Saturday, December 30, 2006

இது சரியா?

ஈராக் முன்னாள் அதிபர் திரு. சதாம் உசேன் இன்று தூக்கிலிடப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவருக்கு உலக பிரநிதிகள் நீதிமன்றத்தில்(இண்டர்நெஷனல் கோர்டில்) தீர விசாரித்து தக்க தண்டனை தந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் உட்பட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு உள்ளனர். அதே நேரத்தில் கீழே இருக்கும் இரு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் எனக்கு சரியாக படவில்லை. நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

இது சரியா?



Saturday, December 16, 2006

வெற்றித் திருநாள்

இதே நாள் 1971 ஆம் ஆண்டு பங்காளத்தேஷ் சுகந்திரம் அடைந்த நாடாக இந்த உலகத்தில் வெளி வந்தது. 3 மில்லியன் மக்களை இழந்து சுகந்திரம் அடைந்த நாடு அது. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

இந்த வெற்றித் திருநாளை குறித்து சிலர் பலரிடம் சொல்லிய போது, எனக்கு சில குறள்கள் ஞாபகம் வந்தது. அவை

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


உரை:

தான் ஒர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


அந்த குறள்களை நினைத்து பிறகு அந்த சிலரை பார்த்து சிரிக்கும் போது இன்னும் ஒரு குறள் ஞாபகம் வந்தது. அது


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று


உரை:

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.


மறந்து விட்டேன். நல்லா இருங்கடே