Showing posts with label தலையெழத்து. Show all posts
Showing posts with label தலையெழத்து. Show all posts

Saturday, March 24, 2007

2011 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்

முக்கிய செய்தி : 2011 உலக கோப்பையை இந்தியா கிரிக்கெட் அணி கண்டிப்பாக கைப்பற்றும், அதற்கான அணியை இப்பொழுது இருந்தே தயார் செய்யப்படும் என்று இன்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணி பயற்சியாளர் _____________ தெரிவித்தார்.


இந்த உலகப் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தற்கான காரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி தன் அறிக்கை இன்று பி.சி.சி.ஐ. யிடம் சமர்பித்தது. அதில் இடம் பெற்று இருக்கலாம் என எண்ணப்படுவைகளில் சில

1, நாட்டு நலன் கருதி தோல்வி அடைந்து இருக்கலாம் என்று சந்தோஷ் அறிக்கை கூறுகின்றது

2, இந்தியா, பாகிஸ்தான் உறவு பலப்பட வேண்டும் நோக்கில் பாக் தோற்றுவுடன் நாமும் தோற்றால் பாகிஸ்தானுக்கு நம் மீது மதிப்பு கூடி அமைதி பேச்சுவார்த்தையில் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கைக்காக

3, டாம் மூடியை இந்திய அணி பயற்சியாளராக தேர்ந்து எடுக்க மறுத்தது. அதனால் தான் அவர் இந்திய அணியை இலங்கை அணி மூலம் பழி வாங்கி விட்டார்.

4, வெற்றிக்கரமான கேப்டன் கங்குலியை கேப்டன் பதிவியில் இருந்து இறக்கியது. (இதில் கடுப்பான கங்குலி மற்ற வீரர்களுக்கு கொடுத்து இருந்த தாயத்துகளை பறித்ததும் ஒரு முக்கிய காரணம்.)

5, அபி அப்பா இலங்கைக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்யும் போது அவர் நண்பர் குரங்கு ராதாவுடன் அமர்ந்து மேட்ச் பார்த்தது.


6. நம் கச்சேரி தேவ் கூறியதை முரளிதரனின் சூழ்ச்சியின் காரணமாக நம் இந்திய அணியினர் வீராச்சாமி படத்தை பார்க்க நேர்ந்ததால்.

மற்ற காரணங்களை நண்பர்கள் பின்னூட்டங்களில் ஈடுவார்கள். என்னால முடியல, அப்புறம் அழுதுடுவேன்......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்