Friday, November 03, 2006

கண்ணி வெடி - 1

கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான்.

முதலில் இதை ராணுவத்தில் தான் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலக போரின் போது தான் இது பெரும் அளவில் பயன்படுத்த பட்டது. அதன் பிறகு வியட்னாம் போர், கொரியன் போர், முதல் வளைகுடா போன்ற போர்க்களின் வாயிலாக உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் இது பரவி விட்டது. இன்று இந்த வெடிகள் பல நாட்டில் தயாரிக்கபடுகின்றது, இந்தியாவையும் சேர்த்து...

இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம். சரியாக விபரங்கள் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் தன் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக ஒரு போதும் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தில்லை என தெரிவித்து உள்ளது.

எதற்காக இந்த வகையான வெடிக்குண்டுகள் உருவாகப்பட்டது என்று பார்க்கும் போது, எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், இரவு நேரங்களில் எதிரிகள் தீடிரென்று தாக்குவதை தடுக்கவும், எதிரிகளின் வாகனங்களை அழிப்பதற்க்கும், பாதைகளை, நீர் ஆகாரங்களை துண்டிப்பதற்க்காகவும் தான் உருவாக்கபட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளிகளை செயல் இழக்க செய்யவும், அந்த தருமணத்தில் தாங்கள் சுகாரித்து கொள்வதற்கும். இந்த வகை குண்டுகளை தொடுவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதுன் மூலமும், காந்த சக்தியின் மூலமும், ரிமோட் கொண்டு இயக்குவது மூலமும், டிரிப் வயர் மூலமும் வெடிக்க செய்யலாம்.

கண்ணி வெடிகளை ஒரு சிறந்த(முழுமையான) போர் வீரன் என்று சொல்வது உண்டு.

"The landmine is eternally prepared to take victims. It is the perfect solider."

- Nobel prize winner Mr. Jody Williams.


ஆனால் ஒரு இடத்தில் போர் நிறைவு பெற்றால் பெரும்பாலான போர் வீரர்கள் திரும்பி விடுவது உண்டு. ஆனால் இந்த கடமை வீரன்(கண்ணி வெடிகள்) தன் கடமையை 50 வருடங்கள் ஆனாலும் தவறாது செய்வதற்கு காத்து கொண்டு இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

கண்ணி வெடிகளில் இரு வகை உண்டு. ஆண்டி டேங்க் வெடிகள்(Anti-Tank Mines) மற்றும் ஆண்டி பர்ச்சனல் வெடிகள்(Anti-Personnel Mines). இவற்றை குறித்து விரிவாக பின்வரும் தொடர்களில் காணுவோம். ஆண்டி டேங்க் வெடிகள் தான் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் உபயோகபடுத்தபட்டது. ஆனால் எதிராளிகள் இதை சுலபமாக கண்டுபிடித்து அகற்றிய காரணத்தால், இந்த ஆண்டி பர்ச்சனல் வகை வெடிகள் தயாரிக்கப்பட்டது. இந்த வெடிகள் முதலில் ராணுவ(போர்) வீரர்க்களை மட்டும் தான் குறி வைத்து வைக்கப்பட்டது. பின்னர் சிவிலியன் என்று அழைக்கப்படும் பொது மக்களையும், அவர்களின் நிலங்களையும் நோக்கி திரும்பி விட்டது. அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

----------------------------------------------------------------------------------
பொதுவான தகவல்கள்:
*தற்பொழுது உலகம் முழுவதும் 100 மில்லியன் கண்ணி வெடிகள் உள்ளன.

*1975 ஆண்டில் இருந்து 2005 வரை 1 மில்லியன் மக்கள் இந்த கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.( இறந்தவர்களையும் சேர்த்து)

*இந்த கண்ணி வெடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஆப்கானிஸ்தான்(உபயம் - சோவியத் யூனியன்), ஈராக்(உபயம் - பெரியண்ணன் அமெரிக்கா), கம்போடியா,அங்கோலா, புருண்டி, கொழும்பியா, நேபாளம்,ஸ்ரீலங்கா, சூடான்.........

*இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.

*மேற் சொன்ன நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவில் 35 % சகவீதத்துக்கு மேற்பட்ட நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து உள்ளது. *ஈராக் நிலவரம் கிட்டதட்ட அது போல் தான் உள்ளது.

*ஸ்ரீ லங்காவில் இன்னும் போர் நடந்து கொண்டு இருப்பதால் எந்த அளவுக்கு கண்ணி வெடிகள் உள்ளது என்பது இன்னும் ஒரு கேள்வி குறி தான்.

*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.
----------------------------------------------------------------------------------

- சோகம் தொடரும்...
பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணிய காரணத்தால், இதை மீண்டும் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இதை ஒரு மீள் பதிவாக வெளியிடுகிறேன்.
ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்கு 1000 டாலர் மிகவும் அதிகம் என்று பலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அதற்கு விளக்கம் பின் வரும் தொடர்களில் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

78 comments:

நன்மனம் said...

//*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.//

:-((

Anonymous said...

தம்பி, கண்ணி என்று அழகான ஒரு சொல் தமிழில் உண்டு. அதன் பொருள் தெரிந்தால் கண்ணிவெடிக்குரிய விளக்கம் தானாகத் தெரிந்துவிடும். கண்ணிவெடி மிகமிகப் பொருத்தமான பெயரே.
பறவைகளையோ மிருகங்களையோ பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை 'கண்ணி' வைத்தல். இதை பொறி வைத்தல் என்றும் சொல்வர். இது சாதாரணமாகவே மக்களிடம் பயன்பாட்டிலுள்ள சொல்தான்.
இதில் பெண்களை ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்? ஒருவெளை பெண்களை நீங்கள் 'கன்னி' என்பதற்குப் பதிலாக 'கண்ணி' என்றுதான் எழுதுகிறீர்களோ? ;-)

கண்ணிவெடிகள் விதைக்கப்படாத எல்லைப்பாதுகாப்பு இல்லவே இல்லை. எனவே இந்திய எல்லைப்பகுதிகளில் இருதரப்பாலுமே கண்ணவெடிகள் தாராளமாகவே விதைக்கப்பட்டிருக்கும்.

மகேஸ் said...

//கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான். தமிழில் இதற்கான பெயர் காரணம் தெரியவில்லை//
கண்ணி என்பது பறவைகளையும், சிறிய விலங்குளையும் , நிலத்தில் வலைபோல விரித்துப் பிடிக்கப் பயன்படும் ஒருவித வலை.
அதில் நிறைய சுருக்குகள் இருக்கும். அதில் கால் அல்லது இறக்கைகள் மாட்டினால் எளிதில் தப்பிச் செல்ல முடியாது.

Anonymous said...

//நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர். //

எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
இது மிக மோசமான கணக்கு. தொண்டர் நிறுவனங்களாகச் சொல்லிக்கொள்பவை ஏப்பம் விடும் பெருந்தொகையையும் கணக்கில் போட்டுப்பிரித்துப் பார்த்து இப்படியொரு விடை வருகிறது போலுள்ளது. உண்மை நிலை அப்படியில்லை. இலங்கையை எடுத்துக்கொண்டால் நிங்கள் சொல்லும் கணக்கு மிகமிகமிக அதிகமானது. இப்படியான கணக்குகளைக் காட்டிக்கொண்டு தொண்டர் நிறுவனங்கள் உழைக்கின்றன என்பது மட்டும் உண்மை.

நாகை சிவா said...

நன்மனம் வழக்கம் போல முதலில் வந்து பின்னூட்டம் இட்டு விட்டீர்க்கள். நன்றி.

நாகை சிவா said...

//இதில் பெண்களை ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்? //
அனாமி மன்னிக்கவும், தவறு தான். அதுவும் தெரிந்தே செய்த தவறு தான்.

//இந்திய எல்லைப்பகுதிகளில் இருதரப்பாலுமே கண்ணவெடிகள் தாராளமாகவே விதைக்கப்பட்டிருக்கும்//
இந்திய எல்லையில் கண்ணி வெடிகள் விதைக்க பட்டு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்தியா தன் உள்நாட்டு பிரச்சனைக்கு கண்ணி வெடிகளை பயன்படுத்துவது இல்லை என உறுதி மொழி அளித்து உள்ளது என்று தான் கூறினேன். எல்லைபகுதியில் வைப்பது உள்நாட்டு பிரச்சனை கிடையாது. அப்படி வைப்பது தவறும் கிடையாது.

நாகை சிவா said...

நன்றி மகேஷ், பொறி வைப்பது கேள்விப்பட்டு இருக்கின்றேன். இந்த கண்ணி வைத்து பிடிப்பது சகஜமான வார்த்தை தான். அந்த தருமணத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. தகவலுக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

பக்கத்தில் புலி படம் ... இந்தப் பக்கம் கண்ணி வெடி ... சிவா பயமாயிருக்கு சிவா

நாகை சிவா said...

//தொண்டர் நிறுவனங்களாகச் சொல்லிக்கொள்பவை ஏப்பம் விடும் பெருந்தொகையையும் கணக்கில் போட்டுப்பிரித்துப் பார்த்து இப்படியொரு விடை வருகிறது போலுள்ளது.//தொண்டு நிறுவனங்களை பற்றி நான் பேசவில்லை. கண்ணி வெடிகளை உலகத்தில் இருந்து முழுவதும் அகற்ற வேண்டும் என்ற ஒரு சில அமைப்புகள் உள்ளது, அந்த அமைப்புகளின் கணக்கு படி தான் சொல்கின்றேன்(ஐ.நா.வையும் சேர்த்து)1000 டாலர் என்பது ஐ.நா.வின் கணக்கு. ஐ.நா.வை தாங்கள் தொண்டு நிறுவனம் என்று கருத மாட்டீர்க்கள் என்று நினைக்கிறேன்.

Jay said...

கண்ணி வேறு கன்னி வேறு......
ஆதிகால வேடர்கள் முதற்தடவை செல்லும் வேட்டையை இது அவனின் கன்னி வேட்டை என்று கூறுவர்......
இலங்iகியில் கூட கடும் பாதிப்பு குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்.
நான் ஒரு சிறுவனைப்பார்த்தேன் (10 வயதிருக்கும்) அவனுக்கு கையிரண்டும் இல்லாமல் போயிருந்தது ஏதோ விளையாடிய இடத்தில் இவ்வாறு ஆகிவிட்டது.

நாகை சிவா said...

//உண்மை நிலை அப்படியில்லை.//
கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஒரு சில பாலிசிகள் உண்டு. அந்த பாலிசிகளின் படி தான் இந்த கணக்கு.
உயிரை பணயம் வைத்து கண்ணி வெடியை அகற்றுவதற்கு இந்த உலகத்தில் ஆட்கள் மிக குறைவு. அதுவும் ஒரு முக்கிய காரணம்.

நாகை சிவா said...

//கண்ணி வேறு கன்னி வேறு......//
மக்களே! கண்ணிக்கு, கன்னிக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும். அது தெரிந்தே செய்த தவறு தான் என்பதை சொல்லி கொள்கின்றேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. மன்னித்து கொள்ளுங்கள் ஐயா.....

நாகை சிவா said...

//நான் ஒரு சிறுவனைப்பார்த்தேன் (10 வயதிருக்கும்) அவனுக்கு கையிரண்டும் இல்லாமல் போயிருந்தது//
மிக சோகமான விசயம். எந்த பாவமும் அறியாத குழந்தைகள் இந்த கண்ணி வெடிகளால், கண், கை, கால்களை இழப்பது மிக கொடுமையான விசயம்.

நாகை சிவா said...

//சிவா பயமாயிருக்கு சிவா //
யாரு உங்களுக்கா கண்ணன்!, இப்ப தமிழ்மணத்தில் எல்லாருக்கு பயம் காட்டி கொண்டு இருப்பதே நீங்கள் தான். உங்களின் லொள்ளான பின்னூட்டங்களால். அதுவும் இல்லாமல் நீங்க இப்ப சங்கத்தின் சிங்கம் வேறு. பயமே இனி உங்களை கண்டால் பயப்படும்.

கப்பி | Kappi said...

//It is the perfect solider//

கசப்பான உண்மை !!

VSK said...

கண்ணி வைத்து கன்னியிடம் மாட்டிக்கொண்டீர்களோ-இல்லை
கன்னியை வைத்து கண்ணியிடம் மாட்டிக்கொண்டீர்களோ!
கண்ணிக்கும், கன்னிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தும்
கன்னி, கண்ணி விளையாட்டு விளையாடிய உங்களைத்
தண்ணி இல்லாக் காட்டுக்கு மாற்றினால் என்ன?!
தண்ணி இல்லாக்காட்டில்தானே இப்போதே இருக்கிறேன் என
சன்னமாக முணுமுணுப்பது கேட்கிறது!!


உபயோகமான தகவல்கள்!
அந்த 1000 டாலர் சமாச்சாரம்தான் கொஞ்சம் அதிகமோன்னு நினைக்கிறேன்!

Chellamuthu Kuppusamy said...

//பறவைகளையோ மிருகங்களையோ பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை 'கண்ணி' வைத்தல்.//

நான் கூடச் சின்ன வயசுல கண்ணி வச்சு முயல் பிடிச்சுருக்கேன்...

நாகை சிவா said...

கசப்பான உண்மை தான் கப்பி. :(

நாகை சிவா said...

எஸ்.கே. உங்கள் மொழி திறமை தான் உலக அறிந்த விசயம் ஆயிற்றே. நானும் வணங்குகின்றேன்.

அது என்ன சன்னமாக சத்தாகவே சொல்லுகின்றேன். தண்ணி இல்லா காட்டில தான் உள்ளேன்.

எஸ். கே., தாங்களுமா, கண்ணி வெடியை அகற்றுவதற்கு முன்பு ஒரு சில பாதுகாப்பு விசயங்களை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன்படி நடந்து கொண்டால் 1000 டாலர் கண்டிப்பாக ஆகும்.

ambi said...

கண்ணி வெடி வைப்பதில் புலிகள் கை தேர்ந்தவர்கள். நனது அமைதி படை அங்கு முதலில் பலத்த சேதத்தை சந்தித்தது.
கடலில் கூட கண்ணி வெடிகள் வைக்கலாம், தெரியுமா? போர் கப்பல்களை, நீர் மூழ்கி கப்பல்களை தகர்க்க!

அருமையான பதிவு சிவா. (i meant, the way U presented, not the facts)

இராம்/Raam said...

படிக்கிறதுக்கே பயமா இருக்கு சிவா...

நாகை சிவா said...

//நான் கூடச் சின்ன வயசுல கண்ணி வச்சு முயல் பிடிச்சுருக்கேன்... //
நீங்க முயல் மட்டுமா பிடித்து உள்ளீர்க்கள். வேறு எதை எதையோ பிடித்தது மாதிரி உள்ளது உங்களின் கடைசி பதிவு.

Syam said...

//ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்//

மனதை உறைய வைக்கும் நிஜம்...

Syam said...

//நான் கூடச் சின்ன வயசுல கண்ணி வச்சு முயல் பிடிச்சுருக்கேன்...//

நானுந்தானுங்க....

நாகை சிவா said...

//கடலில் கூட கண்ணி வெடிகள் வைக்கலாம், //
ஹம் கேள்வி பட்டது மட்டுமில்லை அம்பி, அதை பார்த்தும் உள்ளேன்.

//கண்ணி வெடி வைப்பதில் புலிகள் கை தேர்ந்தவர்கள்.//புலிகள் அனைத்து வகையான தாக்குதலிலும் கை தேர்ந்தவர்க்கள். அதனால் தான் இன்னும் அவர்க்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

//the way U presented, not the facts) //
எனக்கு என்னவோ சரியாக பிரச்ண்ட் பண்ணிய மாதிரி தெரியவில்லை. சரியாக அமர்ந்து எழுதி ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும் நேரமில்லை. முடிந்த அளவு முயற்சித்து இருக்கின்றேன். உங்களுக்கும் நான் கொடுத்த புள்ளி விபரங்களில் நம்பிக்கை இல்லையா அம்பி......:(

நாகை சிவா said...

என்ன ராம், என் மேல் உள்ள கோபம் எல்லாம் போயி விட்டதா?
முதல் தடவையாக வந்து உள்ளீர்க்கள். தொடர்ந்து வரவும்.

கைப்புள்ள said...

சிவா,
பயனுள்ள தகவல்களைச் சொல்லி இருக்கிறீர்கள். பதிவு நன்றாக உள்ளது. தொடரில் அடுத்த பதிவையும் எதிர் பார்க்கிறேன்.

நாகை சிவா said...

//மனதை உறைய வைக்கும் நிஜம்.. //
வாங்க ஷாம், நீங்கள் ஆச்சும் அது உண்மை என்று ஒத்து கொண்டீர்க்களே. அது போதும்.....

நாகை சிவா said...

////நான் கூடச் சின்ன வயசுல கண்ணி வச்சு முயல் பிடிச்சுருக்கேன்...//

//நானுந்தானுங்க.... //

நீங்களுமா........

குப்பு அண்ணனின் கரையோரம் பதிவை படித்தீர்க்களா??? படித்து விட்டு சொல்லுங்க....

நாகை சிவா said...

//தொடரில் அடுத்த பதிவையும் எதிர் பார்க்கிறேன். //
கண்டிப்பாக தல, இதை குறித்து எனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும் கண்டிப்பாக என் பதிவில் பதியலாம் என்று உள்ளேன்.
என்ன இந்த தடவை தாங்கள் ஆகவே, அதுவும் இம்புட்டு சீக்கிரமாக வந்து வீட்டீர்க்கள்.

இராம்/Raam said...

//என்ன ராம், என் மேல் உள்ள கோபம் எல்லாம் போயி விட்டதா?
முதல் தடவையாக வந்து உள்ளீர்க்கள். தொடர்ந்து வரவும். //


அட என்ன கோபம் சிவா...?
தேவையில்லாம பிரச்சினை கிளம்புனது தான் கொஞ்சம் வருத்தமா இருத்துச்சு... மத்தபடி எதுவும் இல்லை...

நாகை சிவா said...

ராம், அது பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்பதற்காக கூறவில்லை. ஒரு நைண்யாடிக்கு தான் கூறினேன். ஆனால் பிரச்சனை வேறு மாதிரியாக மாறி விட்டது. தமிழ்மணத்தில் இப்படி தான், ஒரு சில விசயங்களை தொட்டாலே பத்திக்குது. நீங்கள் என் மேல் வருத்தமாக இருப்பது தெரிந்து தான் இரு முறை உங்கள் பதிவுக்கு வந்தும் பின்னூட்டம் இடாமல் திரும்பினேன்.

கைப்புள்ள said...

//என்ன இந்த தடவை தாங்கள் ஆகவே, அதுவும் இம்புட்டு சீக்கிரமாக வந்து வீட்டீர்க்கள்.//

இல்லை சிவா...ஒவ்வொரு தரமும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இங்க ஆபீஸ்ல வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்க. அதுனால தான் கொஞ்சம் டைட்டா இருக்கு. கோச்சிக்காதீங்க.

நாகை சிவா said...

அய்யோ என்ன தல, உங்க மேல கோவித்து கொள்வேனா, உங்களை கோர்த்து விடுகின்ற மாதிரி ஏதாவது எழுதினால் மட்டுமே உங்களை வந்து தொந்தரவு பண்ணுவேன். மற்றபடி வேற ஏதும் கிடையாது. அலுவலகத்தில் உள்ள வேலை பளு தெரியாதா என்ன, என் நிலைமையும் அப்படி தான். ஏதோ அப்ப அப்ப, எப்படியாச்சும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இங்குட்டு வரது தான்....

//ஆபீஸ்ல வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்க. //
அதான அங்கு உள்ளவர்க்களுக்கு என்ன தெரியும் நமக்கு வேற வேலை இருப்பது. சின்ன பயல்க.....

இராம்/Raam said...

//நீங்கள் என் மேல் வருத்தமாக இருப்பது தெரிந்து தான் இரு முறை உங்கள் பதிவுக்கு வந்தும் பின்னூட்டம் இடாமல் திரும்பினேன். //

அடடே அப்பவே பேசித்தீர்த்துகிறாலாம் இல்லயா... வாங்க இப்போ என் பதிவுக்கு...!
--/\-- வரவேற்கிறேன்.

நாகை சிவா said...

போயிட்டு வந்தாச்சு.....

ALIF AHAMED said...

டிஸ்கவரி சேனலில் கண்ணி வெடி அகற்றுவது பற்றி ஒரு டக்குமென்டரி பாத்தேன்.

அதில் பெருச்சாளியை வைத்து இஞ்ச்சு பை இஞ்சா அளக்க ஒரு நாளைக்கு 100 சதுர மீட்டர் அளப்பது என்பது எவ்வளவு கஸ்டம் என்று தெரிந்தது.

1000 டாலர் என்பது கம்மி என்பது என் கணிப்பு

(நாய்களை விட பெருச்சளிகள் அதிக மோப்ப சக்தி உடையது உண்மையா சிவா அண்ணே ??)

கோவி.கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

//நாய்களை விட பெருச்சளிகள் அதிக மோப்ப சக்தி உடையது உண்மையா சிவா அண்ணே ??) //
உண்மை தான் மின்னல். ஆனால் நாய்களை பழக்குவதை விட எலிகளை பழக்குவது மிகவும் கடினம். விரிவாக பின் வரும் தொடர்களில் எழுதுகின்றேன். தொடர்ந்து வந்து ஆதரவு தரவும்.

நாகை சிவா said...

கண்ணன் அண்ணன், நம்ம பதிவு சுத்த சைவமங்கனா.... நீங்க இந்த மார்கழி மேட்டர எல்லாம் கொண்டு வராதீங்க. பின்னூட்ட நாயகர்னு ஒரு பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார்கள். உங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்குது, உங்க நல்ல பாதி ஊருல இல்லையா. ஏன்னா உங்க வார்த்தைகளில், "தங்கமணி ஊருக்கு போயிட்டா" அப்படிங்கற மாதிரி ஒரு சந்தோஷம் கொப்பளிக்குது.

Machi said...

கண்ணி வெடி பதிவுல கன்னி பற்றி எழுதி (தெரிஞ்சே) சிதறிட்டீங்களே சிவா. கண்ணி(ன்னி)யை பற்றி எழுதும் போது கவனம் தேவை. :-))

// ஆமாம் கார்த்திகை, மார்கழி மாதத்திலும் பெருச்சாளிகளை நம்பலாம் என்ற அடிப்படையில் என்று நினைக்கிறேன்//

ஒன்னும் புரியலைங்களே கோவி. :-(


//அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.//

எந்த வகையான விதிமுறைகள் இருந்தது/இருக்கிறது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.


//நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்//
அதிகம் போல் தான் தெரிகிறது. ஒரு வேளை அமெரிக்காகாரனுக்கு டாலரில் கூலி கொடுத்தால் $1000 வரலாம். நம்மாளுங்க 1000 ரூபாய்க்கு 5 கண்ணியை எடுத்துருவாங்க.

நாகை சிவா said...

//எந்த வகையான விதிமுறைகள் இருந்தது/இருக்கிறது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.//
வரும் தொடர்களில் சொல்லுறேன்... ஒரே தொடரில் எல்லாத்தையும் கேட்டால் எப்படி.....

//அதிகம் போல் தான் தெரிகிறது. ஒரு வேளை அமெரிக்காகாரனுக்கு டாலரில் கூலி கொடுத்தால் $1000 வரலாம். நம்மாளுங்க 1000 ரூபாய்க்கு 5 கண்ணியை எடுத்துருவாங்க. //
அமெரிக்காகாரன் குண்டு வைக்க தான் லாயக்கு. எடுப்பதற்கு அல்ல. 1000 ரூபாய்க்கு எல்லாம் யாரும் உயிரை பணயம் வைக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

Anonymous said...

Hi Siva,
Informative post.Hope you wont give us the information about how to develop this weapon...
I think 1000$ number might be true to countries like US,canada,Japan might not be in china........
Guess what china or korea(am not able to remember) demanding japan to come and remove all this kind of stuff from their country.This is news some six months back....


with best
CT

நாகை சிவா said...

நன்றி C.T., இன்னும் வரலையே பாத்துகிட்டே இருந்தேன்.
நீங்க சொல்வது சரிதான். இதுல என்ன பிரச்சனைனா, யாரும் இந்த துறைக்கு அவ்வளவு சீக்கிரமா வர மாட்டேன் என்கின்றார்கள். பல நாடுகளுக்கு இதத குறித்த கவலை சிறிது கிடையாது. அது தான் பிரச்சனை. ஏன்னென்று பின்வரும் தொடர்களில் எழுதுகின்றேன்.

அப்பறம் உங்களின் பதிலை வஜ்ரா சங்கர் பதிவில் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. ஒரு சில கருத்துகளில் மட்டுமே வேறுபடுகின்றேன்.:))))

வன்னியன் said...

//அமெரிக்காகாரன் குண்டு வைக்க தான் லாயக்கு. எடுப்பதற்கு அல்ல. 1000 ரூபாய்க்கு எல்லாம் யாரும் உயிரை பணயம் வைக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு.
//

இலங்கையில் முதன்முதல் கண்ணிவெடியகற்றும் பொது அமைப்பு செயற்படத் தொடங்கியது வன்னியில் என்றுதான் நினைக்கிறேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமுன்பே வன்னியில் அமைப்பு நிறுவப்பட்டு கண்ணிவெடியகற்றும் பணி தொடங்கிவிட்டது. (இவ்வமைப்பு நிறுவப்படும் வரைக்கும் விடுதலைப்புலிகளின் படையணிகளே கண்ணிவெடியகற்றும் வேலையைச் செய்து வந்தன.) விடுதலைப்புலிகள் தான் பயிற்சி அளித்து அவ்வணியை உருவாக்கினார்கள். படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி மக்கள் வாழிடங்களை துப்பரவாக்கத் தொடங்கியவர்கள் அவர்கள்தான். முக்கிய மக்கள் வாழிடங்களைத் துப்பரவாக்கிக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். நீண்டகாலத்தின் பின்னர்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தன.

முதன்முதலில் வன்னியில் கண்ணிவெடியகற்றும் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் மாதாந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? 2500 இலங்கை ரூபாய்கள். இந்திய ரூபாயில் கணக்குப் பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரத்திச் சொச்சம் வரும். இந்நடவடிக்கையில் தவறுதலான வெடிவிபத்தில் ஒரு தொண்டர் இறந்து போனதும் குறிப்பிடத் தக்கது.

பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தபின் அவர்களின் சம்பளம் அதிகரித்தது. இன்று ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய்களுக்கும் அதிகமான சம்பளம் அவர்களால் வழங்கப்படுகிறது.

Amar said...

அருமையான தொடர் சிவான்னே.

எழுதுங்க எழுதுங்க...நிதானமா படிக்க நல்ல விஷயம்.

Anonymous said...

"ஏன்னென்று பின்வரும் தொடர்களில் எழுதுகின்றேன்.."
Looking forward to it.

Thank you for the comments.
" ஒரு சில கருத்துகளில் மட்டுமே வேறுபடுகின்றேன்.:)))) "

We can agree to disagree....so please do express yourself.I have no problem to accept my pitfalls...

with best
CT

நாகை சிவா said...

வன்னியன், தாங்கள் கூறுவதை நான் ஒத்துக் கொள்கின்றேன். இண்டர்நெஷனல் என்று வரும் போது ஒரு சில பாலிசிகளை கடைப்பிடிக்க வேண்டியது உள்ளது. முதலில் அதை அகற்றுவர்களின் பாதுகாப்பு, ஏதாவது ஒரு உபகரணங்கள் குறைந்தால் கூட, அந்த உபகரணம் வரும் வரை அவர்கள் அந்த பணியில் இடுப்பட கூடாது. அதுவும் இல்லாமல் தெற்காசிய நாடுகளில் அதை எடுப்பதற்கான செலவு குறைவு. ஆனால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் எடுப்பதற்கான செலவுகள் அதிகம். அந்த 1000 டாலர் என்பது மொத்த தொகையில் இருந்து கணிக்கபட்ட மதிப்பு தான். அதும் அது என் கணிப்பு அல்ல. ஐ.நா.வின் கணிப்பு.
தாங்கள் என் பக்கத்திற்கு வந்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

நாகை சிவா said...

//அருமையான தொடர் சிவான்னே//
சமுத்ரா, உங்களிடம் இருந்து வாழ்த்துக்களா, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏதும் தவறு செய்தால் தவறாமல் சுட்டிக் காட்டவும்.

நாகை சிவா said...

//Looking forward to it.//
மிக்க நன்றி.

//We can agree to disagree....so please do express yourself.I have no problem to accept my pitfalls.//
கண்டிப்பாக எதிர்காலத்தில் என் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வேன். தாங்கள் கூறியதில் எதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவிப்பேன்.

Amar said...

சிவான்னே இத படிச்சவுடனே உங்கள் நினைவு வந்ததுச்சு....

Amar said...

//இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம்//

//இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947௪8, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம்//

1971 ஆம் ஆன்டு ஈஸ்டர்ன் தியேட்டரில் கன்னிகளை அதிகம் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

பங்களாதேஷ்-இந்திய எல்லை பகுதிகள் பொதுவாக கன்னிவெடிகளை பொதைக்க ஏற்ற நிலங்கள் அல்ல.
(terrain is suitable, same in 1962)

அப்புறம் இந்தியன் ஆர்மியில் கன்னிவெடிகளை புதைத்து வைத்து இருக்கும் பகுதிகளை தான்டி செல்வது என்பது சாதாரனமாக நடக்கும் ஒன்று!!!! (Its a standard operational procedue[SOP]..they walk across minefeilds like it never existed)

ஒரு இரானுவ அதிகாரி "அட நானே நிறைய கன்னிவெடி வயல்களில் நடந்து சென்று பாகிஸ்தானியர்களை சன்டைக்கு இழுத்துள்ளேன்" என்றார்.

நேட்டோ போன்ற படைகளில் இப்படியெல்லாம் செய்வதில்லையாம்.

Amar said...

//இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.//

வடகிழக்கிலும் அதிக கண்ணி வெடிகளுக்கு வேலையில்லை என்று தான் நினைக்கிறேன்.அங்கே தீவிரவாதிகள் Improved Explosive Devices[IED] பயன்படுத்துகிறார்கள்.

தமிழினி said...

நல்லதொரு பதிவு. நன்றி சிவா.
பலரின் முயற்சிகளுக்குப் பின் இலங்கையில் சில இடங்களில் கண்ணிள் அகற்றப்பட்டன. (இதில் வன்னியன் குறிப்பிட்டிருந்த விடயங்களும் உண்மையே-நன்றி வன்னியன்)

ஆனால் தற்போது மீண்டும் இலங்கை இராணுவத்தால் கண்ணிகள் புதைக்கப்பட்டு வருவதாக வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

நாகை சிவா said...

//சிவான்னே இத படிச்சவுடனே உங்கள் நினைவு வந்ததுச்சு.... //
மிக்க நன்றி, நல்ல விசயம் தான். உதவி புரிவதில் நாம் என்றுமே பின் தங்கியது கிடையாதே...

நாகை சிவா said...

//ஒரு இரானுவ அதிகாரி "அட நானே நிறைய கன்னிவெடி வயல்களில் நடந்து சென்று பாகிஸ்தானியர்களை சன்டைக்கு இழுத்துள்ளேன்" என்றார்.//
ஹம். புதிய செய்தி. ராணுவத்தில் எதிரிகளை கருத்தில் கொண்டு கண்ணி வெடிகள் வைப்பது தவறே இல்லை. ஆனால் பொது மக்கள் பாதிக்கப்படுவது தான் வருத்தமான விசயம்.

பல பயனுள்ள கருத்துகளை தந்து உள்ளீர்கள். மிக்க நன்றி சமுத்ரா.......

நாகை சிவா said...

தமிழினி, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இலங்கை அரசாங்கம் செய்வது மிகவும் கண்டனத்துக்கு உரியது தான்.
விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறக்கட்டும் ஈழத்துக்கு.

Butterflies said...

tamila type pannathathukku mudala sorry!

romba nalla irunthuchu intha infolam kidaikkrathu romba kashtam!

Enna punniyam seithomo terila amidiyaana esthula naan irukken.romba nalla thagaval!

நாகை சிவா said...

உலகத்தின் பல நாடுகளை கம்பெர் பண்ணும் போது இந்தியா தாங்க சொர்க்கம். இன்னும் நாம் வளர வேண்டியது உள்ளது என்பதும் மறுப்பதற்க்கு இல்லை.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..... தொடர்ந்து வருகை தரவும்.

manasu said...

எழுதறது - கண்ணிவெடி
ப்ரொஃபைல் - புலி
பேரு - சிவா
(முழுப்பேர் சிவராசன் இல்லையே!!!)

நாகை சிவா said...

மனசு!
ஏன் இந்த விளையாட்டு. நான் பாட்டுக்கு சிவனே தானே இருக்கேன். அப்புறம் என்ன...

ILA (a) இளா said...

இன்னும் முடியலையா இந்த சோகம்?

Syam said...

பங்காளி நான் கூட இது இரண்டாம் பாகமோனு ஆர்வ கோளாருல தலைப்ப கூட சரியா படிக்காம படிக்க ஆரம்பிச்சேன்...அட இது எல்லாம் முன்னாடியே படிச்சிருக்கோம்னு நினைச்சுகிட்டே கீழ வந்தா தான் மேட்டர் தெரிஞ்சுது...சீக்கிரம் அடுத்த பாகம் எழுதப்பு.... :-)

╬அதி. அழகு╬ said...

//பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை.//

ம்ம்ம் ... புதைத்து வைத்ததைத் தோண்டத் தொடங்கி விட்டீர்கள்! பார்த்துத் தோண்டுங்கள்.

நாகை சிவா said...

சந்தோஷ் has left a new comment on your post "கண்ணி வெடி - 1":

புலி கலக்கிட்டேமா, அந்த செய்றதுக்கு 2$ எடுப்பதற்கு 1000$ தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

மனசு சொன்னதை பாக்கும் பொழுது தான் பயமா இருக்கு. உள்ள வெச்சிடமாட்டாங்க இல்ல :)) ??

நாகை சிவா said...

சந்தோஷ் has left a new comment on your post "கண்ணி வெடி - 1":

புலி,
கலக்கிட்டேமா. செய்வதற்கு 2$ எடுப்பதற்கு 1000$ மேட்டர் தான் கேட்பதற்கு கஷ்டமா இருக்கு. அப்புறம் மனசு செல்றதை பாக்கும் பொழுது எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு அது மாதிரி எதும் இல்லையெ?

நாகை சிவா said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "கண்ணி வெடி - 1":

எல்லாத்தையும் படிச்சேன், ஒரு உள்ளேன் ஐயா, போட்டுட்டு ஒதுங்கி நின்னுக்கறேன்.

நாகை சிவா said...

இலவசக்கொத்தனார் has left a new comment on your post "கண்ணி வெடி - 1":

நல்ல தொடர். அடுத்த பகுதியைப் போடுங்க.

நாகை சிவா said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "கண்ணி வெடி - 1":

எல்லாம் படிச்சு வச்சுக்கிட்டேன். ஒரு "உள்ளேன் ஐயா" போட்டுட்டு ஒதுங்கிக்கறேன். அப்புறம் வரேன்.

நாகை சிவா said...

//இன்னும் முடியலையா இந்த சோகம்? //

இளா, இன்னும் இல்லங்க. அந்த சோகம் என்று முடியும் என்றும் தெரியவில்லை. :-(

நாகை சிவா said...

//சீக்கிரம் அடுத்த பாகம் எழுதப்பு.... :-) //

இந்த தடவை மிஸ் பண்ணாம எழுதுறேன் பங்கு. :-)

நாகை சிவா said...

//ம்ம்ம் ... புதைத்து வைத்ததைத் தோண்டத் தொடங்கி விட்டீர்கள்! பார்த்துத் தோண்டுங்கள். //

கண்டிப்பாக உஷாரா இருப்போம்... நீங்களும் உஷாரா இருங்க..... ;-)

நாகை சிவா said...

//மனசு சொன்னதை பாக்கும் பொழுது தான் பயமா இருக்கு. உள்ள வெச்சிடமாட்டாங்க இல்ல :)) ?? //

பங்கு இது சொல்லி என்னைய பயப்பட வச்சுடுவ போல இருக்கே.... அது எல்லாம் பங்கு. நம்பு....

நாகை சிவா said...

//எல்லாத்தையும் படிச்சேன், ஒரு உள்ளேன் ஐயா, போட்டுட்டு ஒதுங்கி நின்னுக்கறேன். //

கீதாக்கா, இதுக்கும் உள்ளேன் ஐயா தானா? என்னமோ போங்க...

நாகை சிவா said...

//நல்ல தொடர். அடுத்த பகுதியைப் போடுங்க. //

கண்டிப்பாக கொத்துஸ், விரைவில் போடுகின்றேன்.

Unknown said...

மனதை கனக்க வைத்த பதிவு சிவா.

$1000 பற்றி சிலர் கேள்வி கேட்டுள்ளனர்.கண்ணிவெடி அகற்றுதல் எத்தனை ரிஸ்கான தொழில் என்பதும், கரணம் தப்பினால் மரணம் என்பதும், சுற்றிலும் நூற்றுகணக்கான மைல்கள் பிரதேசத்தில் மிக சாமர்த்தியமாக வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற எத்தனை சாமர்த்தியமும், திறமையும் தேவைப்படும் என்பதையும் யோசித்து பார்த்தால் 1000$ என்பது ஒன்றுமில்லை என்பதும் விளங்கும்.

நாகை சிவா said...

//$1000 பற்றி சிலர் கேள்வி கேட்டுள்ளனர்.கண்ணிவெடி அகற்றுதல் எத்தனை ரிஸ்கான தொழில் என்பதும், கரணம் தப்பினால் மரணம் என்பதும், சுற்றிலும் நூற்றுகணக்கான மைல்கள் பிரதேசத்தில் மிக சாமர்த்தியமாக வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற எத்தனை சாமர்த்தியமும், திறமையும் தேவைப்படும் என்பதையும் யோசித்து பார்த்தால் 1000$ என்பது ஒன்றுமில்லை என்பதும் விளங்கும். //

செல்வன், மிக்க உண்மை. இதில் வேலை செய்யும் நபர்களிடம் கேட்டால் நாங்கள் எல்லாம் முட்டாள் அதனால் தான் இந்த வேலையில் இருக்கோம் என்று சொல்வார்கள்.

Anonymous said...

Thambi Chumma browse pannumbothu unga blog parthen.Yenakum nagai than.entha school la padichinga?
Elementary, middle, mattrum higher secodary school kalai iyum pathi koncham eluthungo. enna indha payanum london vanthathu antha schools la onnula padichi than.