Saturday, June 30, 2007

உயிர் வாழனுமா? அரசியல் வேண்டாமய்யா...

கருப்பு கொடி காட்டுவதில் தொடங்கி
கல் வீச்சு
கொடும்பாவி எரிப்பு
ஆட்டோவில் வந்து அடிப்பது
உருட்டு கட்டையால் உருட்டி எடுப்பது
ஆசிட் வீசுவது
செருப்பால் அடிப்பது
பஸ்சை கொளுத்துவது
கை, கால் எடுப்பது
அரிவாளால் வெட்டுவது
போலீசாரை ஏவி விடுவது
பொய் வழக்கு போடுவது
கஞ்சா வழக்கு
ப.ஆபிஸ் கொளுத்துவது
கை ஏறி குண்டு வீசுவது

என்று நாள் ஒரு மேனியாக வளர்ச்சி அடைந்து இன்று

ரிமோட் குண்டுல வந்து நிக்குது...

வேணாமய்யா இந்த அரசியல் நமக்கு, ஒழுங்கா பொழப்ப பாத்தோமா, வெட்டி நியாயம் பேசி தேர்தல் அன்னிக்கு கிடைக்கும் விடுமுறை அனுபவிச்சோமா, ஒரு வீடு வாங்கினோமா,ஒரு கார் வாங்கினோமா, கேட்குற வரிய கட்டினோமா, புள்ள குட்டிகள படிக்க வைச்சோமம, அதுக்கு ஒரு கண்ணாலம் காட்சிய பாத்தோமா என்று வாழுற வழிய பாருங்கய்யா.....

காந்தி கூறியதை போல

தீயதை (அரசியல்) பேசாதே
தீயதை (அரசியல்) கேட்காதே
தீயதை (அரசியல்) பாக்காதே

Friday, June 22, 2007

எட்டி நின்று போட்ட ஒரு எட்டு...

புதுசா ஒரு எட்டு போடும் விளையாட்டை பதிவுலகில ஆரம்பித்து இருக்காங்களாம். ஆரம்பித்த புண்ணியவான்/வாதி நல்லா இருக்கவும்! நாம் எல்லாம் எட்டு போடாமலே வாகன ஒட்டுனர் உரிமை வாங்கின ஆளு, அப்படிப்பட்ட நம்மள எட்டு போட தண்டோரா விக்கி, விழியன் உமாநாத், தலைவலி கீதா, ஆத்திகம் வி.எஸ்.கே, அழைத்து உள்ளார்கள், அவர்கள் அழைப்பை ஏற்று என்னுடைய தற்பெருமைகள்...

1, என்ன படிக்குறோம், எதுக்கு படிக்குறோம், என்ன பண்ணப் போறோம் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழ்வை கண்டப்படி அனுபவித்து விட்டு கிடைத்த வாய்ப்புக்களில் சிலதை தவறு விட்டு மிஞ்சியதை வைத்து இன்று ஒரு சுமாரான நிலையில் இருப்பதே பெரிய சாதனை & பெருமை தான் கூடவே இப்பொழுது நான் பார்க்கும் வேலையை பெற்றது. மன அளவிலும், பொருள் அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் என்னை முழுதாக திருப்திப்படுத்தியது. இதை தாண்டி அடுத்த நிலைக்கு முயற்சி செய்கின்ற போதிலும் இங்கு வேலை செய்வதை, செய்ததை மிகவும் பெருமையான ஒரு விசயமாக என் வாழ்வில் இருக்கும்.

2, கல்லூரியில் சும்மா வம்புக்கு சண்டை போட்டு நாங்களும் மேடை ஏறுவோம் என்று மேடை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சுப் போட்டியில் கலந்து சில பரிசுகள் வாங்கியது, கல்லூரியில் எக்ஸ்னோரா ஆரம்பித்து அதன் தலைவராக ஆனது, அவ்வளவு சேட்டை பண்ணியும் சரியாக பட்டப்படிப்பை முடித்தது, சின்ன சின்ன சண்டைகள், ரவுண்ட் கட்டி கொட்டம் அடிச்சது என அப்படி, இப்படினு பெருமைப்பட்டுக்க ஏகப்பட்ட விசயங்கள் இருக்கு.

3,சென்னை அலுவகலத்தில் இருக்கும் போது த.நா. அரசின் ஒரு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கடலூர் மாவட்டத்தை தவிர மற்ற இடத்தில் முடித்து விட கடலூர் மாவட்டத்தில் முடித்து தர நி.இயக்குனர் என்னைக் கேட்டுக் கொள்ள மூன்றே நாளில் கடலூர் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தே அதை முடித்துக் கொடுத்தது, அந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் போது உங்களால கம்பெனிக்கு நல்ல ரெவீன்யூ தான் என நி.இ. சொன்னது, நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவம் வெற்றது பெருமை தான்.

4, சொந்தமாக வண்டி வாங்கிய புதிதில் சென்னையில் இருந்து நாகைக்கு இரவில் பறந்தது. அந்த நேரத்தில் கி.க.சாலையில் சரியாக மின் விளக்குகள் கூட கிடையாது. இப்ப நினைச்சாலும் சும்மா ஜிவ்னு பெருமை தலைக்கு ஏறும். அதுக்காக நடுவில் நிக்க வைத்து கூடி கும்மி அடிச்சதை மறக்க முடியாது.

5, எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எல்லாத்தையும் கலந்துக் கட்டி பேசி, வேலைகளை கலந்து கட்டி செய்து Wise Man என்ற ஒரு இமேஜ்யை உருவாக்கி அதை இன்னும் ஒப்பேத்திக்கிட்டு இருப்பது.

6, பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது உன் சேர்க்கை சரியில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு அப்படியே ஒரு பெருமை பொங்கி வரும் பாருங்க... பசங்க கிட்ட சொல்லி பாருங்கடா உங்களால் தான் நான் கெட்டு போறேன் என்று சொல்ல, எல்லாத்துக்கும் முழு காரணமான ஒன்னயே இப்படிடா இவனுங்க நம்புறாங்க என பசங்க புலம்பவது, இருந்தாலும் எனக்கு மிக மகிழ்வான, நிறைவான பள்ளி, கல்லூரி வாழ்வை அளித்த அந்த நண்பர்களையும், பிறகு பல வாய்ப்புகளின் மூலம் பெற்ற நலம் விரும்பிகள் மற்றும் பிற நல்ல நண்பர்களை பெற்றது ஒர் பெருமை தான்

7, அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான்.

8, இங்க System ஊத்திக்கிட்டு நாலு மூணு நாள நமக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்கும் இந்த வேளையிலும் நடுவில் கிடைத்த கேப்புல எட்டி நின்னு System a Monitor பண்ணிக்கிட்டே இந்த பதிவை போடுறேன் பாருங்க... அதும் இல்லாம நாம் கிறுக்குறதையும் வந்து படிச்சுட்டு அதுக்கு சில பின்னுட்டோமும் போடுறீங்க பாருங்க... எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க... (ரமணா கேப்டன் மாதிரி கண் சிவந்து கண்ணீர் அணை கட்டுதுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்)

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

ஆள் பிடிக்கிறது:

எப்பா பிழிந்து எடுக்கும் வேலைக்கு நடுவில் நான் எட்டு போட்டதக்கு காரணமே இப்ப விட்டா நாம கூப்பிடுவதுக்கு ஆள் கிடைக்காது என்பதால் தான்....

1, சி.வி.ஆர்
2, இம்சை அரசி
3, சச்சின் கோப்ஸ்
4, G3
5, அருண்குமார்
6, வேதா
7, அய்யனார்
8, உலகம் சுற்றும் வாலிபி

மக்கள்ஸ் நான் தான் ஒழுங்கா எழுதுல, அதுக்குனு நீங்களும் டீல்ல விட்டுட கூடாது... சும்மா அதிர அடிக்கனும் சொல்லிட்டேன்...

Tuesday, June 19, 2007

உகாண்டா ஒரு பார்வை

உகாண்டா கிழக்கு ஆப்பிக்கா நாடுகளில் ஒன்று, முற்றிலும் நிலப்பரப்பால் கவரப்பட்ட குடியரசு நாடு.(Landlocked Republic). அந்நாட்டில் கிட்டதட்ட 20% நிலம் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனை சுற்றி இருக்கும் நாடுகள் கென்யா, சூடான், காங்கோ, தன்ஜானியா, ரூவாண்டா ஆகியவையாகும்.

1890 முன்பு வரை உகாண்டா நான்கு அரசு ராஜ்ஜியங்களாலும், பல குறு நில மன்னர்களாலும் ஆளப்பட்ட நாடு. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. 1962 ஆம் ஆண்டு சுகந்திரம் அடைந்தது.

ஆங்கிலம் மற்றும் லுகாண்டா(Luganda) மொழிகள் அந்நாட்டின் ஆட்சி மொழிகள் ஆகும். அனைவருக்கும் ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது. விளம்பர பலகைகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு வரை உகாண்டா, ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகளில் ஒன்று ஆகும். கிட்டதட்ட வருடத்திற்கு 150,000 பயணிகள் பயணம் செய்து உள்ளார்கள். ஆனால் 1997 ஆம் ஆண்டில், பல வருடங்களாக நடைப்பெற்ற உள்நாட்டு பிரச்சனை காரணமாகவும், பிறகு கிட்டதட்ட 12 வருடங்கள் உள்நாட்டில் வளர்ச்சி பணிகள் செய்தும் வெறும் 4000 நபர்கள் வருடத்திறகு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த தொய்வை சரிப்படுத்து பல இடங்களில் தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதித்தும், பாதுகாப்புகளை பலப்படுத்தியும் சுற்றுலாவை வளர்க்க அந்நாடு பெருமுயற்சி எடுத்து அதில் ஒரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.

உகாண்டாவில் வாகனங்கள் அனைத்தும் நம் நாட்டை போலவே இடது பக்கத்தில் தான் செல்கின்றது.

உகாண்டாவில் 1000 வகைகளுக்கும் மேலான பறவை வகைகள் உள்ளன, அது மட்டும் இல்லாமல் 1000 வகைகளுக்கு மேற்ப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளுக்கு இந்த நாடு தான் தாய்நாடு. மலை வாழ் கொரில்லாக்கள், அரிய வகை குரங்குகள் எல்லாம் மிக அதிகமாக காணப்படும் நாடுகளில் இதுவும் ஒன்று. இது போக கூட்ட கூட்டமாக சிங்கம், சிறுத்தை, யானை, ஒட்டகசிவிங்கி இன்னும் பல பல விலங்குகள் உள்ள நாடு. ஆப்பிரிக்க நாடுகளில் வேறு எங்கும் காண முடியாத பல உயிரனங்கள் காண கிடைக்கும் அற்புத நாடு இது.

ஆப்பரிக்க நாடுகளிலே மிக பெரிதான நல்ல நீர் ஏரியான விக்டோரியா ஏரி(Fresh Water Lake) இங்கு உள்ளது. மேலும் இது சரியாக இக்குவேட்ர்(Equator) மேல் அமைந்து உள்ளது. சில படகோட்டிகள் உங்களுக்கும் மிக சரியான இடத்தை காட்டுவார்கள். ஜி.பி.எஸ்.(GPS) இருந்தால் சரி பார்த்து கொள்ளலாம்.

விக்டோரியா ஏரியின் சில பகுதிகளில் நீர் யானைகளை காண முடியும். ஒரே நேரத்தில் 60 கிலோ புல்லை உட்கொள்ளும் திறமை வாய்ந்தது நீர் யானை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

"சர்ச்சில்" அவர்களால் ஆப்பிரிக்காவின் முத்து(Pearl of Africa) என்ற அடைமொழியால் அழைக்க பெற்ற நாடு உகாண்டா.

இங்கு வாழும் மக்களில் மூன்றில் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். ரோ.க - 33 %, போரோ - 33 %, 16 % மூஸ்லிம் மீதம் உள்ள 18 % பிற மதத்தவர்கள் அல்லது சொந்த நம்பிக்கை உடையவர்கள்(Indigenous Beliefs).(புள்ளி விபரங்கள் சிறிது முன் பின் இருக்கலாம்). உலகில் ஏழே இடங்களில் இருக்கும் பஹாய் சமய வழிப்பாடு தளங்களில் ஒன்று உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் அமைந்து உள்ளது.

உகாண்டாவின் முக்கிய உணவு என்று பார்த்தால் மெதுவான ஸ்கரட்ச்யில் பீன்ஸ் மற்றும் மாமிசம் வைத்து தருவார்கள். பெரும்பாலும் மாட்டு கறி, ஆட்டுக்கறி(Goat) மற்றும் மட்டன்(Sheep). பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எல்லா இடத்திலும் பியர் கிடைக்கும். அனைவரும் விரும்பி குடிப்பது பியர் தான். POMBE என்று வாழைக்காயை வைத்து செய்யப்படும் பியரும், WARAGI என்று மில்லட்(Millet) கொண்டு செய்யப்படும் சாராயமும் இந்த நாட்டின் பாரம்பரிய பானம் ஆகும்.இது போக அனைத்து வகையான வெளிநாட்டு பானங்களும் கிடைக்கும்.

உகாண்டாவின் கரண்ஸி உகாண்டா ஸெலிங் ஆகும் (Uganda Shilling - USH). அமெரிக்க டாலர்கள் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும், பல இடங்களில் யூரோ மற்றும் பவுண்டும் வாங்கப்படும். ஆனால் அந்நாட்டு பணமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. நான் போய் இருந்த போது ஒரு டாலருக்கு 1650 உ.ஸெலிங் தந்தார்கள். விமான நிலையத்திலே மாற்றிக் கொளவது நல்லது. மற்ற இடங்களில் குறைந்த அளவே தருகின்றார்கள். 2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள். அதனால் சற்று கவனமாக இருப்பது நலம்.

Tuesday, June 05, 2007

கும்மி அடிக்க ஒடியாங்க......

கும்மி அடிக்க முடியாமல் தவிர்க்கும் நெஞ்சங்கள் கும்மி அடிக்க ஒரு இடம் தேவைப்படுகிறது, அதனால் ஒரு பதிவு போடு எனக் கூறிய தங்க தலைவனின் உத்தரவை ஏற்று இந்த கும்மி பதிவை இடப்படுகிறது.


கும்மி அடிப்பவர்கள் அடித்து விட்டு போகலாம்.
அடுத்தவங்க சந்தோஷம் தான் முக்கியம் நினைக்குறவன் நான்...... நல்லா இருங்கய்யா..... நல்லா சந்தோஷமா இருங்க.....