Thursday, August 24, 2006

தேசிய பாடல்! (கண்ணன் கவனத்திற்கு)

திரு நா. கண்ணன், நம் தேசிய கீதத்தை குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒரு மேட்டரு சொல்லி அதுக்கு வெட்கப்படுகின்றேன் என்று சொல்லி இருந்தேன். அதை தற்சமயம் சரி செய்யும் பொருட்டு இந்த பதிவு. கண்ணன் சார் உங்களிடம் சொன்ன மாதிரி தேசிய பாடலை தவறு இல்லாமல் பாடு முடிகின்றது இப்ப.

"Vande Mataram! Vande Mataram!
Sujalam suphalam, malayaja shitalam,
Shasyashyamalam, Mataram!


Vande Mataram! Vande Mataram!

Shubhrajyotsna pulakitayaminim,
Phullakusumita drumadala shobhinim,
Suhasinim, sumadhura bhashinim,
Sukhadam, varadam, Mataram!


Vande Mataram! Mataram!
Vande Mataram! Mataram!

Sujalam suphalam, malayaja shitalam,
Shasyashyamalam, Mataram!
Vande Mataram!
Vande Mataram!"

இடைக்குறிப்பு:

இந்த பாடலை தற்சமயம் போட்டதற்க்கு காங்கிரஸோ, பா.ஜ.க. வோ, சமாஜ்வாதி பார்ட்டியோ, அர்ஜுன் சிங்கோ, லாலுவோ, எந்த ஒரு அமைப்போ, சக வலைப்பதிவர்களோ காரணம் கிடையாது. கிடையவே கிடையாது. நானே நான் தான் காரணம் என்பதை இங்கு சொல்லிக்கிறேன். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் நண்பர்களே! ஆனால் ஏன் இந்த குறிப்பு போட வேண்டியது வந்துச்சு என்பதை சொல்லுறேன் கேட்டுக்குங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம் சக வலைப்பதிவு நண்பர் ஒருவர்(தென் அமெரிக்காவில் குப்பை கொட்டிகிட்டு இருக்காரு) சாட்டில் நான் இல்லை என்று தெரிந்தும் மெயில் போட்டு சாட்டுக்கு வானு வேல மெனக்கிட்டு என்னயே கூப்பிட்டு வந்தே மாதரம் பத்தி உன் விவ்(View) என்னனு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல. என்னய்யா தீடீர்னு கேட்குறனு கேட்டேன். சரி விடு, வந்தே மாதரம் என்று சொன்னா உனக்கு என்ன தோணுதோ அத சொல்லுனான். இது என்னடா வம்பா போச்சுனு. சுகந்திர போரின் போது உபயோகப்பட்ட இந்திய தாரக மந்திரம். அதுவும் இல்லாமல் நம்ம தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு பெற்ற நம் தேசிய பாடல் னு சொன்னேன். நீ அங்குட்டு எல்லாம் போக வேண்டாம். சமீபமாக எதாச்சும் சொல்லுனு கேட்டான்.

போன வாரம் நம்ம சக வலைப்பதிவர் கிட்ட அந்த பாடலை தப்பு இல்லாம பாட முடியாதற்கு வெட்கப்படுறேனு சொல்லி இருந்தேன். அதை இப்ப சரி பண்ணிட்டேன். அதை குறித்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன் என்று சொன்னேன். அட பாவி இப்ப அந்த பதிவ போடாதனு அவன் தென் அமெரிக்காவில் கத்தியது சூடானையும் தாண்டி துபாய் வரைக்கும் கேட்டது. அப்படி ஒரு கதறல். என்னப்பா என்ன ஆச்சு. ஏன் இந்த கலவரம் கேட்டேன். நீ எந்த தினசரியும் ஒரு இரண்டு நாளா படிக்கலய்யா, இல்ல தமிழ்மணம் தான் இரண்டு நாளா பார்க்கலையானு கேட்டுவிட்டு எல்லாம் மேட்டரயையும் பட் பட்னு விளக்க எனக்கு சப்த நாடியும் அடக்கி விட்டது. எப்படி எல்லாம் கிளம்புறானுங்க என்று தான். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஜெய்ஹிந்த ஆரம்பித்தார்கள் இப்ப வந்தே மாதரமா. சரி நடக்கட்டும். எது நடக்கனும் என்று இருக்குதோ அது நடந்தே தீரும். அத நம்மால தடுத்து நிறுத்தவா முடியும். இருந்தாலும் நாம பதிவு போடனும் என்று முடிவு பண்ணியாச்சு. அதில் இருந்து பின் வாங்க முடியுமா? அதனால பதிவு போடுறது போடுறது தான் அவன்கிட்ட சொல்லிட்டு பதிவையும் போட்டாச்சு. மற்றவை நேயர்கள் விருப்படி நடக்கட்டும். என்ன நான் சொல்லுறது ....

நமக்கு வந்தே மாதரம் பாடலை பாடுவதில் எந்த பிரச்சனையும் கிடையாது, தயக்கமும் கிடையாது. அதனால்

"ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்
ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்."

விருப்பம் இருக்குறவன் சொல்லுங்க, விருப்பம் இல்லையா டைய(எவ்வளவு நாளைக்கு தான் துண்டுனு சொல்லுறது) உதறி தோளில் போட்டு போய் பொழப்ப பாருங்கப்பா.

40 comments:

குமரன் (Kumaran) said...

VandhE maatharam!

இலவசக்கொத்தனார் said...

நானும் சொல்லறேன்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

இராம்/Raam said...

ஏய் புலி,

என்னாச்சு உனக்கு தீடீரென்னு... தொட்டா பத்திக்கிற மேட்டரை எடுத்து இருக்கிறே அதுவும் இப்போ....

என்னவோ போ.....

ஜயராமன் said...

அருமையான பதிவு.

எழுச்சியூட்டும் இந்த பாட்டை பதிப்பித்ததற்கு ஒரு நன்றி.

வந்தே மாதரம்!

நவீன பாரதி said...

உயிரின் இறுதி மூச்சு உள்ளவரை சொல்லுவோம்!

வந்தே மாதரம்!

இராம்/Raam said...

நான் நெஞ்சு நிமிர்த்தி உரக்கச் சொல்வேன்...

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Syam said...

யார் என்ன சொன்னாலும் வந்தே மாதரம்!!! சொல்வதில் எந்த மாற்றமும் கிடையாது...

ஆமா அது என்ன மேட்டர் அதுக்கும் ஒரு லின்க் குடுத்து இருக்கலாம்ல...என்னனு நாங்களும் தெறிஞ்சுக்குவோம்....

ஜெய் ஹிந்த்

கப்பி | Kappi said...

வந்தே மாதரம்!!!

நாகை சிவா said...

//ஆமா அது என்ன மேட்டர் அதுக்கும் ஒரு லின்க் குடுத்து இருக்கலாம்ல...என்னனு நாங்களும் தெறிஞ்சுக்குவோம்....//

அதான் திரு. நா. கண்ணன், லிங்க் கொடுத்து இருக்கேனே அப்புறம் என்ன. எனக்கு தெரிஞ்ச மேட்டரு ஒரு ஒன்னு தான். மறுபடியும் உனக்காக தரேன். போயி பாத்துக்கோ.

http://emadal.blogspot.com/2006/08/blog-post_115608088111361206.html

மத்த மேட்டர் எல்லாம் எனக்கு தெரியாது.

நாகை சிவா said...

//என்னாச்சு உனக்கு தீடீரென்னு... தொட்டா பத்திக்கிற மேட்டரை எடுத்து இருக்கிறே அதுவும் இப்போ....//

என்னப்பா ராம். நீ வேற பீதிய கிளப்புற. அப்படி என்ன பத்திக்குற மாதிரியான மேட்டர நான் எழுதிட்டேன். ஒன்னும் புரியலயேப்பு;

நாகை சிவா said...

குமரன், கொத்துஸ், ராம், கப்பி, ஐயராமன், நவீன பாரதி, ஷாம் ஆகியோர்களுக்கு நன்றி, வருகைக்கும், வந்தே மாதரம் கூறியதற்க்கும்.

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல பதிவு நாகையாரே!
கண்டிப்பாக நானும் சொல்லுவேன்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம் சொல்லுவது தப்பு, என்று யாராவது சொன்னால், அந்தத் தப்பை நான் திரும்பத் திரும்ப செய்வேன் :)))))

திரும்பவும் சொல்லுவேன்!
திமிராகவும் சொல்லுவேன்!
வந்தே மாதரம்!


இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்!
ஜெய் ஹிந்த்


அன்புடன்...
சரவணன்.

கால்கரி சிவா said...

வந்தே மாதரம்

Unknown said...

"ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்
ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்."

VSK said...

"ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்
ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்."

நாகை சிவா said...

//இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்!
ஜெய் ஹிந்த் //

கண்டிப்பாக இணைந்தே இருப்போம். பல சாதனைகளை செய்வோம் சரா!

நாகை சிவா said...

கால்கரி சிவா, எஸ்.கே., செல்வன் - நன்றிகள் பல பல

" வந்தே மாதரம் "

கஸ்தூரிப்பெண் said...

ஊர்ஸ்,

கொடிக்குமரனுக்கு ஒரு கும்பிட்டு போட்டு,
திரும்பவும் சொல்லுவேன்!
திமிராகவும் சொல்லுவேன்!
வந்தே மாதரம்!

வடுவூர் குமார் said...

அம்மாவுக்கு அடுத்தது என்னனு கூப்பிடனுமுன்னு பார்த்த
இது தாங்க
"வந்தே மாதரம்"

Ramya said...

வந்தே மாதரம் என சொல்வோம் அனைவரும்.
romba nandri andha padalai pottadharkku.naanum adhai katru konden.jai hindh.

Geetha Sambasivam said...

VANDHEMATHARAM AND JAIHIND

கைப்புள்ள said...

நல்ல பதிவு சிவா!

வந்தே மாதரம்!!

Muse (# 01429798200730556938) said...

இந்தப் பாடலை பாட இஸ்லாமியர் தயங்குவதில் அவர்கள் மத அடிப்படையிலான காரணங்கள் உண்டு. அல்லாவைத்தவிர மற்றவர்களை, மற்றவற்றை வணங்கக்கூடாது என்பது அவர்களுக்கு குரான் சொல்லும் பாடம்.

வந்தே மாதரம் பாடல் முழுக்க முழுக்க (முதல் இரு பாராக்களைத் தவிர்த்து) ஹிந்து தத்துவங்கள் நிறைந்த ஒரு பாடல். என் உடலுக்குள் இருக்கும் உயிர் நீயே, எல்லா கோயில்களிலும் இருப்பவள் நீயே என்பது போன்ற வரிகள்.

இதை ஆரம்பத்திலேயே இஸ்லாமியர் எதிர்த்ததால் பிரச்சினைகள் எதுவுமில்லாத முதல் இரு பாராக்களை மட்டும் பாடுவது என்று முடிவு செய்தார்கள். எல்லா இடங்களிலும் பொதுப்படையான வாழ்த்தான அந்த முதல் இரண்டு பாராக்கள்தான் பாடப்படுகின்றன. தமிழ்தாய் வாழ்த்துபோல, அது ஒரு நாடுபற்றி உயர்வாய் பாடுகின்ற பாடல். ஜன கன மன தேஸிய கீதம். பாடப்படும் நேரங்கள் வேறு.

இப்போது இமாம் முதலானவர்கள் ஃபத்வா விதித்திருப்பது அந்த இரண்டு பாராக்கள்கூட பாடப்படக்கூடாது என்பதற்குத்தான். அதாவது பொதுப்படையான கருத்துக்களைக்கொண்ட வரிகளைக்கூட பாடக்கூடாது என்பதுதான் அந்த ஃபத்வா.

******************************

சங்கபரிவாரங்கள் ஆதரிப்பதையெல்லாம் எதிர்க்கவேண்டும் என்பதுதான் தற்காலத்தில் பிழைக்கவழி. இது நிலையாகிவிட்ட காலகட்டத்தில், இந்திய கொடியை வணங்குவதும் ஒருவகையான உருவ வழிபாடுதான் என்று சொல்லி ஃபத்வா போடுவார்கள். பாஜாகாவினர் வேறு இந்த கொடியை தூக்கிப்பிடிப்பவர்கள். இந்த காரணத்திற்காகவே நாம் இதை எதிர்த்துவிடலாம். கொடியில் காவி நிறம்வேறு இருக்கிறது. ஹிந்துத்துவா கெட்ட வார்த்தை என்றால். காவி கெட்ட கலர். இந்த கலர் இருக்கிற கொடியை வருடா வருடம் ஏற்றி அதற்கு ஒரு இஸ்லாமியர் ஸல்யூட் அடிப்பது தப்பு. இஸ்லாத்திற்கு எதிரானது. அதனால் இந்த காரணத்திற்காக போடப்படவிருக்கிற ஃபத்வாவை நாம் இப்போதே ஆதரித்துவிடுவோம்.

ஆந்திராவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை தொழுகைக்காக உபயோகப்படுத்தி பின்னர் தொழுகை நடந்ததாலேயே அங்கே தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே சொல்ல ஆரம்பித்தாயிற்று.

அப்படியெல்லாம் சொல்வதால்தான் ஹஜ் யாத்திரைக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து பணம் கிடைக்கிறது. ஹிந்துக்கள் அமர்நாத்திற்கு போகக்கூட சரியான வழியின்றி, போனால் புனிதப்படையினரின் குண்டடியில்லாமல் திரும்பிவருவோம் என்கிற உத்தரவாதமின்றி இருக்கிறார்கள். காசிக்குப் போகிறவர்களுக்கு கழிப்பறை வசதிகள்கூட கிடையாது. காசியும், கங்கையும் நாறுகிறது. நாத்தம்பிடித்த நதியை புனித நதி என்று இந்த பாஜாகாவும், மற்ற ஸங்கபரிவாரங்களும் ஒத்துக்கொள்வதால் அதையும் எதிர்த்துவிடலாம்.

ஸங்கபரிவாரங்கள் வருடா வருடம் சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடுகிறார்கள். மதச்சார்பற்ற, த்ராவிடர்களின் ஒட்டுமொத்த ப்ரதிநிதியாகவுள்ள திமுக சுதந்திர தினத்திற்கு இதுவரை கொடியேற்றியதில்லை. எனவே அவர்கள் நடுநிலையானவர்கள்.

நாமும் நடுநிலையானவர்களாகவே இருப்போம். நம் பிள்ளைகள்தான் பிடித்த தெய்வத்தை வணங்கவும், எந்த தெய்வத்தையும் வணங்காதிருக்கவும் இருக்கும் உரிமையற்ற ஒரு மதத்திற்கு மாறப்போகிறார்கள். அப்படி ஒன்றும் பெரிய ஆபத்து எதுவும் நமக்கு வந்துவிடவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றால் நாமும் நல்லவர்கள்தான்.

******************************

தற்போது பாடப்படும் தேசிய கீதம் உண்மையில் நம்மை ஆண்ட இங்கிலாந்து அரசை போற்றிப்பாடியது. வந்தே மாதரம் பாட எதிர்ப்பு இருப்பதால் நம்மை அடிமையாய் வைத்திருந்தவர்களைப் போற்றி ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த சமரசமும் சமரசம் என்கிற வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்படி ஒவ்வொன்றாக ஃபத்வா விதித்துவந்தால் கடைசியில் என்னாகும்?

இப்படி பார்ப்போமே. இவர்கள் ஏன் ஃபத்வா விதிக்கிறார்கள்? ஃபத்வா விதிக்காதபோதும் பல விஷயங்களை எதிர்க்கிறார்கள் (ஜீவனாம்ஸ பிரச்சினை உட்பட). ஏன் ? ஏனெனில் ஒரு செயல், ஒரு பொருள் இஸ்லாத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக. அதாவது இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்கள் எதுவும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது. முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடாகவிருந்தால் நடைமுறையில் இவர்கள் சொல்லுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் மற்ற மதத்தினரும் வாழ்ந்து தொலைக்கும் நாடாக இது இருந்துதொலைப்பதால், ஒன்று இவர்களுக்காக மற்றவர்களும் இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்களை தவிர்க்கவேண்டும், அல்லது இவர்கள் மட்டும் ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு தனி உலகம் பெற்று வாழ ஆரம்பிப்பார்கள் - அதாவது நாட்டிற்குள்ளேயே இன்னொரு நாடு.

இப்படி இருந்தால் மட்டுமே மற்றவர்கள் பிழைக்க முடியும் என்கிற நிலமை இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு அபாயம் நம்மை சூழ்ந்திருப்பது பற்றி தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Muse (# 01429798200730556938) said...

இனிய நீர்ப் பெருக்கினை ! இன்கனி வளத்தினை !

தனி நறு மலயத் தண்காற் சிறப்பினை !

பைநிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே ...)



வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை !

மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை !

குறுநகையின் சொலார் குலவிய மாண்பினை !

நல்குவை இன்பம் வரம்பல நல்குவை! (வந்தே....)



முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்

அறுபது கோடிதோ ளுயர்த்துனக் காற்றவும்

திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன் ?

அருந்திறலுடையாய் ! அருளினை போற்றி !

பொருந்தலர் படபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே....)



நீயே வித்தை, நீயே தருமம்!

நீயே இதயம், நீயே மருமம்!

உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே ....)



தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே

சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!

ஆலயன் தோறும் அணிபெற விளங்கும்

தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே.....)



ஒருபது படைகோளும் உமையவள் நீயே

கமலமெல் லிழைகளிற் களித்திடுங் கமலைநீ!

வித்தைநன் கருளும் வெண்மலர் தேவிநீ ! (வந்தே....)



போற்றி வான் செல்வி ! புரையிலை, நிகரிலை !

இனியநீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!

சாமள நிறத்தினை, சரளமான தகையினை!

இனியபுன் முறுவலாய்! இயக்குனல் லணியினை !

தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே...)

நாகை சிவா said...

கீதா, ரம்யா, வேதா, கஸ்தூரி பெண், வடவூர் குமார், C.T., உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நாகை சிவா said...

//நல்ல பதிவு சிவா!

வந்தே மாதரம்!! //

வா தல. நன்றி. ஆனா நேத்து என்னைய ஆட்டத்துக்கு கூப்பிடாம நீ மட்டும் தனியா ஆடிட்டியே இது சரியா?

நாகை சிவா said...

மயூஸ்!
தமிழ் விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி!

இந்த வந்தே மாதரம் விசயத்தை மத அடிப்படையில் காண வேண்டாம் என்பது தான் என் நிலைப்பாடு. மதங்களை விட நாடும் நாட்டு மக்களும் பெரிது என்று நினைக்கிறேன். அனைவரும் இப்படி நினைக்க வேண்டும் என்று நான் கூற வில்லை. நான் முன்பே கூறியது போல, பிடிச்சா சொல்லு, பிடிக்கலய்யா போயி வேலை பாரு. பிரச்சனை உண்டாக்காதே. அவ்வளவு தான்.

Syam said...

//இந்த வந்தே மாதரம் விசயத்தை மத அடிப்படையில் காண வேண்டாம் என்பது தான் என் நிலைப்பாடு. மதங்களை விட நாடும் நாட்டு மக்களும் பெரிது என்று நினைக்கிறேன்//

சரியா சொன்ன பங்கு...உண்மய சொன்னா இன்னும் எங்க ஊர்ல காளி கோயில், அல்லா கோயில், ஏசு கோயில்னு தான் சொல்லுவோம்...

அப்துல் மாமா வீட்டு விசேசத்துக்கு போய் பிரியாணி சாப்பிடுவோம்...

ஸ்டீபன் அண்ண வீட்ல வருவல் சாப்பிடுவோம்...

எங்க வீட்டு கிடா வெட்டுக்கு ரெண்டு பேரும் வருவாங்க...

நம்ம எல்லாம் ஒன்னா தான் இருக்கோம்...இடையில எவனோ ஆதாயத்துக்கு நம்ம பிரிச்சு குளிர் காய பார்கறான்..அதுக்கு நம்ம இடம் குடுக்க கூடாது....

Unknown said...

//விருப்பம் இருக்குறவன் சொல்லுங்க, விருப்பம் இல்லையா டைய(எவ்வளவு நாளைக்கு தான் துண்டுனு சொல்லுறது) உதறி தோளில் போட்டு போய் பொழப்ப பாருங்கப்பா.// என்னைப் பொருத்தவரை இதுதான் சரி.

நான் இந்தியன் என்பதில் மிகப்பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவை நேசிப்பதில் எல்லோருக்கும் முன்னோடியாய் இருக்க விரும்புகிறேன். இந்திய நாட்டுக்கு சவால் ஏற்படும் நேரங்களில் அதைத் துடைத்தெறிய முதலில் நிற்கத் துடிக்கிறேன். ஆனால் இந்தப் பாட்டைப் பாடுபவன் மட்டும்தான் இந்தியாவை நேசிப்பவர்கள் என்றால் ஒப்புக் கொள்ள தயாரில்லை.
நீ விருப்பமென்றால் பாடு. நல்லது. மற்றவர்களை கட்டாயப்படுத்துவது தவறு என்கிறேன்.

Butterflies said...

vande maatharam!!!!nalla post!!!

நாகை சிவா said...

சுபா உங்க வருகைக்கு நன்றி!

சுல்தான், நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் இந்த பிரச்சனைக்கு "பத்வா" போட்டு பெரிதாக்கியது தவறு என்பது என் கருத்து. இதை பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்.

நாகை சிவா said...

ஷாம் பங்காளி,
நீ சொல்வதை உண்மை தான். எங்க ஊரில் அதற்கு உதாரணம்ப்பா. நாகூர், வேளாங்கண்ணி நடுவில் தான் நாங்க உள்ளோம்.
பிரச்சனை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தேவையில்லாமல் இந்த விசயத்தை பெரிது படுத்தி விட்டார்கள் என்பது தான் ஆதங்கம். அரசியல்வாதிகளில் இருந்து அத்துனை பேரும்........

ambi said...

வந்தே மாதரம்!. வந்தே மாதரம்!
Oh My god! are we going really progressing to become vallarasu in 2020?
evloo vishayam irukku sari panna?
cha! velai illathavan punaiya pidichu serachaanaam!

Anonymous said...

What is the meaning of "vanthe matharam" in Tamil? What language is it from? Just a curious non-indian.

Unknown said...

//நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் இந்த பிரச்சனைக்கு "பத்வா" போட்டு பெரிதாக்கியது தவறு என்பது என் கருத்து. இதை பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்//
பத்வா என்பதற்கு மார்க்த் தீர்ப்பு என்று பொருள். இஸ்லாத்தில் இறைவனைத் தவிர தாயாகவே இருந்தாலும் வணங்க முடியாது. அதனால்தான் தாய் மண்ணை வணங்குவதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதென சொல்லப்பட்டது.

விருப்பப்பட்டவர்ககள் பாடினார்கள். விருப்பமில்லாதவர்கள் விட்டு விட்டார்கள். இங்கே அதை பிரச்னையாக்கி எல்லோரும் கண்டிப்பாய் பாடித்தான் ஆக வேண்டுமென சட்டமியற்ற ஒரு சாரார் சொல்வதால் அதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. சட்டமியற்ற முரண்டு பிடிப்பவர்கள்தான் சரி செய்யப் பட வேண்டியவர்கள்.

ஒருவர் மார்க்கத் தீர்ப்பு சொல்லிவிட்டால் அதற்காக அவருக்கு மற்றவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்ற அதிகாரம் உண்டென்று பொருளல்ல. அவர் சொல்வதை சொல்லி விட்டார். கேட்பதும் கேட்காகததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது.

நாகை சிவா said...

//Oh My god! are we going really progressing to become vallarasu in 2020?
evloo vishayam irukku sari panna?
cha! velai illathavan punaiya pidichu serachaanaam! //

சரியா சொன்னீங்க அம்பி. இதையும் அரசியல் ஆக்கிட்டானுங்க.

நாகை சிவா said...

வந்தே மாதரம் என்றால் தமிழில் தாய் மண்ணே வணக்கம் என்று பொருள் கொள்ளலாம். இந்த வங்க மொழியில் இயற்றப்பட்ட பாடல். தமிழில் நம் முண்டாசு கவிஞன் மொழி பெயர்த்து உள்ளான். அந்த பாடலை பாடியவர் நம் எம்.எஸ். வேண்டும் என்றால் சொல்லுங்கள் அந்த பாடலையும் எடுத்துப் போடுகின்றேன்.

அனாமி, பெயர் சொல்லி பின்னூட்டம் போட்டால் நன்றாக இருக்கும்

நாகை சிவா said...

சுல்தான், நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான்.
நீங்கள் கூறியதை போல பிரச்சனையை ஊதி பெரிதாகி விட்டார்கள். இதுக்கு அனைவருமே ஒரு காரணி தான்

Anonymous said...

Whoa, is this written in Tamil?

Anonymous said...

Genial post and this fill someone in on helped me alot in my college assignement. Gratefulness you as your information.