நேற்று முன் தினம் நடந்து விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்து இருந்தது. கிட்டதட்ட 4 1/2 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் மிகவும் போராடி பெடரர் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த போதிலும் ரோடிக் கின் ஆட்டம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ரசித்த போட்டி இது தான். போன வருட விம்பிள்டன் இறுதி போட்டி பார்க்கவில்லை என்பது வேறு விசயம். 2001 ல் இவான்செவிக் மற்றும் ராப்டரின் ஆட்டத்திற்கு பிறகு இது தான் எனக்கு பிடித்த ஆட்டம். இந்த ஆட்டம் விம்பிள்டனின் முதல் ஆறு சிறந்த இறுதியாட்டங்களில் ஒன்றாக தேர்வு பெற்று உள்ளது. பார்க்க கிடைத்தவர்கள் உண்மையிலே பாக்கியசாலிகள். இருவரின் ஆட்டத்தை பார்த்து யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்றே நினைக்க வைத்தார்கள். 50 ஏஸ்கள் போட்டு பெடரர் கோப்பையை தட்டி சென்றார். தருமி, மருத்துவர் அய்யா ராமநாதன் மிகவும் மகிழ்ந்து இருப்பார்கள். நான் ரோடிக் பக்கம். மிகவும் அருமையான ஒரு ஆட்டம் தந்ததுக்காக. It's not winning that's important, it's how you play the game. Good Job Roddick.
நம்ம பயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இறுதியாட்டம் வரை வந்தார்.
இந்த நேரத்தில் வருண பகவானுக்கு என் நன்றியை சொல்லிக்கனும், இல்லையென்றால் கிரிக்கெட் டில் சரணாகதி அடைந்து இருப்போம்.
காணவில்லை - 1!

மக்களே! நம்ம ஊரில் குட்டி சாமியார் குட்டி சாமியார் னு ஒருத்தர் இருந்தாரே, அதான்ப்பா பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி. என்னப்பா ஆனார் அவர். ரொம்ப நாளாக அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.
காணவில்லை - 2!

நம்ம தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதி னு ஒருத்தவங்க சினிமாவில் நடிச்சாங்களே, அங்க எங்கப்பா இப்போ? அதான்ப்பா ஆல்பம், ஸ்ரீ, தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடிச்சாங்களே, அவங்களே தான்! ரொம்ப மிஸ் பண்ணுறேனு நினைக்காதீங்க, லைட்டா தான் ;)
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா என்று கதற வைக்கும் சக்தி இசை கருவிகளை கற்றுக் கொள்ளும் நம் நண்பர்களால் நமக்கு அடிக்கடி வாய்க்கும். கீ-போர்டு வாசிக்க கற்றுக் கொள்ளும் அனைவரும் பயிலும் அல்லது பயில விரும்பும் ஒரு பாடல் ஏக், தோ, தின் பாட்டு. அதை வாசிக்கா விட்டால் அந்த கருவியில் தேர்ச்சி பெறாத மாதிரி ஒரு எண்ணம் அவர்களுக்கும் ஏற்படுமோ என்னவோ! நான் படும் கஷ்டம் எனக்கே! ஏண்டா காலங்காலமா இதே தானா? மாத்துங்கப்பா, முடியல....ப்ளீஸ்..... இன்னும் சிலர் ஆரம்பத்தில் பல பாடல்களை வாசித்து பிறகு இந்த பாடலை முடிவு தொடுவதாக (அதான்ப்பா finishing touch ஆம்)இசைக்கிறார்கள். ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
கீ-போர்டு பார்ட்டிகள் இப்படி என்றால் கிடார் மக்கள் என் இனிய பொன் நிலவே னு சட்னு பிரதாப் போத்தானா மாறி விடுகிறார்கள். ஏதோ ராஜா தெரியாம அந்த பாட்டுக்கு கிடாரை உபயோகப்படுத்திட்டார். அதுக்குனு இப்படியா? என்னை பார்த்தால் பாவமா இல்லையா?
இது போல் என்னை இம்சை பண்ணும் அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் என் உற்ற நண்பனில் ஒருவன் கிடார் கற்றுக் கொண்டு என் பிறந்தநாள் அன்று புதிதாக கிடார் வாங்கி அவன் நண்பர்களையும் உடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது போல் எதாச்சும் புதுமையாக செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது உபரித்தகவல்.