Thursday, March 22, 2007

கிறுக்குத்தனமா???

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி (ஆண்ட்டி இல்லாப்பா, ஆண்டி தான்). அது போல சிவனே னு இருந்த என்னை என்னுள் இருக்கும் ஐந்து WEIRD விசயங்களை எழுத சொல்லி இல்ல கன்பூஸ் பண்ணி என்னய பூஸ் போக வச்சுட்டாங்க மை பிரண்டு. (பெயரை மட்டும் பிரண்ட் னு வச்சுக்கிட்டு என்ன வில்லத்தனம் பாருங்க!)

Weird னு சொன்னவுடன் நமக்கு ஒன்னும் புரியல, இந்த படத்த பாருங்க,


இது போல ஏதாச்சும் நமக்கு இருக்கா யோசிச்சேன், அப்படி ஏதும் இல்ல பின்ன வேற எதப்பத்தி சொல்லுறாங்கனு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, கூகிள் டாக்கில் வந்த ஒரு நல்லவங்க, ஏய் அகராதி பிடிச்சவனே அகராதிய புரட்டி என்னனு பாக்க வேண்டியது தானே சொல்ல, கிடைத்த பதில்கள அப்படியே பிடிச்சு அவங்கக்கிட்ட கொட்டினேன் - unusual, supernatural, strange, eldritch, uncanny, unearthly. அவங்க இது எல்லாத்தையும் விட்டுபுட்டு Peculiar சொல்லி, உன்க்கிட்ட இருக்குற different na அதாவது அடுத்தவங்க நோட் பண்ணுற வித்தியாசயமான குணங்கள்னு சொல்ல, அடுத்த கன்பூஸ்சன்

மத்தவங்க போல நாமளும் கையாலே தானே சாப்பிடுறோம், காலால் தான் நடக்குறோம், வாயால் தான் பேசுறோம், அவ்வளவு ஏன் காதால் தான் கேட்கிறோம்னு கேட்டா இப்படி குதர்க்கமா சிந்திக்குற பாரு அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க...அதனால் நானா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டு, அவனின்றி ஒரு அணுவும் அசையாதுனு முடிவு பண்ணி அவன் மேல் பாரத்தை போட்டு, ஸ்டார்ட்டிங் மை நான் சென்ஸ்.

நக்கல்
பழகியவர்களிடம் மட்டும் தான் இந்த நக்கல் விடுவது எல்லாம். சில சமயம் மற்றவர்களிடமும். ஏன்னா நமக்குனே வந்து கேள்வி கேட்பானுங்க. அதிலும் நம்மக்கூட இருக்கும் பசங்க பாவம் தான். அவனுங்க, ஏண்டா இவன்க்கிட்ட வாய கொடுத்தோம் அப்படிங்குற அளவுக்கு, எப்ப எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்ப எல்லாம் நக்கல் அடிச்சிடுறது. உனக்கு இந்த வாய் மட்டும் இல்லாட்டி நாய் கூட மதிக்காது சொன்னானுங்க. இப்ப எல்லாம் ஏய்! மேன், இந்த வாய் இல்லாட்டி டாக் வந்து உன் பாட்டத்தை கவ்விட்டு ஒடிடும் அப்படிறானுங்க. அது ஒரு அளவு உண்மையும் கூட நம்ம இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு.

பொங்குறது
இது இங்க அவ்வப்போது நடக்கும். சிங்கத்தை சீண்டி பாப்பது போல் புலியை வந்து பிராண்டி பாத்துடுவானுங்க. நம்மள பிராண்டுனா நாம திருப்பி டபுள் மடங்கா பிராண்டி வைச்சுடுவேன். இங்க தான் பல நாட்டில் இருந்து சில லாடு லப்க்கு தாஸ் இருப்பாங்களே, அவர்களுடைய அதிகாரத்தை அடுத்தவன்க்கிட்ட காட்டுவதில் தான் குறியா இருப்பானுங்க. கம்யூனிகேஸ்சன் ல ஏதாச்சும் ஒரு நெட்வொர்க டவுன் ஆவது சகஜம். நாமா அது என்னனு பாத்துக்கிட்டு இருக்கும் போது சரியா வருவானுங்க. வாய்ய சரியா புடுங்குவானுங்க, சரியாகுமா இல்ல உன் தலைய போய் பாக்கவா அப்படினு நூல் விட்டு பாப்பானுங்க, இத கேட்ட வேகத்துக்கு பால் பொங்குற மாதிரி சர்ருனு பொங்கி அது உன் திறமையை பொருத்துனு போயிக்கிட்ட இருப்பது. இப்ப எல்லாம் யாருச்சும் வந்தாலே நம்ம தலயே முதல பேசிட்டு வடிக்கட்டி தான் நம்மக்கிட்ட அனுப்புறார்.

தனிமை
நம்மளுக்கு இது கொஞ்சம் பிடித்த விசயம். பெரும்பாலான வேலைகளை தனிமையில் அம்ர்ந்து செய்வது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோனோ அது சரியாக அமையும். டீம் வொர்க் வேற இது வேற. எங்கள் துறைக்கு வரும் சவுத் ஏசியன்களை தவிர மற்றவர்கள் வந்தால் நிமிர்ந்து பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு பொட்டிக்குள் முழ்கி விடுவேன். மாலை நேரங்களில் இது இன்னும் மோசம், பதிவுலக களப்பணியில் இருக்கும் போது நானாக சிரிப்பதை பார்த்து இவனுக்கு என்னமோ ஆச்சுடா காலையில் எல்லாம் நல்லா தான் இருக்கான், சாயங்காலம் ஆனா ஒரு மார்க்கமா ஆயிடுறானேனு சொன்னவங்க அனேகம். இரவிலும் மற்ற நண்பர்கள் உறங்கிய பிறகும் வெளியில் தமிழ்சை கேட்டுக் கொண்டு யோசித்த நேரங்கள் அதிகம்.

உணவு
இந்த விசயம் நம்மளை ரொம்பவே தனிமைப்படுத்தி காட்டும். பீப், பன்னி, டூனா பீஷ், அப்படி இப்படினு ஏகப்பட்டது சாப்பிட மாட்டேன். அதிலும் பிரட் னா காதா தூரம் ஒடுவேன். கிடைப்பதை சாப்பிடனும் என்று சொன்னால் எனக்கு பிடிப்பது கிடைக்கும் போது மற்றவற்றை ஏதுக்கு சாப்பிடனும் என்று ஏகத்தாளம் பேசும் ஆளு நாம். ஆனா மற்ற நாட்டுக்காரங்க இருக்காங்களே, அத ஏன் சாப்பிட மாட்டேங்குற, இத ஏன் சாப்பிட மாட்டேங்குற கேள்விய மட்டும் நல்லா கேட்டுட்டு, நம்ம வீட்டுக்கு சாப்பிட வரவும் போது, இத்தன வெரைட்டி இருக்கா உங்க உணவில் அப்படினு சப்புக் கொட்டி சாப்பிட்டுவானுங்க.

மொழி
நான் ஹைத்தியில் இருந்து போது பிரஞ்ச், க்ரியோல்(Creole), ஸ்பானிஷ், இங்கு அரபி, ஹிந்தி போன்ற மொழிகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தும் ஏனோ நான் இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வாய்ப்புகளை தவற விடுவது தவறு என்பது எனக்கு புரிந்தும், சிலர் சொல்லியும் கூட பிற மொழி கற்றுக் கொள்வதில் ஒரு ஆர்வம் ஏனோ இது வரை வர மாட்டேன் என்கிறது. ஆர்வம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா விசயத்தையும் செய்ய முடியாதே!!!

இப்ப ஆள் பிடிக்குற வேலை

1.சிறுமுயற்சி முத்துலெட்சுமி
2.ஒரமாக நடக்கும் ராதா
(40 % ஒதுக்கீடு கொடுத்து இருக்கோம்... கொடுத்து பட்டத்தை திரும்ப பெற எதாச்சும் வழி இருக்கானு பாருங்க மக்கா... )
3. உங்கள் எங்கள் நண்பன் சரா
4. 50 மணி நேரம் ஆணி புடுங்கும் கார்த்திக்
5. பங்கு சந்தோஷ் aka Santhosh

பி.கு : Weird க்கு கிறுக்குத்தனம் என்று அர்த்தம் இருப்பதாக கொத்துஸ் சொல்லி அதை ராம்ஸ் தொடர்ந்து என்னையும் கிறுக்கன் வகையில் சேர்த்து இருக்கார்(சற்று நேரம் முன்பு). மறுபடியும் இதை பற்றி யோசித்தேன் என்றால் கிறுக்கு முற்றி விடும். அதனால ஆள விடுங்க சாமிகளா...

Monday, March 12, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இடம்: நாகை எங்க வீடு
நாள் : இரண்டரை ஆண்டுகள் முன்பு எந்த நாளாக இருந்தாலும்
நேரம் : காலை 11.30

நான் : அம்மா டிபன் எடுத்து வைங்கம்மா

அம்மா : ஏண்டா, காலையில் எழுந்ததே 9 மணி அப்பவே சாப்பாட்டு இருக்கலாம்ல, வெளியில் போயிட்டு 11.30 வந்து காலை சாப்பாடு சாப்பிட்டா மத்தியானம் எப்படா சாப்புடுவ, அதும் இல்லாம உனக்கு சாப்பாடு வைப்பேனா, இல்ல மத்தியான சாப்பாடு செய்வேனா?

நான் : எனக்கு வச்சுட்டு அப்புறம் சமைங்க, மத்தியான சாப்பாட்டு 3, 4 மணிக்கு சாப்பிட்டா போகுது

அம்மா : 3, 4 மணிக்கு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு டா ஆகும்.

நான் : அம்மா, வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக் கூடாது.

அம்மா : அப்படிடா சொல்லுவ, எங்கயாச்சும் போய் காய்ஞ்ச தாண்டா தெரியும்.

நான் : சரி சரி வைங்க மணியாகுது, பசங்க அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க

(சுட சுட ஆப்பம், தேய்காய் பால் பறிமாறப்படுகின்றது.)

நான் : ஏம்மா, போதும்மா

அம்மா : இத ஒன்னு வச்சுக்கடா

நான் : ஏம்மா, போதும்மா சொன்னா கேட்கவே மாட்டீங்களாம்மா, எப்ப பாத்தாலும் இத தாம்மா செய்வீங்க நீங்க.

அம்மா : டேய், இந்த ஒன்னு மட்டும் சாப்பிட்டுட்டு போடா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் : போயிட்டு வரேன்ம்ம்ம்ம்ம்ம்மா

அம்மா : டேய், மத்தியானம் சீக்கிரம் சாப்பிட வந்துடு

நான் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரீஈஈஈஈஈஇ

நேரம் : மதியம் 3.30

நான் : மம்மிமீஈஈஈஈஈ

அம்மா : புள்ளையாட நீ.... உன்ன சீக்கிரம் வாடா சொன்னா 3.30 மணிக்கு வர.......

நான் : ஏம்மா, மாசத்துக்கு நாலைஞ்சு தடவை தான் நான் ஊருக்கு வரேன், அதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்களே..... நீங்க சாப்பிட்டீங்களா..

அம்மா : ம்ம்ம்ம் உனக்காக இவ்வளவு நேரம் பாத்துட்டு இப்ப தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன், நீ வந்துட்ட

நான் : சரி சரி, பசிக்குது, வைங்கம்மா

அம்மா : சரி, டைனிங் டேபிள்க்கு வாடா

நான் : அம்மா, இங்க கொண்டு வாங்கம்மா

அம்மா : டேய், அவ்வளத்தையும் தூக்கிட்டு வரனும்டா, அங்க வந்து 10 நிமிசம் சாப்பிட்டு வந்து இந்த டிவிய பாத்தா என்ன?

நான் : நான் டிவி பாக்குறதே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான், அதுவும் உங்களுக்கு பொறுக்காதே, போட்டு எடுத்துட்டு வாங்கம்மா

(சிக்கன் குழம்பு, இறால் வறுவல் பறிமாறப்படுகின்றது)

நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...

அம்மா : ஹ்ம் வச்சு இருக்கு. முட்டை வேணுமா என்ன?

நான் : நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்...

அம்மா : அந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கும்டோ உனக்கு?

நான் : ஏம்மா, நானா கேட்டேன், நீங்க கேட்டதால் கொடுங்கனு சொன்னேன். நீங்களே கேட்டுட்டு என்னய குறை சொல்லுங்க?

அம்மா : இந்தாடா இறால் இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ

தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க

அம்மா : ஆமாம்டா உனக்கு நான் சமைச்சு போட்டதே இல்ல பாரு

நான் : அம்மா, அவன் கிடக்குறாம்மா, நீங்க ரசத்தை ஊத்துங்க... என்னமா ரசத்தில் உப்பு அதிகமா இருக்கு, இவ்வளவு வருசம் சமைக்குறீங்க, இன்னும் உங்களுக்கு உப்பு சரியா போட தெரிய மாட்டேங்குது.

அம்மா : டேய், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் சரியா தான் இருந்துச்சு. உனக்கு மட்டும் அதிகமா இருக்கும்டா. சரி இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் ஊத்திக்கோ...

நான் : மோரா! வேணாம். போதும்

நேரம் :இரவு 10.00

நான் : வெளிய போறேன், சீக்கிரம் சாப்பாடு போடுங்க

அம்மா : இத்தன மணிக்கு மேல எங்கடா போற? தோசை தான் இரு ஊத்துறேன்.

நான் : தோசையா, என்னமா நீங்க, சாதம் வைக்க கூடாதா?

அம்மா : எனக்கு என்னடா தெரியும், நீ வீட்டுக்கு சாப்பிட வருவீயா இல்ல வெளியில் சாப்பிட்டு வருவீயானு, சாதம் வைச்சு நீ வராட்டி வேஸ்டா போயிடும் தான் வைக்கல.

அப்பா : ஏண்டி, அவனுக்கு சாதம் கொஞ்சம் வச்சி இருக்கலாம்ல, நீயும் இப்படி தாண்டி பண்ணுவ

அம்மா : உடனே, என்ன சொல்லிடுவீங்களே? இப்ப தோசை சாப்பிட்டா என்ன ஆயிட போகுது.

நான் : சரி, சரி விடுங்க, நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன். வரேன்ம்மா

அம்மா : 1 மணிக்கு வந்து நிக்காம சீக்கிரமா வந்துடு.........

நான் : ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.

இடம் : சூடான் நேரம் : கடந்த வெள்ளி, அதிகாலை 11.00

VHF ரேடியாவில் கால் வருகின்றது

நான் : F.Q. 8.1.1 தான் விசயத்தை சொல்லு

எதிர்முனை : இண்டர் மிஷன் நெட்வொர்க் ல பிரச்சனை, கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

நான் : அட என்னய்யா, வெள்ளிக்கிழமை காலாங்காத்தாலே தொல்லை பண்ணுறீங்க, சரி இரு ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.

ப.பெண் : சிவா, பிரேட் இருக்கு, சாப்பிட்டு போ.

நான் : பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. மத்தியானம் வந்து சாப்பிடுக்குறேன். மதியம் என்ன?

ப.பெண் : சாப்பாத்தி, பர்த்தா.

நான் : சரி, ஒகே.

ஆபிஸ்ல எப்பவும் போல கடமையில் முழ்கிட்டோம்.

நேரம் : மாலை 4.25, நம்ம மொபைல் பாடுது

நான் : சொல்லுங்க தாப்பா

எதிர்முனை : எங்க இருக்க, நாங்க எல்லாம் கிரவுண்டுக்கு வந்தாச்சு. பேட், ஸ்டம்பு எல்லாம் உன் வண்டியில் தான் இருக்கு.

நான் : இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன். (மனதிற்க்குள் இன்னிக்கு சாப்பாட்டு போச்சுடா)

நேரம் : மாலை 7.00 ,மொபைல் பாடுது

நான் : சொல்லு மச்சி என்ன விசயம்

எதிர்மனை : மச்சி பிஸியா இல்லாட்டினா இங்க வந்துட்டு போயேன், நம்ம XXXXX பத்தி ஒரு மேட்டரு பேசனும்.

நான் : கிரவுண்டல இருக்கேன் மச்சி. ஒரு 15 நிமிசத்தில் அங்க இருப்பேன்.

எதிர்முனை : இன்னிக்கு இங்க பீப், உனக்கு வேற எதாச்சும் சமைக்கட்டுமா?

நான் : பீப்பா! இல்ல மச்சி, கசகசனு இருக்கு, குளிச்சுட்டு சாப்பிட்டா தான் சரியா வரும். அதனால் எனக்கு வேணாம்.

நேரம் : இரவு 9.30

கோயல்: வா, சாப்பிட்டு வந்துட்டியா, இல்ல இங்க தானா

நான் : இல்ல இங்க தான், காலையில் இருந்து சாப்பிடல, இரு குளிச்சுட்டு பிரஷா வரேன்

கோயல் : போ, போ உனக்காக தான் நாங்களும் வெயிட்டிங்

(மனதுக்குள், இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே, சே..சே... இவனுக்கு இது எல்லாம் தெரியாது) சிறிது நேரம் பிறகு

நான் : வாங்க, சாப்பிடலாம்

கோயல் : நீ சாப்பிடு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்.

நான் : என்னடா இது புதுசா இருக்கு. எட்டு மணிக்கே சட்டிய எம்டி ஆக்கிடுவாங்க, இன்னிக்கு என்ன ஆச்சு பசங்களுக்கு..

திறந்து பாத்தால், குண்டு அரிசியும்(எகிப்து அரிசி, நம் கேரளா அரிசி விட பெரிசா இருக்கும்), தால்லும் இருந்துச்சு.

நான் : யாரு இந்த அரிசிய சமைக்க சொன்னது. வர வர இந்த பொண்ணு பண்ணுறது நல்லாவே இல்ல. வேற வழி இல்ல, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுறேன். அட பாவிங்களா, தால் என்னடா இவ்வளவு உப்பு.

கோயல் : அதான், நாங்க சாப்பிடாம வர்கார்ந்து இருக்கோம். பிரட் இருக்கு சாப்பிடுறீயா, முட்டை பொறித்து தரேன்.

நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.

கோயல் : டயர்டா இருந்துச்சு. அதான் முடியல.

நான் : நமக்கும் அதே கதி தான், நீ முட்டைய ஒத்து, இதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன்

ப்ரிட்ஜில் இருந்து தயிர், ஊறுகாய் வெளி வருகின்றது. விதி ய நொந்து தயிர் சாதம் சாப்பிடுறேன்.

பழமொழி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நம்ம கருத்து : நல்லாவே விளையுதுடோய்.... மாப்பு கேட்டுகுறேன் மம்மி, மாப்பு

Friday, March 09, 2007

ஆண்டு அறிக்கை

தமிழ் பதிவுலகில் பதிவு போட்டு விளையாட ஆரம்பித்து ஒரு வருசம் ஆச்சங்க. அதான் ஆண்டு அறிக்கை வாசித்து விட்டு போகலாமேனு இந்த பதிவு.

அங்க இங்க சுற்றி தமிழ்பதிவுலக்கு வந்து, பிளாக்கரில் ஒரு கணக்கை தொடங்கி அப்ப அப்ப பதிவு போட்டுக் கொண்டு இருந்தேன். சில மாதங்கள் கழித்து தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதை அறிந்து, பல தொழில்நுட்ப தடுமாற்றங்களுக்கு பிறகு அதில் சேர்ந்தேன். அங்குட்டு வந்த பிறகு தான் பல விசயங்கள் தெரிய ஆரம்பித்தது. அந்த கதையை எல்லாம் சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பல. அது எல்லாத்துக்கும் தெரிந்த சமாச்சாரம் தான். ஆண்டு அறிக்கைனு சொல்லியாச்சு, அப்புறம் புள்ளி விபரங்கள் இல்லாட்டி எப்படி? அதனால

இது வரை ஆடிய ஆட்டங்கள் - 69 * (இதையும் சேர்த்து)

அறிக்கை:

ஆண்டு - மார்ச் 06 - பிப்ரவரி 07

மார்ச் - 06 : பதிவுகள் - 2, மொத்த பின்னூட்டங்கள் - 1

ஏப்ரல் - 06 : ப - 07, மொ.பி - 39

மே - 06 : ப - 14, மொ.பி - 219

ஜுன் - 06 : ப - 04, மொ.பி - 189

ஜுலை - 06 : ப - 08, மொ.பி - 676

ஆகஸ்ட் - 06 : ப - 07, மொ.பி - 512

செப்டம்பர் - 06 : ப - 00, மொ.பி - 00

அக்டோபர் - 06 : ப - 09, மொ.பி - 541

நவம்பர் - 06 : ப - 07, மொ.பி - 338

டிசம்பர் - 06 : ப - 02, மொ.பி - 46

ஜனவரி - 07 : ப - 03, மொ.பி - 65

பிப்ரவரி - 07 : ப - 04, மொ.பி - 121

ஆடிய மொத்த ஆட்டங்கள் - 67

எடுத்த மொத்த பின்னூட்டங்கள் - 2747 (நம்ம பங்கும் இதில் கணிசமாக இருக்கு)

அதிகப்பட்ச பின்னூட்டம் - 168 (கொத்துஸ் தயவில்)

குறைந்தப்பட்ச பின்னூட்டம் - 0 (மூன்று முறை)

சதங்கள் : 5 முறை

அரைச் சதங்கள் : 14 முறை

வந்து நொந்தவர்கள் : 18473 (பல மாதங்கள் பிறகு தான் நிறுவப்பட்டது)

குறிப்பிடத்தக்க வெற்றி - வ.வா. ச உறுப்பினர் ஆனது, தமிழ்மணம் நட்சத்திரம் ஆனது

சொல்ல விரும்புவது - என் தொல்லை தொடரும்...

Thursday, March 08, 2007

உலக பெண்கள் தினம்

தமிழ்மணத்தில் மிக "சூடாக" உலக பெண்கள் தினம் கொண்டாடிக்கிட்டு இருக்கும் போது எப்பவும் அரசியல் ரீதியாக சூடாக இருக்கும் சூடானின் ஒரு பகுதியில் எப்படி பெண்கள் தினம் கொண்டாடினார்கள் என்பதை பாருங்க.

சூடானின் மிகவும் வஞ்சிக்கப்பட்ட பகுதியான டார்பூரில் அல்-பஷர் என்ற இடத்தில் ஐ.நா. வின் அங்கமான UNFPA என்ற அமைப்பு பல N.G.O களின் உதவியுடன் கடந்த ஒரு வருடத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுப்பட்ட 10 நபர்களை கவுரவிக்கும் பொருட்டும், உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டும் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சுகளை அரபியில் மொழி பெயர்த்தார்கள், ஆனால அரபியில் பேசிய பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. அதனால பல விசயங்கள் எனக்கு புரியவில்லை. ஆனால் இங்கு இருக்கும் பெண்கள் வாழ்வில் சிறுதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சி மேலும் கவுரவிக்கப்பட்ட 10 நபர்களில் 9 நபர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்து பெண்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர், அதுவும் நம் நாட்டை சேர்ந்தவர், என் நண்பர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. அவரு பணி புரிவது மனித உரிமை துறையில்.

நிகழ்ச்சியின் படங்கள்(படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாக தெரியும்)






இங்கு நான் கவனித்து ஒரு விசயம். மற்றவர்களை வரவேற்க்கும் போதும், வாழ்த்தும் போதும் கையை தலைக்கு மேல் தூக்கி விரல்களை அசைத்து வாழ்த்துக்கிறார்கள்.(நம்ம ஊர்ல உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லும் போது நம்ம கை விரல் எப்படி இருக்குமோ அது போல). மேலே இருக்கும் இரண்டு படங்களை பார்த்தால் தெரியும். அது போக ஆரவாரம் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் நாக்கை மடிச்சுக்கிட்டு ஒரு ஒலி எழுப்புவாங்களே(குழவி யா???) அது போல இங்கு ஒரு புது மாதிரியான ஒலி எழுப்புகின்றார்கள் நாக்கை மடிக்காமலே...

பாராம்பரிய நடனங்கள் சில:




Prevent Gender Based Violence

Say No Violence Aganist Women

பெண்கள் தின வாழ்த்துக்கள்