Sunday, September 23, 2007

ஆஸிவை வெற்றிக் கண்டது இந்தியா!


இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த முடிந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ஒட்டங்கள் எடுத்தது. யுவராஜ் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் 30 பந்துகளில் 70 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

189 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 173 ஒட்டங்கள் எடுத்து 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வரும் திங்கள் அன்று இந்திய அணி பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது. அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

முக்கிய துளிகள்:

* யுவராஜ் பிரட் லீ பந்தில் அடித்த சிக்ஸ்ர் தான் இந்த தொடரின் மிக பெரிய சிக்ஸ்ர் ஆகும். (119 மீட்டர்)

* ஸ்ரீசாந்த் 4 ஒவர்களில் ஒரு மெயிடன் உள்பட 12 ஒட்டங்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

* ஹர்பஜன் வீசிய 18வது ஓவரும், ஆர்.பி. சிங் வீசிய 19வது ஒவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றது.

* ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போதிலும் இந்திய மண்ணில் நடந்தை போன்று மிக ஆரவாத்துடன் ரசிகர்கள் இந்திய அணியினருக்கும் உற்சாகம் அளித்தார்கள்.

* ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.


பின்குறிப்பு :

அது என்னமோ தெரியலை, ஆஸ்திரேலியா இந்தியாவிடன் தோல்வி அடையும் போது எல்லாம் ஒரு தனி சந்தோஷம். அதற்கு காரணம் அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா அல்லது கடந்த 2 1/2 வருடங்களாக என் டேமேஜ் அந்த நாட்டை சேர்ந்தவராக அமைந்ததா எனத் தெரியவில்லை.

Friday, September 21, 2007

ஜெயிச்சோம்ல.. ஜெயிச்சோம்ல...

நான் இப்ப புதுசாக வேலைக்கு சேர்ந்து இருக்கும் இடத்தில் தென் ஆப்பெரிக்கர்கள் அதிகம். இன்று இந்தியாவிற்கும் தென் ஆப்பெரிக்காவிற்க்கும் நடந்த கிரிகெட் போட்டி 6 தெ. ஆ., 5 இந்தியர்கள்(நான் உட்பட), ஒரு அமெரிக்கன், 2 கனடா, 1 நைஜிரியன் உடன் பார்க்க நேர்ந்தது.

இந்தியாவால் மிக குறைந்த ரன்கள் தான் எடுக்க முடிந்தது 20 ஒவர்களில்.(153/5). அதனால் இந்தியர்களை தவிர மற்ற அனைவரும் தெ.ஆ. வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். குறைந்த ரன் ஆக இருந்த போதிலும், இந்தியா தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் இந்தியாவிற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த நாங்கள் வழக்கம் போல இந்தியா வெற்றி பெறும் என்று தெ.ஆ. பேட்டிங் செய்வதற்கு முன்பே அடித்து சொன்னோம்.. எங்கள் சொல்லை மெய்ப்படுத்தி காட்டினார் ஆர்.பி. சிங்.(4-0-13-4)

5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள். அவர்கர் சொன்ன வாக்கை பொய்க்காகி எங்களை பெருமிதம் படும்படி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்....

பாகிஸ்தானை வென்றதை விட தெ. ஆ. வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

வாழ்த்துக்கள் பல... கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க.. நல்லாவே இருங்க....


இதன் மூலம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன... இதன் மூலம் தெ. ஆ. விற்கு அரைஇறுதி கனவு ஆப்பு அடிக்க பெற்றது...

Monday, September 10, 2007

கலரு.. கலரு....ஜிங்குசா.....

Posted by Picasa



Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa

Wednesday, July 04, 2007

சிந்தனைத் துளிகள்!

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

தொடர்புடைய பதிவுகள்:

கீதாவின் எண்ணங்கள்