Showing posts with label Genocide. Show all posts
Showing posts with label Genocide. Show all posts

Wednesday, July 14, 2010

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

ICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 


Pre-Trial Chamber I of the International Criminal Court (ICC) issued a second warrant of arrest against the President of Sudan, Omar Hassan Ahmad Al Bashir, considering that there are reasonable grounds to believe him responsible for three counts of genocide committed against the Fur, Masalit and Zaghawa ethnic groups, that include: genocide by killing, genocide by causing serious bodily or mental harm and genocide by deliberately inflicting on each target group conditions of life calculated to bring about the group's physical destruction.

இந்த வாரண்ட் முதலில் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் க்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வாரண்ட் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரெஸ்ட் வாரண்ட் டை குறித்த என் பதிவு இங்கு. கடந்த வருடம் மார்ச் மாதம் அந்த வாரண்ட் பிறபிக்கப்பட்ட போது இனப்படுகொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்ட இருந்தது. அதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இப்பொழுது அந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு இவ்வாரண்ட் டை பிறபித்து உள்ளது. 

இந்த இனப் படுகொலையில் இது வரை 3 லட்சம் மக்கள் உயிர் இழந்து உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதி ஆகி உள்ளனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. வெறும் 10,000 நபர்கள் மட்டுமே இறந்தாக சூடான் அரசு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை உள் அரசியல் காரணங்கள் கொண்டது என சூடான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இம்முடிவை குறிதுது தங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, தாங்கள் சூடான் நாட்டின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம் எனவும் கூறி உள்ளனர்.  ஆனால் இது டார்பூர் மக்களுக்கும் மனித தன்மைக்கும் கிடைத்த வெற்றி என JEM Rebel அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டார்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது. 

இந்த அறிவிப்பை வழக்கம் போல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளீட்ட நாடுகள் வரவேற்று உள்ளனர். சூடானின் நட்பு நாடுகளான சில அரபு நாடுகள் மற்றும் சில ஆப்பரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சீனா மற்றும் இந்தியா எந்த ஒரு கருத்தும் கூறாது என்றே எண்ணுகிறேன், எண்ணெய் காரணங்களுக்காக. சூடான் மக்கள் இது வரை எந்த ஒரு பெரிய எதிர்ப்பையோ ஆதரவையோ பதியவில்லை. டார்பூர் மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும் இதனால் எந்த ஒரு பெரிய மாற்றத்த்தை தாங்கள் தற்சமயம் அடைய போது இல்லை என்ற அளவிலே உள்ளனர்.

இந்த வாரண்ட் டின் மூலம் சூடான் அதிபருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். போன வருடம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் க்கு பிறகு தன்னுடைய ஆளுமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 24 வருடங்களுக்கு பிறகு பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றார் அல் பஷீர். அந்த தேர்தலில் பல முக்கிய எதிர் கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வில்லை என பல நாடுகள் கருத்து தெரிவித்ததும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அல் பஷீர் சூடானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு வந்தால் இண்டர்போல் போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற பரவிய வதந்தியை அடுத்து தென் ஆப்பிக்கா செல்லாமல் தவிர்த்தார். விரைவில் உகாண்டாவில் நடைபெற இருக்கும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என உகாண்டா அரசு அறிவித்து உள்ளது. அதனால் தன் பிரநிதி யை தான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பஷீர். கத்தார் அரசு சூடான் அரசுடன் டார்பூர் பிரநிதிகள் கலந்துக் கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் சில பல குழப்பங்கள், இன்னும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. அண்டை நாடுகளான சாட் (Chad), லிபியா, எத்தோப்பியா, உகாண்டா போன்ற நாடுகளுடன் சூடானுக்கு நல்ல உறவு இல்லை. 

ஐ.நா. வும் அமெரிக்காவும் சூடான் அரசு இந்த அரெஸ்ட் வாரண்ட்டை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சூடானை வலியுறுத்தி உள்ளது. ஐரோப்பிய யூனியனும் ICC ஆதரவாக தான் செயல்படும். அரபு லீக் மற்றும் ஆப்பரிக்க யூனியன்கள் தற்போது எதிர்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் பின்வாங்க கூடும். இதன் மூலம் அல் பஷீர் கண்டிப்பாக ஒரு நாள் விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நாள் அவர் பதவியில் இருக்கும் வரை வராது என்பதும் உண்மை. நீதி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் தாமதிக்கப்பட்ட கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி தான் என்பது என் கருத்து, ஆனால் மனதில் Better Late then Never என்ற வாசகமும் கடந்து செல்கின்றது. 

போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கும் நாளை வரலாம். எந்த அளவுக்கு அவருக்கு வளர்ந்த (சக்தி வாய்ந்த) நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படும். அந்த நாளையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன். 

Tuesday, April 07, 2009

ருவண்டா இனப்படுகொலை - 1

குறுகிய நாட்களில் மிக அதிகம் மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய நாடு ருவண்டா. 100 நாட்களில் 1 மில்லியன் மக்களை கொன்று குவித்தார்கள். இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. டூசி யினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு கூறும் நாள் இன்று. அதை நினைவு கூறும் வகையில் ருவண்டாவின் இனப்படுகொலை பற்றி எனக்கு தெரிந்த, பார்த்த, கேள்விப்பட்ட விசயங்களை வைத்து இந்த பதிவு. மேலும் விபரங்களுக்கு இங்கே காணவும்.

ருவண்டா மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ருவண்டா வின் தலைநகரம் கிகாலி (Kigali). ருவண்டா, ஆயிரம் மலைகளின் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்படும் (Land of 1000 Hills). அதன் அண்டை நாடுகள் காங்கோ, உகாண்டா, புருண்டி, தன்சானியா. நான்கு நாடுகளுக்கு நடுவில் அமைந்த நாடு. அதனால் இது வியாபாரத்திற்க்கு மைய சந்தையாக விளங்குகிறது. ருவாண்டாவின் மக்கள் தொகை 9 மில்லியன். ஆப்பிரிக்காவிலே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு ருவாண்டா. கிறிஸ்த்துவர்கள் பெரும்பான்மையாக உள்ளன். அதில் கத்தாலிக்க மக்கள் 55% ஆவர். ருவாண்டாவில் கின்யருவாண்டா (Kinyarwanda), ஆங்கிலம், பிரெஞ்ச் என மூன்று ஆட்சி மொழிகள் உள்ளன. 99% மேல் கின்யருவாண்டா பேசுவார்கள். பெரும்பாலும் ருவண்டா மக்கள் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்றவர்கள்.

காலணி ஆதிக்கத்திற்க்கு முன்பு ருவாண்டாவில் மன்னராட்சி நடந்து வந்தது. ஆங்காங்கே அமைச்சர்கள் மூலம் கவுன்சில் அமைத்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். ஆரம்ப காலங்களில் ருவண்டாவில் மூன்று விதமாக மக்கள் வகைப்படுத்தப்பட்டனர், அவர்களின் சமூக - பொருளாதார நிலையை வைத்து வகைப்படுத்தப்பட்டனர், இது அவர்கள் இனத்தை குறிக்காது. ஹுடூ (Hutu), டூ்சி (Tutsi), டுவா (Twa).

கால்நடைகளை வைத்து பராமரித்து வந்தவர்கள் டூசி என்ற வகையிலும், விவசாயிகள் ஹுடூ வகையாகவும், வேட்டை மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் டுவா வகையாகவும் வாழ்ந்து வந்தார்கள். பொருளாதார நிலையை வைத்தே வகைப்படுத்த பட்டதால் அவர்களிடம் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவை வைத்து அவர்கள் வகையும் மாறுப்படும். Its based on the dynamics of the "Haves and the Have not". அந்த காலக்கட்டத்தில் அவர்கள் இடையே மாற்று திருமணங்கள், ஒரே கலாச்சாரம் என அமைதியாகயும் ஒற்றுமையாகவுமே வாழ்ந்து வந்தார்கள். ஹுடூ ஸ் பெரும்பான்மையாக இருந்தனர்.

1894 ஆண்டு ருவண்டா ஜெர்மன் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த காலக்கட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. உள்நாட்டில் நடக்கும் கலவரங்களை அடக்கவே ஜெர்மனியர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. முதலாம் உலக போரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து உலக நாடுகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் படி ருவண்டா பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் நடுவே ஒரே கடவுள் என்று இருந்த ருவாண்டாவில் காலணி ஆதிக்கத்தை தொடர்ந்து கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் ஐரோப்பின் வழியாக உள்ளே நுழைந்தது. பெல்ஜியத்தின் ஆதிக்கத்திற்க்கு முன்பு வரை மன்னருக்கு போதிய அதிகாரம் இல்லாத போதிலும் மரியாதை இருந்தது. பெல்ஜியர்கள் வந்த பிறகு அதுவும் இல்லாமல் போயிற்று.

அதிகாரத்தை கையில் எடுத்த பெல்ஜியர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். பொருளாதார வசதி படைத்த டூசி னரை உயர்ந்தவர்களாகவும், ஹுடூஸ், நடுநிலை டூசி னரை மற்றும் பிற மக்களையும் தாழ்ந்தவர்களாக வகைப்படுத்தினார்கள். எவ்வாறு பிரித்தார்கள் என்றால் 10 கால்நடைகளுக்கு மேல் வைத்தது இருந்தவர்கள் உயர்ந்த டூசினர், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற வகையில். கூடவே அதிகாரத்தில் இருந்த ஹுடூஸ் மக்களை அதிகாரத்தை விட்டு அகற்றினார்கள். இதன் மூலம் ஹுடூஸ் மக்கள் பெரும் கோபம் அடைந்தனர். ஆயுதம் ஏந்தி போராடவும் பார்த்தார்கள். ஆனால் பெல்ஜியர்கள் மேல் இருந்த பயத்தால் அதை பெரும் அளவு போராட்டமாக மாறவில்லை.

உயர் டூசினரை கொண்டு வரிகள் வசூலிப்பதையும், தங்களின் கொள்கைகளை பரப்பவும் செய்தார்கள். 1935 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் எந்த வகையை சார்ந்தவர்கள் என்பது அச்சிடப்பட்டது. இது தான் 1994 ல் நடந்த மிக பெரிய இனப் படுகொலைக்கு ஆரம்ப வேராக அமைந்தது.

இதை தொடர்ந்து கத்தோலிக்க ஆலயங்களிலும், பள்ளிகளிலும் டூசி யினருக்கும் ஹூடு வினருக்கும் இடையான வேற்றுமைகளை விதைக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் தனி தனியாக பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1940 களில் ஆரம்பித்த இதற்கு நல்ல அறுவடை கிடைக்க தொடங்கியது. 40களின் மத்தியில் பலர் கத்தோலிக்காக மாற தொடங்கினார்கள். 1950 களில் அதிகாரத்தில் டூசி யினருக்கு காட்டப்படும் சலுகையும், ஹுடூஸ் மறுக்கப்படும் உரிமையையும் ஐ.நா கண்டிக்க தொடங்கியது. அதே நேரத்தில் 1954ல் டூசி யினர் தங்களுக்கு சுகந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப தொடங்கினார்கள். இதை தொடர்ந்து மறைமுகமாக பெல்ஜியர்களும், மத தலைவர்களும் ஹுடூ யினரை டூசி யினருக்கு ஏதிராக துவேஷத்தை உண்டாக்கினார்கள். அதை தொடந்து 1957ல் ஹுடூ வினர் ஒரு அமைப்பினை(PARMEHUTU) தோற்றுவித்து பின்பு அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். அதே போல் 1959ல் டூசி யினர் ஒரு அமைப்பினை(UNAR) தோற்றுவித்து அவர்களும் அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். இரு தரப்பினருக்கும் மோதல்கள் வலுக்க தொடங்கின.

1959 ல் டூசி படையினர் ஹுடூஸ் அரசியல் தலைவர் ஒருவரை அடித்து விட, அவர் இறந்து விட்டார் என்ற எழுந்த வதந்தியால் பல்லாயிரகணக்கான டூசி யினர் கொல்லப்பட்டனர். ருவண்டாவில் நடந்த முதல் பெரிய படுகொலை இது தான். இது பெல்ஜியர்களின் தூண்டுதலினால் தான் நடந்தது என்று டூசியினர் குற்றம் சாட்டினர். பல்லாயிரகணக்கான டூசியினர் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

1960 ல் பெல்ஜினர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சம்மதித்து தேர்தல் நடத்தினார்கள். பெரும்பான்யான மக்களாக ஹூடூ ஸ் இருந்ததால் அனைத்திலுமே ஹூடூ யினரே வெற்றி பெற்றனர். இது வரை அதிகாரத்தில் இருந்த டூசி யினர் வெளியற நேர்ந்தது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் திட்டமும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தது. ஐ.நா.வின் வலியுறுத்தலை தொடர்ந்து நாடுகளை பிரித்து சுகந்திரம் அளிப்பது என்று முடிவு எடுத்து 1961ல் அதற்கான ஆயுத்தங்கள் செய்யப்பட்டன.

1961 ல் தேர்தல் நடத்தப்பட்டு பெல்ஜியர்கள் ஆதரவுடன் ஹுடூஸ் குடியரசு ஆட்சியை அமைத்தது. பெல்ஜியர்கள் டூசி யினரின் அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும் என்பதுக்காக ஹுடூஸ் க்கு உதவி செய்தது. 1959 ல் டூசி யினரால் தாக்கப்பட்ட அரசியல் தலைவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதுவே சோதனையாக வந்து அமைந்தது டூசி யினருக்கு. பதவியேற்றவுடன் அந்த தாக்குதலை நினைவு கூர்ந்து டூசியினர் என்றுமே ஆபத்தானவர்கள் மற்றும் கொல்லப்பட வேண்டியவர்கள் என சூளுரைத்தார். அதை தொடர்ந்து 1961, 1962ல் டூசி கொரில்லா படையினர் பக்கத்து நாடுகளில் இருந்து போர் புரிந்தனர். ஹுடூ ஸ்ம் பதில் தாக்குதலில் இறங்க அதிலும் பல்லாயிரகணக்கானோர் பலியாகினர்.

1962 ஜூலை 1 ஆம் தேதி ருவண்டா மற்றும் புருண்டி நாடுகளுக்கு சுகந்திரம் கிடைத்தது. ருவண்டாவில் ஹுடூ ஸ் நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியதோடு ஒரே கட்சி நாடாக மாறியது. ஹூடூ யினருக்காக PARMEHUTU வை தோற்றுவித்த Gregoire Kayibanda சுகந்திர நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

- தொடரும்

Wednesday, March 25, 2009

கதம்பம்

இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.

போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.

******

இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.

தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும்.

*******

கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.

உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.

*******

போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.

When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.

*******

ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.

*******

பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்

வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக

*******

Friday, March 06, 2009

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

சூடானில் டார்பூர் என்ற இடத்தில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரும் அறிந்ததே. 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை நீடித்த இந்த பயங்கரத்தின் மூலம் உயிர் இழந்தோர்கள் சுமார் 3 லட்சம் நபர்கள். உள்நாட்டிலே அகதிகள் ஆனோர் 2 மில்லியன் நபர்கள். இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட புள்ளி விபரம். இந்த எண்ணிக்கையை சூடான் அரசு மறுத்து உள்ளது.

ICC (International Criminal Court) யில் சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூடான் அரசில் அமைச்சர்களாக இருக்கும் இருவருக்கு முன்பே அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்க பட்டும் உள்ளது. அதை பற்றி முன்பே பதிவு இட்டு உள்ளேன். ஆனால் இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக சூடான் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்ட அவர் மேல் எந்த நேரமும் வாரண்ட் பிறப்பிக்கபடலாம் என்ற நிலை இருந்தது. புலி வருது புலி வருது கதையாக கடந்த 8 மாதங்களாக நடந்த ஆடு புலி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக மார்ச் 4 அன்று மாலை 4 மணி அளவில் சூடான் அதிபர் அல் பஷீர் க்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The counts

The warrant of arrest for Omar Al Bashir lists 7 counts on the basis of his individual criminal responsibility (article 25(3)(a)) including:

*
five counts of crimes against humanity: murder – article 7(1)(a); extermination – article 7(1)(b); forcible transfer – article 7(1)(d);
torture – article 7(1)(f); and rape – article 7(1)(g);
*
two counts of war crimes: intentionally directing attacks against a civilian population as such or against individual civilians not taking direct part in hostilities – article 8(2)(e)(i); and pillaging – article 8(2)(e)(v).


போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகிய இரு பிரிவின் கீழ் சூடான் அதிபருக்கு ஏதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இனப்படுகொலை புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என தள்ளுப்படி செய்யப்பட்டு உள்ளது. முதன் முறையாக ஒரு நாட்டின் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தன் மூலம் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்து உள்ளது. மனித உரிமையை மீறுபவர்களுக்கும், போர் மரபுகளை மீறுபவர்களுக்கும் கண்டிப்பாக இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது என் கருத்து.

இந்த அறிவிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்று உள்ளது. அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சூடானிலும் டார்பூர், சவுத் சூடானில் இதற்கு ஆதரவு குரல் அதிகமாகவும், நார்த் சூடானில் எதிர்ப்பு குரல் அதிகமாகவும் உள்ளது. இந்த
அறிவிப்பு வெளி வந்த அன்றே இதை கருத்தில் கொள்ள முடியாது என்று சூடான் அரசு அறிவித்து விட்டது. அன்று மாலை 4 மணி அளவில் சூடான் தலைநகரம் கண்டன ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என நடந்தது. சுமார் 10,000 நபர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த கண்டன ஆர்பாட்டங்கள் நாடு தளுவிய அளவில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக சூடானில் நடந்து வரும் அமைதி மற்றும் மனித உரிமை பணிகளுக்கு மிகுந்த பிரச்சனைகளும் தடங்கல்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் சூடான் அரசு ஐ.நா. பணியாளர்களுக்கு எல்லா வகையிலும் தொடர்ந்து ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கும் என்று உறுதி அளித்து உள்ளது. எந்த அளவில் அமல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

கடந்த இரு நாட்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் எங்கும் நடக்க வில்லை. தலைநகரத்தில் ஆங்காங்கே சில கண்டன ஆர்பாட்டங்கள் மட்டுமே. இன்று ஐ.நா. அலுவலகத்துக்கு எதிரில் சிறிய அளவில் ஆர்பாட்டம் நடந்தது. சாலைகளில் போக்குவரத்து குறைந்த அளவிலே உள்ளது.

இந்த வாரண்ட் மூலம் சூடானில் நடந்து வரும் பணிகளுக்கு பங்கம் வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் டார்பூரில் இருந்து 10 என்.ஜி.ஒ. அமைப்புகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சூடான் அரசு அறிவித்து உள்ளது. அந்த 10 அமைப்புகளும் கிட்டதட்ட எட்டு சகவீத அமைதி மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள்.

சூடான் மக்களின் நிலையை இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மேலும் சிக்கலாக வந்து அமையும். ஐ.நா. இருக்கும் வரை அவர்கள் தப்பிக்கலாம். ஐ.நா.விற்கு எதிராக சூடான் அரசு தன் நிலையை அமைத்து கொள்வதின் மூலம் மேலும் சிக்கலாக தான் முடியும் என்பதை அறிந்தே உள்ளது. இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வந்து விட போவது இல்லை. கூடவே ஆப்பிரிக்கன் யூனியனும் சூடானுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து உள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் மறைமுக ஆதரவும் எண்ணெய் வளங்களுக்காக சூடானுக்கு என்றும் உண்டு.

இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு ஏற்பட்டு இருக்கும் சாதக பாதகங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

Wednesday, February 18, 2009

ஈழம் - அடுத்து என்ன?

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்


பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.

அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.

இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.

ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?

ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.

WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.

விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.

வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.

Wednesday, February 28, 2007

ICC - குற்றவாளிகள் அறிவிப்பு(சூடானில்)

Today(27.02.07) ICC Prosecutor Luis Moreno-Ocampo presents evidence showing that Ahmad Muhammad Harun, former Minister of State for the Interior of the Government of the Sudan, and Ali Kushayb, a leader of the Militia/Janjaweed, jointly committed crimes against the civilian population in Darfur.

மேலும் படிக்க

குறிப்பு : சூடானின் மேற்கு பகுதியான டார்பூர்(Darfur) என்ற இடத்தில் 2003 ஆம் ஆண்டில் இருந்து நடந்த(நடந்துக் கொண்டு இருக்கும்) சண்டையின் காரணமாக 200,000 பேர் உயிர் இழந்து உள்ளார்கள், 2.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேற இடத்தில் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, அகதிகள் முகாமிலும் மற்ற இடத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஐ.சி.சி. போர் குற்றவாளிகளாக அறிவித்து உள்ள இரண்டு நபர்களில் ஒருவர் நலவாழ்வு துறை அமைச்சர், மற்றவர் ராணுவ கமாண்டர். இந்த இருவரையும் 2003-2004 ஆண்டு நடந்த போரின் போது மனித உரிமை மீறல்க்காகவும், போர் குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டி உள்ளது.

சூடான் அரசு இதைக் குறித்து எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாக இது வரை அறிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தின் ஆரம்பம், இது வரை நடந்தைவைகள் போன்றவற்றை விரைவில் ஒரு தொடராக எழுத முயல்கின்றேன். அவ்வபோது கிடைக்கும் தகவல்களையும் பிளாக் உலகிற்க்கு தெரிவிக்க முயல்கின்றேன்.