Monday, January 31, 2011

தமிழக மீனவர்களுக்காக

மற்றவர்களுக்கு எப்படியோ நாகையை சேர்ந்த எனக்கு நாகை மாவட்டத்து மீனவன் சுடப்படுவதும் அதை தொடர்ந்து மீனவர்களின் சில நாள் போராட்டம், அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் மீண்டும் தாக்குதல் மீண்டும் போராட்டம் என்பது பாத்து பாத்து சலித்து போன விசயம். உருப்படியாக ஏதுவும் நடந்ததும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்று வெறுத்து போன மனநிலை தான்.

கடந்த வாரம் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் மீண்டுமா என்ற கேள்வியும் வழக்கம் போல் நாகை மாவட்டத்து மீனவர்களின் காலவரையெற்ற போராட்டம், மறியல், மற்ற சில மீனவ கிராமங்களின் மறியல், ஆளும் கட்சியின் திரைமறைவு நிவாரணம், மற்ற கட்சிகளின் கடமைக்கான எதிர்ப்பு குரல் அம்புட்டு தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக இணையத்தில் வலுவாக குரல்கள் தொடர்ந்து எழுப்பட்ட போது எனக்கே இது உண்மை தானா என்ற ஐயம் வந்தது. ஆனால் என் ஐயத்தை துடைக்கும் வண்ணம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு நிறுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டிவிட்டரில் அவர்களுடன் நாமும் கைகோர்ப்போம்.

அதை பற்றிய விபரங்களுக்கு




#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :

http://www.savetnfisherman.org/

http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html

http://www.petitiononline.com/TNfisher/petition.html

JOIN THE CAUSE : Act Now, Voice your Dissent – Tweet with the tag #tnfisherman