Sunday, December 28, 2008

மும்பை தாக்குதலை தொடர்ந்து...

அவந்திகாவின் தொடர் அழைப்பை ஏற்று இந்த பதிவு. ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகளில் இதை பற்றி பேசிய காரணத்தினால் இந்த விசயத்தை பற்றி மேற்க்கொண்டு ஏதும் எழுத வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருந்த போதிலும் ஒரு இளைய உள்ளத்திற்கு தேசத்தின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். Better Late than Never என்ற அளவுகோளின் படி.

அவந்திகா கொடுத்த தலைப்பை புலம்பலாக மாற்றிய பெருமை முத்துலெட்சுமியை சாரும். அதை தொடர்ந்து எல்லாமே புலம்பல் பதிவாக அமைந்து விட்டது(நான் பார்த்த வரை)ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் புலம்பலாக மாறி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அவந்திகா தன்னுடைய பதிவில் regarding the incompetency and selfishness of our politicians என்ற வாதத்தை பதிவு செய்து உள்ளார். இதில் சுயநலம் என்ற பதத்திற்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து கிடையாது. ஒட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளிடம் சுயநலம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திறமையின்மை என்ற வாதத்தோடு தான் ஒத்து போகவில்லை. சிவராஜ் பாட்டில், ப்ரதீபா பாட்டில் போன்ற சில அல்லகைகளை தவிர்த்து பார்த்தால் மிக சிறந்த அதிகாரிகள் துணையுடன் கூடிய அறிவுசார்ந்த அரசியல் தலைவர்கள் அநேனகம் நம் நாட்டில். ஆனால் அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டியதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொண்டு இருப்பது தான் நம்முடைய துர்பாக்கியம்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து நம் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக வெளியுறத்துறை, இந்த பிரச்சனையை மிக அழகாகவும் அழுத்தமாகவும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விதம் மிக நேர்த்தி. பாகிஸ்தானை கை காட்டியதோடு நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மற்ற நாடுகளை குரல் கொடுக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் சரியான வாதங்களை எடுத்து வைத்ததோடு இல்லாமல் பகிரங்கமாகவே பாக் மீது குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ஒரு அமைப்பை எந்த ஒரு கேள்விகளும் இன்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை செய்ய வைத்தது. இதை எல்லாம் கண்டு உண்மையாகவே பாகிஸ்தான் பயந்து தான் போனது, என்ன செய்வது என்று முழிக்க வேண்டிய கட்டாயம் பாக். அரசிற்கு. எங்களை ஒரேடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள் இது நியாயம் இல்லை. இந்த பிரச்சனையை ஐ.நா. தலையீட்டு விசாரிக்க வேண்டும் என்ற பாக். கதறலை ஐ.நா. கண்டுக் கொள்ளவில்லை. எத்தனை முறை கேள்வி எழுப்பியும் இதில் தலையீட எண்ணம் இல்லை என்ற ஒற்ற பதில் தான் கிடைத்தது.

உலக அளவில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்ட அதே நேரத்தில் எல்லையில் தன் படைகளை குவித்தும் பாக். வான் வெளியில் தாக்குதல் விமானங்களை பறக்க விட்டும் அந்த நாட்டிற்கு மிக கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் உள்ளது. போர் தொடுக்காமல் ஏன் இந்த பம்மாத்து வேலை என்ற கேள்வி எழுலாம். இந்த பம்மாத்து வேலை தான் மிக சிறந்த ராஜத்தந்திரம் என்பது என் எண்ணம். இதற்கு தகுந்த பலன் தான் சர்தாரியின் தற்சமய பேச்சுகள் எல்லாம். இறங்கி வர வேண்டிய கால கட்டாயம் பாக்.னுக்கு பத்ரியின் இந்த பதிவை படியுங்கள், சில விபரங்கள் புரியலாம். இது போன்ற செயல்களை அமெரிக்கா ரசிக்கவில்லை என்பது வேறு விசயம். இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் பாக். ஆப்கானில் இருந்து படைகளை வாபஸ் பெற்று இந்திய எல்லையில் குவிக்கும் காரணத்தால் நேட்டோ படைகளுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.

இந்தியா இத்தோடு நிறுத்தி விட கூடாது. இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு பாக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்களை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தாக்குதல் ஏதும் இந்தியா மீது நடந்தால் குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து நாம் போர் கொடுக்கலாம். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு இருக்கும்.ஏற்கனவே பாக் னுக்கு உள்நாட்டில் பல உள்நாட்டு பிரச்சனைகள், பல குண்டுவெடிப்புகள் இதில் இது போன்ற உலக நாடுகளின் கண்டிப்பும் தொடர்ந்தால் இரு நாடுகளுக்குமே விமோசனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் இஸ்ரேலை சிறிது தூரத்திலே நிறுத்தி வைத்தது. இஸ்ரேல் இந்த விவகாரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தும் நாம் மறுத்து விட்டோம். இதுவும் சரியான நடவடிக்கை தான். இஸ்ரேலை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்தி வைப்பது தான் நல்லது. அவர்கள் என்றுமே முழுக்க நம்பக் கூடிய நண்பர்கள் கிடையாது.

உலக அளவில் சரியான நடவடிக்கைகளை எடுத்த இந்தியா உள்துறை அளவில் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்னும் தீவிரமான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பயங்கரவாதம் செயல்களுக்கு கண்டிப்பாக உள்நாட்டு மக்களின் உதவி இல்லாமல் ஏதுவுமே செய்ய முடியாது. அந்த உதவிகளை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை தேவையோ அத்தனையையும் எந்த ஒரு மதக் குறிக்கீடும் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இது போன்று அசம்பாவிதங்கள் நடக்க நேர்ந்தால் அதை சந்திக்கும் அளவுக்கு நம் காவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உயர்ந்த தரத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு தருவித்து தர வேண்டும். தேச நலனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால் மற்ற விவகாரங்களுக்கு செவி அளிக்க தேவை இருக்காது. அதை விட்டு ஒட்டு போயிடும், கூட்டணி போயிடும், ஆட்சி போயிடும் னு பாத்த பழைய குருடி கதவை திருடி கதை தான்.

நம் மக்களும் நிறைய மாற வேண்டியது உள்ளது. அதை பட்டியலிட நேரமில்லை. சுருங்க கூறனும் என்றால் தனி மனித ஒழுக்கம், எவன் செத்தா என்ன என் பொழுப்பு நடந்தால் சரி என்ற எண்ணத்தை தவிர்த்து தேசம் ன்னா என்ன? ஒரு குடிமகனின் கடமை என்ன? தேச நலன் என்றால் என்ன? போன்றவற்றை நினைவில் கொண்டு நினைவில் இல்லா விட்டால் மீண்டும் பழைய சமூக அறிவியல் புத்தகத்தை புரட்டி பாத்தோ கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தோ தெரிந்துக் கொள்ளவது நலம். அவன் செய்யல, இவன் செய்யல எனக்கு மட்டும் தான் இது எல்லாம் பொருந்துமா போன்ற விதாண்டவாத கேள்விகளை தவிர்த்து நாம் நம் கடமையை ஒழுங்கா செய்வோம், அடுத்தவன் தானா செய்வான் அல்லது அவனையும் செய்ய வைக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கலாம், ஆனா முதலில் நாம் தொடங்க வேண்டும்.

இந்த தொடரை கைப்புள்ள தொடர்ந்தால் மகிழ்வேன்.

Thursday, December 04, 2008

Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வேலையாக அலைந்து கொண்டு இருக்கும் போது Gender Affairs பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் நண்பரை எதிர்கொள்ள, என்ன சிவா நீ வெள்ளை ரிப்பன் இல்லாமல் இருக்க எனக் கேட்க, என்ன விசயம் னு கேட்க, கையில் ஓரு பேப்பரை திணிக்க அதில் உள்ள மேட்டரு கீழே.

16 days of activism against Gender Based Violence
This year marks the 18th annual 16 Days of Activism Against Gender
based Violence Campaign (Campaign originated from the first Women's Global Leadership Institute sponsored by the Center for Women's Global Leadership in 1991). The Campaign links issues concerning violence against women, gender and sexual based violence and human rights and emphasizes that all forms of violense, whether perpetrated in the public or private sphere, are a violation of human rights. The dates chosen for the campaign symbolically indicate this link : November 25 markes International day Against Women (officially declared by UN in 1999) and December 10 is International Human Rights Day. The sixteen-day period also hightlights other significant dates, including December 1 (World Aids Day) and December 6 (the anniversary of the Montreal Massacre).

Wearing a white ribbon is a personal pledge to never commit, condone or remain silent about violence against woment and girls.


ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை நான் பொங்க, நீ கேட்பது நியாயம் தான் ஆனாலும் கேளுனு சில கதைகளை எடுத்து விட்டான். அவன் கூறிய பதிலில் எனக்கு திருப்தி இல்லை. விவாதம் முற்றியதும், வேலை அதிகம் இருப்பதால் நம் இரவு உரையாடலின் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு ரிப்பனை அணிவதும் அணியாததும் உன் விருப்பம் என்று கூறி ரிப்பனையும் ஊசியையும் கொடுத்துட்டு அவன் எஸ்கேப்.

பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள். அது தவறா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை. அவர் அவர்கள் எண்ணங்கள் அவரவர்களுக்கே. சொல்வதால் மட்டும் ஏதுவும் மாறிட போவது இல்லை. தானாக உணர்ந்து மனம் மாற்றம் அடைவது தான் பயன் அளிக்கும்.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது அது பெண்களுக்கு பிடிக்காமல் போனாலும், முக்கியமாக அவர்கள் ஏதாவது கேட்டு வரும் போது முடியாது அல்லது இல்லை என்று கூறினால் போதும் அவர்கள் வைக்கும் முதல் வாதமே நான் பெண் என்பதால் தான் நீ இல்லை, முடியாது என்று கூறுகின்றாய் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். இன்னமும் அதான் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. (என்னளவில்)

மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.

நிற்க. மேலே சொன்னவை எல்லாம் சரியாகப்பட்டாலும் நம் நாட்டின் சில இடங்களிலும், ஹத்தி, உகாண்டா, சூடான் (டார்பூர்) போன்ற இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் மிக அதிகம். அங்கே ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அதை இல்லை என்று மறுக்க முடியாது ஆனாலும் சகவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தான் அதிகம். ஒவ்வொரு 30 நிமிடத்தில் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு(பெரும்பாலும் கற்பழிப்பு) ஆளாகிறாள். சூடானில் (டார்பூர்) இன்னும் கொடுமை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பெண் / குழந்தை என்ற அளவில் உள்ளது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் அந்த வெள்ளை ரிப்பனை அணிந்து என் ஆதரவையும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டேன்.


அதே வேளையில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. 2000ம் ஆண்டு என்று நினைக்கிறேன், மார்ச் 8 ஆம் அன்று கல்லூரியில் பெண்கள் தின விழா எடுக்கப்பட்டது. அதற்காக கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியயைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆஹா நமக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்த எங்களை ஒரு அறிக்கை கடுப்பேத்தியது. அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.

பின்குறிப்பு : Montreal Massacre பற்றி அறிய ஆர்வமாக இருந்தால் இந்த லிங்கை தொடரவும்.

Tuesday, December 02, 2008

டைரிக் குறிப்பு - 2 (இந்திய அரசியல்)

மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ராஜினாமா, உள்துறை அமைச்சர் ராஜினாமா, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பு என இந்திய அரசு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தியா இன்னும் பல முக்கிய மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக தேசிய பாதுகாப்பிலும், பதில் நடவடிக்கை, உளவுத் துறை போன்ற விசயத்தில். பொறுத்து இருந்து பார்ப்போம்.

*****

இந்தியாவில் மும்பையில் நடைப்பெற்ற சம்பவத்துக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. ஆனால் அதுக்குள் இங்கு மக்கள், எல்லை தாண்டிய தீவிரவாதிகள், பாக் ஆதரவு தீவிரவாதிகள் என்று ஒரு பக்கமும், முஸ்லீம் பயங்கரவாதிகள் என மறுபுறமும், இந்துத்வா வே இதை செய்து இருக்கலாம் என ஒரு பிரிவினரும் குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதில் நம் பதிவர்களும் அடக்கம். மக்கா இதை எவன் செய்து இருந்தாலும் எந்த மண்ணாங்கட்டி மதமாக இருந்தாலும் சரி இதுக்கு துணையாக இருந்த அத்தனை பெயரையும் பிடித்து தூக்கில் இட வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் எண்ணம். அதை விடுத்து இந்த பிணந்தின்னி அரசியலை தொடராதீர்கள்.
*****

இங்கு இப்படி என்றால் பாகிஸ்தானில் அரசில் இருந்து மக்கள் வரை எதற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானை குறை கூறுவது சரி அல்ல, ஆதாரத்தை காட்டுங்கள் என அறிக்கை விடுவதும், ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டம் ஊர்வலம் நடப்பதுமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மீது ஏவப்படும் ப்ராக்ஸி வார்(போர்) க்கு பாகிஸ்தான் தான் பின்புலமாக திகழ்கின்றது என்பது உலக அறிந்த உண்மை. ஆப்கானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அமெரிக்காவே குற்றம் சாட்டி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்ட காண வேண்டிய விசயம். பாகிஸ்தான் என்று கூறுவதால் ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அமைப்பை தான் இந்தியா குற்றம் சாட்டுவதாக என் எண்ணம்.
*****

மும்பை பயங்கரம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே கராச்சியில் நடைபெற்ற கலவரத்தில் 16 நபர்கள் இறந்தும், 40 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இந்தியாவின் கை இருக்கலாம் என அங்கு உள்ள மக்கள் அச்சம் எழுப்பி உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளாதாகவும்,அதை முன்னிட்டு ஆப்கான் எல்லையில் இருந்து 1 லட்சம் படை வீரர்களை விலகி இந்திய எல்லையில் நிறுத்த இருப்பதாக செய்தி. இது போதாது என்று நேட்டோ படைகளுக்கு அளிக்கும் ஆதரவை விலகி கொள்ளா விட்டால் தலிபான் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது. ஒரே ஆறுதல் நம் புல்தடுக்கி பயில்வான் அரசு இது வரைக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்திலோ பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் நுழைந்து பிடிப்பது போன்ற எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை என்பதே.
*****

உலகமே பற்றி எரிந்தாலும் சரி, எவன் எக்கெடு கெட்டு போனாலும் சரி நம் அரசியல் நடந்தா சரி என்று இருக்கும் நம் தமிழக அரசியல் தலைவர்கள். சில நாள் வரை இலங்கை பிரச்சனை இப்பொழுது அருந்ததி பிரச்சனை. நல்லா இருங்கடே. உங்க பொழுப்பு நல்லாவே நடக்குது.
*****

நாகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மிக கடுமையாக தாக்கிய நிஷா (பெயர் நல்லா இருக்கு) நாகை அதன் சுற்று வட்டாரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதை கேட்க நல்லாவே இல்லை. திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் பகுதிகளிலும் சீர்காழி பகுதிகளிலும் சிறிய வாகனங்கள் போக முடியாத அளவுக்கு இன்னும் நிலைமை நீடிக்கிறது. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் அளிக்கப்படும் என்று ஆறுதல் அளித்து உள்ளார். எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம். பணம் ஒட்டாக மாறும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும்.
*****

மழை இந்த கொட்டோ கொட்டு என்று கொட்டி உள்ளது. ஆனாலும் அடுத்த வருடம் வழக்கம் போல் தண்ணீருக்கு அடுத்த மாநிலங்களிடம் கை ஏந்தி கொண்டு தான் இருக்க போகிறோம். அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? சென்னையில் நிலைமை இன்னும் மோசம். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றியும், வடிக்காலை ஒழுங்குப்படுத்துவதையும் தவிர்த்து வேறு வழி இல்லை.
*****

குடும்ப சண்டைகளை விலக்கி, தமிழன தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து எழுதும் அறிக்கைகளை, கடிதங்களை நிறுத்தி தமிழக மேம்பாட்டிற்கு ஏதாவது உபயோகமாக செய்தால் புண்ணியமாக போகும் நமக்கு எல்லாம். எதிர்கட்சியும் எல்லாத்துக்கு நொண்டி நாட்டியம் ஆடாமல் உள்கட்சியை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்கலாம்.
*****

இந்திய குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐ.நா. தன் கண்டத்தை பதிவு செய்து இருந்தது. அதை தொடர்ந்து ஐ.நா.விடம் எழுப்பட்ட கேள்விக்கு தொட்டும் தொடாமலும் தான் பதில் அளித்து உள்ளது. அதன் விபரம்

Question: In view of this weekend’s events in India, in which there is tension between India and Pakistan which has arisen, is the Secretary-General going to intervene at some point in time to caution, I mean some sort of, I mean talks between India and Pakistan, you know, to lessen the tension that has arisen over there?

Deputy Spokesperson: The Secretary-General, as you know, was one of the first to express his strong condemnation of these attacks, as well as his sympathy and solidarity with the Government and people of India. That solidarity extends to other nations who lost citizens in these heinous attacks. He reiterates his strong condemnation today. He also joins in the call, by Indian authorities, for full cooperation, by all concerned both inside and outside the country, with their investigation.

Question: What will he do, you know, to, because there are indications that India may, in an act of reprisal, attack? Pakistan fears it may attack Pakistan, because although it says it has nothing to do with those non-state actors, but still the responsibility is being pinned on Pakistan. What does the Secretary-General plan to do about that?

Deputy Spokesperson: I just read to you what the Secretary-General has said on the subject.

Question: Yes, following up on the India-Pakistan situation, the Pakistan Ambassador sent a letter to the Secretary-General yesterday. Does he have any comments on it?

Deputy Spokesperson: I have to follow up on the receipt of the letter. I am not aware of a receipt of a letter from Pakistan.
*****