Thursday, March 09, 2006

வணக்கம்!

வணக்கம்!

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது என்னுடைய கன்னி முயற்சி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் தான் தமிழர் பண்பாடு. அதற்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன?

ஏதற்காக இந்த வலை மனையை ஆரம்பித்தேன்? என் மனதில் தோன்றும் எண்ணங்களை என் தாய் மொழியாம் தமிழ் மொழியில் பதிவு செய்வதகாக தான். இது சற்று கடினம் தான், இருந்தாலும் முயற்சிகின்றேன்.
ஏதில் இருந்து ஆரம்பிப்பது?

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இந்த மார்ச்ச் திங்கள் 7ஆம் நாளுடன் இந்த உலகில் கால் நூற்றாண்டை கடந்து இருக்கின்றேன். இந்த வலை பக்கத்தில் என் எண்ண ஒட்டங்களை பதிவு செய்வதற்கு முன்பு இந்த முதல் பதிவை நன்றி நல்கும் பதிவாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.

என் குடும்பத்திற்க்கும், என் சொந்த பந்தங்களுக்கும், என் தோழர், தோழிகளுக்கும், என் ஆசிரிய பெரு மக்களுக்கும், என் தாய் மொழிக்கும், என் தாய் நாட்டிற்க்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நன்றியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

நன்றி!!!!!!!! நன்றி !!!!!!!!!!!!!!!!! நன்றி!!!!!!!!!!

நட்புடன்,
தி. சிவா
சுடான்.

1 comment:

ஜெ. ராம்கி said...

Welcome! Need to concentrate more on template designing.