Tuesday, February 24, 2009

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?

இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம் கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.

"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."

காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்

1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.

2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.

3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.

4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.

இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.

பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.

33 comments:

G3 said...

:))))) Firstu vandhutennu nenaikaren :D

G3 said...

//அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதே//

Adhu sari.. chumma irundha namakkellam yaaravadhu ippadi koovuvaangalannu kekkaradhu..

illati ippadi kozhambaradhu...

Enna kodumai siva idhu :P

G3 said...
This comment has been removed by the author.
G3 said...

Vandha velaya paapom :D

Virudhu vaangiya ungalukkum virudha unga kitta irundhu vaangikitavangalukkum vaazhthukkal :)

Kaasa panama pattamboochi dhaanae avangalum mathavangalukku kuduthutu pogattumae.. adha en chinnapullathanama niruthasollikittu???

நாகை சிவா said...

@ G3

//Firstu vandhutennu nenaikaren :D//

சத்தியமாக நிச்சயமாக நீங்க தான் ப்ர்ஸ்ட். அது இப்படிங்க இது மாதிரி போஸ்ட்க்கு மட்டும் டக்குனு வந்து நிக்குறீங்க, மத்த போஸ்ட்க்குனா அப்படியே எட்டி பாத்துட்டு ஒடி போறீங்க ;)

நாகை சிவா said...

//Virudhu vaangiya ungalukkum virudha unga kitta irundhu vaangikitavangalukkum vaazhthukkal :)//

நன்றி :))

//Kaasa panama pattamboochi dhaanae avangalum mathavangalukku kuduthutu pogattumae.. adha en chinnapullathanama niruthasollikittu???//

எவ்வளவு நாளைக்கு தாங்க இதையே கொடுத்து கிட்டு இருப்பது. இதை நிறுத்திட்டா அதுக்கு அப்புறம் கரடி விருது யானை விருது னு பெரிசா கொடுக்க ஆரம்பிங்கள... அதுக்கு தான் :)))

Geetha Sambasivam said...

super selection. greetings to all. thankees!!!!!!!

G3 said...

//அது இப்படிங்க இது மாதிரி போஸ்ட்க்கு மட்டும் டக்குனு வந்து நிக்குறீங்க, மத்த போஸ்ட்க்குனா அப்படியே எட்டி பாத்துட்டு ஒடி போறீங்க ;)//

Hehe.. andha postla ellam karuthu soldra alavukku namakku arivu pathaadhu.. aana anga gummi adikka koodadhungara alavukku arivu irukku.. adhaan :)

//இதை நிறுத்திட்டா அதுக்கு அப்புறம் கரடி விருது யானை விருது னு பெரிசா கொடுக்க ஆரம்பிங்கள//

avvvvvvvvvvvvvvvvvvv... ungalaala mattum dhaan ippadi ellam yosikka mudiyum. guruvoda guruvachae.. unga kitta vaadhaada mudiyuma ;)

திவாண்ணா said...

நண்றி சிவா! வந்து சாவகாசமா உங்க பதிவை எல்லாம் பாக்கறேன். ஆமா ரொம்ப தைரியமா போன் நம்பர் எல்லாம் கொடுத்து இருக்கீங்க!?

கவிதா | Kavitha said...

//"டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்"//

சிவா இதுக்கு மேலயும் நாங்க உங்கள அசிங்க படுத்த வேண்டிய அவசியமே இல்ல..... :)

------------

//காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு//

அவங்க வேணாம்னு சொல்லிட்டா நீங்க விட்டுடுவீங்களா? சிவா முன்னமே நீங்க தமிழ்மண ஸ்டார் ஆன டீலிங்கே இன்னும் முடிஞ்ச பாடு இல்ல அதுக்குள்ள இன்னும் ஒன்னா?

எனக்கு சந்தேகம் அதிகமாகுது.. அவங்க காரணம் வேற சொல்லல.. அதனால இதுக்கு நீங்க. .எனக்கு பதில் சொல்லியே தீரணும்..

கவிதா | Kavitha said...

//இதை நிறுத்திட்டா அதுக்கு அப்புறம் கரடி விருது யானை விருது னு பெரிசா கொடுக்க ஆரம்பிங்கள//

ஹோல்ட்..ஹோல்ட்..!! முன்ன கொடுத்த தமிழ்மண ஸ்டார்' க்கும்.. இப்ப கொடுத்த பட்டர்ஃப்ளை விருத்துக்குமே இன்னும் சரியான பதில் வரலை.. இதுக்கு மேல எல்லாம் நீங்க யோசிக்கவிக்கவேப்பிடாது.. சரியா..!!

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Vidhya Chandrasekaran said...

ரெம்ப நன்றிங்க:)

Raz said...

:) first of all unnaku cool blog kuduthu award thanthu iruka kudathu... nee unnaku hot blog than kuduthu irukanum. nee verum musuda blogs podure...

thnks :D nan deserving person ;)


ithuku oru post potuduren rassaaa!

கோபிநாத் said...

வண்ணத்துபூச்சி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))

நாகை சிவா said...

@ கீதா!

//super selection. greetings to all. thankees!!!!!!!//

என்னோட நன்றிகளையும் தெரிவிச்சுக்குறேன்... எனக்கு ஏன் கொடுத்தீங்கனு இங்கவாச்சும் சொல்லிடுங்களேன். :)

நாகை சிவா said...

@ G3

//Hehe.. andha postla ellam karuthu soldra alavukku namakku arivu pathaadhu.. aana anga gummi adikka koodadhungara alavukku arivu irukku.. adhaan :)//

அந்த போஸ்ட் போடுற அளவுக்கு மட்டும் எங்களுக்கு அறிவு இருக்கா என்ன? அப்படியே போற போக்குல ஏதாச்சும் சொல்லுறது தான். (தலைப்பு நல்லா தெளிவா தானே வச்சு இருக்கோம்)

//avvvvvvvvvvvvvvvvvvv... ungalaala mattum dhaan ippadi ellam yosikka mudiyum. guruvoda guruvachae.. unga kitta vaadhaada mudiyuma ;)//

ஒன்னும் சொல்லுறதற்கு இல்லை. நல்லா இருங்க. நல்லாவே இருங்க :)

நாகை சிவா said...

@ கவிதா!

//சிவா இதுக்கு மேலயும் நாங்க உங்கள அசிங்க படுத்த வேண்டிய அவசியமே இல்ல..... :)//

அடுத்தவங்க பண்ணிட கூடாதே என்பதற்கு தான் நாங்களே முந்திப்பது. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச டெக்னிக் தான். (அணில்) நீங்க கடைசியா போடுறீங்க. நாங்க ஆரம்பத்திலே போட்டுறோம். அம்புட்டு தான் :)

------------

//அவங்க வேணாம்னு சொல்லிட்டா நீங்க விட்டுடுவீங்களா? //

அதான் விட்டுட்டேனே!

//சிவா முன்னமே நீங்க தமிழ்மண ஸ்டார் ஆன டீலிங்கே இன்னும் முடிஞ்ச பாடு இல்ல அதுக்குள்ள
இன்னும் ஒன்னா?//

அது என்னிக்கும் முடியாது. தமிழ்மணம் என்னை இரண்டாவது தடவை கூப்பிட்டால் முடிவுக்கு கொண்டு வ்ர முயற்சிக்குறேன்.

//எனக்கு சந்தேகம் அதிகமாகுது.. அவங்க காரணம் வேற சொல்லல.. அதனால இதுக்கு நீங்க. .எனக்கு பதில் சொல்லியே தீரணும்..//

கீதாவிடம் கேளுங்க. அவங்க விளக்குவாங்க... கேட்டுட்டு வந்து எனக்கும் சொல்லுங்க.

நாகை சிவா said...

@ திவா!

வாங்க திவா,

//நண்றி சிவா! வந்து சாவகாசமா உங்க பதிவை எல்லாம் பாக்கறேன். ஆமா ரொம்ப தைரியமா போன் நம்பர் எல்லாம் கொடுத்து இருக்கீங்க!?//

பொறுமையா படிங்க. நம்பர் தருவதில் என்ன பெரிய தைரியம் வேண்டி கிடக்கு. அதை பார்த்து நமக்கு அழைக்க நினைப்பவர்களுக்கு தானே அது வேண்டும். ;)))

நாகை சிவா said...

@ கவிதா,

//ஹோல்ட்..ஹோல்ட்..!!//

அதான் இந்த விருதுக்கு ஹோல்ட் போட்டுட்டேனே...

// முன்ன கொடுத்த தமிழ்மண ஸ்டார்' க்கும்.. இப்ப கொடுத்த பட்டர்ஃப்ளை விருத்துக்குமே இன்னும் சரியான பதில் வரலை.. இதுக்கு மேல எல்லாம் நீங்க ோசிக்கவிக்கவேப்பிடாது. சரியா..!!//

இங்க பாருங்க. விருதையோ, ஸ்டார் ரையே தேடி நான் போகல. என்ன தேடி வந்துச்சு நான் ஏத்துக்கிட்டேன். நான் ஜெயமோகன் எல்லாத்தையும் வேணாம் னு சொல்ல, ஆனா அவரே பாருங்க கலைஞர் கிட்ட இருந்து விருது வாங்கிட்டார். அவர் முன்னாடி நான் எம்மாத்திரம் சொல்லுங்க.

அதும் இல்லாம இது போன்ற விருதுகள் மக்களை "ஊக்கு" "விக்கு"தாம். ;))))

நாகை சிவா said...

@ வித்யா!

வெல்கம் :)

நாகை சிவா said...

@ Raz,

//:) first of all unnaku cool blog kuduthu award thanthu iruka kudathu... nee unnaku hot blog than kuduthu irukanum. nee verum musuda blogs podure...//

சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். அது கொடுத்துவங்க தப்பு. மன்னிச்சு விட்டுடூ.

//tnks :D nan deserving person ;)//

தோடா.... ஆரம்பிச்சிட்டீயா? இந்த தற்பெருமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.

//ithuku oru post potuduren rassaaa!//

நமக்கு வாழ்த்துரை பலமா இருக்கனும் சொல்லிட்டேன் :)

நாகை சிவா said...

@ கோபி,

அப்ப அப்ப அங்க அங்க போய் நீ வாழ்த்துக்கள் கமெண்ட் தான் போட்டுகிட்டு திரியுற. பதிவு எதாச்சும் போடுவது.. ரொம்ப நாள் ஆச்சுல.

நேயர் விருப்பமய்யா!

Anonymous said...

எதுக்கு இது?

pudugaithendral said...

டாக்டர் விஜய், பதம்ஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்னு பின்னூட்டம் போட்டிருந்தீங்க. பதறி அடிச்சிகிட்டு ஒடியாந்தேன்..

விருதுக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_25.html/

pathivu potachu

அருண்மொழிவர்மன் said...

//"டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்"//

எழுத்தாளார் சுஜாதாவிற்கும் நடிகர் வையாபுரிக்கும் ஒரே நேரத்தில் இந்த விருதை குடுத்த “அறிவாளிகள்” தானே இவர்கள்

கவிதா | Kavitha said...

//அது என்னிக்கும் முடியாது. தமிழ்மணம் என்னை இரண்டாவது தடவை கூப்பிட்டால் முடிவுக்கு கொண்டு வ்ர முயற்சிக்குறேன்.//

இதுக்கு மேல நான் இதை பற்றி உங்க கிட்ட கேட்டேன்னு வைங்க....என்னை நீங்க...........

Raz said...

:) unmaiya sonna oothuka matiyeee!

Divyapriya said...

//"புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு//

LOL :D

Unknown said...

வாழ்த்துகள் :))

தமிழர் நேசன் said...

இப்போது மனிதாபிமானிகள் மத்தியில் பரபரப்பாக உள்ள விஷயம் பற்றி எனது பதிவில்.. நேரம் இருந்தால் வரலாம்..
http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_03.html

நாகை சிவா said...

பின்னூட்டம் இட்டவர்களுக்கு அனைவருக்கும் நன்றி :)