



சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, June 11, 2010
16
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம்
35 ஆயிரம் பேர் உயிர் இழக்கவும், 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆள்படவும் காரணமாக இருந்த போபால் விஷ வாயு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது. "எட்டு குற்றவாளிகள் மீதான குற்றங்கள் ஐ.பி.சி. 304(2), 336, 337 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெயில் மனுவை அளித்த குற்றவாளிகளுக்கு ஜம்மென்று ஜாமீனும் கிடைத்தது. 'பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் கவனக் குறைவாக செயல்பட்டது' என்பதுதான் குற்றவாளிகள் மீதான தண்டனைக்கான சாராம்சம்! இந்திய உயிர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து, அமெரிக்காவில் இதே போன்ற தங்களின் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், இத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தில் விஷத்தைப் பாய்ச்சிய வாரன் ஆண்டர்சன் பற்றி தீர்ப்பில் எதுவுமே இல்லை!" - ஜு.வி இங்கு நீதி, மலிவு விலையில் கிடைக்கும் என போர்ட் வைக்காத குறை தான் ! - வாழ்க சனநாயகம்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, June 10, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் வாழ்க சனநாயகம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, June 09, 2010
8
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் கண்டனம், கிரிக்கெட், விளையாட்டு
"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.



Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.
Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.
கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, June 03, 2010
11
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் NBA, கூடைப்பந்து, விளையாட்டு