Tuesday, August 15, 2006

எப்படி கிடைத்தது!!!

சுகந்திரம்!!!

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ


நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ


காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ

எப்படியோ வாங்கினோம்
இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்
எந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு
மிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு
எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு
தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு


உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு
எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு
தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு
தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்
நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.
தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு

தொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு

ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.



எல்லாருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்!!!


ஒலி வடிவில்

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஜெய்ஹிந்த்!!!
வந்தே மாதரம்!!!

57 comments:

நாகை சிவா said...

சோதனை!

Unknown said...

/ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்./

நெஞ்சை தொட்ட வரிகள்.நன்றி சிவா.இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.சூடானில் இன்றைய தேதி என்ன?அமெரிக்காவில் இன்றுதான் ஆகஸ்ட் 15.

நாகை சிவா said...

//நெஞ்சை தொட்ட வரிகள்.நன்றி சிவா.இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.சூடானில் இன்றைய தேதி என்ன?அமெரிக்காவில் இன்றுதான் ஆகஸ்ட் 15. //

நன்றி செல்வன். எனக்கும் இன்று தான் ஆகஸ்ட் 15. இந்திய நேரத்தை விட 2 1/2 மணி நேரம் குறைவு(பின்னால்)
காலையிலே இந்த பதிவை போடலாம் என்று இருந்தேன். வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது தான் தாமதம்.
இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்!

கப்பி | Kappi said...

// விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.//

சுதந்திர தின வாழ்த்துக்கள் சிவா..

கால்கரி சிவா said...

//என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.//

நிச்சயமாக.. உலகில் எந்த முலையில் இருந்தாலும் உன்னை நினைந்திருப்போம்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்

Santhosh said...

//ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.//
கலக்கிட்டே சிவா, எனது ஆசையும் இதே. வருங்கால வல்லரசின் மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

வருக வருக கப்பி, நான் சொன்னது உண்மை தானே. இப்பொழுது இல்லாவிட்டால் பின் எப்பொழுது. நம்மால் முடியாவிட்டால் பின் யாரால்?

நாகை சிவா said...

//நிச்சயமாக.. உலகில் எந்த முலையில் இருந்தாலும் உன்னை நினைந்திருப்போம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள் //
நன்றி சிவா. இதற்கு நீங்களே ஒரு சிறந்த உதாரணம். :)

நாகை சிவா said...

//கலக்கிட்டே சிவா, எனது ஆசையும் இதே. வருங்கால வல்லரசின் மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். //
நம் அனைவரின் ஆசையும் அதானே. கண்டிப்பாக நிறைவேறும் பங்காளி.

Syam said...

ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை பங்கு....அதையும் மூவண்ணத்தில் சொல்லியவிதம் சூப்பர்...

இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்

PS:இது எல்லாம் நீயே யோசிச்சு எழுதினதா இல்ல கோயில்ல.....?

Prasanna Parameswaran said...

Romba nalla varigal Siva! For our country to improve we need vision, and we need to work towards that vision. We may have many dreams, but it is that vision that creates wonders! Let us all have vision.

வடுவூர் குமார் said...

சிவா
இதில் எதை எடுப்பது எதை ஒட்டுவது? அதெல்லாம் தேவையல்லாதது.
மேல அலையைப்போட்டு கீழே முத்துக்களை போட்டுட்டீங்க!!
குழந்தையாக இருந்தால் இந்தாருங்கள் ஒரு பெரிய முத்தா...என்று கொடுத்திருப்பேன்.
வாழ்த்துக்கள்.
முயல்வோம் முன்னேறுவோம்,முன்னேற்றுவோம்.

கைப்புள்ள said...

நல்ல பதிவு சிவா. வாழ்த்துகள்.

சீனு said...

nalla pathivu....gr8 lines....thanks

நன்மனம் said...

நல்ல பதிவு சிவா. வாழ்த்துகள்.

இராம்/Raam said...

சிவா,

வாழ்த்துக்கள்

மனதின் ஓசை said...

சிவா..
சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
நல்ல பதிவு.. ஆனால் அதே நேரத்தில் இந்த சுதந்திர பூமியில் ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கிக் கொண்டு இருக்கும் நம் அனைவரின்( ஒரு சிலரின் பதவி/பண வெறி, பலரின் இயலாமை, மிகப் பலரின் கவலை படாத மனநிலை) மேலும் வெறுப்புதான் மிஞ்சுகிறது..
சுதந்திரத்தின் அருமை பெருமைகளை அறியாமல் இருக்கிறோமே என வேதனையாக இருக்கிறது...எப்படி கிடைத்தது என யோசிக்கிறோமா? வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறோமா? நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என பயமாக இருக்கிறது...
பொதுநலத்தை பொதுவில் மட்டுமே பேசி சுயநலத்தை மனதில் ஏற்றி வைத்து வழும் வாழ்க்கை முறையை கற்றுத்தேர்ந்து விட்டோம்...
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெடில் மட்டும் தேசப்பற்றை காட்டுபவர்கள் ஆகி விட்டோம்.


இப்படிபட்ட பிரச்சினைகளுக்கு நடுவிலும் நமது நாட்டினை உண்மையாய் நேசிக்கும் நெஞ்ஜத்தினை அனைவருக்கும் இறைவன் கொடுக்கட்டும்....அனைவரும் வரலாற்றை அறிந்து கொள்ள வழி பிறக்கட்டும்...சுதந்திரத்தின் உண்மை ஆற்றல் வெளிவரட்டும்.பாரத மாதாவின் புகழ்க்கொடி உலகெங்கும் வானுயர பறக்கட்டும்..ஜனநாயகத்தின் பலன் தாய்த்திரு நட்டிற்கு முழுமையாய் கிடைக்கட்டும்.

Geetha Sambasivam said...

சிவா, ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டி இருக்கே ஏன் இப்படி? மத்தபடி பதிவு நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

சிவா... எழுத்தில் வண்ணங்களையும் சேர்த்து தேசிய உணர்வை அழகாக எழுதியிருக்கிறீர்கள் !

சிவா,
விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள் !

Raji said...

Belated Independence day wishes..

The post was very thoughtful. Beautifully written.

நாகை சிவா said...

//ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை பங்கு....அதையும் மூவண்ணத்தில் சொல்லியவிதம் சூப்பர்...//
நன்றி பங்காளி!

//இது எல்லாம் நீயே யோசிச்சு எழுதினதா இல்ல கோயில்ல.....? //
யோவ் ஏன்? ஏன்னு கேட்டேன்.
சங்கத்தில போய் பாரு, மண்டபத்தில் இருப்பவர்களுக்கே நான் தான் எழுதி கொடுத்துக்கிட்டு இருக்கேன். :)

நாகை சிவா said...

//For our country to improve we need vision, and we need to work towards that vision. We may have many dreams, but it is that vision that creates wonders! Let us all have vision. //
வாங்க பிரச்சனா. விஷனை முடிவு செய்தாகி விட்டது. அதை நோக்கி பயணப்பட வேண்டியது தான். செய்து முடிப்போம்.

நாகை சிவா said...

//குழந்தையாக இருந்தால் இந்தாருங்கள் ஒரு பெரிய முத்தா...என்று கொடுத்திருப்பேன்.//
இன்னும் குழந்தை தான் குமார். அதனால் கொடுக்கலாம். :)

//வாழ்த்துக்கள்.
முயல்வோம் முன்னேறுவோம்,முன்னேற்றுவோம். //
கண்டிப்பாக முன்னேற்றுவோம். முன்னேறும்.

நாகை சிவா said...

//ஆக எது எப்படி இருந்தாலும் இது நம் நாடு, நம் வீடு:)
வாழ்க பாரதம்:)
வாழ்க நம் நாடு:) //
இல்லையா பின்ன. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல் ஆகுமா....... அனுபவித்து சொல்கின்றேன்

நாகை சிவா said...

//நல்ல பதிவு சிவா. வாழ்த்துகள். //
வா தல. உன் வாழ்த்து என் பாக்கியம்

நாகை சிவா said...

//நல்ல பதிவு சிவா. வாழ்த்துகள். //
//nalla pathivu....gr8 lines....thanks //
//சிவா,
வாழ்த்துக்கள் //
நன்றி நன்மனம்
நன்றி சீனு.
நன்றி ராம் :)))))

நாகை சிவா said...

//சிவா, ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டி இருக்கே ஏன் இப்படி? மத்தபடி பதிவு நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். //
எங்க கீதா, எழுத்து ரொம்ப சின்னதா இருக்கா. இல்ல வண்ணங்களால் பிரச்சனையா???? சொன்னா உடனே சரி செய்து விடுவேன்

நாகை சிவா said...

//சிவா... எழுத்தில் வண்ணங்களையும் சேர்த்து தேசிய உணர்வை அழகாக எழுதியிருக்கிறீர்கள் !//
ரொம்ப நன்றி கண்ணன், இந்த வண்ணங்கள் நம் வாழ்விலும் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

நாகை சிவா said...

//வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறோமா? நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என பயமாக இருக்கிறது...//
ஹமீது, உங்கள் கோபம் புரிகிறது. மற்றவைகளை விடுங்கங்கள். வரலாறு மிக சரியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று நினைக்கின்றீர்களா. மிக மோசமாக பதிவு செய்ப்பட்டு உள்ளது. அதை பற்றி ஒரு பதிவு விரைவில்....ஒரு உதாரணத்துடன்

நாகை சிவா said...

//Belated Independence day wishes..

The post was very thoughtful. Beautifully written. //
வாழ்த்துக்களுக்கும் உங்கள் ஊக்கங்களுக்கும் நன்றி ராஜி.

Butterflies said...

very very very thought provoking post!!!!nalla irunthathu....konjam busy in office adikadi blogs visit panna mudila....nalla post~!very inspiring!

Geetha Sambasivam said...

சிவா,
எழுத்து font மாத்தி இருக்கீங்க போல இருக்கு. ரொம்பப் பொடியா இருக்கிறதோடத் தெளிவாவும் தெரியலை. ஒருமுறை பின்னூட்டங்களை மட்டும், பின்னூட்டப் பெட்டி வராமல் போட்டுப் பாருங்க, நான் கண்ணாடி போட்டும் படிக்க முடியலை.

ambi said...

Belated இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் siva!!! Jai hind!

//நான் கண்ணாடி போட்டும் படிக்க முடியலை//
@geetha, he hee, vayasaanale apdi thaan madam! :)

ambi said...

Belated Happy Independence siva!

//நான் கண்ணாடி போட்டும் படிக்க முடியலை//
@geetha, he hee, age ayuduchu illa athaan!

நாகை சிவா said...

//To My country and my people, I pledge my devotion.In their well being and prosperity alone,lies my happiness.
Mera bharath Mahan. //
வாங்க C.T. நீங்கள் கூறியதை அப்படி வழி மொழிகின்றேன்.
ஜெய்ஹிந்த்

நாகை சிவா said...

//very very very thought provoking post!!!!nalla irunthathu....konjam busy in office adikadi blogs visit panna mudila....nalla post~!very inspiring! //
நன்றி சுபா.
ஆபிஸ்ல அப்ப அப்ப வேலையும் பாருங்க. வேல மறந்திட கூடாதுல :)
நேரம் கிடைக்கும் போது மறக்காமல் வந்து பாருங்கள்.

நாகை சிவா said...

//எழுத்து font மாத்தி இருக்கீங்க போல இருக்கு. ரொம்பப் பொடியா இருக்கிறதோடத் தெளிவாவும் தெரியலை. ஒருமுறை பின்னூட்டங்களை மட்டும், பின்னூட்டப் பெட்டி வராமல் போட்டுப் பாருங்க, நான் கண்ணாடி போட்டும் படிக்க முடியலை. //
உங்களுக்காக மாத்தி விடுகின்றேன். போதுமா. ஒரு பய புள்ளய தேடிக்கிட்டு இருக்கேன். கிடைச்சா சரி பண்ணிட வேண்டியது தான்.....
:))))

நாகை சிவா said...

//Belated இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் siva!!! Jai hind!//
நன்றி அம்பி!

//நான் கண்ணாடி போட்டும் படிக்க முடியலை//
@geetha, he hee, vayasaanale apdi thaan madam! :)//
ஹிஹி. நான் என்னத்த சொல்லுறது. கீதா மேடம் தான் வந்து பதில் சொல்லனும்.

Amar said...

அருமையான பதிவு சிவா.

மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம்.

VSK said...

உணர்வுபூர்வமான, உள்ளத்தைத் தொட்ட வரிகள் அத்தனையும்!
எழுச்சி கொள்ள வைத்தமைக்கு நன்றி!

VSK said...

உணர்வுபூர்வமான, உள்ளத்தைத் தொட்ட வரிகள் அத்தனையும்!
எழுச்சி கொள்ள வைத்தமைக்கு நன்றி!

நாகை சிவா said...

//அருமையான பதிவு சிவா.
மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம். //
நன்றி சமுத்ரா!
கண்டிப்பாக மாற்றுவோம் ஒரு மேம்பட்ட இந்தியாவாக!

நாகை சிவா said...

//உணர்வுபூர்வமான, உள்ளத்தைத் தொட்ட வரிகள் அத்தனையும்!
எழுச்சி கொள்ள வைத்தமைக்கு நன்றி//
மிகவும் நன்றி எஸ்.கே!
உங்கள் ஊக்கத்திற்கும் நன்றி

Unknown said...

பாருங்க அங்க பின்னூட்ட விளையாட்ட வேடிக்க பாத்து இதை கண்டுக்கலை, இதனாலதான் அந்த வெளாட்டுக்கே போறதில்ல.... ரொம்ப நல்லா இருக்குங்க....

நாகை சிவா said...

//பாருங்க அங்க பின்னூட்ட விளையாட்ட வேடிக்க பாத்து இதை கண்டுக்கலை, இதனாலதான் அந்த வெளாட்டுக்கே போறதில்ல.... ரொம்ப நல்லா இருக்குங்க//
நன்றி மகி!
அப்ப அப்ப அந்த விளையாட்டும் விளையாடுனா தான் நல்லா இருக்கும். ஆனா வினையாகாம பாத்துக்கனும் அம்புட்டு தான்.

Anonymous said...

Une trace,un sourire from Belguim

உங்கள் நண்பன்(சரா) said...

சிவா!
சுதந்திர தினச் சிறப்புப் பதிவு இன்னும் 50 அடிக்கலையா?

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

சுதந்திர இந்தியாவின் உண்மைக் "குடிமகனா" நானே 50 அடிக்கனும்னு ஆசைப்படுறேன்,

இந்தா நண்பா 50,



அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

சரவணன் வாப்பா. இந்த பதிவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை முக்கியம் கிடையாது நண்பா.

உங்கள் நண்பன்(சரா) said...

நாகை சிவா said...
//சரவணன் வாப்பா. இந்த பதிவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை முக்கியம் கிடையாது நண்பா. //

எவ்வளவு ஆர்வமா வந்து பின்னூட்டம் போட்டேன்?:((((((((((((


அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

சரவணன், தப்பாக பொருள் கொண்டு விடாதீர்கள். நான் கூறியது பின்னூட்ட எண்ணிக்கையை தான், உங்கள் வருகையை அல்ல. அதுவும் இந்த பதிவுற்கு தான். நாம் ஜல்லி அடிக்கும் பதிவிற்கு கண்டிப்பாக நான் ஜல்லி அடிக்க உதவ வேண்டும்..... :)))))))

ILA (a) இளா said...

//விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்//
பதில் சொன்னால் என்ன பிரச்சினை வந்துசேருமோ என்ற சுதந்திரத்தில சுதந்திர நல்வாழ்த்துக்கள்

Ramya said...

romba azhagaaga ezhuthiyirukeenga.poruthathu podhum pongi ezhavendum nam indhiya naadu.evvalavu sodhanayai sandhithu naam appadiye irupadhu?we must retaliate to every attacks.its not wrong to fight back to win security and peace not across the borders alone but within the country also.

நாகை சிவா said...

//பதில் சொன்னால் என்ன பிரச்சினை வந்துசேருமோ என்ற சுதந்திரத்தில சுதந்திர நல்வாழ்த்துக்கள் //
இதை கூட சுகந்திரமாக சொல்கின்றீர்கள் பாருங்க இளா :)
சுகந்திர தின வாழ்த்துக்கள்.
பிரச்சனையே உங்கிட்ட எதுக்கு பிரச்சனைனு பிரச்சனை பண்ணாம போகும், அப்புறம் என்ன பிரச்சனை.

நாகை சிவா said...

//not across the borders alone but within the country also. //
நல்லா சொன்னீங்க ரம்யா!
முதலில் உள்நாட்டில் இருப்பவர்களை சரி பண்ணனும். பண்ணுவது ஒன்றும் பெரிய விசயம் இல்ல. அதை பண்ண போவது யாரு என்பது தான் இப்போதைய கேள்வி.

Janani said...

Romba nala ezuthi irukeenga....What our country needs is vision as IA says but also the guts to follow the vision...

நாகை சிவா said...

உண்மை தான் ஜனனி!
கனவு கண்டால் மட்டும் போதாது, அந்த கனவுகளை நினைவாக்க உழைக்க வேண்டும். உழைப்போம். கனவை, லட்சியங்களை அடைவோம்.