரு பொருள் (படி, கிலோ மாதிரி, எங்க ஊரில் சமையலுக்கு மராக்கா அளவில் தான் அரிசி அளப்பார்கள்)
அப்பாயி- அப்பாவோட அம்மா
அம்மாயி - அம்மாவோட அம்மா
மண்டக் காய்ச்சல் - தலைவலி
மண்டக் கனம் - திமிர், தலைக்கனம்
சவரம் - முகம் மழித்தல்
புறக்கடை - கொல்லை
அட்டி - (அரிசி) மூட்டைகளை அடுக்குவது, ஒன்றின் மீது ஒன்றாக (வரிசை)
வெடைக்குற - கிண்டல் பண்ணற
உசக்க - மாடியில்
அடுப்படி - சமையல் அறை (அடுப்பாங்கரை னு கூட சொல்லுங்க)

பல்லா* - தண்ணீர் எடுக்க உதவும் சிறு குவளை ( பிளாஸ்டிக்)
டவரா* - டீ, காபி தருவார்கள், ஆத்தி குடிக்க வசதியாக இருக்கும்
லோட்டா* - இது தண்ணீர், டீ, காபி குடிக்க உதவும். (ஒரு குடம் சின்ன அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்)

* - இது மூனும் தமிழ் வார்த்தைகளா என்று எனக்கே சந்தேகமாக தான் இருக்கு.

சென்னை வந்த பிறகு இரு வார்த்தைகளை கேட்டால் கோவம் வரும், அது கால் அவர், அரை அவர் என்பதும், அவர் கையில சொல்லிட்டேன் என்பதும். அந்த கோபம் இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கு.

Tuesday, February 24, 2009

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?

இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம் கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.

"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."

காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்

1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.

2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.

3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.

4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.

இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.

பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.

Sunday, December 28, 2008

மும்பை தாக்குதலை தொடர்ந்து...

அவந்திகாவின் தொடர் அழைப்பை ஏற்று இந்த பதிவு. ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகளில் இதை பற்றி பேசிய காரணத்தினால் இந்த விசயத்தை பற்றி மேற்க்கொண்டு ஏதும் எழுத வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருந்த போதிலும் ஒரு இளைய உள்ளத்திற்கு தேசத்தின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். Better Late than Never என்ற அளவுகோளின் படி.

அவந்திகா கொடுத்த தலைப்பை புலம்பலாக மாற்றிய பெருமை முத்துலெட்சுமியை சாரும். அதை தொடர்ந்து எல்லாமே புலம்பல் பதிவாக அமைந்து விட்டது(நான் பார்த்த வரை)ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் புலம்பலாக மாறி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அவந்திகா தன்னுடைய பதிவில் regarding the incompetency and selfishness of our politicians என்ற வாதத்தை பதிவு செய்து உள்ளார். இதில் சுயநலம் என்ற பதத்திற்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து கிடையாது. ஒட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளிடம் சுயநலம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திறமையின்மை என்ற வாதத்தோடு தான் ஒத்து போகவில்லை. சிவராஜ் பாட்டில், ப்ரதீபா பாட்டில் போன்ற சில அல்லகைகளை தவிர்த்து பார்த்தால் மிக சிறந்த அதிகாரிகள் துணையுடன் கூடிய அறிவுசார்ந்த அரசியல் தலைவர்கள் அநேனகம் நம் நாட்டில். ஆனால் அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டியதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொண்டு இருப்பது தான் நம்முடைய துர்பாக்கியம்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து நம் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக வெளியுறத்துறை, இந்த பிரச்சனையை மிக அழகாகவும் அழுத்தமாகவும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விதம் மிக நேர்த்தி. பாகிஸ்தானை கை காட்டியதோடு நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மற்ற நாடுகளை குரல் கொடுக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் சரியான வாதங்களை எடுத்து வைத்ததோடு இல்லாமல் பகிரங்கமாகவே பாக் மீது குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ஒரு அமைப்பை எந்த ஒரு கேள்விகளும் இன்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை செய்ய வைத்தது. இதை எல்லாம் கண்டு உண்மையாகவே பாகிஸ்தான் பயந்து தான் போனது, என்ன செய்வது என்று முழிக்க வேண்டிய கட்டாயம் பாக். அரசிற்கு. எங்களை ஒரேடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள் இது நியாயம் இல்லை. இந்த பிரச்சனையை ஐ.நா. தலையீட்டு விசாரிக்க வேண்டும் என்ற பாக். கதறலை ஐ.நா. கண்டுக் கொள்ளவில்லை. எத்தனை முறை கேள்வி எழுப்பியும் இதில் தலையீட எண்ணம் இல்லை என்ற ஒற்ற பதில் தான் கிடைத்தது.

உலக அளவில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்ட அதே நேரத்தில் எல்லையில் தன் படைகளை குவித்தும் பாக். வான் வெளியில் தாக்குதல் விமானங்களை பறக்க விட்டும் அந்த நாட்டிற்கு மிக கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் உள்ளது. போர் தொடுக்காமல் ஏன் இந்த பம்மாத்து வேலை என்ற கேள்வி எழுலாம். இந்த பம்மாத்து வேலை தான் மிக சிறந்த ராஜத்தந்திரம் என்பது என் எண்ணம். இதற்கு தகுந்த பலன் தான் சர்தாரியின் தற்சமய பேச்சுகள் எல்லாம். இறங்கி வர வேண்டிய கால கட்டாயம் பாக்.னுக்கு பத்ரியின் இந்த பதிவை படியுங்கள், சில விபரங்கள் புரியலாம். இது போன்ற செயல்களை அமெரிக்கா ரசிக்கவில்லை என்பது வேறு விசயம். இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் பாக். ஆப்கானில் இருந்து படைகளை வாபஸ் பெற்று இந்திய எல்லையில் குவிக்கும் காரணத்தால் நேட்டோ படைகளுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.

இந்தியா இத்தோடு நிறுத்தி விட கூடாது. இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு பாக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்களை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தாக்குதல் ஏதும் இந்தியா மீது நடந்தால் குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து நாம் போர் கொடுக்கலாம். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு இருக்கும்.ஏற்கனவே பாக் னுக்கு உள்நாட்டில் பல உள்நாட்டு பிரச்சனைகள், பல குண்டுவெடிப்புகள் இதில் இது போன்ற உலக நாடுகளின் கண்டிப்பும் தொடர்ந்தால் இரு நாடுகளுக்குமே விமோசனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் இஸ்ரேலை சிறிது தூரத்திலே நிறுத்தி வைத்தது. இஸ்ரேல் இந்த விவகாரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தும் நாம் மறுத்து விட்டோம். இதுவும் சரியான நடவடிக்கை தான். இஸ்ரேலை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்தி வைப்பது தான் நல்லது. அவர்கள் என்றுமே முழுக்க நம்பக் கூடிய நண்பர்கள் கிடையாது.

உலக அளவில் சரியான நடவடிக்கைகளை எடுத்த இந்தியா உள்துறை அளவில் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்னும் தீவிரமான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பயங்கரவாதம் செயல்களுக்கு கண்டிப்பாக உள்நாட்டு மக்களின் உதவி இல்லாமல் ஏதுவுமே செய்ய முடியாது. அந்த உதவிகளை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை தேவையோ அத்தனையையும் எந்த ஒரு மதக் குறிக்கீடும் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இது போன்று அசம்பாவிதங்கள் நடக்க நேர்ந்தால் அதை சந்திக்கும் அளவுக்கு நம் காவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உயர்ந்த தரத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு தருவித்து தர வேண்டும். தேச நலனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால் மற்ற விவகாரங்களுக்கு செவி அளிக்க தேவை இருக்காது. அதை விட்டு ஒட்டு போயிடும், கூட்டணி போயிடும், ஆட்சி போயிடும் னு பாத்த பழைய குருடி கதவை திருடி கதை தான்.

நம் மக்களும் நிறைய மாற வேண்டியது உள்ளது. அதை பட்டியலிட நேரமில்லை. சுருங்க கூறனும் என்றால் தனி மனித ஒழுக்கம், எவன் செத்தா என்ன என் பொழுப்பு நடந்தால் சரி என்ற எண்ணத்தை தவிர்த்து தேசம் ன்னா என்ன? ஒரு குடிமகனின் கடமை என்ன? தேச நலன் என்றால் என்ன? போன்றவற்றை நினைவில் கொண்டு நினைவில் இல்லா விட்டால் மீண்டும் பழைய சமூக அறிவியல் புத்தகத்தை புரட்டி பாத்தோ கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தோ தெரிந்துக் கொள்ளவது நலம். அவன் செய்யல, இவன் செய்யல எனக்கு மட்டும் தான் இது எல்லாம் பொருந்துமா போன்ற விதாண்டவாத கேள்விகளை தவிர்த்து நாம் நம் கடமையை ஒழுங்கா செய்வோம், அடுத்தவன் தானா செய்வான் அல்லது அவனையும் செய்ய வைக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கலாம், ஆனா முதலில் நாம் தொடங்க வேண்டும்.

இந்த தொடரை கைப்புள்ள தொடர்ந்தால் மகிழ்வேன்.

Monday, April 16, 2007

அழகோ அழகுகள்!!!

என் பார்வையில் அழகை பற்றி எழுத சொல்லி வல்லியம்மாவும், வெட்டியும் அழைத்து உள்ளார்கள். நம்ம ஜியும் கூப்பிட்டதா பேச்சு. அழகை பற்றி முதல் பதிவு போட்டவுடன் எது அழகு என்று யோசித்ததில் நாம் என்றும் சூச்ச்....சூ என்றும் சொல்லும் கவுஜு எனக்கே வந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நான் அழகை பற்றி பேச ஆரம்பித்தால் ஆர்பரிக்கும் கடல் அலையில் ஆரம்பித்து ஸ்டெபியின் குதிரை வாலை பிடித்து நேதாஜியின் பேச்சு வரைக்கும் போகும். அதனால் நம்ம கொத்துஸ் கொடுத்த ஆறு அழகையையே நானும் என் பார்வையில் கூற முற்படுகிறேன்.

1, முகம்

எல்லா முகமும் ஒரு வகையில் அழகு தான். சில முகங்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு. நான் என்றும் ரசிக்கும் சில முகங்கள்.

எம்.எஸ். - நிறைவாழ்வு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. இவரின் "குறை ஒன்றும் இல்லை" பாடலை கேட்டாலே இவர்களின் சாந்தமான முகம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

சுபாஷ் - நேதாஜியை பெரும்பாலும் ராணுவ உடையில் பார்த்து தான் நமக்கு பழக்கம். அந்த உடையில் அவர் படத்தை காணும் போதே ஒரு மிடுக்கு தெரியும். அவரின் மிடுக்கையே மிஞ்ச வைத்து என்னை ரசிக்க வைத்த முகம் இந்த முகம்.

இது போக பல முகங்கள் - ரமணர், குழந்தை கிருஷ்ணர், அரவிந்தர்/மதர், தெரசா, நாகை அழகியார் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

2, இடம்

பிடித்த இடம், ரசித்த இடம் என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் என்றும் மனதிற்கு அழகான இடம் என்றால் நாகையில் இருக்கும் என் பழைய வீடு மற்றும் புது வீடும் தான். பல விதமான அனுபவங்களை தந்த இடங்கள் அவை. வீட்டை விட்டு பார்த்தால் நாகை கடற்கரை - யாரும் அற்ற இரவில் தனிமையில் யோசிப்பது அல்லது உற்ற தோழர்களுடன் அமர்ந்து உப்புக் காற்று முகத்தில் அறைய நடிகை ஜோவில் ஆரம்பித்து மைக்கெல் ஜோர்டன் வரை பேசுவது இருக்கே.... ஆஹா.... அது போக நாகை புதிய பஸ் நிறுத்தம் - பல வகையான மனிதர்களை காணலாம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், குல தெய்வ கோவில், கல்லூரி கட்டை சுவர், பள்ளி கூடைப்பந்து மைதானம், பாண்டி கடற்கரை, நைல் நதி - உகாண்டா, ஹைத்தியில் என் அறை பால்கனி என இதற்குக்கும் ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது.

3. நிகழ்வு

அக்காவின் திருமணம், அக்கா பையன் வரவு சொல்லாம். இதில் அக்கா பையன் பிறக்கும் போது நான் பாண்டியில் இருந்தேன், மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் என்று செய்திக் கேட்டவுடன் புறப்பட தயார் ஆனேன். டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம் குறைவாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டுட்டு கடற்கரை சென்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை தந்தைக்கும், தம்பிக்கு மாற்றி போன் அடித்த போது ஏற்பட்ட ஒரு பரபரப்பு, குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகு பெற்ற மகிழ்ச்சி. சரி காலையில் ஊருக்கு போகலாம் என்று நினைத்து படுத்து தூக்கம் வராமல் நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க, அதாங்க அழகு. அது போக அன்று எனக்கு பிறந்த நாள், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லி இரட்டை மகிழ்ச்சி வேற.

4, குறும்பு

என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு. நான் ரொம்பவே அப்பாவிங்க. கல்லூரியில் படிக்கும்(???) போது என்.ஐ.ஐ.டி. க்கும் போய் கிட்டு இருந்தோம். அங்கு நமக்கு கிளாஸ் எடுக்கும் ஒரு மேடம் ரொம்பவே தோஸ்த், ஒரு 3,4 வயசு தான் வித்தியாசம். நம்ம கெட்ட பழக்கம் என்னான நம்ம நெருங்கிய தோஸ்துங்க பேக்கை நொண்டுவது. அது ஏன்னென்றால் ஆரம்பித்துல் இருந்து கோ-எட் படிச்சாச்சா, அப்படியே பழகி போச்சு. (அந்த பழக்கம் இப்ப இல்லனு சொன்னா நம்பனும்). பெரும்பாலும் சாக்லெட் கிடைக்கும், ஒரு நாள் அவரின் அழகிய புகைப்படம் நம்ம கையில் கிடைத்தது. ஒரு நாள் அவங்கிட்ட போய் மேடம், நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன், அவ இல்லாம் என் வாழ்க்கையே இல்லைனு சொல்லி இத்தனை நாள் நாம் பார்த்த நோட் பண்ணி வச்சு இருந்த அத்தனை சினிமா டயலாக்கையும் சொல்லி அவங்களை நம்ப வைத்தேன். அவங்களும் நம்பி உனக்கு என்ன உதவி வேணுமானலும் சொல்லு செய்ய நான் தயார், அது போக அப்ப அப்ப அட்வைஸ் வேற. போட்டோ காட்டுனு பல முறை கேட்டும் பார்த்தா பொறாமை படுவீங்கனு கையில் வைத்துக் கொண்டே போக்கு காட்டிக்கிட்டு வந்தேன். ஒரு நாள் அவங்க கிட்ட போய் மேடம் அந்த பொண்ண தூக்கலாம் முடிவு பண்ணிட்டேன், என்ன சொல்லுறீங்க கேட்டேன், அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க அவங்க கேட்க, அவங்க அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேரையும் சமாளிக்க நான் ரெடி, அந்த பொண்ணு மட்டும் ஒகே சொன்னா போதும் சொல்ல, அதுக்கு நான் பண்ணனும் சொல்லு கேட்க, ஒகே சொல்லுங்க னு சொன்னேன். ஒன்னும் புரியலனு அவங்க விழிக்க, நான் ரொம்ப சீரியஸா போட்டோவ காட்டினா விழந்து விழந்து இல்ல குனிஞ்சு குனிஞ்சு சிரிக்குறாங்க. அவங்களை கூப்பிட வந்த தம்பிக்கிட்ட சொல்ல அவனும் சிரிக்குறான், டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.

5, பரிசு

இந்த மேட்டருல நான் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்ங்க. காமெடியான வாழ்த்து அட்டை வாங்குவது, வித்தியாசமான பரிசு வாங்கி தருவது, இல்ல நண்பனை கடைக்கு பரிசு வாங்கி தரேன் என்று கூப்பிட்டு போய் மச்சி எது வேணுமானும் வாங்கிகோ பட்ஜெட் 10 ரூபாய் என்பது, நானே உனக்கு ஒரு மிக பெரிய பரிசு இதை விட வேற என்ன வேணும் என்பது, வாழ்த்து அட்டை வழங்கும் போது ரொம்பவே யோசித்து, பெறுபவர்கள் ரசித்து பார்க்கும்படி வாங்குவேன். நம்ம பசங்க எல்லாம் கிப்ட் இல்ல கார்ட் வாங்க நம்மள தான் கூப்பிடுவாங்கனா பாத்துக்கோங்களேன். குடுக்கின்ற பரிசு ஏதாக வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் பரிசு அவர்கள் மனதை தொடுவது மாதிரி குறைந்தப்பட்சம் ஒரு புன்சிரிப்பை வர வைக்கும் மாதிரி இருக்க வேண்டும். அது போன்று நான் கொடுத்த பரிசும் அனேகம், பெற்ற பரிசும் அனேகம். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் தினமும் பார்க்கும் பரிசு இது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அழகா தெரியும் பரிசு.

6, இல்லாத அழகு

தனி மனித ஒழுக்கம். இது நம் மக்கள் கிட்ட ரொம்பவே வளரனும் என்பது என் விருப்பம்.(நான் உட்பட). இது எந்த விசயத்தில் வேண்டுமானுலும் இருக்கலாம். ஏதாவது ஒரு விசயத்தில் நான் இனிமேல் ஒழுக்கமாக நடந்து கொள்வேன், எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு காரியத்தில் ஒழுக்கமாக இருக்க ஆரம்பித்தால் சில நாள் கழித்து அது பழகி விடும். கண்டிப்பாக மீற மாட்டோம், பிறகு வேற ஒரு விசயத்தை எடுத்துக் கொள்ளலாம். உ.தா. ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது, சிக்னலை மதிப்பது, அடுத்தவர்களுக்கு மரியாதை குடுப்பது(முக்கியமாக பெற்றோர்க்கு), தவறாமல் ஒட்டு போடுவது, குப்பையை குப்பை தொட்டியில் கொட்டுவது, வருமான வரி கட்டுவது, பெற்ற கடனை திரும்ப செலுத்துவது, அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பது, சமுதாய வேறுபாடு பார்க்காமல் இருப்பது, மொபைல் போனை தியேட்டர், கோவில், மீட்டிங், மருத்துவமனையில் நிறுத்தி / சைல்ண்டில் போடுவது போன்று எவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதாவது செய்யனும். செய்தாகவே வேண்டும் என் சமுதாயம் நம் சமுதாயம் உயர்வடைய.



நான் அழைக்கும் அழகான மூவர்

1, மருத்துவத்துறையின் விடிவெள்ளி சின்னய்யா டாக்டா இராமனாதன்
2, அஞ்சாநெஞ்சன் டாலர் செல்வன்
3, கொள்ளை சுனாமி லக்கிலுக்
தேவ் அழைத்து உள்ளார், அதனால்
4,கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி