Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts
Monday, January 15, 2007
பொங்கலோ பொங்கல்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, January 15, 2007
31
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, October 23, 2006
தீபாவளி கொண்டாட்டம்!
இந்த தீபாவளிக்கு முன்பு வரை தீபாவளி அன்று ஊரில் இல்லாமல் இருந்தது இல்லை(தாத்தா மறைந்த வருடத்தை தவிர). இந்த வருடம் ஊருக்கு போக முடியாது என்று தெரிந்தவுடன் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை(தத்துவம் நல்லா இருக்குல) என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன். இதுக்கு நடுவில் நம் வீட்டிற்கு போன் பண்ணும் போது எல்லாம் புது துணி எடுத்துட்டியானு ஒரே குடைச்சல். நானும் புது துணி ஒன்னுக்கு தான் இங்க குறைச்சல்னு சொல்லிட்டேன். வியாழக்கிழமை அன்னிக்கு காலையில தலைநகரத்தில் இருக்கும் நம்ம பய போன் பண்ணி என்ன சிவா, இந்த தடவை தீபாவளிக்கு வீட்டுக்கு போக முடியாம போச்சேனு பீல் பண்ணி நம்மளையும் பீல் பண்ண வச்சுட்டான். டேய், பேசாம நீ இங்க வாடா நாம் எதாச்சும் பண்ணலாம் அவனை கூப்பிட்டேன், அது சரியா வராது நீங்க இங்க வாங்க நான் மத்த பசங்களையும் கூப்பிடுறேன் சொல்ல, இதுவும் நல்ல ஐடியாவே இருக்குனு உடனே கிளம்பியாச்சு. வியாழன் இரவு அங்க போயிட்டு அடுத்த நாள் சமைக்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு, நல்லா சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு.
வெள்ளிக்கிழமை நாம எப்படி தீபாவளி கொண்டாடுவது என்று திட்டம் வகுக்கும் படலம் ஆரம்பித்தது. பசங்க ஆளுக்கு ஒன்னா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நாம நாட்டாமை மாதிரி நடுவில் புகுந்து புது துணி எடுக்குறோம், சுழியம், வடை, பாயசத்துடன் செய்து சாப்பிடுறோம், மத்த பசங்களை போயி பாக்குறோம். இது இந்த நாட்டாமை தீர்ப்பு எவனும் தீர்ப்ப மாத்த சொல்லக்கூடாது, வண்டிய உடுங்கடா டிரஸ் எடுக்க போவோம் சொல்லிட்டேன். டிரஸ் எடுக்க போனா ஒரு கடை கூட இல்ல. என்னடானு பாத்தா நைட் எட்டு மணிக்கு மேல தான் திறப்பாங்க சொல்லிட்டானுங்க. சரினு மத்த தமிழ் பசங்களை பாக்கலாம் போயி எல்லா மக்களையும் பார்த்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்பதை விட நல்லா சாப்பிட்டோம். அப்பால போயி டிரஸ் எடுத்துட்டு மறுபடியும் போய் மத்த பசங்களை பார்த்துட்டு தீபாவளிக்கு அவர் அவர்கள் ஊரில் அடித்த கூத்துக்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்தோம். வீட்டிற்கு வர மணி 2.30 ஆச்சு.
தீபாவளி அன்று நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலையில்(7.20) இல்ல இல்ல நடு ராத்திரினு கூட சொல்லாம் நம்ம கைப்பேசி தூது வருமா தூது வருமா சவுண்டு விட எடுத்து பாத்தா வேற யாரு, இந்த புண்ணியவான பெற்ற மகான்கள் தான். அவங்கிட்ட வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நம் பணியை தொடர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நம்ம பய வந்து ஒரு அதிமுக்கியமான கேள்விய கேட்டான். சிவா, தலைக்கு எண்ணெய் வைக்கனும், உன்கிட்ட நல்லெண்ணெய், அரப்பு, சீயக்காய் எல்லாம் வச்சு இருக்கியானு கேட்டான். டேய், நல்ல நாள் அதுமா என்ன கொலைக்காரனா ஆக்காம ஒடிப் போயிடுனு சொல்லிட்டு விட்ட பணிய தொடர போன சமயத்தில் வேற ஒருத்தன் காபியுடன் வந்தான். படுக்கை காபி கொடுக்கும், நீ வாழ்க உன் குடும்பம் வாழ்கனு சொல்லிட்டு காபி கொடுடா கேட்க போயி பல் தேய்ச்சுட்டு வாங்குறான். டேய் எங்க இருந்துடா வறீங்க நீங்க எல்லாம், போயி என்ன என்ன பண்ண சொன்னேனூ அத பண்ணுங்கடா சொல்லிட்டு காபிய குடிச்சு முடிச்சுட்டு சேம் ஜாப்பை தொடர போகலாம்னா வந்தான்ய்யா மறுபடியும் சிவா தலைக்கு எண்ணெய் வைக்கனும் என்பது சாஸ்த்திரம். அத பண்ணாட்டி அப்புறம் என்ன தீபாவளினு கேட்க சரி நம்ம பய ரொம்ப தான் பீல் பண்ணுறான் சொல்லிட்டு நீ ஒன்னு பண்ணு, சமையல் அறையில் இருக்கும் கார்ன் ஆயிலையோ இல்ல தேங்காய் எண்ணெய்யோ எடுத்து தேச்சுக்கோ எந்த எண்ணெயா இருந்தாலும் மனதில் இறைவனை நினைத்துட்டு தேச்சா அது நல்லெண்ணெய் தான் என்று ஒரு சூப்பர் தத்துவம் + ஐடியா கொடுத்தேன். அவன் தேங்காய் எண்ணெய எடுத்துக்கிட்டு வந்து கேட்டான் பாருங்க அடுத்து ஒரு கேள்வி, மாப்ஸ் நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். மவனே சொல்லிட்டு அடுத்த வார்த்தை சொல்லங்காட்டியும், நம்ம முகம் போன போக்கை பாத்துட்டு ஏதும் கேட்காம ஒடி போயிட்டான். ஒரு வழியா எல்லாரும் குளிச்சு முடிச்சுட்டு புது துணி எல்லாம் போட்டு சாமிக்கிட்ட ஒரு பேரம் நடத்தி முடிச்சுட்டு வந்து பாத்தா வடையையும் காணாம், சுழியத்தையும் காணாம். டேய் என்னங்கடா எதையும் காணாம் கேட்டா, நீ வடைக்கும், சுழியத்துக்கும் தேவையான எதையும் வாங்கல அப்புறம் எப்படினு நம்மளையே எதிர் கேள்வி கேட்குறானுங்க. சரி இது இப்ப வேலைக்கு ஆகாதுனு வச்ச தோசைய சாப்பிட்டுட்டு, ஒன்னும் பிரச்சனை இல்ல நாம அந்த வடை, சுழியம் மேட்டர கொஞ்ச நேரத்துக்கு போஸ்ட் போன் பண்ணிக்கலாம் என்று சொல்லிட்டு மற்ற பசங்களை பார்க்க போயிட்டு அப்படியே வடை, பாயாசம் வைப்பதுக்கு தேவையான மேட்டரையும் வாங்கி கொடுத்துட்டு நம்ம பசங்க கிட்ட எதை எப்படி செய்யனும் என்பதை சொல்லிட்டு நாம் எஸ் ஆயிட்டோம். நம் அலுவலக மக்களை பார்க்க. வெல்லம் கிடைக்கல அதுனால சுழியம் கேன்சல்.
ஆனாலும் நம்ம பசங்க கெட்டிக்கார பசங்க, என்ன சொன்னமோ அதை கரேட்டா பண்ணி இருந்தாங்க, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயாசம் என்று சூப்பரா பண்ணி இருந்தானுங்க. வடை என்னடா ஆச்சுனு கேட்டா மிக்ஸ்சில மாவு ஒடிக்கிட்டு இருக்குனூங்க. சரினுட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு நம் நாட்டு மக்களுக்கு போன் பண்ண மறுபடியும் எஸ் ஆயிட்டேன். போன கொஞ்ச நேரத்தில் நம்ம பய போன் பண்ணி வடை போடுவதில் கொஞ்சம் சிக்கலா இருக்கு வந்து சீக்கிரம் தீர்த்து வைப்புனு கேட்க, சிக்கல் என்னும் ஊருக்கு பக்கத்தில் இருந்து வரும் நமக்கே சிக்கல் சவால் விடுவதானு போயி என்னனு கேட்டா, வடை தட்ட வர மாட்டேங்குதுனாங்க, ஒத்துங்கடா சொல்லிட்டு வீராப்பா நானும் வடைய தட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஒன்னும் சரியா வரல, சரி நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம் என்று கேட்போம் திங்க் பண்ணும் போதே வடைய போண்டா ஆக்கிட்டா என்னனு ஒரு சின்ன சின்னதா புடிச்சி போட்டா சூப்பர வந்துச்சு. சரி எல்லா மாவையும் அது மாதிரி போட்டு எடுத்தேன். வடைக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு பக்கத்தில் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த பய சொல்ல, தேங்காய் இங்க கிடைக்காது இருந்தாலும் நீ சட்னிக்கு ஆசைப்பட்டுட்ட அதனால் வெங்காயம், தக்காளி எடுத்து வெட்டுனு அவனுக்கு ஒரு வேல கொடுத்து சட்னியும் ரெடி பண்ணியாச்சு.
நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான். அவன் தலைய தட்டி சாப்பிட்டா வடை மாதிரி இருக்குல பேசமா சாப்பிட்டு கிளம்புனு சொல்லி போய் மற்ற பசங்களை பாக்க போயி இருந்தாம்.

வெள்ளிக்கிழமை நாம எப்படி தீபாவளி கொண்டாடுவது என்று திட்டம் வகுக்கும் படலம் ஆரம்பித்தது. பசங்க ஆளுக்கு ஒன்னா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நாம நாட்டாமை மாதிரி நடுவில் புகுந்து புது துணி எடுக்குறோம், சுழியம், வடை, பாயசத்துடன் செய்து சாப்பிடுறோம், மத்த பசங்களை போயி பாக்குறோம். இது இந்த நாட்டாமை தீர்ப்பு எவனும் தீர்ப்ப மாத்த சொல்லக்கூடாது, வண்டிய உடுங்கடா டிரஸ் எடுக்க போவோம் சொல்லிட்டேன். டிரஸ் எடுக்க போனா ஒரு கடை கூட இல்ல. என்னடானு பாத்தா நைட் எட்டு மணிக்கு மேல தான் திறப்பாங்க சொல்லிட்டானுங்க. சரினு மத்த தமிழ் பசங்களை பாக்கலாம் போயி எல்லா மக்களையும் பார்த்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்பதை விட நல்லா சாப்பிட்டோம். அப்பால போயி டிரஸ் எடுத்துட்டு மறுபடியும் போய் மத்த பசங்களை பார்த்துட்டு தீபாவளிக்கு அவர் அவர்கள் ஊரில் அடித்த கூத்துக்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்தோம். வீட்டிற்கு வர மணி 2.30 ஆச்சு.
தீபாவளி அன்று நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலையில்(7.20) இல்ல இல்ல நடு ராத்திரினு கூட சொல்லாம் நம்ம கைப்பேசி தூது வருமா தூது வருமா சவுண்டு விட எடுத்து பாத்தா வேற யாரு, இந்த புண்ணியவான பெற்ற மகான்கள் தான். அவங்கிட்ட வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நம் பணியை தொடர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நம்ம பய வந்து ஒரு அதிமுக்கியமான கேள்விய கேட்டான். சிவா, தலைக்கு எண்ணெய் வைக்கனும், உன்கிட்ட நல்லெண்ணெய், அரப்பு, சீயக்காய் எல்லாம் வச்சு இருக்கியானு கேட்டான். டேய், நல்ல நாள் அதுமா என்ன கொலைக்காரனா ஆக்காம ஒடிப் போயிடுனு சொல்லிட்டு விட்ட பணிய தொடர போன சமயத்தில் வேற ஒருத்தன் காபியுடன் வந்தான். படுக்கை காபி கொடுக்கும், நீ வாழ்க உன் குடும்பம் வாழ்கனு சொல்லிட்டு காபி கொடுடா கேட்க போயி பல் தேய்ச்சுட்டு வாங்குறான். டேய் எங்க இருந்துடா வறீங்க நீங்க எல்லாம், போயி என்ன என்ன பண்ண சொன்னேனூ அத பண்ணுங்கடா சொல்லிட்டு காபிய குடிச்சு முடிச்சுட்டு சேம் ஜாப்பை தொடர போகலாம்னா வந்தான்ய்யா மறுபடியும் சிவா தலைக்கு எண்ணெய் வைக்கனும் என்பது சாஸ்த்திரம். அத பண்ணாட்டி அப்புறம் என்ன தீபாவளினு கேட்க சரி நம்ம பய ரொம்ப தான் பீல் பண்ணுறான் சொல்லிட்டு நீ ஒன்னு பண்ணு, சமையல் அறையில் இருக்கும் கார்ன் ஆயிலையோ இல்ல தேங்காய் எண்ணெய்யோ எடுத்து தேச்சுக்கோ எந்த எண்ணெயா இருந்தாலும் மனதில் இறைவனை நினைத்துட்டு தேச்சா அது நல்லெண்ணெய் தான் என்று ஒரு சூப்பர் தத்துவம் + ஐடியா கொடுத்தேன். அவன் தேங்காய் எண்ணெய எடுத்துக்கிட்டு வந்து கேட்டான் பாருங்க அடுத்து ஒரு கேள்வி, மாப்ஸ் நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். மவனே சொல்லிட்டு அடுத்த வார்த்தை சொல்லங்காட்டியும், நம்ம முகம் போன போக்கை பாத்துட்டு ஏதும் கேட்காம ஒடி போயிட்டான். ஒரு வழியா எல்லாரும் குளிச்சு முடிச்சுட்டு புது துணி எல்லாம் போட்டு சாமிக்கிட்ட ஒரு பேரம் நடத்தி முடிச்சுட்டு வந்து பாத்தா வடையையும் காணாம், சுழியத்தையும் காணாம். டேய் என்னங்கடா எதையும் காணாம் கேட்டா, நீ வடைக்கும், சுழியத்துக்கும் தேவையான எதையும் வாங்கல அப்புறம் எப்படினு நம்மளையே எதிர் கேள்வி கேட்குறானுங்க. சரி இது இப்ப வேலைக்கு ஆகாதுனு வச்ச தோசைய சாப்பிட்டுட்டு, ஒன்னும் பிரச்சனை இல்ல நாம அந்த வடை, சுழியம் மேட்டர கொஞ்ச நேரத்துக்கு போஸ்ட் போன் பண்ணிக்கலாம் என்று சொல்லிட்டு மற்ற பசங்களை பார்க்க போயிட்டு அப்படியே வடை, பாயாசம் வைப்பதுக்கு தேவையான மேட்டரையும் வாங்கி கொடுத்துட்டு நம்ம பசங்க கிட்ட எதை எப்படி செய்யனும் என்பதை சொல்லிட்டு நாம் எஸ் ஆயிட்டோம். நம் அலுவலக மக்களை பார்க்க. வெல்லம் கிடைக்கல அதுனால சுழியம் கேன்சல்.
ஆனாலும் நம்ம பசங்க கெட்டிக்கார பசங்க, என்ன சொன்னமோ அதை கரேட்டா பண்ணி இருந்தாங்க, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயாசம் என்று சூப்பரா பண்ணி இருந்தானுங்க. வடை என்னடா ஆச்சுனு கேட்டா மிக்ஸ்சில மாவு ஒடிக்கிட்டு இருக்குனூங்க. சரினுட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு நம் நாட்டு மக்களுக்கு போன் பண்ண மறுபடியும் எஸ் ஆயிட்டேன். போன கொஞ்ச நேரத்தில் நம்ம பய போன் பண்ணி வடை போடுவதில் கொஞ்சம் சிக்கலா இருக்கு வந்து சீக்கிரம் தீர்த்து வைப்புனு கேட்க, சிக்கல் என்னும் ஊருக்கு பக்கத்தில் இருந்து வரும் நமக்கே சிக்கல் சவால் விடுவதானு போயி என்னனு கேட்டா, வடை தட்ட வர மாட்டேங்குதுனாங்க, ஒத்துங்கடா சொல்லிட்டு வீராப்பா நானும் வடைய தட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஒன்னும் சரியா வரல, சரி நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம் என்று கேட்போம் திங்க் பண்ணும் போதே வடைய போண்டா ஆக்கிட்டா என்னனு ஒரு சின்ன சின்னதா புடிச்சி போட்டா சூப்பர வந்துச்சு. சரி எல்லா மாவையும் அது மாதிரி போட்டு எடுத்தேன். வடைக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு பக்கத்தில் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த பய சொல்ல, தேங்காய் இங்க கிடைக்காது இருந்தாலும் நீ சட்னிக்கு ஆசைப்பட்டுட்ட அதனால் வெங்காயம், தக்காளி எடுத்து வெட்டுனு அவனுக்கு ஒரு வேல கொடுத்து சட்னியும் ரெடி பண்ணியாச்சு.
நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான். அவன் தலைய தட்டி சாப்பிட்டா வடை மாதிரி இருக்குல பேசமா சாப்பிட்டு கிளம்புனு சொல்லி போய் மற்ற பசங்களை பாக்க போயி இருந்தாம்.

சும்மா சொல்லக்கூடாது எல்லாம் பய புள்ளங்களும் பாச மழையில் நம்மள நணைய வச்சுட்டானுங்க. அதுவும் ஒரு வீட்டில் மத்தாப்பு வேற வச்சு இருந்தாங்க, அதை கொளுத்தி வெடி மேட்டரையும் சால்வ் பண்ணியாச்சு. அதன் பிறகு ஒரு மால் சென்று ஷாப்பிங் பண்ணிட்டு (பார்த்துட்டு இது தான் சரியா இருக்கும்) அங்க இருக்கும் பவுலிங், பில்லியட்ஸ் எல்லாம் நம்ம பசங்க விளையாட அதையும் வேடிக்கை பாத்துட்டு, ஐஸ்கீரிம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு அதை சர்வ் பண்ணுன பொண்ண மறுபடியும் கூப்பிட்டு நீங்க கொடுத்த ஐஸ்கீரிம் சாப்பிட்டு தலைவலி வந்துடுச்சு அதனால் நல்லா காபியா ஒன்னு கொடுங்க சொல்லி வாங்கி குடிச்சுட்டு ஒரு வழியா 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அப்புறம் எங்க தூங்குறது, பசங்களோடு மறுபடியும் கதை அடிச்சுட்டு, படம் பாத்துட்டு காலையில் 7 மணிக்கு செக் இன் போயி நின்னு நம்ம இடத்துக்கும் வந்து சேர்ந்தாச்சு.
என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது.
என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, October 23, 2006
65
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Subscribe to:
Posts (Atom)






