தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.
*******
தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.
*******
எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.
*******
தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.
*******
Monday, May 11, 2009
கதம்பம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, May 11, 2009
15
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Wednesday, March 11, 2009
நன்றி நவில்தல்
வழக்கம் போல் இந்த வருடமும் நம் ப்ளாக் நட்புகள் பாச மழையை பொழிந்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார்கள். அதிலும் போன வருடத்தில் இருந்து அவ்வளவாக எழுதுவது இல்லை. போன வருடம் ஊரில் இருந்ததால் ப்ளாக் மக்கள் ஞாபகம் வச்சு வாழ்த்தினாங்க, இந்த வருடம் அவ்வளவாக கண்டுக்க மாட்டங்க என்று நினைச்சேன். ஆனால் அதை பொய்பித்து காட்டும் விதமாக கலக்கிட்டாங்க.
அதிலும் ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணுங்க - பிறந்தநாள் வாழ்த்து பதிவு (ரொம்பவே ஒவரா தான் எனக்கே படுது) ஒருத்துனுக்கு ஒரு வயசு ஏறுது என்பதில் என்ன ஒரு ஆனந்த சந்தோசம் பாருங்க இந்த மக்களுக்கு.
1, சங்கத்து சிங்கம் ராயல் ராம் - கவுஜை நாயகன் என்பதை நிருபித்து உள்ளார் நம்ம ராயலு.
2. பிரவாகம் காயத்ரி - என்னிடம் கேட்டு இருந்தா கூட இப்படி பதில் சொல்லி இருப்பேனோ என்பது சந்தேகம் தான்.
3. என்னமோ போ Raz - ஒவர் நக்கல் ஆகிடுச்சு. அன்புத் தோழி அதனால் மன்னிச்சாச்சு.
உங்க மூவருக்கும் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. ICC பிரச்சனையால் அன்னிக்கு இணையம் பக்கம் வர முடியல. அதனால் தான் ஒரு போஸ்ட் போட்டு நன்றி நவில்றேன்.
அதிலும் காயத்ரி பதிவுல இருந்த அந்த வீடியோவை பாத்துட்டு உண்மையிலே அசந்துட்டேன். அதை உருவாக்க உதவிய ராம், கானா பிரபா, கே4கே அண்ணாச்சி, காயத்ரி இவங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
அது போக ஆர்குட், பேஸ்புக், கைப்பேசி, மின் அஞ்சல், SMS, பின்னூட்டம், (இ)வாழ்த்து அட்டை என பலவழிகளிலும் வாழ்த்திய அம்புட்டு சனத்துக்கும் மிக்க நன்றி. __/\__
இப்போ தனக்கு தானே சொறிந்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பு (அப்ப மேலே உள்ளது... உச்ச்ச்ச்ச் கண்டுக்கப்பிடாது)
மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.
என்னோட இம்சைக்கு காரணமாக அமைந்த அந்த மூவரை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்து விரும்புகிறேன். அறுசுவை பாபு, ப்த்ரி, ரஜினி ராம்கி.
இதற்கு உங்கள் வாழ்த்துக்களும், வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, March 11, 2009
41
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் நன்றி, புலி, வலைப்பதிவு, வாழ்த்து, விளம்பரம்
Tuesday, October 30, 2007
எல்லாம் ஒரு விளம்பரம் தான்~
டிவியில் விளம்பரங்களுக்கு நடுவில் கிரிக்கெட் பாக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே நமக்கு விளம்பர படத்தின் மேல் ஒரு காதல் உண்டு. ஒரு ஒவரில் முதல் பந்தையும் கடைசி பந்தையும் முழுங்கி முழுங்கி விளம்பரங்கள் போட்டு நமக்கு அப்படி ஒரு காதலை வர வைத்த தூர்தர்சனுக்கு தான் நன்றி சொல்லனும். ஒரு ஒவருக்கும் அடுத்த ஒவருக்கும் இடையில் 4, 5 விளம்பரங்கள் போட்டு விடுவார்கள். அப்படி பார்த்து பார்த்து ஆரம்பிச்ச நம்ம காதல் ஒரு நிமிடத்திற்க்குள் சொல்ல வேண்டிய விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் இந்த கண்கட்டி வித்தை பார்த்து கிறங்கி காதல் கன்னாபின்னானு பெருகி போச்சு. அப்படி நான் ரசிச்ச சில விளம்பரங்களை பத்தி பேச தான் இந்த பதிவு.
இந்திய விளம்பரங்களை பற்றி மட்டும் இந்த பதிவுல பாப்போம்.
சமீபகாலமாக வரும் ஹைடெக் ஆன விளம்பரங்கள் நாம் இப்ப அடிக்கடி பாத்து கொண்டு இருப்பது தான். அதனால் சில காலங்களுக்கு முன்பு வந்த சில விளம்பரத்தை பார்ப்போம், அதுவும் போக இப்பொழுது வர விளம்பரங்களில் பல ஆண்களையும், பெண்களையும் செம கவர்ச்சி காட்டி எடுக்கப்படுது, அந்த நேரத்தில் வாய் பிளந்து பாத்தாலும்,சில காலம் கழித்து இந்த விளம்பரங்கள் எல்லாம் மனதில் இருக்குமா என்றால் சந்தேகம் தான்.
* விளம்பரத்திலே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஊருல இருக்குற அம்புட்டு பேர் வாயில் அந்த பெயர புரள வைத்த புள்ளிராஜா விளம்பரம் உண்மையிலே ஒரு சூப்பர் விளம்பரம் தாங்க... புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமானு அந்த ஒத்த வார்த்தை வச்சு பட்டைய கிளப்பிட்டாங்க நம்ம ஆளுங்க. பல விமர்சனத்துக்கு உள்ளான விளம்பரம் அது. இருந்த போதிலும் அனைவரையும் சென்ற அடைந்த விளம்பரத்தில் இதுவும் ஒன்னு.
* நீங்க எந்த காலேஜ், காலேஜ் ஜா நானா... மம்மி.. அப்படினு ஒரு விளம்பரம், மைசூர் சாண்டல் சோப்பா.. சரியா தெரியல... அது ஒரு அழகான கவிதை. இப்ப அதே விளம்பரம் மாதவனை வச்சு வருது போல, ரீமிக்ஸ் எடுப்படல.
* சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய், என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ இருந்த ரீகல உஜாலா விளம்பரம் ஒரேடியா கவுத்துடுச்சு. நாங்க உஜாலாவுக்கு மாறிட்டோம், அப்ப நீங்கனு, கேட்டு கொக்கு ஏன் வெள்ளையா இருக்கு, அது உஜாலாவுக்கு மாறிடுச்சுனு நம்மிடைய காமெடி பண்ணும் அளவுக்கு உஜாலா விளம்பரம் இருந்துச்சு.
* காபினா நரசுஸ் காபி தான் பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு
* சூ.. சூ... அந்த சுகர் பாய்ய வர சொல்லு (ப்ரூ)
மேல சொன்ன விளம்பரங்கள் எல்லாம் எந்த ஒரு பெரிய விசுவல் கான்சாப்ட்டும் இல்லாம வெறும் வார்த்தைகளை வைத்து ஹிட்டான விளம்பரங்கள். இது போல ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு. சில சமயம் மொக்கையான சில வார்த்தைகளை வச்சுக்குட ஹிட் குடுத்து இருக்காங்க. உ.தா. குளிக்காத (ஏதோ ஒரு சோப் விளம்பரம்), இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்.
அந்த விளம்பரங்கள் எல்லாம் ஒரு வகைனா, விஸ்வல் மூலமும் அழகான ஒரு கவிதையை நம் முன் கொண்டு வருவது இன்னொரு வகை. எனக்கு பிடித்தவையும் கூட. இந்த வகையில் ஏகப்பட்ட அழகான விளம்பரங்கள் இருக்கு. பஜாஜ், ஹட்ச், ஏர்டெல், நெஸ்கபே, டைட்டன், கேட்பரீஸ், பெச்சி, கோக் போன்ற நிறுவனங்களில் விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுமையாக வரும். ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று திணறும் அளவுக்கு இருக்கும் அவர்களின் சில விளம்பரம். ஒவ்வொரு நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தே ஒவ்வொரு பதிவு போடலாம்.
பதிவின் நீளத்தை கருதி அவற்றை விரிவாக பேசாமல் எனக்கு மிகவும் பிடித்த சில விளம்பரங்கள் கீழே இணைத்து உள்ளேன். கண்டு மகிழுங்கள். உங்கள் கருத்தையும் உங்களை கவர்ந்த சில விளம்பரங்கள் பற்றியும் பின்னூட்டங்களின் கூறுங்கள். கடைசியாக உள்ள வீடியோ காட்சியை காணத் தவறாதீர்கள்.
Airtel
Hamara Bajaj
நமது கலாசாரத்தை அழகாக காட்டிய விளம்பரம் இது. ஆல் டைம் பேவரைட் ல ஒன்னு.
Cadburys DiaryMilk
Bajaj Caliber
Respect your National Anthem, Respect your Nation
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, October 30, 2007
47
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, September 24, 2007
சிங்கம் களம் இறங்கிடுச்சு!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, September 24, 2007
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா



