மேலும் படிக்க
குறிப்பு : சூடானின் மேற்கு பகுதியான டார்பூர்(Darfur) என்ற இடத்தில் 2003 ஆம் ஆண்டில் இருந்து நடந்த(நடந்துக் கொண்டு இருக்கும்) சண்டையின் காரணமாக 200,000 பேர் உயிர் இழந்து உள்ளார்கள், 2.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேற இடத்தில் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, அகதிகள் முகாமிலும் மற்ற இடத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஐ.சி.சி. போர் குற்றவாளிகளாக அறிவித்து உள்ள இரண்டு நபர்களில் ஒருவர் நலவாழ்வு துறை அமைச்சர், மற்றவர் ராணுவ கமாண்டர். இந்த இருவரையும் 2003-2004 ஆண்டு நடந்த போரின் போது மனித உரிமை மீறல்க்காகவும், போர் குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டி உள்ளது.
சூடான் அரசு இதைக் குறித்து எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாக இது வரை அறிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தின் ஆரம்பம், இது வரை நடந்தைவைகள் போன்றவற்றை விரைவில் ஒரு தொடராக எழுத முயல்கின்றேன். அவ்வபோது கிடைக்கும் தகவல்களையும் பிளாக் உலகிற்க்கு தெரிவிக்க முயல்கின்றேன்.