16 days of activism against Gender Based Violence
This year marks the 18th annual 16 Days of Activism Against Gender
based Violence Campaign (Campaign originated from the first Women's Global Leadership Institute sponsored by the Center for Women's Global Leadership in 1991). The Campaign links issues concerning violence against women, gender and sexual based violence and human rights and emphasizes that all forms of violense, whether perpetrated in the public or private sphere, are a violation of human rights. The dates chosen for the campaign symbolically indicate this link : November 25 markes International day Against Women (officially declared by UN in 1999) and December 10 is International Human Rights Day. The sixteen-day period also hightlights other significant dates, including December 1 (World Aids Day) and December 6 (the anniversary of the Montreal Massacre).
Wearing a white ribbon is a personal pledge to never commit, condone or remain silent about violence against woment and girls.
ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை நான் பொங்க, நீ கேட்பது நியாயம் தான் ஆனாலும் கேளுனு சில கதைகளை எடுத்து விட்டான். அவன் கூறிய பதிலில் எனக்கு திருப்தி இல்லை. விவாதம் முற்றியதும், வேலை அதிகம் இருப்பதால் நம் இரவு உரையாடலின் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு ரிப்பனை அணிவதும் அணியாததும் உன் விருப்பம் என்று கூறி ரிப்பனையும் ஊசியையும் கொடுத்துட்டு அவன் எஸ்கேப்.
பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள். அது தவறா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை. அவர் அவர்கள் எண்ணங்கள் அவரவர்களுக்கே. சொல்வதால் மட்டும் ஏதுவும் மாறிட போவது இல்லை. தானாக உணர்ந்து மனம் மாற்றம் அடைவது தான் பயன் அளிக்கும்.
பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது அது பெண்களுக்கு பிடிக்காமல் போனாலும், முக்கியமாக அவர்கள் ஏதாவது கேட்டு வரும் போது முடியாது அல்லது இல்லை என்று கூறினால் போதும் அவர்கள் வைக்கும் முதல் வாதமே நான் பெண் என்பதால் தான் நீ இல்லை, முடியாது என்று கூறுகின்றாய் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். இன்னமும் அதான் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. (என்னளவில்)
மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.
நிற்க. மேலே சொன்னவை எல்லாம் சரியாகப்பட்டாலும் நம் நாட்டின் சில இடங்களிலும், ஹத்தி, உகாண்டா, சூடான் (டார்பூர்) போன்ற இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் மிக அதிகம். அங்கே ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அதை இல்லை என்று மறுக்க முடியாது ஆனாலும் சகவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தான் அதிகம். ஒவ்வொரு 30 நிமிடத்தில் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு(பெரும்பாலும் கற்பழிப்பு) ஆளாகிறாள். சூடானில் (டார்பூர்) இன்னும் கொடுமை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பெண் / குழந்தை என்ற அளவில் உள்ளது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் அந்த வெள்ளை ரிப்பனை அணிந்து என் ஆதரவையும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டேன்.
அதே வேளையில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. 2000ம் ஆண்டு என்று நினைக்கிறேன், மார்ச் 8 ஆம் அன்று கல்லூரியில் பெண்கள் தின விழா எடுக்கப்பட்டது. அதற்காக கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியயைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆஹா நமக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்த எங்களை ஒரு அறிக்கை கடுப்பேத்தியது. அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.
காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.
பின்குறிப்பு : Montreal Massacre பற்றி அறிய ஆர்வமாக இருந்தால் இந்த லிங்கை தொடரவும்.



