Showing posts with label டைரிக் குறிப்பு. Show all posts
Showing posts with label டைரிக் குறிப்பு. Show all posts

Thursday, December 04, 2008

Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வேலையாக அலைந்து கொண்டு இருக்கும் போது Gender Affairs பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் நண்பரை எதிர்கொள்ள, என்ன சிவா நீ வெள்ளை ரிப்பன் இல்லாமல் இருக்க எனக் கேட்க, என்ன விசயம் னு கேட்க, கையில் ஓரு பேப்பரை திணிக்க அதில் உள்ள மேட்டரு கீழே.

16 days of activism against Gender Based Violence
This year marks the 18th annual 16 Days of Activism Against Gender
based Violence Campaign (Campaign originated from the first Women's Global Leadership Institute sponsored by the Center for Women's Global Leadership in 1991). The Campaign links issues concerning violence against women, gender and sexual based violence and human rights and emphasizes that all forms of violense, whether perpetrated in the public or private sphere, are a violation of human rights. The dates chosen for the campaign symbolically indicate this link : November 25 markes International day Against Women (officially declared by UN in 1999) and December 10 is International Human Rights Day. The sixteen-day period also hightlights other significant dates, including December 1 (World Aids Day) and December 6 (the anniversary of the Montreal Massacre).

Wearing a white ribbon is a personal pledge to never commit, condone or remain silent about violence against woment and girls.


ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை நான் பொங்க, நீ கேட்பது நியாயம் தான் ஆனாலும் கேளுனு சில கதைகளை எடுத்து விட்டான். அவன் கூறிய பதிலில் எனக்கு திருப்தி இல்லை. விவாதம் முற்றியதும், வேலை அதிகம் இருப்பதால் நம் இரவு உரையாடலின் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு ரிப்பனை அணிவதும் அணியாததும் உன் விருப்பம் என்று கூறி ரிப்பனையும் ஊசியையும் கொடுத்துட்டு அவன் எஸ்கேப்.

பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள். அது தவறா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை. அவர் அவர்கள் எண்ணங்கள் அவரவர்களுக்கே. சொல்வதால் மட்டும் ஏதுவும் மாறிட போவது இல்லை. தானாக உணர்ந்து மனம் மாற்றம் அடைவது தான் பயன் அளிக்கும்.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது அது பெண்களுக்கு பிடிக்காமல் போனாலும், முக்கியமாக அவர்கள் ஏதாவது கேட்டு வரும் போது முடியாது அல்லது இல்லை என்று கூறினால் போதும் அவர்கள் வைக்கும் முதல் வாதமே நான் பெண் என்பதால் தான் நீ இல்லை, முடியாது என்று கூறுகின்றாய் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். இன்னமும் அதான் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. (என்னளவில்)

மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.

நிற்க. மேலே சொன்னவை எல்லாம் சரியாகப்பட்டாலும் நம் நாட்டின் சில இடங்களிலும், ஹத்தி, உகாண்டா, சூடான் (டார்பூர்) போன்ற இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் மிக அதிகம். அங்கே ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அதை இல்லை என்று மறுக்க முடியாது ஆனாலும் சகவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தான் அதிகம். ஒவ்வொரு 30 நிமிடத்தில் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு(பெரும்பாலும் கற்பழிப்பு) ஆளாகிறாள். சூடானில் (டார்பூர்) இன்னும் கொடுமை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பெண் / குழந்தை என்ற அளவில் உள்ளது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் அந்த வெள்ளை ரிப்பனை அணிந்து என் ஆதரவையும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டேன்.


அதே வேளையில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. 2000ம் ஆண்டு என்று நினைக்கிறேன், மார்ச் 8 ஆம் அன்று கல்லூரியில் பெண்கள் தின விழா எடுக்கப்பட்டது. அதற்காக கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியயைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆஹா நமக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்த எங்களை ஒரு அறிக்கை கடுப்பேத்தியது. அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.

பின்குறிப்பு : Montreal Massacre பற்றி அறிய ஆர்வமாக இருந்தால் இந்த லிங்கை தொடரவும்.

Tuesday, December 02, 2008

டைரிக் குறிப்பு - 2 (இந்திய அரசியல்)

மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ராஜினாமா, உள்துறை அமைச்சர் ராஜினாமா, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பு என இந்திய அரசு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தியா இன்னும் பல முக்கிய மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக தேசிய பாதுகாப்பிலும், பதில் நடவடிக்கை, உளவுத் துறை போன்ற விசயத்தில். பொறுத்து இருந்து பார்ப்போம்.

*****

இந்தியாவில் மும்பையில் நடைப்பெற்ற சம்பவத்துக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. ஆனால் அதுக்குள் இங்கு மக்கள், எல்லை தாண்டிய தீவிரவாதிகள், பாக் ஆதரவு தீவிரவாதிகள் என்று ஒரு பக்கமும், முஸ்லீம் பயங்கரவாதிகள் என மறுபுறமும், இந்துத்வா வே இதை செய்து இருக்கலாம் என ஒரு பிரிவினரும் குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதில் நம் பதிவர்களும் அடக்கம். மக்கா இதை எவன் செய்து இருந்தாலும் எந்த மண்ணாங்கட்டி மதமாக இருந்தாலும் சரி இதுக்கு துணையாக இருந்த அத்தனை பெயரையும் பிடித்து தூக்கில் இட வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் எண்ணம். அதை விடுத்து இந்த பிணந்தின்னி அரசியலை தொடராதீர்கள்.
*****

இங்கு இப்படி என்றால் பாகிஸ்தானில் அரசில் இருந்து மக்கள் வரை எதற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானை குறை கூறுவது சரி அல்ல, ஆதாரத்தை காட்டுங்கள் என அறிக்கை விடுவதும், ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டம் ஊர்வலம் நடப்பதுமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மீது ஏவப்படும் ப்ராக்ஸி வார்(போர்) க்கு பாகிஸ்தான் தான் பின்புலமாக திகழ்கின்றது என்பது உலக அறிந்த உண்மை. ஆப்கானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அமெரிக்காவே குற்றம் சாட்டி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்ட காண வேண்டிய விசயம். பாகிஸ்தான் என்று கூறுவதால் ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அமைப்பை தான் இந்தியா குற்றம் சாட்டுவதாக என் எண்ணம்.
*****

மும்பை பயங்கரம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே கராச்சியில் நடைபெற்ற கலவரத்தில் 16 நபர்கள் இறந்தும், 40 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இந்தியாவின் கை இருக்கலாம் என அங்கு உள்ள மக்கள் அச்சம் எழுப்பி உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளாதாகவும்,அதை முன்னிட்டு ஆப்கான் எல்லையில் இருந்து 1 லட்சம் படை வீரர்களை விலகி இந்திய எல்லையில் நிறுத்த இருப்பதாக செய்தி. இது போதாது என்று நேட்டோ படைகளுக்கு அளிக்கும் ஆதரவை விலகி கொள்ளா விட்டால் தலிபான் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது. ஒரே ஆறுதல் நம் புல்தடுக்கி பயில்வான் அரசு இது வரைக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்திலோ பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் நுழைந்து பிடிப்பது போன்ற எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை என்பதே.
*****

உலகமே பற்றி எரிந்தாலும் சரி, எவன் எக்கெடு கெட்டு போனாலும் சரி நம் அரசியல் நடந்தா சரி என்று இருக்கும் நம் தமிழக அரசியல் தலைவர்கள். சில நாள் வரை இலங்கை பிரச்சனை இப்பொழுது அருந்ததி பிரச்சனை. நல்லா இருங்கடே. உங்க பொழுப்பு நல்லாவே நடக்குது.
*****

நாகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மிக கடுமையாக தாக்கிய நிஷா (பெயர் நல்லா இருக்கு) நாகை அதன் சுற்று வட்டாரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதை கேட்க நல்லாவே இல்லை. திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் பகுதிகளிலும் சீர்காழி பகுதிகளிலும் சிறிய வாகனங்கள் போக முடியாத அளவுக்கு இன்னும் நிலைமை நீடிக்கிறது. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் அளிக்கப்படும் என்று ஆறுதல் அளித்து உள்ளார். எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம். பணம் ஒட்டாக மாறும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும்.
*****

மழை இந்த கொட்டோ கொட்டு என்று கொட்டி உள்ளது. ஆனாலும் அடுத்த வருடம் வழக்கம் போல் தண்ணீருக்கு அடுத்த மாநிலங்களிடம் கை ஏந்தி கொண்டு தான் இருக்க போகிறோம். அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? சென்னையில் நிலைமை இன்னும் மோசம். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றியும், வடிக்காலை ஒழுங்குப்படுத்துவதையும் தவிர்த்து வேறு வழி இல்லை.
*****

குடும்ப சண்டைகளை விலக்கி, தமிழன தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து எழுதும் அறிக்கைகளை, கடிதங்களை நிறுத்தி தமிழக மேம்பாட்டிற்கு ஏதாவது உபயோகமாக செய்தால் புண்ணியமாக போகும் நமக்கு எல்லாம். எதிர்கட்சியும் எல்லாத்துக்கு நொண்டி நாட்டியம் ஆடாமல் உள்கட்சியை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்கலாம்.
*****

இந்திய குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐ.நா. தன் கண்டத்தை பதிவு செய்து இருந்தது. அதை தொடர்ந்து ஐ.நா.விடம் எழுப்பட்ட கேள்விக்கு தொட்டும் தொடாமலும் தான் பதில் அளித்து உள்ளது. அதன் விபரம்

Question: In view of this weekend’s events in India, in which there is tension between India and Pakistan which has arisen, is the Secretary-General going to intervene at some point in time to caution, I mean some sort of, I mean talks between India and Pakistan, you know, to lessen the tension that has arisen over there?

Deputy Spokesperson: The Secretary-General, as you know, was one of the first to express his strong condemnation of these attacks, as well as his sympathy and solidarity with the Government and people of India. That solidarity extends to other nations who lost citizens in these heinous attacks. He reiterates his strong condemnation today. He also joins in the call, by Indian authorities, for full cooperation, by all concerned both inside and outside the country, with their investigation.

Question: What will he do, you know, to, because there are indications that India may, in an act of reprisal, attack? Pakistan fears it may attack Pakistan, because although it says it has nothing to do with those non-state actors, but still the responsibility is being pinned on Pakistan. What does the Secretary-General plan to do about that?

Deputy Spokesperson: I just read to you what the Secretary-General has said on the subject.

Question: Yes, following up on the India-Pakistan situation, the Pakistan Ambassador sent a letter to the Secretary-General yesterday. Does he have any comments on it?

Deputy Spokesperson: I have to follow up on the receipt of the letter. I am not aware of a receipt of a letter from Pakistan.
*****

Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)