சூடானின் மிகவும் வஞ்சிக்கப்பட்ட பகுதியான டார்பூரில் அல்-பஷர் என்ற இடத்தில் ஐ.நா. வின் அங்கமான UNFPA என்ற அமைப்பு பல N.G.O களின் உதவியுடன் கடந்த ஒரு வருடத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுப்பட்ட 10 நபர்களை கவுரவிக்கும் பொருட்டும், உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டும் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சுகளை அரபியில் மொழி பெயர்த்தார்கள், ஆனால அரபியில் பேசிய பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. அதனால பல விசயங்கள் எனக்கு புரியவில்லை. ஆனால் இங்கு இருக்கும் பெண்கள் வாழ்வில் சிறுதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சி மேலும் கவுரவிக்கப்பட்ட 10 நபர்களில் 9 நபர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்து பெண்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர், அதுவும் நம் நாட்டை சேர்ந்தவர், என் நண்பர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. அவரு பணி புரிவது மனித உரிமை துறையில்.
நிகழ்ச்சியின் படங்கள்(படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாக தெரியும்)
இங்கு நான் கவனித்து ஒரு விசயம். மற்றவர்களை வரவேற்க்கும் போதும், வாழ்த்தும் போதும் கையை தலைக்கு மேல் தூக்கி விரல்களை அசைத்து வாழ்த்துக்கிறார்கள்.(நம்ம ஊர்ல உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லும் போது நம்ம கை விரல் எப்படி இருக்குமோ அது போல). மேலே இருக்கும் இரண்டு படங்களை பார்த்தால் தெரியும். அது போக ஆரவாரம் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் நாக்கை மடிச்சுக்கிட்டு ஒரு ஒலி எழுப்புவாங்களே(குழவி யா???) அது போல இங்கு ஒரு புது மாதிரியான ஒலி எழுப்புகின்றார்கள் நாக்கை மடிக்காமலே...
பாராம்பரிய நடனங்கள் சில:
Say No Violence Aganist Women
பெண்கள் தின வாழ்த்துக்கள்

