Showing posts with label கண்ணி வெடி. Show all posts
Showing posts with label கண்ணி வெடி. Show all posts

Friday, November 03, 2006

கண்ணி வெடி - 1

கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான்.

முதலில் இதை ராணுவத்தில் தான் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலக போரின் போது தான் இது பெரும் அளவில் பயன்படுத்த பட்டது. அதன் பிறகு வியட்னாம் போர், கொரியன் போர், முதல் வளைகுடா போன்ற போர்க்களின் வாயிலாக உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் இது பரவி விட்டது. இன்று இந்த வெடிகள் பல நாட்டில் தயாரிக்கபடுகின்றது, இந்தியாவையும் சேர்த்து...

இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம். சரியாக விபரங்கள் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் தன் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக ஒரு போதும் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தில்லை என தெரிவித்து உள்ளது.

எதற்காக இந்த வகையான வெடிக்குண்டுகள் உருவாகப்பட்டது என்று பார்க்கும் போது, எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், இரவு நேரங்களில் எதிரிகள் தீடிரென்று தாக்குவதை தடுக்கவும், எதிரிகளின் வாகனங்களை அழிப்பதற்க்கும், பாதைகளை, நீர் ஆகாரங்களை துண்டிப்பதற்க்காகவும் தான் உருவாக்கபட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளிகளை செயல் இழக்க செய்யவும், அந்த தருமணத்தில் தாங்கள் சுகாரித்து கொள்வதற்கும். இந்த வகை குண்டுகளை தொடுவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதுன் மூலமும், காந்த சக்தியின் மூலமும், ரிமோட் கொண்டு இயக்குவது மூலமும், டிரிப் வயர் மூலமும் வெடிக்க செய்யலாம்.

கண்ணி வெடிகளை ஒரு சிறந்த(முழுமையான) போர் வீரன் என்று சொல்வது உண்டு.

"The landmine is eternally prepared to take victims. It is the perfect solider."

- Nobel prize winner Mr. Jody Williams.


ஆனால் ஒரு இடத்தில் போர் நிறைவு பெற்றால் பெரும்பாலான போர் வீரர்கள் திரும்பி விடுவது உண்டு. ஆனால் இந்த கடமை வீரன்(கண்ணி வெடிகள்) தன் கடமையை 50 வருடங்கள் ஆனாலும் தவறாது செய்வதற்கு காத்து கொண்டு இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

கண்ணி வெடிகளில் இரு வகை உண்டு. ஆண்டி டேங்க் வெடிகள்(Anti-Tank Mines) மற்றும் ஆண்டி பர்ச்சனல் வெடிகள்(Anti-Personnel Mines). இவற்றை குறித்து விரிவாக பின்வரும் தொடர்களில் காணுவோம். ஆண்டி டேங்க் வெடிகள் தான் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் உபயோகபடுத்தபட்டது. ஆனால் எதிராளிகள் இதை சுலபமாக கண்டுபிடித்து அகற்றிய காரணத்தால், இந்த ஆண்டி பர்ச்சனல் வகை வெடிகள் தயாரிக்கப்பட்டது. இந்த வெடிகள் முதலில் ராணுவ(போர்) வீரர்க்களை மட்டும் தான் குறி வைத்து வைக்கப்பட்டது. பின்னர் சிவிலியன் என்று அழைக்கப்படும் பொது மக்களையும், அவர்களின் நிலங்களையும் நோக்கி திரும்பி விட்டது. அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

----------------------------------------------------------------------------------
பொதுவான தகவல்கள்:
*தற்பொழுது உலகம் முழுவதும் 100 மில்லியன் கண்ணி வெடிகள் உள்ளன.

*1975 ஆண்டில் இருந்து 2005 வரை 1 மில்லியன் மக்கள் இந்த கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.( இறந்தவர்களையும் சேர்த்து)

*இந்த கண்ணி வெடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஆப்கானிஸ்தான்(உபயம் - சோவியத் யூனியன்), ஈராக்(உபயம் - பெரியண்ணன் அமெரிக்கா), கம்போடியா,அங்கோலா, புருண்டி, கொழும்பியா, நேபாளம்,ஸ்ரீலங்கா, சூடான்.........

*இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.

*மேற் சொன்ன நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவில் 35 % சகவீதத்துக்கு மேற்பட்ட நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து உள்ளது. *ஈராக் நிலவரம் கிட்டதட்ட அது போல் தான் உள்ளது.

*ஸ்ரீ லங்காவில் இன்னும் போர் நடந்து கொண்டு இருப்பதால் எந்த அளவுக்கு கண்ணி வெடிகள் உள்ளது என்பது இன்னும் ஒரு கேள்வி குறி தான்.

*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.
----------------------------------------------------------------------------------

- சோகம் தொடரும்...
பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணிய காரணத்தால், இதை மீண்டும் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இதை ஒரு மீள் பதிவாக வெளியிடுகிறேன்.
ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்கு 1000 டாலர் மிகவும் அதிகம் என்று பலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அதற்கு விளக்கம் பின் வரும் தொடர்களில் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

Friday, June 23, 2006

குண்டு 1 வச்சி இருக்கேன்!

வணக்கம் நண்பர்களே!

இது வரை நான் உருப்படியாக எந்த ஒரு பதிவும் எழுதவில்லை என சில நண்பர்கள் கூறினார்கள். அது உண்மையும் கூட. எனக்கு உருப்படியாக எந்த ஒரு விசயமும் எழுத தெரியாது என கூறினேன். அத தான் எங்களுக்கு தெரியுமே... அதனால் நான் வெளிநாடுகளில் கண்ட, கேட்டு தெரிந்து கொண்ட சில விசயங்களை எழுதும்மாறு கேட்டுக் கொண்டார்கள். அதிலும் திரு.அறுசுவை பாபு அண்ணன் மற்றும் சிலரும் சூடானை குறித்தும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதும்படி தூண்டினார்கள். அவர்கள் எல்லாரும் என் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருப்பதை பார்த்தால் எனக்கு சற்று பயமாக தான் உள்ளது. சரி, ஆனது ஆச்சு, நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த விசயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். அதனின் முதல் வெளிபாடு தான் பின்வரும் புகைப்படங்கள். கண்ணி வெடிகளை குறித்து யாரும் இதற்கு முன்பு வலைப்பதிவில் எழுதி உள்ளார்களா எனத் தெரியவில்லை. அப்படி யாரும் எழுதி இருந்தால் தெரிவிக்கவும்.


இவை அனைத்து தற்பொழுது என் அலுவலக வளாகத்தில் உள்ளவை. இந்த புகைப்படங்களை பற்றியும் அது எந்த வகைகளை சார்ந்தவை போன்ற எந்த விளக்கமும் இப்பொழுது கொடுக்கவில்லை. விரிவாக கண்ணி வெடிக்களை பற்றியும், அதன் வகைகளை பற்றியும், கண்ணி வெடிகள் இருக்கும் இடத்தில் தாங்கள் சிக்க கொண்டால் அந்த இடத்தில்(நேரத்தில்) என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் படங்களுடன் விரிவாக பின்வரும் தொடர்க்களில் எழுதலாம் என்று உள்ளேன். இந்த பதிவை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இடைக்குறிப்பு : கடைசி இரு புகைப்படங்களை காண தவறாதீர்கள்.(முக்கியமாக சங்கத்து சிங்கங்கள்)































*** இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.



*** இது நம்ம தலக்கு மிகவும் பிடித்தது. சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.