நம்ம வேதா போதை பொருட்கள் குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தாங்க. அதற்கு ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் டைப் பண்ணி போட்டுப்ப ப்ளாக்கர் ஒடியாந்து புடுங்கிட்டு போச்சு. சரி மீண்டும் அங்க பின்னூட்டமா இடுவதை விட இங்கு பதிவா போட்டால் இன்னும் விவாதம் விரிவடைந்தாலும் அடையலாம்(!!!) என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.
வேதா அவர்களின் பதிவு இங்கு.
அவர்கள் கூற வந்த கருத்து, அதற்கு அவர்கள் சொன்ன தீர்வு போன்றவற்றில் எனக்கு முழு உடன்பாடு இருந்தாலும், அவங்கள் சொன்ன சில விசயத்தில் எனக்கு நெறுடல் உண்டு. அவை
//ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது.//
சமீபகாலம் என்பதும் தப்பு. இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் என்பது தப்பு.அதவும் இல்லாமல் இது சென்னையில் உள்ள பெரிய பள்ளிகளில் மட்டும் இது நடப்பது என்று சொல்வதும் தப்பு.
//அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது. //
இந்த மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் வேறு. அங்கு வரும் மக்கள் வேறு, அவர்களால் கையாளப்படும் போதை வகைகள் வேறு, அதை பற்றி பிறகு பாக்கலாம். பள்ளி, கல்லூரிகளை மட்டும் இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.
முன்பே சொன்ன மாதிரி சமீபகாலமாக எல்லாம் கிடையவே கிடையாதுங்க. ரொம்ப காலமா இருக்கு. வேண்டும் என்றால் சமீபகாலமாக வெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கின்றது என்று கூறலாம். இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் அதிகரித்து தான் காரணம் என்பதை ஒத்துக்க முடியாது. ஒரு கஞ்சா பொட்டலத்தின் விலை என்ன தெரியுமா? 7 ரூபாய் தான் நான் கல்லூரியில் படிக்கும் போது. ஒரு பொட்டலத்தை வைத்து 5,6 நபர்கள் உபயோகித்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். அதுவும் இல்லாமல் அவன் கஞ்சா அடித்து இருக்கின்றான் என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம். ஒரு வித மயக்கத்தில் அவர்கள் கல்லூரிக்கு வருவதும் உண்டு.
கல்லூரியில் தானே பள்ளியில் இல்லையே என்று சொன்னால் அங்கும் உண்டு, ஆனால் பள்ளியில் நான் படிக்கும் போது இவ்வளவு வெளிப்படையாகவும், பரவலாகவும் நடந்து நான் பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில் எங்கள் வயது ஒத்த மாணவர்கள் பயன்படுத்துவதாக பேச்சு உண்டு. எங்கள் பள்ளி மாணவர்கள் அவர்களை கஞ்சா அடிக்கும் பசங்க தான்னடா நீங்கனு சொல்லி கிண்டல் அடிக்கும் அளவுக்கு.
இது போக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க. இது எல்லாம் ஒரு பொட்டலத்தின் விலை ஐந்து ரூபாய்க்கு கீழ் தான். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும் பசங்களுக்கு இந்த 5 ரூபாய் ஒரு பெரிய காசு கிடையாது. இது பசங்க கிட்ட மட்டும் தான் இருக்குனு நினைக்காதீங்க பெண்களிடமும் பரவலாக உண்டு. என்ன சகவீதம் கொஞ்சம் கம்மி. இந்த மேற்கூறியவைகள் அனைத்தும் எங்கள் ஊரின் நிலைமை. ஓரு நகரத்தில் இப்படி என்னும் போது மாநகரங்களில் எப்படி இருக்கும் என்று எண்ணி பாத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் கூறிய சென்னையில் உள்ள பணக்கார பள்ளிகள், நீங்கள் எந்த பள்ளியை மனதில் வைத்து சொன்னீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிக்குறேன்.
சென்னையில் இருந்து பூந்தமல்லி போகும் வழியில் அமைந்து உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் என் நண்பர் (பேஸ்கட் பால் டீம் சீனியர்)உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றி இருந்தார். அவர் கூறிய விசயம், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணம் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போதும் எப்படி தான் சோதனை போட்டு உள் அனுப்பினாலும் அவர்களிடம் பணம் புழங்குமாம். சூ வை கிழித்து அதன் அடியில், கீழ் உள் ஆடைக்குள் வைத்து எப்படியாவது கொண்டு வந்து விடுவார்களாம்.
வேதா அவர்களின் பதிவு இங்கு.
அவர்கள் கூற வந்த கருத்து, அதற்கு அவர்கள் சொன்ன தீர்வு போன்றவற்றில் எனக்கு முழு உடன்பாடு இருந்தாலும், அவங்கள் சொன்ன சில விசயத்தில் எனக்கு நெறுடல் உண்டு. அவை
//ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது.//
சமீபகாலம் என்பதும் தப்பு. இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் என்பது தப்பு.அதவும் இல்லாமல் இது சென்னையில் உள்ள பெரிய பள்ளிகளில் மட்டும் இது நடப்பது என்று சொல்வதும் தப்பு.
//அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது. //
இந்த மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் வேறு. அங்கு வரும் மக்கள் வேறு, அவர்களால் கையாளப்படும் போதை வகைகள் வேறு, அதை பற்றி பிறகு பாக்கலாம். பள்ளி, கல்லூரிகளை மட்டும் இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.
முன்பே சொன்ன மாதிரி சமீபகாலமாக எல்லாம் கிடையவே கிடையாதுங்க. ரொம்ப காலமா இருக்கு. வேண்டும் என்றால் சமீபகாலமாக வெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கின்றது என்று கூறலாம். இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் அதிகரித்து தான் காரணம் என்பதை ஒத்துக்க முடியாது. ஒரு கஞ்சா பொட்டலத்தின் விலை என்ன தெரியுமா? 7 ரூபாய் தான் நான் கல்லூரியில் படிக்கும் போது. ஒரு பொட்டலத்தை வைத்து 5,6 நபர்கள் உபயோகித்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். அதுவும் இல்லாமல் அவன் கஞ்சா அடித்து இருக்கின்றான் என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம். ஒரு வித மயக்கத்தில் அவர்கள் கல்லூரிக்கு வருவதும் உண்டு.
கல்லூரியில் தானே பள்ளியில் இல்லையே என்று சொன்னால் அங்கும் உண்டு, ஆனால் பள்ளியில் நான் படிக்கும் போது இவ்வளவு வெளிப்படையாகவும், பரவலாகவும் நடந்து நான் பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில் எங்கள் வயது ஒத்த மாணவர்கள் பயன்படுத்துவதாக பேச்சு உண்டு. எங்கள் பள்ளி மாணவர்கள் அவர்களை கஞ்சா அடிக்கும் பசங்க தான்னடா நீங்கனு சொல்லி கிண்டல் அடிக்கும் அளவுக்கு.
இது போக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க. இது எல்லாம் ஒரு பொட்டலத்தின் விலை ஐந்து ரூபாய்க்கு கீழ் தான். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும் பசங்களுக்கு இந்த 5 ரூபாய் ஒரு பெரிய காசு கிடையாது. இது பசங்க கிட்ட மட்டும் தான் இருக்குனு நினைக்காதீங்க பெண்களிடமும் பரவலாக உண்டு. என்ன சகவீதம் கொஞ்சம் கம்மி. இந்த மேற்கூறியவைகள் அனைத்தும் எங்கள் ஊரின் நிலைமை. ஓரு நகரத்தில் இப்படி என்னும் போது மாநகரங்களில் எப்படி இருக்கும் என்று எண்ணி பாத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் கூறிய சென்னையில் உள்ள பணக்கார பள்ளிகள், நீங்கள் எந்த பள்ளியை மனதில் வைத்து சொன்னீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிக்குறேன்.
சென்னையில் இருந்து பூந்தமல்லி போகும் வழியில் அமைந்து உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் என் நண்பர் (பேஸ்கட் பால் டீம் சீனியர்)உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றி இருந்தார். அவர் கூறிய விசயம், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணம் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போதும் எப்படி தான் சோதனை போட்டு உள் அனுப்பினாலும் அவர்களிடம் பணம் புழங்குமாம். சூ வை கிழித்து அதன் அடியில், கீழ் உள் ஆடைக்குள் வைத்து எப்படியாவது கொண்டு வந்து விடுவார்களாம்.
பிறகு அந்த பள்ளியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன், துப்புரவு பணியில் இருப்பர்கள் மூலம் சிகரெட் போன்றவைகள் பெற்று வந்தார்களாம். அதை கண்டுப்பிடித்த நிர்வாகம் ரைடு நடத்தி பணத்தை பறிமுதல் செய்து விட்டார்களாம். வேறு வழி இல்லாத மாணவர்கள் (10 ம் வகுப்பு) கெமிக்கல் லேப்பில் முயன்று ஒரு போதை பொருள் கண்டுப்பிடித்து (ஸ்பிர்ட் வாசம் தூக்கலா இருந்துச்சாம்) அதை பயன்ப்படுத்தி வந்து உள்ளார்கள். 9 வகுப்பு மாணவர்கள் அவர்களிடம் கேட்க இவர்கள் மறுக்க போட்டிக்கு 9 வகுப்பு மாணவர்கள் வேறு ஒன்றை புதுசா கண்டுப்பிடித்து பயன்படுத்தி உள்ளார்கள். கடைசியில் நிர்வாகம் இதை கண்டுப்பிடித்து சில மாணவர்களை வெளியில் அனுப்பி பிறகு தான் சரியாச்சாம்.
இத என்னனுங்க சொல்லுறது...

