Sunday, August 06, 2006

நன்றி சொல்வேன்!!!


கவிதா அவர்கள் நண்பர்கள் தினம் குறித்து எனக்கு தோன்றுவதை எழுதி தருமாறு கேட்டு இருந்தார்கள். நாமலும் அதை வழக்கம் போல மறந்தாச்சு. இரு முறை நினைவுப்படுத்தியும் அனுப்பவில்லை. பிறகு அவர்கள் திட்டி ஒரு மெயில் அனுப்பிய பிறகு அவசர அவசரமாக அந்த நிமிடத்தில் மனதில் தோன்றியதை அவர்களுக்கு எழுதி அனுப்பியதை இங்கு பதிவு செய்கின்றேன். இந்த வருடம் தான் என் நண்பர்கள் வட்டாரம் மிகவும் விரிவடைந்தது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதோ கவிதாவின் பதிவிற்க்கு எழுதியது:

நண்பர்கள்/நட்பு

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது.

நண்பர்கள்:

"நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை)"

"நேற்றையே பொழுது நல்ல நினைவுகளோடு
நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு
இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு"

நட்பு:

நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சண்டைகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"

இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள்.
ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........
உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம்.
ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.
யாரையும் நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை.


இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள்.
ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி.....பால் வித்தாசமின்றி.....
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்.....
இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை...
காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன்.
என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.

அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

31 comments:

நாமக்கல் சிபி said...

//இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள்.
ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........
உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம்.
ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.
யாரையும் நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை.
//

உண்மைதான் நாகையாரா!
ச்சே. நாகையாரே!

தமிழ் என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் எனக்கும் இன்று கிடைத்திருக்கும் நண்பர்கள் ஏராளம்.

உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

பொரொஃபைல் படத்தை பார்த்து பயந்துவிட வேண்டாம். நானாகத்தான் மாற்றியுள்ளேன்.

:)

நாகை சிவா said...

//உண்மைதான் நாகையாரா!
ச்சே. நாகையாரே//
தளபதியாரே, இதில் இருக்கும் உள்குத்து புரியவில்லை. :(
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
இந்த ஐயா உங்கள் புரோபைல் படத்தை பார்த்து வந்த ஐயா இல்லை.
:))))))))

உங்கள் நண்பன்(சரா) said...

//இந்த வருடம் தான் என் நண்பர்கள் வட்டாரம் மிகவும் விரிவடைந்தது //

உன் வட்டத்தில் நானும் ஒருவன் என்பது எனக்கு சந்தோசம்,

//இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள்.
ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........//

என்னையா ரெம்ப ஃபீல் பண்ண வச்சிட்டப்பா...

//காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன்//

நிச்சயம் சந்திப்போம்,

உங்களுக்கும்,மற்றைய நண்பர்களுக்கும் எனது நண்பர்கள்தின வாழ்த்துக்கள்....

இப்படிக்கு
"நாகை சிவா"நண்பன்
(இப்போ கரெக்டா சொல்லிட்டேனா..?)


அன்புடன்...

சரவணன்.

நாகை சிவா said...

//இப்படிக்கு
"நாகை சிவா"நண்பன்
(இப்போ கரெக்டா சொல்லிட்டேனா..?)//
இப்பதான்யா நீ நம்ம நண்பன்.

//உன் வட்டத்தில் நானும் ஒருவன் என்பது எனக்கு சந்தோசம்,//
சரவணா நீ இல்லாமலா?


//என்னையா ரெம்ப ஃபீல் பண்ண வச்சிட்டப்பா...//
அப்ப அப்ப இது மாதிரி கொஞ்சம் பீல் பண்ணனும்.

நாகை சிவா said...

வேதா வாழ்த்துக்களுக்கு நன்றி

//நட்பு எல்லைகளை கடந்தது என்பதற்கு நம் எல்லாருடைய நட்பே உதாரணம். //
:))))))))

வல்லிசிம்ஹன் said...

சிவா,
நல்ல நண்பர்கள் அமைத்துக் கொடுத்த தமிழ்மணம்,
தேன்கூடு
மற்றும் பதிவு உலகில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல வாய்ப்பு.
நண்பர்கள் தின வாழ்த்துகள் உங்களுக்கும்.

ALIF AHAMED said...

வலை உலக
அனைவருக்கும்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

// "காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன்." //

கூடிய விரைவில் சந்திப்போம் நண்பா.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அனுசுயா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//நல்ல நண்பர்கள் அமைத்துக் கொடுத்த தமிழ்மணம்,
தேன்கூடு//
கண்டிப்பாக வள்ளி, அவர்களும் ஒரு முக்கியமான காரணம் தான். அவர்களும் என் வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//வலை உலக
அனைவருக்கும்//
வாம்மா மின்னல். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//கூடிய விரைவில் சந்திப்போம் நண்பா.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

ராசா, கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்.

நாகை சிவா said...

//இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
வாங்க அனுசுயா ரொம்ப நாள் கழித்து வந்து உள்ளீர்கள். உங்களும் என் வாழ்த்துக்கள்

Syam said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...நெஞ்சம் நிறைந்த நண்ப்ர்கள் தின வாழ்த்துக்கள் பங்கு... :-)

இன்னும் உன் பதிவு படிக்கவில்லை நாளை படித்துவிட்டு சொல்கிறேன்...

நாகை சிவா said...

நன்றி பங்காளி
ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையாகவே வரவும். முகில் எப்படி உள்ளார்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் சிவா! வளரட்டும் நம் நட்பு!!

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

நாமக்கல் சிபி said...

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நாகை சிவா said...

//வளரட்டும் நம் நட்பு!!//
கப்பி சொன்னா மட்டும் பத்தாது. அப்ப அப்ப வந்து தண்ணியும் ஊத்தனும் என்னா?
:)))))

நாகை சிவா said...

வாங்க வெட்டி/பாலாஜி!
வாழ்த்துக்களுக்கு நன்றி

Butterflies said...

achcahooooo pullarikkuthee!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Gopalan Ramasubbu said...

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

தங்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

கஸ்தூரிப்பெண் said...

பார்க்காத நண்பர்கள், பார்த்த நண்பர்களென அனைத்து நண்பர்களில் ப்ளாக் நண்பர்கள் ஒரு தனியிடத்தை ஒருபடி மேலேயே பிடிப்பார்கள் இல்லையா..... இவர்களிடம் பாசாங்கு இல்லை, செருக்கு இல்லை, ஆரவாரம் இல்லை......ஏகத்துக்கு பொறுமை இருக்கிறது.....

வளரட்டும் நமது நண்பர்கள் குழு....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//achcahooooo pullarikkuthee!!!!!!!!!!!!!!!!!//
சுபா உங்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. அறிச்சா சொறிஞ்சக்க வேண்டியது தானே
:)

நாகை சிவா said...

//I doubt this PAL !//
why doubt?

//Hope you are refering to pearl//
ஆமாம் ஆமாம் அந்த முத்துவ தான் சொல்றேன்.


// உற்ற தோழர்கள் and .....where is thozhigal ..." //
சிடி. நான் தான் பால் வித்தியாசம் இல்லாமல் என்று சொல்லிட்டேனே
இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அப்புறம் நான் அழுதுடுவேன்.
:)))))

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் நன்றி கோபாலன் ராம சுப்பு

நாகை சிவா said...

//ப்ளாக் நண்பர்கள் ஒரு தனியிடத்தை ஒருபடி மேலேயே பிடிப்பார்கள் இல்லையா..... இவர்களிடம் பாசாங்கு இல்லை, செருக்கு இல்லை, ஆரவாரம் இல்லை......ஏகத்துக்கு பொறுமை இருக்கிறது.....//
ஊருஸ் எப்படி இது எல்லாம்....
அநியாயத்துக்கு பீல் பண்ணுறீங்க.
ஆனா நல்லா இருக்கு ஊருஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி

மனதின் ஓசை said...

ரொம்ப ஃபீலாயிட்டு இருக்கர மாதிரி தெரியுது.. அதுல என்னையும் சேத்துக்கோங்க...
அல்லாருக்கும் நண்பர்கள் நாள் ("தினம்" தமிழ் இல்லனு யாரோ எங்கயோ சொன்னத இன்னிக்கு படிச்சேன்)வாழ்த்துக்கள்.

சிவா மாதிரி.. நல்ல நண்பர்கள், (சிவா... ட்ரீட் எப்ப? ) பல பெற்று நட்புடன் வாழ வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//நண்பர்கள் நாள் ("தினம்" தமிழ் இல்லனு யாரோ எங்கயோ சொன்னத இன்னிக்கு படிச்சேன்)வாழ்த்துக்கள்.//
எங்கயும் இல்ல நம்ம சங்கத்தில் தான். குமரன் அவர்கள் இவ்வாறு கூறி இருந்தார்கள்.

//சிவா மாதிரி.. நல்ல நண்பர்கள், (சிவா... ட்ரீட் எப்ப? ) பல பெற்று நட்புடன் வாழ வாழ்த்துக்கள். //
ஹுக்கும் நெஞ்ச கக்கிட்ட.
ட்ரீட் எப்ப வேணும், என்னா வேணும், எங்க வேணும். சீக்கிரம் சொல்லுங்க ஆவன செய்து விடுவோம்.

Anonymous said...

belated friends day wishes :)

vazhtukkal. itharku munthaya post padithen. athuvum suvaiye irunthum en suvaiku utpadavilai.

நாகை சிவா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரசிகா.

உங்கள் சுவைக்கு ஏற்ப என் பதிவு இல்லை என்பதில் சற்று வருத்தமே. நன்றாக எழுத முயல்கின்றேன். அதுவும் இல்லாமல் ஒத்த சுவையுடன் இருக்கும் பதிவுகள் சீக்கிரமே திகட்டி விடும்.

உங்கள் பதிவை பார்த்தேன். நன்றாக உள்ளது. உங்கள் பெயரை போலவே வித்தயாசமாகவும் உள்ளது. தொடர்ந்து நன்றாக எழுத வாழ்த்துக்கள்.