Wednesday, February 28, 2007

ICC - குற்றவாளிகள் அறிவிப்பு(சூடானில்)

Today(27.02.07) ICC Prosecutor Luis Moreno-Ocampo presents evidence showing that Ahmad Muhammad Harun, former Minister of State for the Interior of the Government of the Sudan, and Ali Kushayb, a leader of the Militia/Janjaweed, jointly committed crimes against the civilian population in Darfur.

மேலும் படிக்க

குறிப்பு : சூடானின் மேற்கு பகுதியான டார்பூர்(Darfur) என்ற இடத்தில் 2003 ஆம் ஆண்டில் இருந்து நடந்த(நடந்துக் கொண்டு இருக்கும்) சண்டையின் காரணமாக 200,000 பேர் உயிர் இழந்து உள்ளார்கள், 2.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேற இடத்தில் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, அகதிகள் முகாமிலும் மற்ற இடத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஐ.சி.சி. போர் குற்றவாளிகளாக அறிவித்து உள்ள இரண்டு நபர்களில் ஒருவர் நலவாழ்வு துறை அமைச்சர், மற்றவர் ராணுவ கமாண்டர். இந்த இருவரையும் 2003-2004 ஆண்டு நடந்த போரின் போது மனித உரிமை மீறல்க்காகவும், போர் குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டி உள்ளது.

சூடான் அரசு இதைக் குறித்து எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாக இது வரை அறிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தின் ஆரம்பம், இது வரை நடந்தைவைகள் போன்றவற்றை விரைவில் ஒரு தொடராக எழுத முயல்கின்றேன். அவ்வபோது கிடைக்கும் தகவல்களையும் பிளாக் உலகிற்க்கு தெரிவிக்க முயல்கின்றேன்.

24 comments:

ஜி said...

ICC னா International Cricket Club னு நெனச்சிட்டேன்.. நானும் ஏதோ மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி ரெண்டு பேரு மாட்டிக்கிட்டாங்களோன்னு நெனச்சேன்....

உங்கள் தொடரை எழுதுங்க... ஆசிஃப் மீரான் எழுதுன "Hotel Rwanda" விமர்சனம் பாத்தீங்களா? Africa வில் நடந்த இனக் கலவரம் பத்தின படம். அந்தப் படம் பாத்ததுல இருந்து, இது மாதிரி உலக வரலாறுகளப் படிக்கணும்னு ஆசை. :))))

Syam said...

அருமையான முயற்சி பங்கு...வாழ்த்துக்கள்....சீக்கிரம் ஸ்டார்ட் மாடி :-)

Syam said...

ஏதோ உன்னோட புண்ணியத்துல நாங்களும்...இப்பொ நடக்குற ஹிஸ்ட்ரி ஜாகரபி தெரிஞ்சுக்கறோம்....

கஸ்தூரிப்பெண் said...

ஊர்ஸ்,

அடுத்த வகுப்புக்கு நான் ரெடி!!!!
எங்க ஊருல சூடான் அகதிகள் ரொம்ப பேரு. அப்பப்போ டாக்ஸி-யில போகும்போது சேகரிக்கிற தகவல வைச்சு இத பத்தி, இன்னும் தெரிஞ்சிகிட்டா நல்லாயிருக்குமே நினைச்சு இருக்கேன்.
ம்ம்ம்ம்ம்..... அடுத்த வகுப்பு எப்போ?

இலவசக்கொத்தனார் said...

தல,

தொடரா எழுதப் போறீங்களா? சூப்பரப்பூ, நம்ம நாட்டுக்கு வெளிய நடக்குற அநியாயம் எல்லாம் பத்தி நம்ம ஆளுங்க தெரிஞ்சுக்கட்டும்.

ஐ.சி.சி. அப்படின்னா என்னான்னு சொல்லவே இல்லையே. கடைசியில் நீங்க குடுத்த சுட்டிக்குப் போனால் அது ஆங்கிலத்தில் இருந்துச்சி. பக்கத்து வீட்டு பாலகனை காலில் விழாத குறையா கூப்பிட்டு படிக்கச் சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன்.

அடுத்த முறை இந்த மாதிரி ஆவாம, நீங்களே எல்லாம் சொல்லிருங்க. நம்ம மக்கள்ஸுக்கு (அதாவது எனக்கு) இதெல்லாம் தெரியும் அப்படின்னு நினைச்சுராதீங்க.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்,ரொம்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல் இருக்கு, எழுதுங்க வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

கண்ணி வெடி மாதிரி பாதில நிறுத்திடாதீங்க!! அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

தம்பி எழுது.. அல்லது தட்டு கீ போர்ர்டின் கடைசி எழுத்து கதறும் வரை தட்டு.. காத்திருக்கிறேன் உன் தொடருக்காக...

மு.கார்த்திகேயன் said...

உலகத்திற்கு தெரியாமல் கிடக்கும் சூடானின் எல்லா விஷயங்களையும் அறிய காத்திருக்கிறேன், மாப்ள

தொடர்ந்து எழுதுப்பா

மு.கார்த்திகேயன் said...

//200,000 பேர் உயிர் இழந்து உள்ளார்கள்,//

அடக் கொடுமையே! சொந்த நாட்டிலே இப்படி ஒரு வேதனையா அவர்களுக்கு!

நாகை சிவா said...

//ICC னா International Cricket Club னு நெனச்சிட்டேன்.. //

அட பாவமே... தப்பு என்னது தான் போல. விளக்கம் சொல்லி இருக்கனும்

ஆசிப் விமர்சனம் படிக்கவில்லை. அந்த படமும் பார்க்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நடந்த சுகந்திர போரை பற்றி வந்த பல படங்கள் பார்த்து உள்ளேன்.

நாகை சிவா said...

//சீக்கிரம் ஸ்டார்ட் மாடி :-) //

பங்கு, இதுல இந்த மாடிக்கு என்ன அர்த்தம். அசிங்கப்படுத்த மாட்டேனும் நான் நம்புறேன்.

//இப்பொ நடக்குற ஹிஸ்ட்ரி ஜாகரபி தெரிஞ்சுக்கறோம்.... //

அது சரி, சொல்லி குடுத்துடா போச்சு.

:-)

நாகை சிவா said...

//இன்னும் தெரிஞ்சிகிட்டா நல்லாயிருக்குமே நினைச்சு இருக்கேன்.//

எனக்கு தெரிந்து வரை விரிவாக சொல்ல முயல்கின்றேன்.


//ம்ம்ம்ம்ம்..... அடுத்த வகுப்பு எப்போ? //

வகுப்புனு சொல்லி என்னைய பயமுற்த்த கூடாது. :-)

நாகை சிவா said...

//நம்ம நாட்டுக்கு வெளிய நடக்குற அநியாயம் எல்லாம் பத்தி நம்ம ஆளுங்க தெரிஞ்சுக்கட்டும். //

கொல்ல அநியாயம் கொத்துஸ்.

// நம்ம மக்கள்ஸுக்கு (அதாவது எனக்கு) இதெல்லாம் தெரியும் அப்படின்னு நினைச்சுராதீங்க. //

நாமும் அதே கேஸு தான். மொழி பெயர்ப்பாளர் வச்சி தான் படிச்சேன். அடுத்த தபா இந்த தப்பு நடக்காம பாத்துக்குறேன்.

நாகை சிவா said...

//ம்ம்ம்ம்,ரொம்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல் இருக்கு, எழுதுங்க வாழ்த்துக்கள். //

அப்படி எல்லாம் இல்லங்க. நமக்கு தெரிந்தவற்றை பதிந்து வைப்போமே என்று தான்.

நாகை சிவா said...

//கண்ணி வெடி மாதிரி பாதில நிறுத்திடாதீங்க!! அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்! //

கப்பி, அதை நிறுத்த வில்லையப்பா. விரைவில் அதுவும் தொடரப்படும். நீ வேற ஞாபகப்படுத்தி விட்டாய். ஹோம் வொர்க் பண்ண நேரம் ஒதுக்கனும்......

நாகை சிவா said...

//தம்பி எழுது.. அல்லது தட்டு கீ போர்ர்டின் கடைசி எழுத்து கதறும் வரை தட்டு.. காத்திருக்கிறேன் உன் தொடருக்காக... //

தட்டுறேன், தட்டுறேன். இந்த கீ போர்ட் கண்டம் ஆனால் புது கீ போர்ட் இணைத்து தட்டுவேன் :-)

நாகை சிவா said...

//அடக் கொடுமையே! சொந்த நாட்டிலே இப்படி ஒரு வேதனையா அவர்களுக்கு! //

அதுவும் இது டார்பூர் என்ற ஒரு பகுதியில் மட்டும் மாப்ஸ். அந்த இடத்தை நம் தென் இந்தியாவில் பாதி என்ற அளவுக்கு சொல்லாம். மற்ற இடத்தில் இவர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது. அது தனிக் கதை.

Syam said...

//கண்ணி வெடி மாதிரி பாதில நிறுத்திடாதீங்க!! //

நானும் சொல்ல நினைச்சேன்...அட்லாஸ் சொல்லிட்டாரு :-)

Syam said...

//அசிங்கப்படுத்த மாட்டேனும் நான் நம்புறேன்//

என்ன பங்கு உன்ன போய் அசிங்க படுத்துவேனா...இப்புடி கேட்டுப்புட்டயே :-)

கதிர் said...

கடைசியாக நான் பார்த்த இரண்டு ஆங்கிலப்படங்களின் கதைக்களன் ஆப்பிரிக்கா தான்.

ப்ளட் டையமண்ட் படத்தில ஒரு ஆப்பிரிக்கர் வசனம் சொல்வாரு.
ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து கடவுள்
வெகுதூரம் சென்றுவிட்டார் என்று.

ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் போதும் அது உண்மையென்றே தெரியுது.

பாதில உட்டுறாத, ஒழுங்கா எழுதி முடிக்கணும்.

Syam said...

என்னோட மத்த கமெண்ட் எல்லாம் எங்க..பங்கு நல்ல புள்ளயா அதயும் பப்ளிஷ் பண்ணு பார்ப்போம் :-)

நாகை சிவா said...

//நானும் சொல்ல நினைச்சேன்...அட்லாஸ் சொல்லிட்டாரு :-) //

அட்லாஸ் அட்லாஸ்ட் சொல்லிட்டாரு.
;-)

//என்ன பங்கு உன்ன போய் அசிங்க படுத்துவேனா...இப்புடி கேட்டுப்புட்டயே :-) //

யாரையும் நம்ப முடிய மாட்டேங்குது பங்கு. ரெடியா இருக்காங்க ஆப்பு வைக்க ;-) அதான் சின்னதா ஒரு டவுட். இப்ப கிளியர் ஆச்சு.

//என்னோட மத்த கமெண்ட் எல்லாம் எங்க..பங்கு நல்ல புள்ளயா அதயும் பப்ளிஷ் பண்ணு பார்ப்போம் :-) //

ஆச்சு. ஆச்சு. பதிலும் சொல்லியாச்சு

நாகை சிவா said...

//ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து கடவுள்
வெகுதூரம் சென்றுவிட்டார் என்று.//

மிகவும் உண்மை.

எழுதுறேன் செல்லம். வந்து ஆதரவு கொடு அது போதும்.