வணக்கம் நண்பர்களே!
இது வரை நான் உருப்படியாக எந்த ஒரு பதிவும் எழுதவில்லை என சில நண்பர்கள் கூறினார்கள். அது உண்மையும் கூட. எனக்கு உருப்படியாக எந்த ஒரு விசயமும் எழுத தெரியாது என கூறினேன். அத தான் எங்களுக்கு தெரியுமே... அதனால் நான் வெளிநாடுகளில் கண்ட, கேட்டு தெரிந்து கொண்ட சில விசயங்களை எழுதும்மாறு கேட்டுக் கொண்டார்கள். அதிலும் திரு.அறுசுவை பாபு அண்ணன் மற்றும் சிலரும் சூடானை குறித்தும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதும்படி தூண்டினார்கள். அவர்கள் எல்லாரும் என் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருப்பதை பார்த்தால் எனக்கு சற்று பயமாக தான் உள்ளது. சரி, ஆனது ஆச்சு, நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த விசயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். அதனின் முதல் வெளிபாடு தான் பின்வரும் புகைப்படங்கள். கண்ணி வெடிகளை குறித்து யாரும் இதற்கு முன்பு வலைப்பதிவில் எழுதி உள்ளார்களா எனத் தெரியவில்லை. அப்படி யாரும் எழுதி இருந்தால் தெரிவிக்கவும்.
இவை அனைத்து தற்பொழுது என் அலுவலக வளாகத்தில் உள்ளவை. இந்த புகைப்படங்களை பற்றியும் அது எந்த வகைகளை சார்ந்தவை போன்ற எந்த விளக்கமும் இப்பொழுது கொடுக்கவில்லை. விரிவாக கண்ணி வெடிக்களை பற்றியும், அதன் வகைகளை பற்றியும், கண்ணி வெடிகள் இருக்கும் இடத்தில் தாங்கள் சிக்க கொண்டால் அந்த இடத்தில்(நேரத்தில்) என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் படங்களுடன் விரிவாக பின்வரும் தொடர்க்களில் எழுதலாம் என்று உள்ளேன். இந்த பதிவை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இடைக்குறிப்பு : கடைசி இரு புகைப்படங்களை காண தவறாதீர்கள்.(முக்கியமாக சங்கத்து சிங்கங்கள்)







*** இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.

*** இது நம்ம தலக்கு மிகவும் பிடித்தது. சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.
