Wednesday, February 28, 2007

ICC - குற்றவாளிகள் அறிவிப்பு(சூடானில்)

Today(27.02.07) ICC Prosecutor Luis Moreno-Ocampo presents evidence showing that Ahmad Muhammad Harun, former Minister of State for the Interior of the Government of the Sudan, and Ali Kushayb, a leader of the Militia/Janjaweed, jointly committed crimes against the civilian population in Darfur.

மேலும் படிக்க

குறிப்பு : சூடானின் மேற்கு பகுதியான டார்பூர்(Darfur) என்ற இடத்தில் 2003 ஆம் ஆண்டில் இருந்து நடந்த(நடந்துக் கொண்டு இருக்கும்) சண்டையின் காரணமாக 200,000 பேர் உயிர் இழந்து உள்ளார்கள், 2.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேற இடத்தில் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, அகதிகள் முகாமிலும் மற்ற இடத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஐ.சி.சி. போர் குற்றவாளிகளாக அறிவித்து உள்ள இரண்டு நபர்களில் ஒருவர் நலவாழ்வு துறை அமைச்சர், மற்றவர் ராணுவ கமாண்டர். இந்த இருவரையும் 2003-2004 ஆண்டு நடந்த போரின் போது மனித உரிமை மீறல்க்காகவும், போர் குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டி உள்ளது.

சூடான் அரசு இதைக் குறித்து எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாக இது வரை அறிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தின் ஆரம்பம், இது வரை நடந்தைவைகள் போன்றவற்றை விரைவில் ஒரு தொடராக எழுத முயல்கின்றேன். அவ்வபோது கிடைக்கும் தகவல்களையும் பிளாக் உலகிற்க்கு தெரிவிக்க முயல்கின்றேன்.

Thursday, February 22, 2007

"பொறி"யில் சிக்கிய Xலி!!!

அப்படி எந்த பொறியில் போய் சிக்கினேன் என்று கேட்கிறீங்களா. என் கிரகம் நேற்று இரவு சவுத்ரியின் தவப்புதல்வன் ஜீவா நடித்த "பொறி" படத்தை பார்த்து தொலைச்சுப்புட்டேன். அந்த "பொறி"யில் சிக்கின பிதி தெளிவதற்குள் நான் ஒரு வழியா ஆகிட்டேன்.

இந்த படத்தில் கதைனு ஒன்னு இருப்பதே பாதி படத்துக்கு மேல தான் தெரியுது. நேர்மையான ஆசிரியர் ஆன நாகேஷ் தன் ஒய்வுக்கு பிறகு கிடைக்கும் பணத்தை வைத்து மகன் ஜீவாக்கு ஒரு கடை வாங்கி தருகிறார். பிறகு அந்த இடம் எனக்கு சொந்தமான இடம் என்று சீமான் வரார். தாங்கள் போலி பத்திரத்தின் மூலம் ஏமாற்றப்பட்டது ஜீவாக்கு புரிய, பலரை பார்த்து மிரட்டி இதுக்கு எல்லாம் மூலக் காரணமான வில்லனை கண்டுப்பிடிக்கிறார். தன் நண்பர்களுடன் சேர்ந்து "மிக அருமையான" ஒரு திட்டத்தை போட்டு மொத்த கூட்டத்தையும் நீதிதுறையின் முன்னால் நிறுத்தி நியாயம் வாங்கி தருகிறார். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இதுக்கே கண்ண கட்டுதே.

ஜீவா - ராம், டிஸ்ஷும், ஈ னு நல்லா தானே நடிச்சுட்டு இருந்திங்க என்ன ஆச்சு. வேணாம் சாமி இந்த விஷப் ப்ரீட்சை. அம்புட்டு தான் சொல்ல முடியும். அப்பால் ஒரு மேட்டரு. ஒன்னு தாடி வளங்க. இல்லாட்டி அந்த நீளமான கிரிதாவை எடுத்து விடுங்க. தாங்கல சாமி. பெரியார் பக்தனா வந்து அவருக்கு சூடம் எல்லாம் காட்டுறார். தேவையில்லாம பெரியார் சிலை ஞாபகம் எல்லாம் எனக்கு வந்து தொலைக்குது, ஏன் வம்பு ஆள விடுங்க.

பூஜா - தாயே! நீ என்ன வேலை பாக்குறனு ஒரு சீன் வருது. அதுவும் படுமட்டமான கஜேந்திரனின் காமெடி சீன் அது. அதன் பிறகு நீ என்ன வேலை செய்யுறனு யாருக்கும் தெரியாம போச்சே. ஏதோ அப்ப அப்ப வந்து முகத்தை திரையில் காட்டிட்டு போற. அது தான் கொஞ்சம் குளுமையா இருக்கு. இதுக்காக நான் நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நீ தான் சொல்லி இருக்கியே இது மாதிரி சின்ன சின்ன உதவிக்கு எல்லாம் நன்றி எதிர்பாக்க கூடாதுனு, அதான். அது போகட்டும், இந்த படத்துல பல காட்சிகளில் தம்பி, தம்பினு ஜீவாவை கூப்பிடுற. தீடிர்னு அவர லவ் பண்ணுற. அது எப்படி. என்னமோ போ. நல்லா இரு.

தினா - இவரு தான் இந்த படத்துக்கு இசையாம். ஒரு பாட்டை தவிர மற்றவை எல்லாம் ரொம்ப சத்தமா இருக்கு சாமி. முடியல. தினா சார் மன்மத ராசா கொஞ்சம் எங்க நல்லதை நினைத்து மறந்து விடுங்களேன் ப்ளிஸ்.

இது போக இந்த படத்தில் நாகேஷ், டெல்லி கணேஷ், கருணாஸ், மணிகண்டன் போன்ற பலர் இருக்காங்க அப்படிங்குறது தவிர வேற ஒன்னும் விசயம் இல்ல. கருணாஸ், மணிகண்டன், கானா உலகநாதன், கஜேந்திரன் போன்றவர்கள் காமெடிங்குற பேர்ல நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறாங்க. பேய்காமன் போலீஸ் அதிகாரியா வரார், ஏன் வரார்னு சத்தியமா புரியல. நல்ல நடிகரை சும்மா வந்து போக வச்சு இருக்காங்க. காதல் தண்டபாணி அமைச்சரா வரார். அவர ஏதோ பிக்னிக் போற மாதிரி கடத்துறாங்க. அவரும் கூட போறார். நல்ல கூத்து தான். படத்தின் வில்லனை பத்தி சொல்லனும் என்றால் நல்ல உயரமா திடாத்திரமா இருக்கார். ஆந்திரா பக்கம் ஒதுங்கினால் அவருக்கு எதிர்காலம் உண்டு.

திருடா திருடி எடுத்த டைரக்டர் தான் இதுக்கும் டைரக்டருனு படத்தின் காட்சியமைப்பை பார்த்தாலே தெரிந்து விடுகின்றது. அதே போல் ஹீரோ ஹீரோயின் சண்டை, டப்பாங்குத்து பாடல்கள், மன்மத ராசாவை போன்ற ஒரு பாடல், அதே மெட்டு, அதே டான்ஸ் யப்பா தாங்கல சாமி. நல்ல கதைக்கரு கிடைத்தும் திரைக்கதை, காட்சியமைப்பில் இப்படி கோட்டை விட்டதும் இல்லாமல் எங்களையும் இப்படி பொறியில் சிக்க வச்சுட்டிங்களே.

இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்.

Wednesday, February 21, 2007

நைல் நீர் வேண்டுமா?

ஐயா, நான் ஒரு உலக ஜல்லிங்க. என்னை போன்ற உலக ஜல்லிகள் எல்லாம் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து வருவதாக இப்ப தானுங்க கேள்விப்பட்டேன். ஐய்யகோ, என்ன கொடுமை இது இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு இந்தியன் என்ற அடையாளத்தை தொலைப்பதா? நான் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைக்க விரும்பலங்க. அதனால் ஒரு முடிவு பண்ணிட்டேனுங்க......

இப்ப என்ன பிரச்சனை நைல் நீரை வாங்கி தர வேண்டும், அம்புட்டு தானே... சரிங்க நான் வாங்கி தருவதாக முடிவு பண்ணிட்டேன். ஆமாங்க.... ஆனா இதுல பாருங்க இங்கன தான் ஒரு பிரச்சனை இல்ல இல்ல நாலு விதமான பிரச்சனை இருக்கு. அது என்னனு சொல்லிடுறேன், எது சரியா வருது சொல்லுறிங்களோ அத முடிச்சிடலாம்.

1, வொய்ட் நைல் நீர்
2, ப்ளு நைல் நீர்
3, நைல் நீர்
4, நைல் மினரல் நீர்

இந்த வொய்ட் நைலுங்க உகாண்டா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. ப்ளு நைல் எத்தோப்பியா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. இது இரண்டும் சூடான் தலைநகரத்துக்கு முன்னால் கலந்து அதன் பிறகு பொதுவான நைலாக எகிப்துக்கு போகுது. இந்த மூனுல ஏது ஒகே பாத்து சொல்லுங்க, உடனே சூடான் அதிபர்வுடன் அமர்ந்து பேசி முடிவு பண்ணிடலாம். நாம் கேட்டா அவரு உடனே கொடுத்து விடுவார். நம்ம மேல அவருக்கு அம்புட்டு பிரியம். அது ஏன் என்று இன்னொரு நாள் சொல்லுறேன்.

இந்த நாலாவது நைல் இருக்கு பாருங்க, அது நம்ம திருச்சிக்கு பக்கத்துல அரியமங்கலம் நினைக்கிறேன். அங்குட்டே கிடைக்குது. நம்ம நாகப்பட்டினத்தில் நம்ம நெருங்கிய தோஸ்து தான் இந்த நைலுக்கு நீருக்கு டீலர்ஷிப் எடுத்து இருக்கார். இந்த நீர் வேண்டும் என்றால் நான் நம்ம பயக்கிட்ட பேசி சிறப்பு தள்ளுபடி வாங்கி தரேனுங்க.

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நானு ரொம்ப பிஸி பாருங்க, இந்த ஒரே பிரச்சனையை ரொம்ப நேரத்துக்கு பாக்க முடியாது. எந்த நீர் வேண்டும் என்று சொல்லுங்க, எம்புட்டு வேணும் சொல்லுங்க, நான் வாங்கி தரேன். ஆனா அந்த நீரை நீங்க தான் வந்து எடுத்துட்டு போகனும்.

தொடர்புடையப் பதிவுகள்

1, $ செல்வன்
2, லக்கி லுக்
3, செந்தழல் ரவி

Tuesday, February 20, 2007

சூப்பு கொடுப்பது எப்படி?




சாப்பல் - ஹாட்லி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவை விழ்த்தியது. இன்று நடந்த கடைசி ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆஸி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. ஹைடன் அதிகபட்சமாக 181 * ரன்கள் எடுத்தார். கடின இலக்கு போல் தோன்றிய 347 ரன்களை நியூஸி மெக்மில்லன்(117), மெக் கல்லம் (86*) துணையுடன் 49.3 ஓவர்களில் நியூஸி சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நியூஸி வெற்றி பெற்று இருந்தது.

ஆட்டநாயகன் - மெக் மில்லன்.

முதல் ஒரு நாள் ஆட்டம் (16-2-07)

ஆஸி - 148 / 10 (49.3 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 42 , பாண்ட் - 9.3 - 2 - 23 - 5

நியூஸி - 149 / 0 (27 ஓவர்கள்) பிளமிங் - 70 * , வின்செண்ட் - 73 *

10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.

ஆட்டநாயகன் - பாண்ட்

இரண்டாம் ஒரு நாள் ஆட்டம் (18 - 02 - 07)

ஆஸி - 336 / 4 ( 50 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 105 , ஹாட்ஜ் - 97

நியூஸி - 340 / 5 (48.4 ஓவர்கள்) டெய்லர் - 117, புல்டன் - 76, மெக் மில்லன் - 52

5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.

ஆட்டநாயகன் - டெய்லர்

* இன்று நடந்தது ஆட்டத்தில் மொத்தம் 26 சிக்ஸ்சர்கள் அடிக்கப்பட்டன. (உலக சாதனை சமன்)
* உலக கோப்பைக்கு முன்பு நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டம் இது. இந்த தொடர் வெற்றியின் மூலம் நடக்க இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடர் மிகந்த பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.