Monday, October 11, 2010

கம்பனும் விசிஷ்டாத்வைதமும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்க அமர்வுகள்

பொருண்மை : ஒப்பிலக்கியம்
தலைப்பு - "கம்பனும் விசிஷ்டாத்வைதமும்"
கட்டுரையாளர் - முனைவர். செல்லக்கிருஷ்ணன்
அரங்கம் - ஒளவை அரங்கம்
இடம் - கோயம்புத்தூர்
நாள் - 27.06.2010

பகுதி - 1



பகுதி - 2



பகுதி - 3



பகுதி - 4

Thursday, October 07, 2010

தமிழ் இலக்கியங்களில் பெண்மையின் மதிப்பீடுகள் - ஒரு பார்வை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்க அமர்வுகள்

பொருண்மை : பெண்ணியம்
தலைப்பு - "தமிழ் இலக்கியங்களில் பெண்மையின் மதிப்பீடுகள் - ஒரு பார்வை"
கட்டுரையாளர் - முனைவர். சரோஜினி செல்லக்கிருஷ்ணன்
அரங்கம் - மாமூலனார் அரங்கம்
இடம் - கோயம்புத்தூர்
நாள் - 24.06.2010

Sunday, August 15, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்



INDIA IS MY PRIDE

தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்



2006 யில் போட்ட பதிவு... எந்த ஒரு மாற்றம் இல்லாமல் இந்த வருடமும் (மாற்ற இதுவரை தேவை ஏற்படவில்லை - என்ளவில்)

எப்படி கிடைத்தது!!!

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ


நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ


காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ

எப்படியோ வாங்கினோம்
இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்
எந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு
மிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு
எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு
தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு


உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு
எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு
தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு
தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்
நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.
தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு

தொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு

ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.



எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!


ஒலி வடிவில்

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஜெய்ஹிந்த்!!!

Monday, July 26, 2010

தாயாருடன் திருநாகை அழகியார்

சொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.

கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.

அதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.

அப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.

ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்

திருநாகை அழகியார் - சிறு குறிப்பு
மட்டையடி உற்சவம்
திருக்கோவில் படங்கள்













Friday, July 23, 2010

மாயாவி முரளி

இலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)

1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே.

மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.

முரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார்.

இலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.

இந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.

கபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே!

Murali - Its always pleasure to watch you and you never disappointed us. Thanks for your brilliant performance and wonderful show in World Cricket. We Salute You. HATS UP ! We Miss you.




சாதனை துளிகள் : நன்றி - விக்கிபீடியா

Muttiah Muralitharan holds a number of world records, and several firsts:

* The most Test wickets (800 wickets).
* The most One-Day International wickets (515 wickets as of 22 July 2010).
* The highest number of international wickets in Tests, ODIs and T20s combined (1320 wickets as of 22 July 2010).
* The most 5-wicket hauls in an innings at Test level (67).
* The most 10-wicket hauls in a match at Test level (22). He is the only player to take 10 wickets/match against every Test playing nation.
* Fastest to 350,[98] 400,[99] 450,[100] 500,[101] 550,[102] 600,[103] 650,[104] 700,[105] 750[106] and 800 Test wickets, in terms of matches played (indeed the only bowler to exceed 708 wickets).
* Only player to take 10 wickets in a Test in four consecutive matches. He has achieved this feat twice.
* Only player to take 50 or more wickets against every Test playing nation.
* Muralitharan and Jim Laker (England), are the only bowlers to have taken 9 wickets in a Test innings twice.
* 7 wickets in an innings against the most countries (5).
* Most Test wickets taken bowled (157),[110] stumped (41)[111] and caught & bowled (31).[112] Bowled by Muralitharan (b Muralitharan) is the most common dismissal in Test cricket (excluding run out).
* Most successful bowler/fielder (non-wicket keeper) combination – c. Mahela Jayawardene b. Muttiah Muralitharan (67).
* Most Man of the Series awards in Test cricket (11).
* One of only six bowlers who have dismissed all the eleven batsmen in a Test match. Jim Laker, Srinivasaraghavan Venkataraghavan, Geoff Dymock, Abdul Qadir and Waqar Younis are the others.
* Most Test wickets in a single ground. Muralitharan is the only bowler to capture 100-plus Test wickets at three venues, the Sinhalese Sports Club Ground in Colombo, the Asgiriya Stadium in Kandy and the Galle International Stadium in Galle.
* The only bowler to take 75 or more wickets in a calendar year on three occasions, achieving it in 2000, 2001 and 2006.
* Most ducks (dismissals for zero) ever in international cricket (Tests+ODI's+Twenty20): 59 ducks total.

Sunday, July 18, 2010

இந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி

கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.


தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.

இந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த ( ` ) குறீயிடு நமக்கு கிடைக்கும்.

இந்த குறியீடு யூனிகோடு ல் சேர்க்கும் வரைக்கும் இதை பரவலாக பயன் படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.


*******


சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எபிக் பவுரசர் சில விசயங்களில் பட்டையை கிளப்புகிறது. நெருப்பு நரியின் பயன்பாடுகளை இந்தியப்படுத்தி உள்ளனர்.

இதில் கவர கூடிய ஒரு சிறப்பு அம்சமாக பிரைவேட் ஃபரவ்சிங் இருக்கிறது. அதை ஆக்டிவ் செய்தால் எந்த ஒரு தகவலையும் சேமித்து வைத்துக் கொள்ளாது. எனக்கு பிடித்த அம்சங்கள் இந்த பவரசரில் இருந்தப்படியே பல செய்தி நிறுவனங்களில் தலைப்பு செய்திகளை படித்துக் கொள்ளலாம். அதே போல் இந்திய மொழிகளில் சுலபமாக தட்டச்சு செய்யும் வசதியும் அதை அப்படியே காப்பி செய்து கொள்ளவும் முடிகிறது. இதில் இருக்கும் ஸ்கீன்ஸ் படு கலக்கல். மனிதர்கள், விலங்குங்கள், கலாசாரம், இசை என பல விதமான தலைப்புகளில் பல தீம்ஸ் கொடுத்து உள்ளார்கள். தீவிர சினிமா ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தப்பட்ட தீம்ஸ் ம் அரசியல் தொண்டர்களையும் கவரும் வண்ணம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பற்றிய தீம்ஸ் ம் உள்ளது. நம் தமிழ்நாட்டை பற்றியும் பல விதமான தீம்ஸ் கள் உள்ளனர். இந்த தீம்ஸ் களில் விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளையராஜா போன்றவர்கள் விடுபட்ட போனது சற்றே நெருடல் எனக்கு.இன்னும் பல பல ஆப்ஷன்ங்கள் உள்ளனர். ஒவ்வொன்றையும் முயற்சி பாருங்கள். நம்ம தீம் வழக்கம் போல் புலி தான் :)

இந்த உலாவியை தரையிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

பழகி பாருங்க, பிடிச்சா வச்சுங்கோங்க, இல்லனா தூக்கிடுங்க :)

Wednesday, July 14, 2010

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

ICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 


Pre-Trial Chamber I of the International Criminal Court (ICC) issued a second warrant of arrest against the President of Sudan, Omar Hassan Ahmad Al Bashir, considering that there are reasonable grounds to believe him responsible for three counts of genocide committed against the Fur, Masalit and Zaghawa ethnic groups, that include: genocide by killing, genocide by causing serious bodily or mental harm and genocide by deliberately inflicting on each target group conditions of life calculated to bring about the group's physical destruction.

இந்த வாரண்ட் முதலில் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் க்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வாரண்ட் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரெஸ்ட் வாரண்ட் டை குறித்த என் பதிவு இங்கு. கடந்த வருடம் மார்ச் மாதம் அந்த வாரண்ட் பிறபிக்கப்பட்ட போது இனப்படுகொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்ட இருந்தது. அதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இப்பொழுது அந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு இவ்வாரண்ட் டை பிறபித்து உள்ளது. 

இந்த இனப் படுகொலையில் இது வரை 3 லட்சம் மக்கள் உயிர் இழந்து உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதி ஆகி உள்ளனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. வெறும் 10,000 நபர்கள் மட்டுமே இறந்தாக சூடான் அரசு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை உள் அரசியல் காரணங்கள் கொண்டது என சூடான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இம்முடிவை குறிதுது தங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, தாங்கள் சூடான் நாட்டின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம் எனவும் கூறி உள்ளனர்.  ஆனால் இது டார்பூர் மக்களுக்கும் மனித தன்மைக்கும் கிடைத்த வெற்றி என JEM Rebel அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டார்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது. 

இந்த அறிவிப்பை வழக்கம் போல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளீட்ட நாடுகள் வரவேற்று உள்ளனர். சூடானின் நட்பு நாடுகளான சில அரபு நாடுகள் மற்றும் சில ஆப்பரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சீனா மற்றும் இந்தியா எந்த ஒரு கருத்தும் கூறாது என்றே எண்ணுகிறேன், எண்ணெய் காரணங்களுக்காக. சூடான் மக்கள் இது வரை எந்த ஒரு பெரிய எதிர்ப்பையோ ஆதரவையோ பதியவில்லை. டார்பூர் மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும் இதனால் எந்த ஒரு பெரிய மாற்றத்த்தை தாங்கள் தற்சமயம் அடைய போது இல்லை என்ற அளவிலே உள்ளனர்.

இந்த வாரண்ட் டின் மூலம் சூடான் அதிபருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். போன வருடம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் க்கு பிறகு தன்னுடைய ஆளுமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 24 வருடங்களுக்கு பிறகு பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றார் அல் பஷீர். அந்த தேர்தலில் பல முக்கிய எதிர் கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வில்லை என பல நாடுகள் கருத்து தெரிவித்ததும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அல் பஷீர் சூடானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு வந்தால் இண்டர்போல் போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற பரவிய வதந்தியை அடுத்து தென் ஆப்பிக்கா செல்லாமல் தவிர்த்தார். விரைவில் உகாண்டாவில் நடைபெற இருக்கும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என உகாண்டா அரசு அறிவித்து உள்ளது. அதனால் தன் பிரநிதி யை தான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பஷீர். கத்தார் அரசு சூடான் அரசுடன் டார்பூர் பிரநிதிகள் கலந்துக் கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் சில பல குழப்பங்கள், இன்னும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. அண்டை நாடுகளான சாட் (Chad), லிபியா, எத்தோப்பியா, உகாண்டா போன்ற நாடுகளுடன் சூடானுக்கு நல்ல உறவு இல்லை. 

ஐ.நா. வும் அமெரிக்காவும் சூடான் அரசு இந்த அரெஸ்ட் வாரண்ட்டை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சூடானை வலியுறுத்தி உள்ளது. ஐரோப்பிய யூனியனும் ICC ஆதரவாக தான் செயல்படும். அரபு லீக் மற்றும் ஆப்பரிக்க யூனியன்கள் தற்போது எதிர்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் பின்வாங்க கூடும். இதன் மூலம் அல் பஷீர் கண்டிப்பாக ஒரு நாள் விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நாள் அவர் பதவியில் இருக்கும் வரை வராது என்பதும் உண்மை. நீதி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் தாமதிக்கப்பட்ட கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி தான் என்பது என் கருத்து, ஆனால் மனதில் Better Late then Never என்ற வாசகமும் கடந்து செல்கின்றது. 

போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கும் நாளை வரலாம். எந்த அளவுக்கு அவருக்கு வளர்ந்த (சக்தி வாய்ந்த) நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படும். அந்த நாளையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன். 

Friday, June 11, 2010

என்னமோ போ !

நீ எப்பொழுதுமே
கொஞ்சி கொஞ்சி
தான் பேசுவாய்யோ?
அல்லது நீ
பேசுவதே எனக்கு
கொஞ்சவது போல்
இருக்கிறதா?

*******

இன்செண்ட் காபியை போல்
இன்செண்ட் சிரிப்பும்
இன்செண்ட் அழுகையையும்
காதலியிடமும் / மனைவியிடமும்
மட்டுமே சாத்தியம்.

*******

உன்னுடன் கதைக்க போகும்
சில நிமிடங்களுக்காக
மொழியின் உட்கூறு வரை
சென்று வார்த்தைகளை
யோசித்து சேமித்து
வைக்கின்றேன் - ஆனால்
உன்னுடன் கதைக்க தொடங்கிய
சில நொடித் துளிகளிலே
மொழிகள் மறந்து - மெளனமே
மொழியாக மாறும்
மர்மம் என்னவோ?

*******

Thursday, June 10, 2010

வாழ்க சனநாயகம் - 9

35 ஆயிரம் பேர் உயிர் இழக்கவும், 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆள்படவும் காரணமாக இருந்த போபால் விஷ வாயு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.

"எட்டு குற்றவாளிகள் மீதான குற்றங்கள் ஐ.பி.சி. 304(2), 336, 337 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெயில் மனுவை அளித்த குற்றவாளிகளுக்கு ஜம்மென்று ஜாமீனும் கிடைத்தது. 'பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் கவனக் குறைவாக செயல்பட்டது' என்பதுதான் குற்றவாளிகள் மீதான தண்டனைக்கான சாராம்சம்!

இந்திய உயிர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து, அமெரிக்காவில் இதே போன்ற தங்களின் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், இத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தில் விஷத்தைப் பாய்ச்சிய வாரன் ஆண்டர்சன் பற்றி தீர்ப்பில் எதுவுமே இல்லை!" - ஜு.வி

இங்கு நீதி, மலிவு விலையில் கிடைக்கும் என போர்ட் வைக்காத குறை தான் ! - வாழ்க சனநாயகம்!


Wednesday, June 09, 2010

பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்

கிரிக்கெட் உலகின் தன்நிகர் இல்லா தாதாவாக நினைத்துக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தன்னுடைய திமிர் தனத்தை இந்த வருடம் முதல் ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் மூலம் காட்டி உள்ளது. அதற்கு காரணமாக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நியுசிலாந்து அணியுடனான தொடரை காரணம் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கலந்துக் கொள்ளாது. 

நிரம்பிய கிரிக்கெட் ரசிகர்களும், நிரம்பிய விளம்பரங்களும், கொட்டும் பணமும் பி.சி.சி.ஐ. யை ஒரு தனி அதிகார மையமாக மாற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அரசுக்கே சில காலங்களுக்கு முன்பு இருந்து போக்கு காட்ட வைக்கும் அளவுக்கு வளர்ந்தது தான் ஆச்சரியம். ஐ.பி.எல் - 2 தொடரின் போது இந்திய அரசை பகைத்துக் கொண்டு தென் ஆப்பரிக்காவில் போட்டியை நடத்திக் காட்டியது. வருமானம் குறைவு தான் என்றாலும் நீ சொல்வதற்கு எல்லாம் ஒத்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை என்பதை காட்டவே இப்போட்டி இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்பட்டது. உலக அரங்கில் நமது விளையாட்டு துறைக்கு இது ஒரு அசிங்கமே. ( தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தவிர்க்க சொன்ன அரசின் நடவடிக்கையும் சரி அல்ல என்பது வேறு விசயம். )

அதே போல் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் க்கு அடுத்து மிக பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஆசிய போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது. ஆசிய கோப்பை என்ற பெயரில் ஒரு தொடரில் விளையாட முடியுமாம் ஆனால் இந்தியாவின் சார்பாக ஆசிய போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாதாம். இதில் எந்த லட்சணத்தில் தேசத்திற்காக ஆடுகிறோம் என்று நம் கிரிக்கெட் வீரர்களால் மார்தட்ட முடிகின்றது என்று தெரியவில்லை.

இந்திய ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் கல்மாடி கூறியதை போல் இது போன்ற போட்டிகளில் விளையாடினால் பணம் கிடைக்காது பதக்கம் மட்டும் தான் கிடைக்கும். பணமே பிரதானமாக கருதப்படும் கிரிக்கெட் அணிகளால் இதில் கலந்துக் கொள்வது சந்தேகமே என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்காக விளையாடி என் நாட்டிற்கு சில பதக்கங்களை வென்றுக் கொடுத்தேன் என்பதை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்காக விளையாடி சில கோடிகளை சம்பாதித்து கொண்டேன் என்பது தான் வீரர்களின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டங்களை சேர்க்க வேண்டி கேட்ட போது 20/20 போட்டிகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று பி.சி.சி.ஐ. மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஐ.பி.எல். ஆட்டங்களை எதில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. 1998 ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே கனடாவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர் ஆட முதல் தர வீரர்களை அனுப்பியது.

இந்திய அணி புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளார் நமது மத்திய அமைச்சர் சரத் பவார். விவசாயத் துறையை இந்தியாவில் சீர்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சக வேலைக்கான நேரத்தை விட கிரிக்கெட் பார்க்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக தான் பவார் அதிக நேரம் செலவழிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால் தனக்கு கை வந்த கலையான சப்பை கட்டு கட்டுவதை மிக சரியாக செய்கிறார் பவார். இது போன்ற அமைச்சர்களை கூட்டணிக்காக வைத்துக் கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். 

இதே போல் NADA அமைப்புக்கும் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அந்த அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. 

இதற்கு எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு துறை என்று ஒன்று இருக்குமே அது தான் எதாச்சும் செய்ய வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் யாரும் எந்த ஒரு விளையாட்டு கழகத்திற்கும் / வாரியத்திற்கும் / சங்கத்திற்கும் பொறுப்பு வகிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். விளையாட்டும் அரசியல் ஆனதினால் வந்த விளைவு இது. 

Thursday, June 03, 2010

ஆட்டம் தொடங்கியாச்சு - The Game is ON !

"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.

NBA - The Finals (கூடைப்பந்து)

அமெரிக்காவில் மிக பிரலமான கூடைப்பந்து அணிகளுக்கு இடையே வருடத்துக்கு ஒரு முறை (கிட்டதட்ட வருடம் முழுவதுமே) நடைபெறும் NBA போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. (இன்னும் சில மணித்துளிகளில்) 30 அணிகளில், 1000 த்துக்கும் அதிகமான ஆட்டங்களில் பல சுற்றுகளில் விளையாடி இன்று கூடைப்பந்தில் முடிச்சூடா சக்கரவத்திகளாக திகழும் பாஸ்டன் செல்டீக்ஸ் (Boston Celtics) அணியும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் (Los Angeles Lakers)இறுதி போட்டியில் மோத தயாராக உள்ளார்கள்.


இது வரை நடைபெற்ற 64 இறுதி ஆட்டங்களில் பாஸ்டன் 20 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 30 முறையும் தகுதி பெற்று உள்ளனர். இதில் பாஸ்டன் 17 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 15 முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளனர். இவ்விரு அணிகளும் இது வரை 11 முறை இறுதி ஆட்டங்களில் மோதி உள்ளனர். அதில் பாஸ்டன் 9 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2 முறையும் வென்று உள்ளனர். கடைசியாக 2008 ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் பாஸ்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் கடந்த வருட சாம்பியன்ஸ் (நடப்பு) லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2008 ம் ஆண்டு விட்டதை இந்த வருடம் சரி கட்ட வேண்டும் என்றும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு லாஸ் ஏஞ்சல்ஸ்ம், மீண்டும் 2008 யில் நடந்ததை நடத்திக் காட்ட பாஸ்டனும் சிலிர்ப்புடன் உள்ளது.

Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.

Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.

கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.

மொத்தத்தில் பாஸ்டன் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், எதையும் சாதித்துக் காட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்வளவு சுலபமாக கோப்பையை விட்டுத் தர மாட்டார்கள். இந்த முறை எப்படியும் 7 ஆட்டங்களும் (Best of 7) நடைபெறும் என்று நினைக்கிறேன். Celtics யின் ஆட்ட யுத்தியும், Garnett டின் காட்டுமிராண்டித்தன ஆட்டமும் என்னை கவர்ந்தாலும் Kobe Bryant க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் Lakers வெற்றி பெற வேண்டும் என எதிர்பாக்குகிறேன்.

ஏது எப்படி இருந்தாலும் வேகம், விவேகம், விறுவிறுப்பு க்கு எந்த விதமான பஞ்சமும் கண்டிப்பாக இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி. தவற விடாமல் கண்டுக் களியுங்கள்.

THE GAME IS ON !

Image Courtesy : NBA.com

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு



"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, March 05, 2010

மட்டையடி உற்சவம் - நாகை

பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.

மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.

நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்


கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்


மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்


தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்


மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.

சலனப்படம்



புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.

ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.

Thursday, March 04, 2010

ஹைத்தி - பூகம்பம்

ஏற்கனவே உணவு பஞ்சத்தாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும், தொடர்ந்து அடித்த கடும் புயலாலும் (Hurricane) அவதிப்பட்டு வந்த ஹைத்தி, எட்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டு கடுமையான பூகம்பத்தால் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளது. என்னுடன் வேலை நண்பர்களின் நிலை அறியவே சில நாட்கள் பிடித்தது. இன்னுமும் அவர்கள் தங்க இடம் இல்லாமல் அலுவலக வளாகத்தில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி ஒரே ஒரு இந்தியர் (என்னுடைய பழைய கம்பெனியில் தற்பொழுது வேலை செய்தவராம்) இடிபாடுகளில் சிக்கி இறந்து உள்ளார். வடமாநிலத்தை சேர்ந்தவர் அவர். அவர் குடும்பத்திற்கு உதவி தொகை அளிக்க மற்ற நண்பர்கள் முயன்று கொண்டு உள்ளார்கள். அதே போல் இங்கு இருந்தும் ஹைத்திக்கு பணம் திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். திரட்டும் பணி கிட்டதட்ட முடிந்து விட்டது, விரைவில் அனுப்பட்டும்.

உலகின் பல பகுதிகளில் இருந்து நிவாரணம் ஹைத்தி நாட்டிற்கு குவிந்த போதிலும் இன்னும் நிலைமை மோசமாக தான் உள்ளது அங்கு. ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும், பல தொண்டு நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி இருந்த பலரின் உயிர்கள் காக்கப்பட்டது. போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாதது தான் மிக பெரிய இடராக அங்கு இப்பொழுது நிலவி வருகிறது.

ஐ.நா, ஹைத்தி அரசு, உலக வங்கி, ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு மறுகட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வரை கிட்டதட்ட 40 % மக்கள் (5 லட்சம்) தற்காலிக குடியிருப்புகள் பெற்று உள்ளார்கள். இன்னும் 2.5 லட்சம் தார்பாய்கள் மற்றும் 25000 டெண்ட் வழங்குவதற்காக பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது. கிட்டதட்ட 15 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

விரைவில் மழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்பு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தற்பொழுது இருக்கும் சவால். இது வரை தொற்று நோய்கள் ஏதுவும் பெரும் அளவில் பரவாமல் இருப்பது ஒரு வரம்.

ஹைத்தியில் இருந்த அலுவலக தலைமையகம், பூகம்பத்திற்கு முன்பு


பூகம்பத்திற்கு பின்பு


We are the World 25 - Haiti

25 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் ஜாக்சனால் ஆப்பிக்க நாடுகளுக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட We are the World பாடல் மீண்டும் 80 இசை கலைஞர்களால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை ரீக்கார்ட் செய்து உள்ளார்கள். ஹைத்தி நிவாரண நிதிக்காக இதை செய்து உள்ளார்கள். இதில் நம் ரஹ்மானின் பங்களிப்பு உண்டு. அந்த பாடல்....



மனம் இருப்பவர்கள் ஹைத்தி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். WFP மூலம் உதவ விரும்புவர்கள் இந்த சுட்டியை தொடரவும். WHO மூலம் உதவு இந்த சுட்டியை தொடரவும்.

வசந்தம் விரைவில் வீசட்டும்.

Wednesday, March 03, 2010

வாழ்க சனநாயகம் - 8

இந்த வாரத்தில் மட்டும்.....

திவிவேதி

கல்கி பகவான்

ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்....


இவங்கள் வரிசையில் இன்னும் பலரை விரைவில் எதிர்பாக்கலாம்.

மதத்தின் போர்வையில் இவர்கள் இதை எல்லாம் செய்வதால் இவற்றை தோலுரித்து காட்டுவதில் தவறே இல்லை.

வீட்டில் இருக்கும் பெற்றோர்களை கூட மதிக்காத பல ஜென்மங்கள் இந்த மாதிரி ஆட்களின் காலில் போய் விழுவது தான் கொடுமை. எதை திண்ணா பித்தம் தெளியும் அலையுறாங்க. அரசியல் வியாதிகளை விட்டு விடுவோம். அவர்கள் எவன்/ள் காலில் வேணுமானாலும் விழுவார்கள். செக்கு மாட்டுக்கு சிவன் என்ன? செக்கு என்ன? அவர்களுக்கு காரியம் ஆனால் சரி.

இனிமேல் ஆச்சம் மனுசனை சக மனிதனாக மட்டும் பாருங்கள்...

பழமொழி:

துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்தில் பள்ளம் அடா !

கமெண்ட் :

இந்த ஆள் எப்படி மாட்டினான் இப்போ? - பின்ன அரச குடும்பத்து ஆட்களுக்கு வைக்கும் கட் அவுட் டை விட பெரிய அளவில் கட் அவுட் வைத்தால் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பாங்க?

கேள்விகள் ?

1, நித்தியானந்தர்கள், தேவநாதன்கள் லீலைகள் போன்றவற்றை மட்டும் அடிக்கடி அட்டைப் படங்களாக போட்டு விளம்பரப்படுத்தி விற்பனை அதிகரித்து கொள்ளும் பத்திரிக்கைகள் (அதிலும் தேவநாதனுக்கு ப்லோஃ அப் எல்லாம் பண்ணுறாங்கப்பா), அவர்கள் துறையை சார்ந்தவர்கள் எரித்து கொள்ளப்பட்டத்தை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லையே, அது ஏன்? அடிப்பாங்கனா?

2, இது போன்ற செய்திகளை படித்தவுடன் மக்கள் அல்லது அவர்களை பின்பற்றியவர்கள் உடனே திரண்டு போய் அவர்கள் உடமைகளை அடித்து நொறுக்குவது, செருப்பால் அடிப்பது, கோஷங்கள் எழுப்பது, நீதிமன்றங்கள் வரை சென்று அடிப்பது என்று செய்கிறார்களே, இதுக்கே இவ்வளவு செய்கிறவர்கள் தர்மபூரி மாணவர்கள், தினகரன் பத்திரிக்கை ஊழியர்களை எரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு வரும் போது இதை எல்லாம் செய்வது இல்லையே. அது ஏன்? பயமா?.........

நல்லா இருங்கடே.... வாழ்க சனநாயகம்

Saturday, February 27, 2010

சிதறல்கள்

இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.

*******

போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!

*******

போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

*******

இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!

*******

நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.

*******

ரசித்தவை:

வா ங் கி க் கொ ள் வே ன்

by நெல்லை கண்ணன்

இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்