Tuesday, February 24, 2009

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?

இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம் கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.

"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."

காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்

1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.

2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.

3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.

4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.

இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.

பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.

Monday, February 23, 2009

வக்கீல்களுக்கு கண்டனம் - விளக்கம்

நேற்று வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோவின் கண்டன ஆர்பாட்ட அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு இட்டு இருந்தேன். அடேங்கப்பா அதை படித்து அதில் உள்ள விசயத்தை உள்வாங்கமாலே சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக எழுதி இருக்கேன் ஒரு சாரார் முடிவு பண்ணிட்டாங்க போல. வக்கீல்களுக்கு கண்டனம் என்றால் சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு யாருங்க சொன்னா? சுத்த அறிவிலித்தனமாக இல்லை? இருந்ததும் அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் சிலர் மெயிலில் இது குறித்து கேட்டதால் இந்த விளக்க பதிவு.

சுப்ரமணிய சுவாமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஒரு மண்ணும் கிடையாது. அவர் அவ்வபோது தன் பேட்டிகளின் மூலம் மக்களை சந்தோசப்படுத்தும் ஒரு அரசியல் காமெடியன். இது தான் அவர் மீது எனக்கு இருக்கும் கணிப்பு.

சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகள் ஏதிரானவர் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்ரமணிய சுவாமி அன்று நீதி மன்றத்திற்க்கு சென்றது சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பாக வழக்காட அனுமதி கோரி. அது நியாயமா இல்லையா என்பது வேறு. ஆனால் அதற்கும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கோர்ட் புறக்கணிப்பில் இருக்கும் வக்கீல்களும் என்ன சம்பந்தம். தங்களுடைய வன்மத்தை அவர் மேல் காட்ட முற்பட்டது ஏன்?

அப்படியே அவருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற வளாகத்தில் அவரை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கலாம். கருப்பு கொடி காட்டி இருக்கலாம். ஏன் முட்டையால் கூட அடித்து இருக்கலாம். அதை எல்லாம் அப்பொழுது செய்யவில்லை. ஏன் என்றால் அவருடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். அதான் அடிக்க தைரியம் இல்லை. அதை விடுத்து ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் உள்ளே சென்று, கதவுகளை தாழ் இட்டு கொண்டு அதுவும் நீதிபதிகளின் முன்னே அவர் மீது முட்டை அடித்தும், கன்னத்தில் அறைந்தும் நீதிமன்றத்தையே அவமதித்து உள்ளார்கள் நம் வக்கீல்கள். அதை தான் தவறு என்று சொல்கிறேன்.

சரிங்க, அதை மீறி அவர் மீது முட்டை அடித்ததுக்கு காரணம் ஈழ தமிழர்களுக்கு எதிராக சுவாமி நடக்கிறார் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முட்டை அடித்தோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்பும் வக்கீல்கள் தைரியமாக அடித்ததை ஒத்துக் கொண்டு ஆமாம் அடித்தோம் என்று சொல்லி சட்டப்படி அதை சந்திக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒளிய வேண்டும். சிலரை கைது செய்த பிறகு சுவாமி மீது ஜாதி பெயரை சொல்லி திட்டினார் அவரை கைது செய்த பிறகு எங்களை கைது செய்ய வேண்டும் என்ற ஏன் புகார் கொடுக்க வேண்டும். அப்படியே திட்டி இருந்தால் அன்றே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தானே. இதில் ஏதுவுமே செய்யாமல் பேடித்தனமாக நடந்துக் கொண்டார்கள் நம் வக்கீல்கள் என்பது தான் என் வாதம்.

போலீசார் தடியடி என்பதை விட கொலை தாக்குதல் நடத்தியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களாக நான் பரிந்து பேசவும் இல்லை. சோறு வைத்தால் வாலாட்டி கொண்டு போகும் நாய் போலவே தான் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஆசைப்படி நடந்து கொள்பவர்கள் நம் காவலர்களில் பலர். அதற்கு உதாரணம் மூன்று மணி நேரம் கலாட்டாக்களுக்கு பிறகு தான் கமிஷ்னர் வந்து தலையை காட்டுகிறார். இதை விட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருந்தது என்பது அவருக்கு தான் வெளிச்சம். சட்டக்கல்லூரியில் கை கட்டி வேடிக்கை பாத்தார்கள், இப்பொழுது கண்ணில் பட்டவர்கள் எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். மூளையையும், மனசாட்சியையும் கழட்டி விட்டு யூனிப்பார்ம் போடுவார்கள் போல.

இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
இதை எல்லாம் நடக்க விட்டும் வேடிக்கை பாத்து கொண்டு இருக்கும் தமிழக அரசை கண்டால் கேவலமாக இருக்கிறது. பீகாரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருக்கிறது நம் அரசு. முதல்வர் மருத்துவமனையில் இருந்தால் மற்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள். முதல்வரை அவர் குடும்பத்தாரும், டாக்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் வந்து அவர் அவர் வேலையை பாருங்கள்.

இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆக இப்பொழுது பிரச்சனை திசை திரும்பி விட்டது. இதை எதிர்பார்த்தவர்களுக்கு ரொம்ப சுலபமாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது வக்கீல்களும், போலீசாரும் பொது மக்களும் தான்.

போன பதிவில் பதிந்த என் கண்டனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஈழ பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். அதை தவிர்த்து மற்றவற்றில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். உங்கள் சுயலாபங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை அசிங்கப்படுத்தாரீகள். இதில் உங்கள் சாக்கடை அரசியலை கலக்காதீர்கள்.

வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்தால் பார்ப்பான் என்று சொல்வதும், பார்ப்பான் அல்லாதவனை பார்ப்பான் அடிவருடி என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பது தான் எனக்கு புரியல. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கருத்துகளை எதிர் வைக்கவும். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.

எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி.

Sunday, February 22, 2009

வாழ்க சனநாயகம் - 4 (வைகோ அறிக்கை)

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோ வக்கீல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்து உள்ளார்.

வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.

வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய விசயம் தான் அதே போல் சுப்ரமணியசாமி மீது அழுகிய முட்டை வீசியதற்கும் சேர்த்து வக்கீல்களை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தால் இதை வரவேற்று நாமளும் போய் ஆதரவு குரல் கொடுக்கலாம். ஆனால் வக்கீல்கள் ஏதுவுமே தவறு செய்தாத மாதிரியும் போலீசாரும் மற்றவர்களும் சேர்ந்து வக்கீல்களுக்கு அவபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை எல்லாம் செய்தாக அறிக்கையில் கூறி உள்ளார்.

//சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து பிப்ரவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.//

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வக்கீல்கள் பாதுகாப்பு இயக்காமாக மாறாத வரை சரி. தோளில் கருப்பு துண்டு போட்டு இருப்பதற்காக கருப்பு அங்கி அணிந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை வைகோ அவர்களே.

//வழக்கறிஞர்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.//

யாருனு சொன்னா எல்லாருக்கும் தெரியும்ல. நீங்க சொல்வது போல சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.

// சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது.//

உண்மையாக இருக்கலாம். நீதிமன்றத்தில் அழுகிய முட்டை கிடைக்குதே அது எப்படிங்க!

// காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.//

இது முதல் தடவையாக இருந்தால் வழக்கு போடலாம், ஆனால் இதே வாடிக்கையாக அல்லவா வைத்து இருக்கிறார்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை போட்டு மிதித்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேறா. வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே போகிறது.

//வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். //

வாஸ்தவமான பேச்சு. அதே போல காவல் நிலையத்தை கொளுத்திய வக்கீல்கள் மீதும், பொது சொத்திற்குக்கும், காவலர்களை தாக்கிய வக்கீல்கள் மீதும் மீண்டும் அவர்கள் வழக்காடவே கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து கேளுங்கள்.

//வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 23-ஆம் தேதி திங்கள்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் எங்கும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

ஆனா ஊனா இந்த தமிழ் உணர்வாளர்களை விட மாட்டேங்குறீங்க. ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற அராஜகங்கள் அயோக்கியத்தனங்களும் தொடர்ந்தால் மக்கள் கண்டிப்பாக நீங்க நியாயமாக நடத்தும் போராட்டங்களை கூட புறக்கணிக்க தொடங்குவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு பாருங்களேன், வக்கீல்கள் மீது மக்கள் அபிப்பிராயம் எப்படி உள்ளது என்று. காரித் துப்புவார்கள். சுப்ரீம் கோர்ட் தமிழக வக்கீல்கள் தொடர்ந்து இது போன்று நடந்து கொள்வது நல்லதல்ல என்று கவலை தெரிவித்து உள்ளது. அதை படிச்சீங்களா?

இவர் தான் இப்படி என்றால் திருமாவளவன் அறிக்கை அதை விட மோசம். ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் நீங்க காட்டிய ஆர்வமும் உழைப்பும் அவர் மீது நல்ல மரியாதை வர வைத்தது. அதை அவரே அவரின் சமீபகால அறிக்கைகளின் மூலம் கெடுத்து கொள்கிறார்.

ஒரு இலக்கை வைத்து போராடும் போது அதை பற்றி மட்டும் கவலைப்பட்டு அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முட்டையால் அடிப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது என ஈடுபட்டு எதை நோக்கி தொடங்கினீர்களோ அதை விடுத்து இப்பொழுது கவனம் வேறு பக்கம் சென்று விட்டது. நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் பத்தாது அதை வழி நடத்தி செல்கின்ற ஆட்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி - விகடன்.

ஈழத் தமிழர்கள் ஆதரவாக அமெரிக்காவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி எஸ்.கே.

Thursday, February 19, 2009

வாழ்க சனநாயகம் - 3

தேவர் மகன் படத்தில் நாசர் கூறுவது போல "இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அதே கூத்தை தான் நீதி துறையில் நம் அரசியல்வாதிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன மயித்துக்கு மேல்முறையீடு பண்ணுனீங்க. இது மாதிரி வழக்கு போட்டுட்டு பல வருடங்கள் கழித்து வாபஸ் வாங்குற ஆளுங்களை பிடிச்சு உள்ள போடனும். (இதில் 7 வருடங்கள்)

விபரம்!

ஜெ. எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த அப்பீல் வழக்கு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் தான் தர்மபுரி பேருந்து எரிப்பு நடைப்பெற்றது என்பது குறிப்படதக்கது.

DMK withdraws appeal against Jayalalithaa in Supreme Court

J. Venkatesan

The party had challenged acquittal of former Chief Minister and Selvaganapathy

NEW DELHI: The DMK on Wednesday withdrew its appeal in the Supreme Court challenging the acquittal of AIADMK general secretary Jayalalithaa in the ‘Pleasant Stay Hotel’ corruption case by the Madras High Court.

A Bench comprising Justice Arijit Pasayat, Justice L.S. Panta and Justice P. Sathasivam permitted DMK leader R.S. Bharathi to withdraw the special leave petition against the December 4, 2001 High Court judgment, acquitting Ms. Jayalalithaa, T.M. Selvaganapathy, former Local Administration Minister, and Rakesh Mittal connected with the hotel.

The trial court in February 2000 sentenced the accused to one-year imprisonment. As a fallout of the judgment two girl students of the Tamil Nadu Agricultural University died in the Dharmapuri bus burning incident.

The High Court on December 4, 2001 acquitted the accused. Since the Tamil Nadu government did not prefer an appeal, Mr. Bharathi filed the appeal, and the apex court admitted it in April 2002 and it was pending disposal. Meanwhile, Mr. Selvaganapathy joined the DMK.

When the matter was taken up on Wednesday, senior counsel R. Shanmugasundaram appearing for Mr. Bharathi submitted that the appellant wanted to withdraw the appeal.

In a brief order, the Bench said, “The petitioner says he has instructions to withdraw the appeal. Dismissed as withdrawn.”

In view of the dismissal, the acquittal by the High Court is confirmed.

The prosecution case was that Ms. Jayalalithaa, the then Chief Minister, and Mr. Selvaganapathy had passed orders by “abusing their positions as public servants” and they allegedly “obtained” for the hotel owner, pecuniary advantage without any public interest and committed offences under the provisions of Sec. 13 (1) (d) (ii) and (iii) of the Prevention of Corruption Act and also committed offences under certain Sections of the Indian Penal Code.

Thanks - The Hindu

வாழ்க சனநாயகம் - 1

வாழ்க சனநாயகம் - 2

Wednesday, February 18, 2009

ஈழம் - அடுத்து என்ன?

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்


பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.

அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.

இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.

ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?

ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.

WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.

விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.

வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.