Thursday, May 04, 2006

நல்லா சொன்னார்!

தமிழகத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்கவில்லை, அ.தி.மு.க அரசை அகற்ற தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் பங்கு வகிக்கும் தி.மு.க., கூட்டணியில் மா. கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு வைத்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.

கேரளாவில் காங்கிரசை எதிர்க்கிறோம். தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துள்ளோம்.

இது அரசியல் ஆதாயம் தேடும் சம்பவம் இல்லை.


திருவாய் மலர்ந்து நம்மை கிச்சு கிச்சு முட்டியவர் :

திருமதி. பிருந்தா கராத் (மா.கம்யூ பொலிட் பீரோ உறுப்பினர்)

2 comments:

Anonymous said...

நீங்க நல்லா சொன்னீங்க சிவா,
எதேது ... போற போக்க பாத்தா மத்தியில தி.மு.கவோடவும் மாநிலத்துல அ.தி.மு. க வோடவும் காங்கிரஸ் கூட்டணி வச்சுக்கும் போல இருக்கே.... அரசியல்ல இதெல்லாம் சகஜம் சிவா...... டென்சன் ஆகாதீங்க.....

நாகை சிவா said...

கூடிய விரைவில் நீங்கள் சொன்னது நடந்தாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை