சங்கிலி பதிவிட அழைத்த சங்கத்து சிங்கங்கள் தல கைப்புள்ளைக்கும், அண்ணன் வெட்டிகாருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு நேரா கேள்விக்கு போகலாம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியல. நினைவு தெரிந்துனா Mr.பாரத். அதுல என்னத்த உணர்ந்தேன் என்பதை இப்ப உணர முடியல. நாகையில் அப்ப மூன்று திரையரங்கம் தான். சிறுவயதில் அடிக்கடி சினிமா சென்ற ஞாபகம் இருக்கு. அப்பா வோடு சென்றது ரொம்பவே கம்மி தான். கடைசியாக நாங்கள் இருவரும் சேர்ந்த பார்த்த படம் என்றால் Iron Leg (15 வருசம் இருக்கும்) அம்மாவோடும் கம்மி தான், ஆயுத எழுத்து (அக்கா திருமணம் முடிந்த பிறகு பார்த்த படம்) இரண்டுமே பாண்டியில் (முதலாவது ஆனந்தா அடுத்து ஸ்ரீராமன், இரண்டு அரங்கமும் இப்ப இல்லை:) )
நம்மை சினிமாவுக்கு அடிமைப்படுத்திய பெருமை என் மச்சானுங்களுக்கு தான் சேரும், அவர்கள் நாகை வந்தாலும், நான் தேவகோட்டை சென்றாலும் சினிமா பார்ப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதும் மட்டும் தான் வேலை. பள்ளிக் காலங்களில் பாண்டிக்கு செல்லும் போது எல்லாம் அடிக்கடி வீட்டில் சொல்லிவிட்டு சினிமாவுக்கு செல்வது உண்டு. 11ம் வகுப்பில் இருந்து தான் கட் அடித்து சினிமா பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. முதல் படம் - இந்தியன். அதன் பிறகு எந்த படமாக இருந்தாலும் விடுவது இல்லை. அதிலும் குறிப்பாக தெலுங்கு டப்பிங் (சாய்க்குமார், ராஜ்சேகர், வெங்கடேஷ், சிரஞ்சீவி எங்கள் ஆஸ்தான நாயகர்கள்) மற்றும் ஆங்கில டப்பிங் படங்கள் தான் (ஜெட் லீ). அதுவும் போக வீட்டிற்கு அருகில் வீடியோ கடை இருந்ததால் அனைத்து படங்களையும் ஒசியில் கண்டு ரசித்தது உண்டு.
கல்லூரி சென்ற பிறகு திரையரங்கில் பதிவேடு வைக்கும் அளவுக்கு நம்ம சினிமா மோகம் இருந்தது. சினிமா பார்ப்பதை பெருமையாக நினைக்காமல் கடமையாக நினைத்த காலம் அது. ஊர் ஊராக சென்ற சினிமா பார்த்த பருவம். படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அதை பெருந்தன்மையாக தாங்கிய பருவமும் கூட.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ராமன் தேடிய சீதை & ஏகன். முதல் படம் ஆரம்பத்தில் சேரனின் நடிப்பை கண்டு வாங்கடா போயிடலாம் என்றேன், பசங்க வரல. பிறகு மருத்துவமனை காட்சியை கண்டு பசங்க கூப்பிட நான் போகலையே (பழிக்கு பழி). ஏகன் பற்றி என்னத்த சொல்ல, ராஜு சுந்தரம் தன் நடனத்தை தொடர்வது நல்லது. அஜித் முடிந்த அளவு ஆடி இருக்கார்ல?
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தமிழ் - தில்லுமுல்லு & கோவில், ஆங்கிலம் - He Got Game - சூடானில் தங்கி இருக்கும் அறையில். தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அப்படி இருந்த ரஜினியை இப்படி ஆக்கிடானுங்களே என்று வாசு மேல நல்லாவே கோவம் வருது. கோவில் - சிம்பு இந்த படத்தில் நடித்த மாதிரியே வாய் அடக்கமா நடித்தால் எவ்வளவு நல்லா இருக்கும். He Got Game - Denzel Washington & Ray Allen நடிச்ச படம். நல்ல படம். நேரம் இருந்தால், கூடைப்பந்து பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நாம தான் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் தாக்கிக்கிட்டு இருக்கோம். அது எங்க நம்மள தாக்குவது. நினைவில் இருக்கும் சில படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நின்றுக் கொண்டே பார்த்த ஒரே படமான மன்னன், டிக்கெட் கிடைக்காமல் காத்து இருந்து அடுத்த காட்சி பார்த்த படையப்பா(காரைக்காலில்),கல்லூரியே திரண்டு சென்று பார்த்த காதலர் தினம், எத்தனை தடவை பார்த்தோம் என்று கணக்கு இல்லாத படையப்பா(நாகையில்), ஊர் ஊராக சென்று பார்த்த அலைபாயுதே, ஃபைக்ல 4 நபர்கள் சென்று பார்த்த சாமி(திருவாரூர்), கார் எடுத்து சென்று பார்த்த பத்ரி(மாயவரம்) அடித்து பிடித்து டிக்கெட் எடுத்த பார்த்த காதல் தேசம்(பாண்டி) 2 நாளில் நாகையில் இருந்து எடுத்த விட்டார்கள் என்று திருச்சிக்கு சென்று பார்த்த கன்னத்தில் முத்தமிட்டால், சும்மா போய் பார்ப்போம் என்று சென்று மிரண்ட சேது, தேர்வை அவசர அவசரமான முடித்து விட்டு சென்ற ஆய்த எழுத்து, முதல் தடவை பார்த்தப்ப ஏன் இந்த படம் நமக்கு பிடிக்கல என எண்ண வைத்த அன்பே சிவம், திரை அரங்கில் தான் காண வேண்டும் எனக் காத்து இருந்து கண்ட சிவாஜி, இது போல இன்னும் ஏகப்பட்ட மறக்க முடியாத படங்கள் இருக்கு.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
கழுதை நம்மள என்னத்த தாக்க போகுது. சினிமா வந்தா பாத்தோமா அதை பத்தி நண்பர்களுடன் பேசினோமா அடுத்த வேலைய பாக்க போனாமனு இருக்குற ஆளு நான். அதுனால பெருசா எதுவும் நம்மள தாக்கல. இருந்தாலும் ஆளு ஆளுக்கு பஞ்ச் டயலாக் மூலமா சக நடிகர்களை வம்புக்கு இழுப்பது, இமேஜ் என்ற வட்டத்தில் அடைப்பட்டுக் கொள்வது, எல்லாத்துக்கும் ரஜினியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்வது, எதாச்சும் பேசனும் என்பதுக்காக அதிகப்படியா பேசுவது(தமிழன் உருப்புடுவானா....), சினிமா வை வைத்து அரசியல் பண்ணுவது,அந்த பெயர வைக்காத இந்த பெயர வைக்காதனு... இது எல்லாம் எப்படா நிறுத்துவீங்க என்று இருக்கு.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கமல், மணித்ரத்னம், ஷங்கர், P.C ஸ்ரீராம் படங்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை தெரிந்துக் கொண்டு படம் பார்க்கும் ஆவல் உண்டு. என்னை கவர்ந்தது என்றால் கறுப்பு ரோஜா என்ற படத்தில் தான் முதல் முதலாக DTS(இந்தியாவில்) அறிமுகப்படுத்த பட்டது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாகப்பட்டது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லையா பின்ன. சினிமா இல்லாத தமிழ் இதழ்கள் ரொம்பவே கம்மி ஆச்சே.
7.தமிழ்ச்சினிமா இசை?
என் தனிமை நேரத்து தோழன் தமிழ்ச்சினிமா இசை. அதிலும் என்றும் ராஜா தான். எல்லா இசையும் கேட்பது உண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பெரும்பாலும் ஆங்கில படங்கள், அரிதாக ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள். கவர்ந்த படங்கள் என்று சொன்னால் Brave Heart, Forest Gump, Pirates of Carribean, Phone Bhooth, The Rock, The Last king of Scotland, Blood Diamond......
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. நண்பர்கள் சிலர் சினிமா துறையில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களிடம் கதை கேட்பதோடு சரி. தொடர்ந்து தமிழ் சினிமா பாத்துக்கிட்டு வரேன், அது தொடர்ந்தாலே போதும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லா தான் இருக்கும். பாலா, அமீர்,வெங்கட் பிரபு, லிங்குசாமி, வெற்றிமாறன் போன்றோர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். அது போக ஹீரோ வழிப்பாட்டு பாடல், புரட்சி தளபதி, சின்ன இளைய தளபதி போன்ற அடைமொழி, கவர்ச்சி வேறு ஆபாசம் வேறுனு ஜல்லி அடிச்சுட்டு மார்புக் கோட்டையும், தொப்புளையும் Closeup வைப்பது போன்றவற்றை தவிர்க்கலாம் கூடவே தாலி செண்டிமெண்ட்டும் வேண்டாம் தாலியை தூக்கி ஏறியுற K.B. சிந்தனைகளும் வேண்டாமே.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷம். விட்டு போன மற்றும் பழைய நல்ல படங்களை பார்க்கலாம். அதை தான் இப்ப செய்துக்கிட்டு இருக்கேன் என்பது வேற விசயம். ஊடகங்களால் எனக்கு எந்த பாதிப்பது இருக்காது. ஆனால் தமிழ் சினிமா இல்லை என்றால் ஊடகங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். தமிழ் சினிமாவை வைத்து அரசியல் செய்துக் கொண்டு இருக்கும் தலைவர்கள் வேறு துறையை தேட வேண்டியது இருக்கும். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தே பிழைப்பை ஒட்டும் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவே இல்லாட்டினா சினிமா விருது வழங்கும் விழாவும் இருக்காது, அய்யோ நம் தமிழக அமைச்சரவை ரொம்பவே பாதிக்கப்படுமே.
12. தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு புடலைங்காவும் ஆகாது. என்ன தமிழ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் அவனால் சுகந்திர, குடியரசு, தீபாவளி, ரம்ஜான், பொங்கல் தினங்களை போற்ற முடியாது. அது ஒன்னு தான் வருத்தம்.
கலைத்துறையில் இருந்து இத்தனை முதல்வர்களை உருவாக்கிய நாம் சினிமா இல்லாமலா, நடக்குற கதையா எதாச்சும் இருந்தா சொல்லுங்கப்பா.
ஆட்டத்தை இத்தோடு முடிச்சுப்போம்.
Thursday, November 13, 2008
சினிமா
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, November 13, 2008
23
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் சினிமா, தொடர் விளையாட்டு
Friday, June 22, 2007
எட்டி நின்று போட்ட ஒரு எட்டு...
1, என்ன படிக்குறோம், எதுக்கு படிக்குறோம், என்ன பண்ணப் போறோம் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழ்வை கண்டப்படி அனுபவித்து விட்டு கிடைத்த வாய்ப்புக்களில் சிலதை தவறு விட்டு மிஞ்சியதை வைத்து இன்று ஒரு சுமாரான நிலையில் இருப்பதே பெரிய சாதனை & பெருமை தான் கூடவே இப்பொழுது நான் பார்க்கும் வேலையை பெற்றது. மன அளவிலும், பொருள் அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் என்னை முழுதாக திருப்திப்படுத்தியது. இதை தாண்டி அடுத்த நிலைக்கு முயற்சி செய்கின்ற போதிலும் இங்கு வேலை செய்வதை, செய்ததை மிகவும் பெருமையான ஒரு விசயமாக என் வாழ்வில் இருக்கும்.
2, கல்லூரியில் சும்மா வம்புக்கு சண்டை போட்டு நாங்களும் மேடை ஏறுவோம் என்று மேடை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சுப் போட்டியில் கலந்து சில பரிசுகள் வாங்கியது, கல்லூரியில் எக்ஸ்னோரா ஆரம்பித்து அதன் தலைவராக ஆனது, அவ்வளவு சேட்டை பண்ணியும் சரியாக பட்டப்படிப்பை முடித்தது, சின்ன சின்ன சண்டைகள், ரவுண்ட் கட்டி கொட்டம் அடிச்சது என அப்படி, இப்படினு பெருமைப்பட்டுக்க ஏகப்பட்ட விசயங்கள் இருக்கு.
3,சென்னை அலுவகலத்தில் இருக்கும் போது த.நா. அரசின் ஒரு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கடலூர் மாவட்டத்தை தவிர மற்ற இடத்தில் முடித்து விட கடலூர் மாவட்டத்தில் முடித்து தர நி.இயக்குனர் என்னைக் கேட்டுக் கொள்ள மூன்றே நாளில் கடலூர் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தே அதை முடித்துக் கொடுத்தது, அந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் போது உங்களால கம்பெனிக்கு நல்ல ரெவீன்யூ தான் என நி.இ. சொன்னது, நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவம் வெற்றது பெருமை தான்.
4, சொந்தமாக வண்டி வாங்கிய புதிதில் சென்னையில் இருந்து நாகைக்கு இரவில் பறந்தது. அந்த நேரத்தில் கி.க.சாலையில் சரியாக மின் விளக்குகள் கூட கிடையாது. இப்ப நினைச்சாலும் சும்மா ஜிவ்னு பெருமை தலைக்கு ஏறும். அதுக்காக நடுவில் நிக்க வைத்து கூடி கும்மி அடிச்சதை மறக்க முடியாது.
5, எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எல்லாத்தையும் கலந்துக் கட்டி பேசி, வேலைகளை கலந்து கட்டி செய்து Wise Man என்ற ஒரு இமேஜ்யை உருவாக்கி அதை இன்னும் ஒப்பேத்திக்கிட்டு இருப்பது.
6, பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது உன் சேர்க்கை சரியில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு அப்படியே ஒரு பெருமை பொங்கி வரும் பாருங்க... பசங்க கிட்ட சொல்லி பாருங்கடா உங்களால் தான் நான் கெட்டு போறேன் என்று சொல்ல, எல்லாத்துக்கும் முழு காரணமான ஒன்னயே இப்படிடா இவனுங்க நம்புறாங்க என பசங்க புலம்பவது, இருந்தாலும் எனக்கு மிக மகிழ்வான, நிறைவான பள்ளி, கல்லூரி வாழ்வை அளித்த அந்த நண்பர்களையும், பிறகு பல வாய்ப்புகளின் மூலம் பெற்ற நலம் விரும்பிகள் மற்றும் பிற நல்ல நண்பர்களை பெற்றது ஒர் பெருமை தான்
7, அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான்.
8, இங்க System ஊத்திக்கிட்டு நாலு மூணு நாள நமக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்கும் இந்த வேளையிலும் நடுவில் கிடைத்த கேப்புல எட்டி நின்னு System a Monitor பண்ணிக்கிட்டே இந்த பதிவை போடுறேன் பாருங்க... அதும் இல்லாம நாம் கிறுக்குறதையும் வந்து படிச்சுட்டு அதுக்கு சில பின்னுட்டோமும் போடுறீங்க பாருங்க... எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க... (ரமணா கேப்டன் மாதிரி கண் சிவந்து கண்ணீர் அணை கட்டுதுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்)
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
ஆள் பிடிக்கிறது:
எப்பா பிழிந்து எடுக்கும் வேலைக்கு நடுவில் நான் எட்டு போட்டதக்கு காரணமே இப்ப விட்டா நாம கூப்பிடுவதுக்கு ஆள் கிடைக்காது என்பதால் தான்....
1, சி.வி.ஆர்
2, இம்சை அரசி
3, சச்சின் கோப்ஸ்
4, G3
5, அருண்குமார்
6, வேதா
7, அய்யனார்
8, உலகம் சுற்றும் வாலிபி
மக்கள்ஸ் நான் தான் ஒழுங்கா எழுதுல, அதுக்குனு நீங்களும் டீல்ல விட்டுட கூடாது... சும்மா அதிர அடிக்கனும் சொல்லிட்டேன்...
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, June 22, 2007
39
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம், எட்டு, டேக், தொடர் விளையாட்டு, பெருமை
Thursday, March 22, 2007
கிறுக்குத்தனமா???
Weird னு சொன்னவுடன் நமக்கு ஒன்னும் புரியல, இந்த படத்த பாருங்க,

இது போல ஏதாச்சும் நமக்கு இருக்கா யோசிச்சேன், அப்படி ஏதும் இல்ல பின்ன வேற எதப்பத்தி சொல்லுறாங்கனு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, கூகிள் டாக்கில் வந்த ஒரு நல்லவங்க, ஏய் அகராதி பிடிச்சவனே அகராதிய புரட்டி என்னனு பாக்க வேண்டியது தானே சொல்ல, கிடைத்த பதில்கள அப்படியே பிடிச்சு அவங்கக்கிட்ட கொட்டினேன் - unusual, supernatural, strange, eldritch, uncanny, unearthly. அவங்க இது எல்லாத்தையும் விட்டுபுட்டு Peculiar சொல்லி, உன்க்கிட்ட இருக்குற different na அதாவது அடுத்தவங்க நோட் பண்ணுற வித்தியாசயமான குணங்கள்னு சொல்ல, அடுத்த கன்பூஸ்சன்
மத்தவங்க போல நாமளும் கையாலே தானே சாப்பிடுறோம், காலால் தான் நடக்குறோம், வாயால் தான் பேசுறோம், அவ்வளவு ஏன் காதால் தான் கேட்கிறோம்னு கேட்டா இப்படி குதர்க்கமா சிந்திக்குற பாரு அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க...அதனால் நானா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டு, அவனின்றி ஒரு அணுவும் அசையாதுனு முடிவு பண்ணி அவன் மேல் பாரத்தை போட்டு, ஸ்டார்ட்டிங் மை நான் சென்ஸ்.
நக்கல்
பழகியவர்களிடம் மட்டும் தான் இந்த நக்கல் விடுவது எல்லாம். சில சமயம் மற்றவர்களிடமும். ஏன்னா நமக்குனே வந்து கேள்வி கேட்பானுங்க. அதிலும் நம்மக்கூட இருக்கும் பசங்க பாவம் தான். அவனுங்க, ஏண்டா இவன்க்கிட்ட வாய கொடுத்தோம் அப்படிங்குற அளவுக்கு, எப்ப எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்ப எல்லாம் நக்கல் அடிச்சிடுறது. உனக்கு இந்த வாய் மட்டும் இல்லாட்டி நாய் கூட மதிக்காது சொன்னானுங்க. இப்ப எல்லாம் ஏய்! மேன், இந்த வாய் இல்லாட்டி டாக் வந்து உன் பாட்டத்தை கவ்விட்டு ஒடிடும் அப்படிறானுங்க. அது ஒரு அளவு உண்மையும் கூட நம்ம இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு.
பொங்குறது
இது இங்க அவ்வப்போது நடக்கும். சிங்கத்தை சீண்டி பாப்பது போல் புலியை வந்து பிராண்டி பாத்துடுவானுங்க. நம்மள பிராண்டுனா நாம திருப்பி டபுள் மடங்கா பிராண்டி வைச்சுடுவேன். இங்க தான் பல நாட்டில் இருந்து சில லாடு லப்க்கு தாஸ் இருப்பாங்களே, அவர்களுடைய அதிகாரத்தை அடுத்தவன்க்கிட்ட காட்டுவதில் தான் குறியா இருப்பானுங்க. கம்யூனிகேஸ்சன் ல ஏதாச்சும் ஒரு நெட்வொர்க டவுன் ஆவது சகஜம். நாமா அது என்னனு பாத்துக்கிட்டு இருக்கும் போது சரியா வருவானுங்க. வாய்ய சரியா புடுங்குவானுங்க, சரியாகுமா இல்ல உன் தலைய போய் பாக்கவா அப்படினு நூல் விட்டு பாப்பானுங்க, இத கேட்ட வேகத்துக்கு பால் பொங்குற மாதிரி சர்ருனு பொங்கி அது உன் திறமையை பொருத்துனு போயிக்கிட்ட இருப்பது. இப்ப எல்லாம் யாருச்சும் வந்தாலே நம்ம தலயே முதல பேசிட்டு வடிக்கட்டி தான் நம்மக்கிட்ட அனுப்புறார்.
தனிமை
நம்மளுக்கு இது கொஞ்சம் பிடித்த விசயம். பெரும்பாலான வேலைகளை தனிமையில் அம்ர்ந்து செய்வது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோனோ அது சரியாக அமையும். டீம் வொர்க் வேற இது வேற. எங்கள் துறைக்கு வரும் சவுத் ஏசியன்களை தவிர மற்றவர்கள் வந்தால் நிமிர்ந்து பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு பொட்டிக்குள் முழ்கி விடுவேன். மாலை நேரங்களில் இது இன்னும் மோசம், பதிவுலக களப்பணியில் இருக்கும் போது நானாக சிரிப்பதை பார்த்து இவனுக்கு என்னமோ ஆச்சுடா காலையில் எல்லாம் நல்லா தான் இருக்கான், சாயங்காலம் ஆனா ஒரு மார்க்கமா ஆயிடுறானேனு சொன்னவங்க அனேகம். இரவிலும் மற்ற நண்பர்கள் உறங்கிய பிறகும் வெளியில் தமிழ்சை கேட்டுக் கொண்டு யோசித்த நேரங்கள் அதிகம்.
உணவு
இந்த விசயம் நம்மளை ரொம்பவே தனிமைப்படுத்தி காட்டும். பீப், பன்னி, டூனா பீஷ், அப்படி இப்படினு ஏகப்பட்டது சாப்பிட மாட்டேன். அதிலும் பிரட் னா காதா தூரம் ஒடுவேன். கிடைப்பதை சாப்பிடனும் என்று சொன்னால் எனக்கு பிடிப்பது கிடைக்கும் போது மற்றவற்றை ஏதுக்கு சாப்பிடனும் என்று ஏகத்தாளம் பேசும் ஆளு நாம். ஆனா மற்ற நாட்டுக்காரங்க இருக்காங்களே, அத ஏன் சாப்பிட மாட்டேங்குற, இத ஏன் சாப்பிட மாட்டேங்குற கேள்விய மட்டும் நல்லா கேட்டுட்டு, நம்ம வீட்டுக்கு சாப்பிட வரவும் போது, இத்தன வெரைட்டி இருக்கா உங்க உணவில் அப்படினு சப்புக் கொட்டி சாப்பிட்டுவானுங்க.
மொழி
நான் ஹைத்தியில் இருந்து போது பிரஞ்ச், க்ரியோல்(Creole), ஸ்பானிஷ், இங்கு அரபி, ஹிந்தி போன்ற மொழிகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தும் ஏனோ நான் இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வாய்ப்புகளை தவற விடுவது தவறு என்பது எனக்கு புரிந்தும், சிலர் சொல்லியும் கூட பிற மொழி கற்றுக் கொள்வதில் ஒரு ஆர்வம் ஏனோ இது வரை வர மாட்டேன் என்கிறது. ஆர்வம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா விசயத்தையும் செய்ய முடியாதே!!!
இப்ப ஆள் பிடிக்குற வேலை
1.சிறுமுயற்சி முத்துலெட்சுமி
2.ஒரமாக நடக்கும் ராதா
(40 % ஒதுக்கீடு கொடுத்து இருக்கோம்... கொடுத்து பட்டத்தை திரும்ப பெற எதாச்சும் வழி இருக்கானு பாருங்க மக்கா... )
3. உங்கள் எங்கள் நண்பன் சரா
4. 50 மணி நேரம் ஆணி புடுங்கும் கார்த்திக்
5. பங்கு சந்தோஷ் aka Santhosh
பி.கு : Weird க்கு கிறுக்குத்தனம் என்று அர்த்தம் இருப்பதாக கொத்துஸ் சொல்லி அதை ராம்ஸ் தொடர்ந்து என்னையும் கிறுக்கன் வகையில் சேர்த்து இருக்கார்(சற்று நேரம் முன்பு). மறுபடியும் இதை பற்றி யோசித்தேன் என்றால் கிறுக்கு முற்றி விடும். அதனால ஆள விடுங்க சாமிகளா...
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, March 22, 2007
54
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் Weird, கிறுக்கு, தொடர் விளையாட்டு
Saturday, June 17, 2006
இனியவை ஆறு
முதலில் ஆறு படத்தின் ஆறு பாடல்கள்:
அஞ்சு கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சாக வேக வச்சி ஜன் ஜன் ஜன்....
பாக்காத என்னை பாக்காத குத்தும் பார்வையாலே பாக்காது....
ப்ரீயா விடு ப்ரீயா விடு மாமு வாழ்க்கைக்கு இல்ல கியாரண்டி....
துரோகம் துரோகம், கடவுள் தூங்கும் நேரம் பாத்து சாத்தான் ஆடும் ஆட்டம்....
நெஞ்சம் எண்ணும் ஊரிலே, காதல் எண்ணும் தெருவிலே....
தொட்டுட தொட்டுட என்ன நீ தொட்டுட உன் கிட்ட மாட்டிக்குச்சு என் மனசு....
சந்திக்க விரும்பிய ஆறு நபர்கள்:
சுவாமி விவேகானந்தர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஹிட்லர்/யாசர் அராபத்
காமராஜர்
எம்.ஜி.ராமசந்திரன்
எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி
சந்திக்க விரும்பும் ஆறு நபர்கள்:
அப்துல் கலாம்
பீடில் கேஸ்ட்ரோ
வேலு பிள்ளை பிரபாகரன்
ரஜினி காந்த்
மணிரத்னம்
இளையராஜா
விளையாட்டில் கவர்ந்த ஆறு நபர்கள்:
கபில் தேவ்
மைக்கேல் ஜோர்ட்டன்
ஸ்டீவ் வா
அகாசி/ஸ்டெபி
ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் அஸ்டின்
பிரேயன் லாரா
மறக்க முடியாத ஆறு சம்பவங்கள்:
10,11,12 ஆம் வகுப்பு பள்ளி நாட்கள்
மூன்று வருட கல்லூரி நாட்கள்
சகோதரியின் திருமணம்
தாத்தாவின் மரணம்
நாகையை சின்னாபின்னம் ஆக்கிய சுனாமி
ஐ.நாவில் வேலை பார்ப்பது
தற்சமயம் இழந்த ஆறு விசயங்கள்:
சூரியன் உச்சிக்கு வரும் வரை தூக்கும் தூக்கம்
மாப்பிள்ளை நிரஜ்னின் சேட்டைகள்
தாய் மொழியில் பேசுவது
என் ஊரின் உப்பு காற்றும், கருவாட்டு மணமும்
நண்பர்களுடன் ஆன வெட்டி பேச்சும், ஊர் உலாவும்
நல்ல உணவும், அம்மாவின் பெட் காபியும்
தெரிந்தே செய்யும் ஆறு தவறுகள்:
நேரம் தவறுவது
எதிலும் அலட்சியமாக(வருத்தப்படாமல்) இருப்பது
எந்த காரியத்தையும் கடைசி நிமிடத்தில் செய்வது
உதவி செய்து கெட்ட பெயர்(சிக்கலில்) எடுப்பது(மாட்டுவது)
Self Personalityயில் கவனம் செலுத்தாமல் இருப்பது
இதை எதையும் திருத்தி கொள்ளாமல் இருப்பது
போனதில் பிடித்த ஆறு இடங்கள்:
ஏற்காடு
வால்பாறை
மடக்கதானம் - கேரளா
பாரிஸ்
பெங்களுர் - இஸ்கான்
விசாகப்பட்டினம்
போக விரும்பும் ஆறு இடங்கள்:
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும்
உலக அதிசயங்கள் அனைத்திற்க்கும்
கியூபா
சிங்கப்பூர்
இலங்கை
ஜெர்மன்
இந்த விளையாட்டிற்க்கு அழைக்க விரும்பும் ஆறு நபர்கள்:
கால்கரி சிவா - நம் மண்ணின் பெருமையை மாடு பிடித்து கால்கரியில் நிறுவ இருக்கும் மதுரை புயல். அவரை திட்டுவதற்கு வாக்கியங்களை
அவரே தானமாக கொடுக்கும் வள்ளல்.
கீதா சாம்பசிவம் - சங்கத்தின் நிரந்திர தலைவலி. ப்ளாக்கர்வுடன் நித்தமும் சண்டையிட்டு அதில் சில சமயம் வெற்றியும் பெரும் அதிஷ்டசாலி.
துபாய் ராசா - என்னை சமாதானம் படுத்த வேண்டும் என்பதற்காக துபாயில் வெள்ளை கொடி ஏற்றி சூடான் வரை பறக்க விட்ட அமைதி புறா. லோடு லோடாக பேரீச்சம் பழத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்த திலகம்.
தெக்கி காட்டான் - சாத்தானுக்கு சவால் விடும் காட்டான். இரண்டு மார்க்கில் பெயில் செய்யப்பட்டு இந்த சமூகத்தால் வஞ்சிக்கபட்ட அப்பிராணி.
மனதின் ஒசை - அறையில் இருப்பதற்கு பயந்து பல சமயங்களை மெரீனா கடற்கரையில் கழித்த தைரியசாலி. அப்ப அப்ப கவிதை எழுதும் கவிஞர்.
வடவூர் குமார் - நாகை தங்கங்களில் ஒருவர். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் தெரியா விட்டாலும் அவரின் மேல் எனக்கு மிக்க மரியாதை உண்டு. மடவிளாகம் என தன் பதிவிற்கு நாமகரணம் வைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, June 17, 2006
55
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம், தொடர் விளையாட்டு


