Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Sunday, August 12, 2012

கோடி வணக்கங்கள்


Friday, July 23, 2010

மாயாவி முரளி

இலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)

1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே.

மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.

முரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார்.

இலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.

இந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.

கபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே!

Murali - Its always pleasure to watch you and you never disappointed us. Thanks for your brilliant performance and wonderful show in World Cricket. We Salute You. HATS UP ! We Miss you.




சாதனை துளிகள் : நன்றி - விக்கிபீடியா

Muttiah Muralitharan holds a number of world records, and several firsts:

* The most Test wickets (800 wickets).
* The most One-Day International wickets (515 wickets as of 22 July 2010).
* The highest number of international wickets in Tests, ODIs and T20s combined (1320 wickets as of 22 July 2010).
* The most 5-wicket hauls in an innings at Test level (67).
* The most 10-wicket hauls in a match at Test level (22). He is the only player to take 10 wickets/match against every Test playing nation.
* Fastest to 350,[98] 400,[99] 450,[100] 500,[101] 550,[102] 600,[103] 650,[104] 700,[105] 750[106] and 800 Test wickets, in terms of matches played (indeed the only bowler to exceed 708 wickets).
* Only player to take 10 wickets in a Test in four consecutive matches. He has achieved this feat twice.
* Only player to take 50 or more wickets against every Test playing nation.
* Muralitharan and Jim Laker (England), are the only bowlers to have taken 9 wickets in a Test innings twice.
* 7 wickets in an innings against the most countries (5).
* Most Test wickets taken bowled (157),[110] stumped (41)[111] and caught & bowled (31).[112] Bowled by Muralitharan (b Muralitharan) is the most common dismissal in Test cricket (excluding run out).
* Most successful bowler/fielder (non-wicket keeper) combination – c. Mahela Jayawardene b. Muttiah Muralitharan (67).
* Most Man of the Series awards in Test cricket (11).
* One of only six bowlers who have dismissed all the eleven batsmen in a Test match. Jim Laker, Srinivasaraghavan Venkataraghavan, Geoff Dymock, Abdul Qadir and Waqar Younis are the others.
* Most Test wickets in a single ground. Muralitharan is the only bowler to capture 100-plus Test wickets at three venues, the Sinhalese Sports Club Ground in Colombo, the Asgiriya Stadium in Kandy and the Galle International Stadium in Galle.
* The only bowler to take 75 or more wickets in a calendar year on three occasions, achieving it in 2000, 2001 and 2006.
* Most ducks (dismissals for zero) ever in international cricket (Tests+ODI's+Twenty20): 59 ducks total.

Wednesday, June 09, 2010

பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்

கிரிக்கெட் உலகின் தன்நிகர் இல்லா தாதாவாக நினைத்துக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தன்னுடைய திமிர் தனத்தை இந்த வருடம் முதல் ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் மூலம் காட்டி உள்ளது. அதற்கு காரணமாக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நியுசிலாந்து அணியுடனான தொடரை காரணம் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கலந்துக் கொள்ளாது. 

நிரம்பிய கிரிக்கெட் ரசிகர்களும், நிரம்பிய விளம்பரங்களும், கொட்டும் பணமும் பி.சி.சி.ஐ. யை ஒரு தனி அதிகார மையமாக மாற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அரசுக்கே சில காலங்களுக்கு முன்பு இருந்து போக்கு காட்ட வைக்கும் அளவுக்கு வளர்ந்தது தான் ஆச்சரியம். ஐ.பி.எல் - 2 தொடரின் போது இந்திய அரசை பகைத்துக் கொண்டு தென் ஆப்பரிக்காவில் போட்டியை நடத்திக் காட்டியது. வருமானம் குறைவு தான் என்றாலும் நீ சொல்வதற்கு எல்லாம் ஒத்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை என்பதை காட்டவே இப்போட்டி இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்பட்டது. உலக அரங்கில் நமது விளையாட்டு துறைக்கு இது ஒரு அசிங்கமே. ( தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தவிர்க்க சொன்ன அரசின் நடவடிக்கையும் சரி அல்ல என்பது வேறு விசயம். )

அதே போல் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் க்கு அடுத்து மிக பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஆசிய போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது. ஆசிய கோப்பை என்ற பெயரில் ஒரு தொடரில் விளையாட முடியுமாம் ஆனால் இந்தியாவின் சார்பாக ஆசிய போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாதாம். இதில் எந்த லட்சணத்தில் தேசத்திற்காக ஆடுகிறோம் என்று நம் கிரிக்கெட் வீரர்களால் மார்தட்ட முடிகின்றது என்று தெரியவில்லை.

இந்திய ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் கல்மாடி கூறியதை போல் இது போன்ற போட்டிகளில் விளையாடினால் பணம் கிடைக்காது பதக்கம் மட்டும் தான் கிடைக்கும். பணமே பிரதானமாக கருதப்படும் கிரிக்கெட் அணிகளால் இதில் கலந்துக் கொள்வது சந்தேகமே என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்காக விளையாடி என் நாட்டிற்கு சில பதக்கங்களை வென்றுக் கொடுத்தேன் என்பதை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்காக விளையாடி சில கோடிகளை சம்பாதித்து கொண்டேன் என்பது தான் வீரர்களின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டங்களை சேர்க்க வேண்டி கேட்ட போது 20/20 போட்டிகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று பி.சி.சி.ஐ. மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஐ.பி.எல். ஆட்டங்களை எதில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. 1998 ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே கனடாவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர் ஆட முதல் தர வீரர்களை அனுப்பியது.

இந்திய அணி புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளார் நமது மத்திய அமைச்சர் சரத் பவார். விவசாயத் துறையை இந்தியாவில் சீர்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சக வேலைக்கான நேரத்தை விட கிரிக்கெட் பார்க்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக தான் பவார் அதிக நேரம் செலவழிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால் தனக்கு கை வந்த கலையான சப்பை கட்டு கட்டுவதை மிக சரியாக செய்கிறார் பவார். இது போன்ற அமைச்சர்களை கூட்டணிக்காக வைத்துக் கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். 

இதே போல் NADA அமைப்புக்கும் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அந்த அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. 

இதற்கு எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு துறை என்று ஒன்று இருக்குமே அது தான் எதாச்சும் செய்ய வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் யாரும் எந்த ஒரு விளையாட்டு கழகத்திற்கும் / வாரியத்திற்கும் / சங்கத்திற்கும் பொறுப்பு வகிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். விளையாட்டும் அரசியல் ஆனதினால் வந்த விளைவு இது. 

Thursday, June 03, 2010

ஆட்டம் தொடங்கியாச்சு - The Game is ON !

"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.

NBA - The Finals (கூடைப்பந்து)

அமெரிக்காவில் மிக பிரலமான கூடைப்பந்து அணிகளுக்கு இடையே வருடத்துக்கு ஒரு முறை (கிட்டதட்ட வருடம் முழுவதுமே) நடைபெறும் NBA போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. (இன்னும் சில மணித்துளிகளில்) 30 அணிகளில், 1000 த்துக்கும் அதிகமான ஆட்டங்களில் பல சுற்றுகளில் விளையாடி இன்று கூடைப்பந்தில் முடிச்சூடா சக்கரவத்திகளாக திகழும் பாஸ்டன் செல்டீக்ஸ் (Boston Celtics) அணியும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் (Los Angeles Lakers)இறுதி போட்டியில் மோத தயாராக உள்ளார்கள்.


இது வரை நடைபெற்ற 64 இறுதி ஆட்டங்களில் பாஸ்டன் 20 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 30 முறையும் தகுதி பெற்று உள்ளனர். இதில் பாஸ்டன் 17 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 15 முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளனர். இவ்விரு அணிகளும் இது வரை 11 முறை இறுதி ஆட்டங்களில் மோதி உள்ளனர். அதில் பாஸ்டன் 9 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2 முறையும் வென்று உள்ளனர். கடைசியாக 2008 ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் பாஸ்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் கடந்த வருட சாம்பியன்ஸ் (நடப்பு) லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2008 ம் ஆண்டு விட்டதை இந்த வருடம் சரி கட்ட வேண்டும் என்றும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு லாஸ் ஏஞ்சல்ஸ்ம், மீண்டும் 2008 யில் நடந்ததை நடத்திக் காட்ட பாஸ்டனும் சிலிர்ப்புடன் உள்ளது.

Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.

Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.

கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.

மொத்தத்தில் பாஸ்டன் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், எதையும் சாதித்துக் காட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்வளவு சுலபமாக கோப்பையை விட்டுத் தர மாட்டார்கள். இந்த முறை எப்படியும் 7 ஆட்டங்களும் (Best of 7) நடைபெறும் என்று நினைக்கிறேன். Celtics யின் ஆட்ட யுத்தியும், Garnett டின் காட்டுமிராண்டித்தன ஆட்டமும் என்னை கவர்ந்தாலும் Kobe Bryant க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் Lakers வெற்றி பெற வேண்டும் என எதிர்பாக்குகிறேன்.

ஏது எப்படி இருந்தாலும் வேகம், விவேகம், விறுவிறுப்பு க்கு எந்த விதமான பஞ்சமும் கண்டிப்பாக இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி. தவற விடாமல் கண்டுக் களியுங்கள்.

THE GAME IS ON !

Image Courtesy : NBA.com

Monday, November 26, 2007

இந்தியா வெற்றி + கருத்து கந்தசாமி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனில் கும்பளே கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலே இந்த வெற்றி வந்தது அவருக்கு மிகவும் உற்சாகம் தரும் விசயமாக இருக்கும். கும்பளே கேப்டனாக தகுதியானவர் தானா என்ற கேள்விகள் சில காலத்துக்கு எழாது. குறைந்தபட்சம் இந்த மாதம் முடியும் வரை ஆச்சும்.

நமீதா போல் நச்னு இருக்கும் 20/20 போட்டிகள் வந்த பிறகும் இன்னுமா டெஸ்ட் போட்டி பாக்குறீங்க என்றால் நச்சு நமீதா அழகு என்பதை போலவே சினேகாவின் சிம்பிள் அழகும் அம்சமான அழகு தான். 20/20 - ஹைக்கூ கவிதை, ஒரு நாள் போட்டி - புது கவிதை, டெஸ்ட் போட்டி - மரபு கவிதை. வீசப்படுகின்ற ஒவ்வொரு பந்துகளும் பவுண்டரிக்கோ அல்லது விக்கெட்டாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன் களும் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் டெஸ்ட் போட்டிகள் பல சமயங்களில் அழகான மரபு கவிதைகள் தான்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான போட்டியில் இருக்கும் சூடு இந்த போட்டியில் ரொம்பவே கம்மி தான். இருந்த போதிலும் இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் கூடவே பல தவறுகளையும்.

இந்திய அணி :

- முதல் இன்னிங்ஸ் ல் பாகிஸ்தான் 8 விக்கெட் இழந்த போது தாக்குதல் ஆட்டத்தை தொடுக்காமல் விட்டது.

- முதல் இன்னிங்ஸ் ல் தெண்டுல்கர் ரன் அவுட். பந்தை பாக்காமலே ஒடினா

- டெயில் எண்ட் பேட்ஸ்மேன் ஆளுக்கு இரு ஒவர்கள் கூட பேட் செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பது

- முனாப் படேல் பவுலிங்

+ சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானை தடுமாற வைத்தது

+ கார்த்திக்கை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டம்

+ துல்லியமான பவுலிங், சரியான நேரத்தில் பவுலிங் மாற்றம்.

+ போனஸாக அமைந்த கங்குலியின் பவுலிங்

+ பீல்டிங் + அனுபவ வீரர்கள்

பாகிஸ்தான் அணி :

- கேப்டன் மாலிக். கேட்ச் தவற விட்டதுக்கு, பீல்டிங் மிஸ் க்கு எல்லாம் கத்தினா வேலைக்கு ஆவாது. கிரவுண்ட் ல கேப்டனாக நடந்துக் கொள்வது எப்படி என்று பாடம் பயில வேண்டும்.

- இந்திய அணியை விட நல்ல பவுலர்கள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது.

- 5 பந்துகள் நல்லா போட்டு 6 வது பந்தை காலில் போடுவது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் காலில் போட்டா துவம்சம் பண்ணுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியே போட்டாலும் அதுக்கு தகுந்த மாதிரி பீல்டிங் நிப்பாட்டிட்டு போடனும்.

- இரு இன்னிங்ஸ்லிலும் மிசாப் உல் ஹக் யின் எந்த நேரத்தில் எதை செய்வது எனப் புரியாமல் எடுத்த முடிவுகள்

- அனுபவமின்மை

+ சோயிப் அக்தர், தன்வீர் பவுலிங்

+ சல்மான் பட், மிசாப் பேட்டிங்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்து வரும் இரு போட்டிகளும் சுவாரஸ்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக மொத்தத்தில் மூத்த ஆட்டக்காரர்களில் தயவில் தான் இந்த போட்டியை இந்திய அணி வெற்றிக் கொண்டு உள்ளது. அதனால் அவர்கள் மூலமாக எழும் சலசலப்பு சில காலமாவது அடங்கும். ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை என்றால் ஆட்டத்தை குறித்து பேசாமல் வயதை குறித்து பேசுவதை நாமும் நிறுத்த வேண்டும். கூடவே இந்த போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் கார்த்திக்கை நீக்கி யுவராஜ் துவக்க ஆட்டக்காராக அனுப்பது என்னை பொறுத்த வரை மடத்தனம். இந்த தொடரில் யுவராஜ் உள்ளே வருவதறகான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. லட்சுனமனை துவக்கத்தில் அனுப்பவதும் தேவையற்ற வேலையாக தான் முடியும். இரண்டாவது போட்டியிலும் கார்த்திக் விளையாடி குறைந்த ரண்களில் அவுட் ஆனால் அடுத்த டெஸ்ட்க்கு காம்பீரை எடுத்து அவரும் டக் அடிச்சா ஆஸ்தி தொடருக்கு புதுசாக ஒரு துவக்க வீரரை தேடுவார்கள் நம் தேர்வு குழுவினர். அதுக்கு பதிலாக இந்த தொடர் முழுவதும் கார்த்திக் கு ஒரு வாய்ப்பு கொடுப்பதும், ஆஸ்தி தொடருக்கும் காம்பீர் + கார்த்திக் (மாற்று கீப்பராக) எடுப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும். சேவாக் என்ன ஆவார் என்பது கேள்வி குறி தான். கூடவே யுவராஜ் மேலும் சில காலம் காத்துக் இருக்க வேண்டும். (வேறு வழி இப்போதைக்கு இல்லை) அடுத்த போட்டியில் முனாப் க்கு பதில் ஆர்.பி. சிங் க்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய தெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள். ஆட்டநாயகனாக கும்பளே தேர்ந்துதெடுக்கப்பட்டார்.

Monday, September 24, 2007

போதும்டா.. இது போதும்டா....



உலக கோப்பையில் முதல் சுற்றில் வெளி வந்து எங்களை புலம்போ புலம்பு என்று புலம்ப வைத்த அதே இந்திய அணி இன்று 20/20 உலக கோப்பையை பாகிஸ்தானை பரபரப்பாக வெற்றிக் கொண்டு பெற்று உள்ளது....


போதும்டா...இது போதும்டா.... எங்கள் புலம்பலை மறக்க.....



உப தகவல்:

எங்களுடம் அமர்ந்து பெரும்பாலான ஆட்டத்தை பார்த்த ஒரு ஈரோப்பியர் நீங்க எல்லாம் ஏன் கிரிக்கெட் மேல் பைத்தியமா இருக்கீங்க என்பது எனக்கு நல்லாவே புரியுது. உங்க அணி மட்டும் எந்த போட்டியா இருந்தாலும் ஆட்டத்தை மிகவும் பரப்பரப்பாக கொண்டு போய் ஜெயிக்குமா ஜெயிக்காத என்று அலற வைத்து வெற்றி பெறுகின்றார்கள். அதான் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க என்றார்... இது தான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே என்று நினைச்சேன், ஆனா சொல்லல :)

Sunday, September 23, 2007

ஆஸிவை வெற்றிக் கண்டது இந்தியா!


இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த முடிந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ஒட்டங்கள் எடுத்தது. யுவராஜ் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் 30 பந்துகளில் 70 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

189 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 173 ஒட்டங்கள் எடுத்து 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வரும் திங்கள் அன்று இந்திய அணி பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது. அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

முக்கிய துளிகள்:

* யுவராஜ் பிரட் லீ பந்தில் அடித்த சிக்ஸ்ர் தான் இந்த தொடரின் மிக பெரிய சிக்ஸ்ர் ஆகும். (119 மீட்டர்)

* ஸ்ரீசாந்த் 4 ஒவர்களில் ஒரு மெயிடன் உள்பட 12 ஒட்டங்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

* ஹர்பஜன் வீசிய 18வது ஓவரும், ஆர்.பி. சிங் வீசிய 19வது ஒவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றது.

* ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போதிலும் இந்திய மண்ணில் நடந்தை போன்று மிக ஆரவாத்துடன் ரசிகர்கள் இந்திய அணியினருக்கும் உற்சாகம் அளித்தார்கள்.

* ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.


பின்குறிப்பு :

அது என்னமோ தெரியலை, ஆஸ்திரேலியா இந்தியாவிடன் தோல்வி அடையும் போது எல்லாம் ஒரு தனி சந்தோஷம். அதற்கு காரணம் அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா அல்லது கடந்த 2 1/2 வருடங்களாக என் டேமேஜ் அந்த நாட்டை சேர்ந்தவராக அமைந்ததா எனத் தெரியவில்லை.

Friday, September 21, 2007

ஜெயிச்சோம்ல.. ஜெயிச்சோம்ல...

நான் இப்ப புதுசாக வேலைக்கு சேர்ந்து இருக்கும் இடத்தில் தென் ஆப்பெரிக்கர்கள் அதிகம். இன்று இந்தியாவிற்கும் தென் ஆப்பெரிக்காவிற்க்கும் நடந்த கிரிகெட் போட்டி 6 தெ. ஆ., 5 இந்தியர்கள்(நான் உட்பட), ஒரு அமெரிக்கன், 2 கனடா, 1 நைஜிரியன் உடன் பார்க்க நேர்ந்தது.

இந்தியாவால் மிக குறைந்த ரன்கள் தான் எடுக்க முடிந்தது 20 ஒவர்களில்.(153/5). அதனால் இந்தியர்களை தவிர மற்ற அனைவரும் தெ.ஆ. வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். குறைந்த ரன் ஆக இருந்த போதிலும், இந்தியா தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் இந்தியாவிற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த நாங்கள் வழக்கம் போல இந்தியா வெற்றி பெறும் என்று தெ.ஆ. பேட்டிங் செய்வதற்கு முன்பே அடித்து சொன்னோம்.. எங்கள் சொல்லை மெய்ப்படுத்தி காட்டினார் ஆர்.பி. சிங்.(4-0-13-4)

5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள். அவர்கர் சொன்ன வாக்கை பொய்க்காகி எங்களை பெருமிதம் படும்படி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்....

பாகிஸ்தானை வென்றதை விட தெ. ஆ. வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

வாழ்த்துக்கள் பல... கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க.. நல்லாவே இருங்க....


இதன் மூலம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன... இதன் மூலம் தெ. ஆ. விற்கு அரைஇறுதி கனவு ஆப்பு அடிக்க பெற்றது...

Monday, April 16, 2007

அழகோ அழகுகள்!!!

என் பார்வையில் அழகை பற்றி எழுத சொல்லி வல்லியம்மாவும், வெட்டியும் அழைத்து உள்ளார்கள். நம்ம ஜியும் கூப்பிட்டதா பேச்சு. அழகை பற்றி முதல் பதிவு போட்டவுடன் எது அழகு என்று யோசித்ததில் நாம் என்றும் சூச்ச்....சூ என்றும் சொல்லும் கவுஜு எனக்கே வந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நான் அழகை பற்றி பேச ஆரம்பித்தால் ஆர்பரிக்கும் கடல் அலையில் ஆரம்பித்து ஸ்டெபியின் குதிரை வாலை பிடித்து நேதாஜியின் பேச்சு வரைக்கும் போகும். அதனால் நம்ம கொத்துஸ் கொடுத்த ஆறு அழகையையே நானும் என் பார்வையில் கூற முற்படுகிறேன்.

1, முகம்

எல்லா முகமும் ஒரு வகையில் அழகு தான். சில முகங்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு. நான் என்றும் ரசிக்கும் சில முகங்கள்.

எம்.எஸ். - நிறைவாழ்வு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. இவரின் "குறை ஒன்றும் இல்லை" பாடலை கேட்டாலே இவர்களின் சாந்தமான முகம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

சுபாஷ் - நேதாஜியை பெரும்பாலும் ராணுவ உடையில் பார்த்து தான் நமக்கு பழக்கம். அந்த உடையில் அவர் படத்தை காணும் போதே ஒரு மிடுக்கு தெரியும். அவரின் மிடுக்கையே மிஞ்ச வைத்து என்னை ரசிக்க வைத்த முகம் இந்த முகம்.

இது போக பல முகங்கள் - ரமணர், குழந்தை கிருஷ்ணர், அரவிந்தர்/மதர், தெரசா, நாகை அழகியார் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

2, இடம்

பிடித்த இடம், ரசித்த இடம் என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் என்றும் மனதிற்கு அழகான இடம் என்றால் நாகையில் இருக்கும் என் பழைய வீடு மற்றும் புது வீடும் தான். பல விதமான அனுபவங்களை தந்த இடங்கள் அவை. வீட்டை விட்டு பார்த்தால் நாகை கடற்கரை - யாரும் அற்ற இரவில் தனிமையில் யோசிப்பது அல்லது உற்ற தோழர்களுடன் அமர்ந்து உப்புக் காற்று முகத்தில் அறைய நடிகை ஜோவில் ஆரம்பித்து மைக்கெல் ஜோர்டன் வரை பேசுவது இருக்கே.... ஆஹா.... அது போக நாகை புதிய பஸ் நிறுத்தம் - பல வகையான மனிதர்களை காணலாம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், குல தெய்வ கோவில், கல்லூரி கட்டை சுவர், பள்ளி கூடைப்பந்து மைதானம், பாண்டி கடற்கரை, நைல் நதி - உகாண்டா, ஹைத்தியில் என் அறை பால்கனி என இதற்குக்கும் ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது.

3. நிகழ்வு

அக்காவின் திருமணம், அக்கா பையன் வரவு சொல்லாம். இதில் அக்கா பையன் பிறக்கும் போது நான் பாண்டியில் இருந்தேன், மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் என்று செய்திக் கேட்டவுடன் புறப்பட தயார் ஆனேன். டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம் குறைவாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டுட்டு கடற்கரை சென்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை தந்தைக்கும், தம்பிக்கு மாற்றி போன் அடித்த போது ஏற்பட்ட ஒரு பரபரப்பு, குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகு பெற்ற மகிழ்ச்சி. சரி காலையில் ஊருக்கு போகலாம் என்று நினைத்து படுத்து தூக்கம் வராமல் நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க, அதாங்க அழகு. அது போக அன்று எனக்கு பிறந்த நாள், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லி இரட்டை மகிழ்ச்சி வேற.

4, குறும்பு

என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு. நான் ரொம்பவே அப்பாவிங்க. கல்லூரியில் படிக்கும்(???) போது என்.ஐ.ஐ.டி. க்கும் போய் கிட்டு இருந்தோம். அங்கு நமக்கு கிளாஸ் எடுக்கும் ஒரு மேடம் ரொம்பவே தோஸ்த், ஒரு 3,4 வயசு தான் வித்தியாசம். நம்ம கெட்ட பழக்கம் என்னான நம்ம நெருங்கிய தோஸ்துங்க பேக்கை நொண்டுவது. அது ஏன்னென்றால் ஆரம்பித்துல் இருந்து கோ-எட் படிச்சாச்சா, அப்படியே பழகி போச்சு. (அந்த பழக்கம் இப்ப இல்லனு சொன்னா நம்பனும்). பெரும்பாலும் சாக்லெட் கிடைக்கும், ஒரு நாள் அவரின் அழகிய புகைப்படம் நம்ம கையில் கிடைத்தது. ஒரு நாள் அவங்கிட்ட போய் மேடம், நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன், அவ இல்லாம் என் வாழ்க்கையே இல்லைனு சொல்லி இத்தனை நாள் நாம் பார்த்த நோட் பண்ணி வச்சு இருந்த அத்தனை சினிமா டயலாக்கையும் சொல்லி அவங்களை நம்ப வைத்தேன். அவங்களும் நம்பி உனக்கு என்ன உதவி வேணுமானலும் சொல்லு செய்ய நான் தயார், அது போக அப்ப அப்ப அட்வைஸ் வேற. போட்டோ காட்டுனு பல முறை கேட்டும் பார்த்தா பொறாமை படுவீங்கனு கையில் வைத்துக் கொண்டே போக்கு காட்டிக்கிட்டு வந்தேன். ஒரு நாள் அவங்க கிட்ட போய் மேடம் அந்த பொண்ண தூக்கலாம் முடிவு பண்ணிட்டேன், என்ன சொல்லுறீங்க கேட்டேன், அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க அவங்க கேட்க, அவங்க அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேரையும் சமாளிக்க நான் ரெடி, அந்த பொண்ணு மட்டும் ஒகே சொன்னா போதும் சொல்ல, அதுக்கு நான் பண்ணனும் சொல்லு கேட்க, ஒகே சொல்லுங்க னு சொன்னேன். ஒன்னும் புரியலனு அவங்க விழிக்க, நான் ரொம்ப சீரியஸா போட்டோவ காட்டினா விழந்து விழந்து இல்ல குனிஞ்சு குனிஞ்சு சிரிக்குறாங்க. அவங்களை கூப்பிட வந்த தம்பிக்கிட்ட சொல்ல அவனும் சிரிக்குறான், டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.

5, பரிசு

இந்த மேட்டருல நான் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்ங்க. காமெடியான வாழ்த்து அட்டை வாங்குவது, வித்தியாசமான பரிசு வாங்கி தருவது, இல்ல நண்பனை கடைக்கு பரிசு வாங்கி தரேன் என்று கூப்பிட்டு போய் மச்சி எது வேணுமானும் வாங்கிகோ பட்ஜெட் 10 ரூபாய் என்பது, நானே உனக்கு ஒரு மிக பெரிய பரிசு இதை விட வேற என்ன வேணும் என்பது, வாழ்த்து அட்டை வழங்கும் போது ரொம்பவே யோசித்து, பெறுபவர்கள் ரசித்து பார்க்கும்படி வாங்குவேன். நம்ம பசங்க எல்லாம் கிப்ட் இல்ல கார்ட் வாங்க நம்மள தான் கூப்பிடுவாங்கனா பாத்துக்கோங்களேன். குடுக்கின்ற பரிசு ஏதாக வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் பரிசு அவர்கள் மனதை தொடுவது மாதிரி குறைந்தப்பட்சம் ஒரு புன்சிரிப்பை வர வைக்கும் மாதிரி இருக்க வேண்டும். அது போன்று நான் கொடுத்த பரிசும் அனேகம், பெற்ற பரிசும் அனேகம். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் தினமும் பார்க்கும் பரிசு இது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அழகா தெரியும் பரிசு.

6, இல்லாத அழகு

தனி மனித ஒழுக்கம். இது நம் மக்கள் கிட்ட ரொம்பவே வளரனும் என்பது என் விருப்பம்.(நான் உட்பட). இது எந்த விசயத்தில் வேண்டுமானுலும் இருக்கலாம். ஏதாவது ஒரு விசயத்தில் நான் இனிமேல் ஒழுக்கமாக நடந்து கொள்வேன், எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு காரியத்தில் ஒழுக்கமாக இருக்க ஆரம்பித்தால் சில நாள் கழித்து அது பழகி விடும். கண்டிப்பாக மீற மாட்டோம், பிறகு வேற ஒரு விசயத்தை எடுத்துக் கொள்ளலாம். உ.தா. ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது, சிக்னலை மதிப்பது, அடுத்தவர்களுக்கு மரியாதை குடுப்பது(முக்கியமாக பெற்றோர்க்கு), தவறாமல் ஒட்டு போடுவது, குப்பையை குப்பை தொட்டியில் கொட்டுவது, வருமான வரி கட்டுவது, பெற்ற கடனை திரும்ப செலுத்துவது, அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பது, சமுதாய வேறுபாடு பார்க்காமல் இருப்பது, மொபைல் போனை தியேட்டர், கோவில், மீட்டிங், மருத்துவமனையில் நிறுத்தி / சைல்ண்டில் போடுவது போன்று எவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதாவது செய்யனும். செய்தாகவே வேண்டும் என் சமுதாயம் நம் சமுதாயம் உயர்வடைய.



நான் அழைக்கும் அழகான மூவர்

1, மருத்துவத்துறையின் விடிவெள்ளி சின்னய்யா டாக்டா இராமனாதன்
2, அஞ்சாநெஞ்சன் டாலர் செல்வன்
3, கொள்ளை சுனாமி லக்கிலுக்
தேவ் அழைத்து உள்ளார், அதனால்
4,கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி

Tuesday, February 20, 2007

சூப்பு கொடுப்பது எப்படி?




சாப்பல் - ஹாட்லி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவை விழ்த்தியது. இன்று நடந்த கடைசி ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆஸி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. ஹைடன் அதிகபட்சமாக 181 * ரன்கள் எடுத்தார். கடின இலக்கு போல் தோன்றிய 347 ரன்களை நியூஸி மெக்மில்லன்(117), மெக் கல்லம் (86*) துணையுடன் 49.3 ஓவர்களில் நியூஸி சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நியூஸி வெற்றி பெற்று இருந்தது.

ஆட்டநாயகன் - மெக் மில்லன்.

முதல் ஒரு நாள் ஆட்டம் (16-2-07)

ஆஸி - 148 / 10 (49.3 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 42 , பாண்ட் - 9.3 - 2 - 23 - 5

நியூஸி - 149 / 0 (27 ஓவர்கள்) பிளமிங் - 70 * , வின்செண்ட் - 73 *

10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.

ஆட்டநாயகன் - பாண்ட்

இரண்டாம் ஒரு நாள் ஆட்டம் (18 - 02 - 07)

ஆஸி - 336 / 4 ( 50 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 105 , ஹாட்ஜ் - 97

நியூஸி - 340 / 5 (48.4 ஓவர்கள்) டெய்லர் - 117, புல்டன் - 76, மெக் மில்லன் - 52

5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.

ஆட்டநாயகன் - டெய்லர்

* இன்று நடந்தது ஆட்டத்தில் மொத்தம் 26 சிக்ஸ்சர்கள் அடிக்கப்பட்டன. (உலக சாதனை சமன்)
* உலக கோப்பைக்கு முன்பு நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டம் இது. இந்த தொடர் வெற்றியின் மூலம் நடக்க இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடர் மிகந்த பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.